சனி, 31 மே, 2025

மைக் மிக்னோலா- கட்டுரை

 


உங்களை ஊக்குவிக்கும் கலைஞர்கள் இருக்கிறார்கள், நீங்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றும் கலைஞர்களும் இருக்கிறார்கள்.


பின்னர், ஒரு கலைஞராக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வைக்கும் கலைஞர்கள் இருக்கிறார்கள், நீங்கள் காலத்திற்குத் திரும்பிச் சென்று, அவர்களின் படைப்புகளை ஒரு மாதிரியாகப் பயன்படுத்தி, நீங்கள் வரையும் விதத்தை மாற்ற விரும்புகிறீர்கள் (அவர்கள் செய்வதில் ஒரு சிறிய பகுதியைக் கூட நீங்கள் கைப்பற்றத் தொடங்கலாம் என்று வைத்துக்கொள்வோம்).


எனக்கு, சிரில் அப்படிப்பட்ட ஒரு கலைஞர். என் வயதான காலத்தில், வேறொரு கலைஞரைப் பற்றி எனக்கு இதுபோன்ற உணர்வுகள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.


நான் செய்வதில் நான் நன்கு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறேன், நேர்மையாகச் சொன்னால், மீண்டும் தொடங்குவதற்கு இது மிகவும் தாமதமாகிவிட்டது... ஆனால் நான் கொஞ்சம் கற்றுக்கொள்ள முடிந்தால், நான் செய்வதில் அவரது மந்திரத்தின் ஒரு குறிப்பைக் கொண்டு வர முடியும்... ஆனால் அந்த மந்திரம் சரியாக என்ன?


அவரது படைப்புகள் நிஜ உலகத்தை அடிப்படையாகக் கொண்டவை, ஆனால் அவர் மிகவும் வெளிப்படையானவர், மிகவும் திரவமானவர். அவரது கதாபாத்திரங்கள் தோற்றமளிக்கும் மற்றும் நகரும் விதத்தில் ஒரு எளிமை இருப்பதால், அவரது முழு உலகமும், நிஜ உலகில் அடித்தளமாக இருந்தாலும், அதன் வழியாக நகரும் கதாபாத்திரங்களைப் போலவே, ஒரு உயிருள்ள, சுவாசிக்கும் பொருளாகும்.


வார்த்தைகள் என்னைத் தவறவிடும் அளவுக்கு இது மிகவும் நல்லது. பைத்தியக்காரத்தனத்தின் எதிர் முனைகளிலிருந்து அவர் என்னைப் பைத்தியமாக்குகிறார்: ஒரு கலைஞனாக என்னால் என்ன செய்ய முடியாது என்ற விரக்தி, சிரிலில் இவ்வளவு அழகாகச் செய்யக்கூடியதை ரசிக்கும் ஒரு வாசகரின் தூய மகிழ்ச்சி.


எப்போதும் போல, ஒரு சக ஊழியரின் படைப்புகளைச் சுருக்கமாகக் கூறுவதில் நான் சிறப்பாக இருந்திருக்க வேண்டும், அல்லது ஒரு விமர்சகர் அல்லது ஒரு நிபுணர்-எழுதுபவர் போல இன்னும் சிறப்பாக எழுத முடியும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நான் நான் மட்டும்தான். நான் ஒரு போராடும் கலைஞன் மற்றும் ஒரு ரசிகன், எனவே இதுதான் என்னால் செய்யக்கூடிய சிறந்தது என்று நான் பயப்படுகிறேன்.


