செவ்வாய், 2 அக்டோபர், 2012

நியாயம்டா! நேர்மைடா! நீதிடா!

எனது பாசத்துக்குரிய காமிக்ஸ் உலகக் குடி மக்களே! 

வணக்கம்! தங்களை சந்திக்க இன்னும் ஒரு வாய்ப்பு அமைந்தது என் பாக்கியம்! வாழ்க வளர்க!

இன்று இப்போ வாழ்க்கை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னும் இப்படி எல்லாம் வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனைகள் நம்மை சிறகடிக்க வைத்து கொண்டுதானே இருக்கின்றன! எதிர்காலம் என்ற ஒன்று இல்லை எனில் அங்கே மனம் நின்று விடும் என்று பகவான் ஓஷோ கூறி இருப்பதை நினைவு படுத்த (உங்களை படுத்த!!) விரும்புகிறேன்! 

          அதில் எதிர்காலம் என்பது தொக்கி நிற்கிறது அல்லவா? நாளை நடக்க போவது எப்படி இருக்கும் என்ற ஆழமான மனதின் கற்பனைகளே எதிர்கால கதைகளாக உருவெடுத்து நிற்கின்றன. கொஞ்சம் வெளியே மொட்டை மாடியில் நின்று நட்சத்திரங்களை ரசித்து பாருங்கள். அவை தனித்தனி சூரியன்கள் அவற்றை சுற்றி பல கோள்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. எத்தனையோ ஆராய்ச்சிகள் அங்கே உயிரினங்கள் வசிக்கின்றனவா? அவை எப்படி இருக்கும் என்று நடந்து கொண்டிருக்கும் காலத்தில் நாம இருக்கோம் என்ற உணர்வு பகிர்தல்களுடன் இந்த பதிவை பாருங்க நண்பர்களே! 

                    ஒரு வேளை காலம் மாறி நியாயமும், நீதியும், நேர்மையும் தழைத்து ஓங்கும் ஒரு நிலை வரலாம்!! என்றாலும் சட்டம் என்று ஒன்று இருப்பின் அதில் சில ஓட்டைகள் அடைக்கப்படாமல் இருக்கும் அல்லவா?
அக்டோபர் இரண்டில் (இன்றுதான் நண்பர்களே!!) பிறந்த நாள் விழா காணும்  நமது தேசத்தலைவர் மகான் காந்தி அவர்கள்,

 "நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது"
 என்பது குறித்து அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார்.
        நீதித்துறை, காவல்துறை இவை ஒருங்கே குற்றவாளிகளைத் திருத்த சமூகத்தைக் காக்க பெரிதும் அயராது உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படியான சூழலில் நம்ம நீதித்துறை மற்றும் காவல்துறை ஒருங்கே அமைந்த வீரர்கள் எதிர்காலத்தில் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது என்ற எண்ணங்கள் கதையாக உருவெடுத்து இருக்கிறது.

              அதுதான் "நீதி தேவன் நம்பர் ஒன் " JUDGE DREDD-in English. இவரது அதிரடிகள் உங்களின் அன்பு பார்வைக்கு!

                 
               மெகா சிட்டி --- நம்ம பேட் மேன் வசிப்பது கோதம் நகரில் என்றால் நம்ம நீதி தேவன் வசிப்பது மெகா நகரில்!!!
             அங்கே எதிர்காலத்தில் ஒரு காதல் திருமணம். அதனை நடத்தும்படியான வேண்டுகோள் வைக்கும் தம்பதியர், போயும் போயும் நம்மாளுகிட்டயா மாட்ட வேண்டும்!


தொழில் நுட்பம் எந்த அளவு வளர்ந்து விட்டது பாருங்கள்! தன் காதலிக்காக திருடி மாட்டி கொள்கிறான். ஆனாலும் மணமகளுக்கு தண்டனை என்பது கொஞ்சம் ஓவராக இல்லை????
      இரண்டாவது கதை! ஒரு நபரிடம் அடித்த பெட்டியோடு மாட்டிக் கொள்கிறான் கயவன் ஒருவன். விசாரணையில் பெட்டி உரிமையாளர் கண்டுபிடிக்க பட்டுவிடுகிறார். ஆனால் அவருக்கு தண்டனை! ஏன்? விடை கீழே!



டுபாகூர் ஆசாமிகள் அத்தனை எளிதல்ல நம்ம ஆளிடம் தப்பி பிழைப்பது!