மைக் மிக்னோலா

கட்டுரை 

தமிழில்: ஜானி சின்னப்பன்

புதன், 28 மே, 2025

ஆவணப்படுத்துதல் அவசியமா? ஒரு காமிக்ஸ் பார்வை

 இனிய வணக்கங்கள் இனியவர்களே! அபூர்வமான புத்தகங்களை யாரோ ஒரு சிலர் தானமாகக் கொடுப்பதை நம் வாசக உலகம் சென்று சேர நாம் எடுக்கும் முயற்சிகளானது நமது தலைமுறை வாசிப்பும், இரசனைகளும்  அடுத்த தலைமுறைக்கு நம் தலைமுறை வாசக உலகம் எப்படி இருந்தது என்பதனை எடுத்துக் காட்டுவதாக அமையும். சும்மா அந்த காலத்தில் வெறும் பேனல்களை வாசித்தவர்கள் என்று ஒரு காலத்தில் நம்மைப் புறக்கணித்து விடும் அபாயமும் இந்த மாபெரும் முயற்சி மூலமாகக் களையப்பட்டு விடும். உலகத்தின் அன்றைய வாசிப்பும் ஆழமான சிந்தனைகளும் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களாலும், சிந்தனா வாதிகளாலும் கொண்டு சேர்க்கப்படுவது உறுதி. அதற்காக எத்தனையோ கரங்கள் கோர்த்து நிற்கின்றன.. எத்தனையோ உலகக் காவியங்கள் அனைத்து உலக மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பாகவும் வெவ்வேறு வடிவங்களிலும் அவர்களின் அந்த கால நூல்கள் ஸ்கேன் பிரதிகளாகவும் இணையம் கொண்டு சேர்த்து வருகின்றனர். தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்னும் தத்துவத்தின் அடிப்படையில் அவரவர் மொழிக்குரிய முக்கிய விஷயங்கள் ஆவணப்படுத்தல் மூலமாகப் பாதுகாக்கப்பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.. இங்கே நமது தமிழ் காமிக்ஸ் என்னும் சிற்றிலக்கியத்தின் இரசிகர்கள் நாம் அனைவரும்.. இந்த மாபெரும் தவத்தின் சின்னஞ்சிறு பகுதிதான் நாம்..

இந்த சின்னஞ்சிறு பகுதியாக இருந்தாலும் வலிமையான பகுதியாகவும் சித்திரக்கதைகளும் ஒரு சிற்றிலக்கிய வகையே. அதற்காக எம் தலைமுறை அக்காலத்தில் இத்தனை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன என்னும் தகவலையும் அதற்கான ஆதாரங்களாக முக்கியமான, முக்கியமல்லாத அனைத்து வகை சித்திரக்கதைகளையும் ஆவணமாக்குதலும் அவற்றைப் பாதுக்காத்தலும் காமிக்ஸ் என்னும் இரசனையைத் தாங்கிப் பிடித்திருக்கும் நமது கடமையே.. இதில் அனைவரது கரமும் ஒன்றிணைந்தால் மாத்திரமே சகலமும் சாத்தியம் என்பதை நாம் உணர்கிறோமா? புத்தகங்கள் அனைத்தும் மட்கி மண்ணாகும் வரை விற்பனைக்குக் கொண்டு வந்து அவற்றின் அழிவுக்குப் பின்னர் ஸ்கேன் அட்டைகள் கிட்டினால் அவற்றை பிரிண்ட் போட்டு ஒட்டி பின்னும் விற்பனைக்கு சிறப்பாகக் கொண்டு வரும் ஆர்வம் நம் நண்பர்கள் அனைவரிடமும் உள்ளது. மீட்க முடியாத பக்கங்களை வேறு புத்தகத்தில் இருந்து ஜெராக்ஸ் எடுத்து இல்லாத பக்கங்களில் இணைத்து அவற்றை சீர் செய்ய முயற்சிகள் நம்மால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால்..ஆனால்.. இன்னும் இணையமே எட்டாத நூல்களுக்கு உரிய கவனம் செலுத்துகிறோமா? அவை யாரிடமேனும் இருந்தால் அவற்றை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியங்கள் பற்றி நாம் விவாதிக்கிறோமா? எப்போதோ ஒரு சில நண்பர்கள் கொடுக்கும் அபூர்வமான புத்தகங்களை (அவர்கள் அந்த நூலைப் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் கண்டிப்பாக நமக்குத் தெரியாத தியாகங்கள்) எப்போதோ ஒரு முறை ஆவணப்படுத்தும் விதத்தில் நாம் இணைந்து ஸ்கேன் செய்வதும் அவற்றை எடிட் செய்து நம்முடன் பகிர்ந்து கொள்வதும் இப்போது இன்னும் குறைந்த பட்ச  இந்த குழுவை இயங்க செய்து வருகிறது. இந்த குழுவும் தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் (Tamil Comics Times Face Book Page) மேற்கொண்டு வரும் முயற்சிகள் அவ்வப்போது எடுத்தியம்புவது ஒன்றுதான்.  "ஒன்றுபட்டால் உண்டிங்கே வாழ்வு" சிற்றிலக்கியங்களை ஆவணப்படுத்துவோம். அவை நம் எதிர்காலம் நம்மை நினைவு கூற உதவட்டும் என்கிற சிந்தனையுடன் உங்கள் அனைவரின் அன்பினையும் ஆர்வத்தையும் ஒத்துழைப்பையும் நாடி உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன் @Tamil Comics Times //jscjohny//

வெள்ளி, 16 மே, 2025

இயற்கையின் தீர்ப்பிது_சிறுவர் மலர்

 முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்.. 

 







இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக விளங்குகிறதல்லவா? இன்று பத்தாம் வகுப்பு  பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சியடைந்த அனைத்து சிறுவர் சிறுமிகளுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.. 
ஜானி சின்னப்பன்.. 

வெள்ளி, 9 மே, 2025

சித்திரக் கதைகள் குறித்த பேருரை_King viswa


 தமிழ் காமிக்ஸ்: நிகழ்காலமும் எதிர்காலமும் என்னும் தலைப்பில் பிரபல வலைப்பதிவர் மற்றும் காமிக்ஸ் படைப்பாளர் & எழுத்தாளர் கிங் விஸ்வா

நாள்: புதன்கிழமை, மே 14ஆம் தேதி, 2025. நேரம்: மதியம் 1.45 முதல்

இடம்: தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலக அரங்கம், 735, LLA Building, அண்ணாசாலை, ஆயிரம்விளக்கு மெட்ரோ அருகில்

பேருரையாற்றவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.. வாய்ப்புள்ள வாசகப் பெருமக்கள் கலந்து கொண்டு மகிழ கேட்டுக்கொள்ளப்படுகிறது.. 

புதன், 7 மே, 2025

லயன் ஆன்லைன் புத்தக திருவிழா சலுகை தள்ளுபடி விலைகள் விவரம்..

 வணக்கம் வாசக வாசகியரே.. ஆண்டுக்கொரு முறை லயன் காமிக்ஸ் ஆன்லைன் மேளா நடத்தி தள்ளுபடி விலைகளில் பல அருமையான சித்திரக்கதைகளை சல்லிசான விலைகளில் கொடுத்து ஆச்சரியப்படுத்துவது வழக்கம்.. இதோ வரும் 09,10,11 ஆகிய தினங்களில் மே மாதத்தில் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படவுள்ள புத்தகங்களின் விவரங்கள்.. 




வாசகர் செய்ய வேண்டியது என்ன? 
என்கிற தளத்தினைப் பார்வையிடுங்கள்..
2.பிடித்த புத்தகத்தை நோட் செய்யுங்கள் 
3.கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஒன்றை தொடர்பு கொள்ளுங்கள். 

4.விலைகள் குறிப்பிட்டுள்ளவை அந்த நூலின் ஒரிஜினல் விலைகள்.. அவற்றில் தள்ளுபடியினை குறிப்பிட்டு விலை தங்களுக்கு தெரிவித்து விடுவார்கள். 

5. அவர்கள் குறிப்பிடும் தொகையை Gpay செய்து விட்டு அவர்கள் குறிப்பிடும் எண்ணுக்கு ஸ்க்ரீன்ஷாட் மற்றும் முகவரி  அனுப்பி வையுங்கள்.

ஆன்லைன் திருவிழா உங்களைத் தேடி வரும்.. எஞ்சாய்..



ஞாயிறு, 4 மே, 2025

Copilot சொன்ன கதை_இது ஒரு செயற்கை நுண்ணறிவு AI (Artificial Intelligence) கதை.