 அரசாங்க பேருந்து எப்பவுமே அப்படிதானே நண்பர்களே! நீதி தேவன் நிறைய கதைகளுடன் லயன் அலுவலகத்தில் தூங்கி கொண்டு இருக்கிரார்! தட்டி எழுப்பும் ஒரு முயற்சியாவே இதனை எடுத்து கொண்டு உங்க ஆதரவை நம்ம லயன் ப்ளாக் பக்கத்தில் எழுதி தெரிவியுங்க நண்பர்களே. அதுதான் இவருக்கு உங்க பரிசா அமையும்!

 இந்த காமிக்ஸ் கிளப் முயற்சி நல்ல ஒரு வழிதானே !  இந்த காமிக்ஸ் திரை படமாக தற்போது தமிழ் நாட்டில் ஓடி கொண்டு இருக்கு. பார்த்து விட்டு உங்க ஆதரவை இவருக்கு நல்குங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்!


                அப்புறம் நண்பர்களே கீழே உள்ள வாசகர் கடிதத்தில் அடியேன் தீபாவளி மலர் பற்றி எழுதிய கடிதம் இடம் பிடித்திருப்பதை பார்த்து இருப்பீர்கள்! நாம கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்தவங்க. நான் சென்னையை பார்த்து மலைத்து நின்றது ஒரு கதை. முதன் முதலில் எனது பி.பி.ஏ. அஞ்சல் வழி படிப்புக்கு செமெஸ்டர் (நேரடி வகுப்புகள் மூன்று நாள் மட்டும்)  அண்ணா நகர் வளைவு பக்கத்தில் இருக்கும் (இனி இருக்குமா?) எம்.ஓ.பி.வைஷ்ணவ் கல்லூரிக்கு வர வேண்டி இருந்தது. எனவே எனது தந்தையை அழைத்து கொண்டு ஆவடியில், கோவில் பதாகையில் இருக்கும் என் பெரியம்மாவின் இல்லத்திற்கு சென்று தங்கி பச்சை வண்ண பஸ் பிடித்து (இப்போ நிறம் மாறி விட்டது நண்பர்களே! இங்கே இருக்கும் அரசு பஸ் எண்கள் தெரியாவிட்டால் அதோ கதிதான்.) ஒரு வழியாக கல்லூரி போய் சேர்ந்தால் என் அப்பா அப்படியே கழட்டி கொண்டார். கல்லூரி அனுபவம் கொடுத்து வைக்க வேண்டிய அனுபவம் நண்பர்களே. வசதி உள்ளவர்கள் கல்லூரி போயி படிச்சே ஆக வேண்டும் என்று அடம் பிடியுங்கள் உங்க அப்பாக்களிடம்! ஹி!ஹி!ஹி! ரொம்ப கதைக்க நேரமில்லை நண்பர்களே! கார்டுல கடிதம் எழுதி அது பிரசுரம் ஆனதும் வரும் பாருங்க ஒரு சந்தோசம்! எந்த பொக்கிஷமும் அதை தர முடியாது நண்பர்களே! அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.



 இந்த நாயின் அவசரத்தை யாருமே புரிஞ்சுக்கிற மாட்றாங்கபா!

ஆதலால் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பீர். சின்னஞ்சிறு உயிர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பீர்!


தலை பக்கம்! வழக்கம் போல இதை படிச்சிட்டு அப்புறம்தான் அடுத்த பக்கத்தையே திறப்போம் நாம! 


ஆம் நண்பர்களே இந்த கதை வந்தது இந்த ஸ்பெஷல் நூலில்தான்.என் புத்தகத்தை யாரோ ஆட்டையை போட்டு விட்டாங்க! நண்பர் திரு.நாகராஜ் தயவில் பக்கங்கள் பார்வைக்கு கிடைத்தன. எனவே இந்த பதிவிற்கு உதவியமைக்கு நன்றி நாகா! 


பின்னட்டையில் எவ்வளவு கம்பீரமாக அவர் நிற்கிறார் பாருங்கள்!




      அப்புறம் நண்பர்களே! விரைவில் சந்திப்போம்! நிறைய சிந்திப்போம்! நேரமும் காலமும் இடம் கொடுத்தால்!! நட்புக்கு நிறமில்லை கதையில் நம்ம கிட் ஆர்டின் நண்பர் ஒரு கறுப்பினத்தவர் அவரை பலி கொள்ள எண்ணும் சிவப்பு சிலுவை கும்பல் (டெக்ஸ் சிவப்பாய் ஒரு சிலுவை, XIII )
இந்த நூலின் அடுத்த வெளியீடு! சிரிக்க வைக்கும்! சிந்தனையை தூண்டும் கதை நண்பர்களே!