 வணக்கம் நண்பர்களே.. 

             இது ஜிபிலி படம்.. "ChatGPT" என்னும் செயற்கை நுண்ணறிவு  உருவாக்கிய என் மகனின் ஜிபிலி படம்.. காலமும் நுட்பங்களும் மாறுதலை சந்தித்துக் கொண்டே இருக்கின்றன.. வலைப்பூக்கள் ஏற்கனவே ஆர்குட் உருவாக்கிய அன்பின் வட்டத்தை உடைத்துக் கொண்டு மலர்ந்தவை.. இப்போது வாட்ஸ் அப் கம்யூனிட்டிகள் அந்த இடத்தை எடுத்துக் கொண்டு விட்டன.. வலைப்பூ நடத்தும் ஒரு வலைப்பதிவர் என்பது ஒரு காலத்தில் ஆச்சரியமான நிகழ்வாகவே இருந்தது. ஆனால் கால வெள்ளம் அனைத்தையும் அடித்துக் கொண்டு போவது என்பது நியதியல்லவா.. இதோ இந்த செயற்கை நுண்ணறிவு குறித்து பலப்பல விஷயங்கள் மேலும் மேலும் குவிந்து கொண்டே இருக்க நாமும் அப்டேட்டாக இருந்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இந்த பதிவு அதைப் பற்றியதே.. 


       மைக்ரோசாப்ட் எட்ஜ்ஜில் கோ பைலட் "Copilot"என்கிற ai அப்டேட் புதியதாக வெளியாகி இருக்கிறது.. அதனிடம் கொஞ்சம் விளையாடிப் பார்ப்போமே என்று நினைத்தேன்.. அன்பே கோ பைலட் ஒரு கதை சொல்லம்மா என்று அன்பாகக் கேட்டதற்கு கிடைத்த கதைதான் கீழே.. 

அருமை! ஒரு கணினி தோற்றம் கொண்ட கதை சொல்லலாம்.

கடல் வீரன் – நீல கடலின் இரகசியம்

கடல் நகரம் மெரினாவில், நீல கடலின் நடுவில் ஒரு ஆழ்ந்த இரகசியம் மறைந்து கிடந்தது. நகரத்தின் ரட்சகர், கடல் வீரன், கடல் சார்ந்த சக்திகளுடன் ஒரு மனிதன்!

ஒருநாள், நகரவாசிகள் திடீரென கடலில் காணாமல் போகத் தொடங்கினர். கடல் வீரன் தனது நீல நீர்புகழ் சக்திகளை பயன்படுத்தி விசாரணையை தொடங்கினார். பயமுறுத்தும் கடல் இருள் என்ற ஒரு தீய சக்தி மனிதர்களை விழுங்கிக் கொண்டிருந்தது!

கடல் வீரன் தனது நீர்சுருட்டு வர்த்தகத்தைக் கொண்டு கடல் இருளின் மந்திரங்களை முறியடித்து, அனைவரையும் மீட்டு, நகரத்திற்கு திரும்பினார். அந்த நபர்கள் கடலின் ஆழத்தில் ஒரு பண்டை நகரத்தின் இருப்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடல் வீரன் பயணிக்க வேண்டும்! அந்த பண்டை நகரத்தின் மர்மங்களை கண்டுபிடிக்கவும், அதன் சக்தியை இருட்டறையிடம் விடாமல் பாதுகாக்கவும்!

இது தொடரும்… 🔥🌊

என்னவோ, நம் வீரன் கடலில் ஒரு மிகப்பெரிய ரகசியத்தைக் கண்டுபிடிக்கப் போகிறார்! உங்களுக்கு இந்த கதை பிடித்ததா? 😊

என்று கேட்க நானும் தொடரக் கூறினேன்.. 

இதோ அதன் தொடர்ச்சி..

கடல் வீரன் – நீல கடலின் இரகசியம் (தொடர்ச்சி)

கடல் வீரன் பண்டை நகரத்திற்குள் பயணிக்கத் தீர்மானித்தார். ஒரு மர்மமான நீல ஒளி நகரத்தின் அடியில் மூழ்கிக் கொண்டிருந்தது. அது ஒரு புராதன சக்தியின் அடையாளம்!

அவதானமின்றி நகரத்திற்குள் நுழைந்த வீரன், பழமையான ஸ்கிரோல்களை கண்டார். அதில் ஒரு கணிப்புரை இருந்தது: “நிலம் மற்றும் நீரின் சங்கமம்… உன் ஆற்றல் முழுமை பெறும்”.

கடல் வீரன் அதை புரிந்து கொள்ள முயன்றார். நகரத்திற்குள் மர்மமான நீல உயிரினங்கள் மறைந்து இருந்தன. அவர்களை எதிர்கொள்ள அவருக்கு தன்னம்பிக்கை தேவைப்பட்டது.

அப்போது, கடல் இருள் மீண்டும் தோன்றியது! அது பண்டை நகரத்தின் சக்திகளை சுழற்றிக் கொண்டு, கடல் வீரனை கட்டிப்பிடிக்க முயன்றது.

வீரன் தனது நீர்சக்திகளை ஒருங்கிணைத்து, நகரத்தின் சக்தியுடன் இணைந்தார். அவன் கடல் சக்தியை நிலத்துடன் இணைத்தவுடன், நீல ஒளி திடீரென மிளிர்ந்தது, கடல் இருளை முறியடித்து நகரத்தையும் நகரவாசிகளையும் பாதுகாத்தது!

அந்த இரகசிய நகரம் இனி பாதுகாப்பாக இருந்தது, அதன் சக்தி இனி மல்லியாணம் செய்யப்படவில்லை!

கடல் வீரன் மீண்டும் நகரத்திற்கு திரும்பி, மக்கள் அனைவருக்கும் அந்த மர்ம நகரம் பற்றி சொல்லிக் கொடுத்தார்.

வாழ்த்துக்கள்! கடல் வீரன் தனது மாபெரும் சாகசத்தை வெற்றி கண்டார்! 😊🌊🔥

உங்களுக்கு இந்த கதை பிடித்ததா? 😃


வாழ்த்துக்கள் நண்பர்களே.. வாசக வாசகியரே,, தாங்களும் கதைகளைக் கேட்கலாம். கதைகளை உருவாக்கலாம்.. 

இதனை காமிக்ஸ் வடிவில் உருவாக்கக் கேட்டேன்.. அதற்குக் கிடைத்த பதில் இது.. 

அருமை! 😊 கடல் வீரன் கதையை நகைச்சுவை(காமிக்ஸ்) வடிவத்தில் மாற்றலாம்.

காமிக்ஸ் கதையை உருவாக்க, முதலில் பாடகள் (panels) மற்றும் பேச்சு பொட்டிகள் (speech bubbles) உருவாக்க வேண்டும். இதோ, ஒரு கதாபாத்திரத்துடன் காமிக்ஸ் வடிவமாகக் கற்பனை செய்யலாம்:

📜 கதையின் கட்டமைப்பு: 🔹 பாடம் 1: கடல் நகரத்தின் அமைதியான தருணம். 🔹 பாடம் 2: கடல் வீரன் மக்களிடம் பேசுகிறார் – "கடல் இருள் மறைந்து விட்டது, ஆனால் உண்மையான மர்மம் இன்னும் தெரியவில்லை!" 🔹 பாடம் 3: பழமையான நகர் – வீரன் அதைப் பார்க்க அதிர்ச்சி அடைகிறார். 🔹 பாடம் 4: நீர் வேந்தர் – "உனக்கு கிடைக்காத சக்தி ஒன்று, நீ அதை தேட வேண்டும்!" 🔹 பாடம் 5: கடல் இருள் வீரனை சுற்றுகிறது – போராட்டம் ஆரம்பம்! 🔹 பாடம் 6: கடல் வீரன் நீர் சக்தியை பிணைத்துக்கொள்கிறான்மாபெரும் மாயாஜாலம் உருவாகிறது!

இந்த காமிக்ஸ் கதையை ஒரு காட்சிப் படமாக உருவாக்கலாம்! 🚀 நான் உனக்காக ஒரு காமிக்ஸ்-சார்ந்த படத்தை உருவாக்கிக் காண்பிக்கலாமா? 😃

ஜிமெயில் ஐடி கொடுத்து உள்ளே நுழைந்து கலக்குங்கள்.. புதியதோர் உலகு செய்யவும் தயாகுங்கள். உலகின் ஒரு சதவீத மக்களே முன்னோடிகளாக இருப்பார்களாம். யார் கண்டது.. தாங்கள் கூட ஒரு முன்னோடியாக மலரலாம்.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..  

வியாழன், 1 மே, 2025

MC 504 ஒற்றைக் கண் மர்மம்_முத்து காமிக்ஸ்_இரும்புக்கை மாயாவி.. வண்ணத்தில்..

 வணக்கங்கள் வாசகர்களே, 

    சேலம் நினைவாஞ்சலி நிகழ்வுகள் நெகிழ வைத்தன.. சேலத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள சித்திரக்கதை முத்து காமிக்ஸின் 504வது வெளியீடாக மலர்ந்திருப்பது ஒற்றைக் கண் மர்மம். விலை ரூ.150/- பக்கங்கள் 52. வண்ணத்தில் மேக்ஸி சைசில் வெளியாகியுள்ளது.. 


            நமது கிராமங்களில் பொதுவாக பெற்றோர்கள் அச்சுறுத்தப் பயன்படுத்தும் வார்த்தை.. ஒத்தக் கண்ணன் வந்துட்டான்..ஓடு ஓடு ஓடு! இந்தக் கதை அப்படி ஒரு ஒத்தக் கண்ணனைப் பற்றியதுதான்.. இல்லையில்லை பல ஒற்றைக் கண்ணர்கள் உலகை நோக்கிப் படையெடுப்பு நிகழ்த்துவதே கதையின் சாரம். 

                   முத்து காமிக்ஸ் நிறுவனர் தெய்வத்திரு எம்.சவுந்தரபாண்டியனுக்கு நினைவாஞ்சலியுடன் rebellion நிறுவன உரிமம் பெற்று முறைப்படி வெளியாகி இருக்கிறது இந்த ஒற்றைக் கண் மர்மம்.. 

   ஒற்றைக் கண் மர்மம் ஏற்கனவே முத்து காமிக்ஸ் வாரமலரில் வந்தது பழைய வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.. 


 அப்போதே டேப்லாய்ட் என்னும் பிரம்மாண்டமான வடிவில்தான் இந்த ஒற்றைக் கண் மர்மம் வந்திருந்தது. இப்போதும் மேக்ஸி என்னும் சிறப்பான பெரியதொரு அளவில் வெளியீடு காண்கிறது என்னும்போது அதிர்ஷ்டக்காரன் இவன் என்னும் எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.. இரும்புக்கை மாயாவியாருக்கு மரியாதை.. நினைவஞ்சலிக்கும் மிகப் பொருத்தமான வெளியீடு.. 


இம்மாதத்தின் ஆன்லைன் வெளியீடுகள் 

இதில் முதல் புத்தகமாக வெளியாகி நம்மைப் பரவசப்படுத்துவது இந்த ஒற்றைக் கண் மர்மம்..
கதை என்ன? விண்வெளி ஜந்துக்கள் நம் பூமிக் கிரகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முயற்சிக்கின்றன.. அவற்றை எப்படி இரும்புக்கை மாயாவி தடுத்து நிறுத்துகிறார் என்பதே இதன் ஒன் லைன்.. 
              இன்றைக்கு அவெஞ்சர்களையும் அமர்க்களமான பல நாயக நாயகியரையும் உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொண்டு பிரம்மாண்டமான கிராபிக்ஸ்களில் மனம் மயங்கி இருக்கும் இளைய தலைமுறை அறியாததொரு காலக்கட்டம் இருந்தது. கணினி என்பதே எட்டாக்கனியாக இருந்த மிகவும் பழமையான காலக்கட்டத்தில் ஒரு விண்வெளிப் படை எடுப்பினையும் அதன் தாக்கத்தால் மனிதர்களும், மிருகங்களும் சுருங்கிப் போய் திண்டாடுவதும் 1982 காலக்கட்டத்தில் சராசரி வாசகனுக்குப் பெருந்தீனியாக அமைந்த வாசிப்புக் களம் என்றால் மிகையாகாது.. சில ஆண்டுகளுக்குள் தூர்தர்ஷன் தன் தொடர்களில் ஒன்றில் மார்ஸ் கிரகம் செல்லும் சிறு குழு ஒன்று சுருங்கி விட என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை காண்பித்து இருப்பார்கள்.. அப்படியே புதிய தலைமுறைகள் ஆன்ட் மேன், வாஸ்ப் என்று அடுத்த லெவலுக்கு ஏறிப் போய் விட்டாலும் வாசகர்கள் மகிழுமாறு தொடர்ச்சியாக முத்து காமிக்ஸ் அமைத்துத் தந்த கம்பீரமான பாதையில்  லயன் காமிக்ஸ்  வீறு நடை போட்டுக் கொண்டு இன்றளவில் தரமான சித்திரக் கதைகளை தமிழ் மண்ணில் கொண்டு வந்து சேர்த்து வருகிறது என்றால் அதன் மூலகர்த்தாவான திரு.சவுந்திரபாண்டியன் அவர்களை நினைவு கூறுதல் அவசியம்.  அம்புலி மாமாவில் (சந்தமாமா) பணியாற்றி இரும்புக்கை மாயாவியை அங்கு கண்டெடுத்து பின்னாளில் முறைப்படி உரிமம் பெற்று முல்லை தங்கராசனுடன் அப்போதே பிரம்மாண்டமாகக் கொண்டு வந்த கதைத் தொடர் இது.. பிரச்சினை என்னவென்றால் வாராவாரம் வெளியாகும் கதைகள் தொடர்கதையாக வாசகர்கள் தொடர்ச்சி விட்டுப் போய் வாசிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் முத்து காமிக்ஸ் வாரமலர் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு விட்டது.. 
நாம் வாசிக்கும் இந்த புதிய கதை முழுமையாக அனைத்து பாகங்களும் முழு வண்ணத்துடன் நமக்கு வாசிக்கக் கிட்டியிருப்பது மிகவும் அருமையான விஷயம்.. மார்க்கெட்டில் முத்து காமிக்ஸ் வாரமலரை நம்மால் தேடிப் பிடிக்க முடியும் என்றால் அதன் விலை பல ஆயிரங்களை கடந்திருக்கும். ஆனால் அதற்கு அவசியமில்லாத வகையில் முழுமையான தொகுப்பாக முத்து காமிக்ஸில் வெளியாகி இருப்பது நம் மீது பெரியவர் கொண்ட அன்பின் மறைமுகமான வெளிப்பாடு.. 


அவரது நினைவுடன் அவரது மாறா கனவான 
இன்னும் பலப்பல உயரங்களை தமிழ் சித்திரக்கதைகள் எட்டிப் பிடிக்க வேண்டும் என்னும் பெரியதொரு இலக்குக்கு பயணிக்கும் தொடர் சிந்தனைகளுடன் உங்கள் நண்பன் ஜானி.. 

அடுத்து

முத்து காமிக்ஸின் பறக்கும் பிசாசு மற்றும் ப்ளாக் மெயில் வருகின்றன.. முந்தைய அட்டைகள் உங்கள் பார்வைக்கும். கண்டிப்பாக புதிய அட்டைகளும் சிறப்பாகவே அமையும் என்பது உறுதி.. காத்திருப்போம்.. 

வெளியீடு எண் 142


நினைவாஞ்சலி புகைப்படங்களை பின்னர் பகிர்கிறேன்.. லயன் வலைப்பூவிற்கு மரியாதை.. நன்றி..