என் கையில் இருப்பது கார்பன் துப்பாக்கி நண்பர்களே! ஒரே நேரத்தில் இருபது தோட்டாக்கள் நிரப்பி சுடலாம்! 

" திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குது! அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது"
என்ற உயர்ந்த சிந்தனைகளுடன் விடை பெறுகிறேன் நண்பர்களே! அஹிம்சைக்கோர் காந்தி!! இது போன்ற ஆயுதங்களை அன்பால் வென்று நீதிக்காக சிறைவாசம் ஏற்று நமக்கெல்லாம் வாங்கி கொடுத்து இருக்கும் சுதந்திரத்தை சுவாசிப்போம்! அவரை என்றும் நேசிப்போம்! வாழ்க பாரதம்! வாழ்க காந்தி மகான்!









குறிப்பு: அன்பு நண்பர்களே! இந்த புகைப்படம்தான் இந்த பதிவுக்கு என்று சிறப்பாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. என்ன பண்ண? நேரம் என்ற ஒரு விஷயம் செய்யும் விஷமத்தில் அச்சச்சோ என் கால்ஷீட் எனக்கே கிடைக்க மாட்டேங்குது நண்பர்களே! இந்தாங்க பிடியுங்க போனஸ்.. ஹி ஹி ஹி லேட் ஆனாலும் நாங்க டெர்ரர்தான். விஷமத்துடன் உங்கள் அன்பிற்கினிய எதிரி!!! போயிட்டு சீக்கிரம் வாரோமுங்கோவ்!!!  

திங்கள், 17 செப்டம்பர், 2012

கதைக்கோர் கிழவி!

அன்புள்ளம் கொண்ட நண்பர்களே!

இனிய வணக்கம்!
       நாம எல்லோருமே பாட்டி கதைகளை கேட்டுதான் வளர்ந்திருப்போம்! நம்ம பாட்டி சொல்லும் கதையில் பாட்டி வடை சுட, காக்கா கொத்தி கொண்டு போகும். அதை, நரி தந்திரமாக கவர்ந்து செல்லும்.
       ஏழு கடல்கள், ஏழு மலைகள், ஏழு ஆறுகள் கடந்து ஒரு ராஜ குமாரி நமக்காக காத்து கொண்டு இருப்பாள். பல தடைகளை உடைத்து கொண்டு போய் பேய்களுடனும், அரக்கர்களுடனும் மல்யுத்தம் புரிந்து மீட்டுக் கொண்டு வருவோம். குழந்தையாக மாறி அவற்றை தரிசித்தால், நாம அந்த கதா பாத்திரமாகவே மாறி விடுவோம். அந்த மன நிலைக்கு நம்மைக் கொண்டு போகும் கதைகள் என்றுமே தகுந்த வரவேற்பு பெறும். வரப் போகிற

                                                  "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்"


விலை வெறும் நூறு ரூபாய் மட்டுமே மக்கா!

இந்த புத்தகத்தை அதை போன்ற லாஜிக் பார்க்காத மனத்துடன் படித்து, ரசித்து, ருசித்து, அனுபவித்து மகிழுங்கள் ! நண்பர்களே!!

       இது தவிர அறிவுரை சொல்லும் கதைகள் இங்கு நிறைய உண்டு! அவை நமது வாழ்வின் அடிப்படையாக அமைந்து நம்மை நல்வழியில் நடத்திச்  செல்லும்.முக்கியமாக "அவ்வை பாட்டி" (விக்கி பீடியா லிங்க் கொடுக்கணுமா என்ன?????) எனும் மாபெரும் பாட்டி நம்ம வரலாற்றில் பதிவாகி உள்ளார். அவர் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற அதி அற்புதமான வழி காட்டி நூல்கள் நம்மிடையே இன்றுவரை உலவி வருகின்றன. நச்சினார்க்கினியர், ஆண்டாள், காரைக்காலம்மையார் (அவுங்க சாமிகிட்ட வேண்டி பேயா மாறி தவம் செய்தாங்க நண்பர்களே!!!) போன்ற நிறைய வரலாறாக மாறியவர்கள் உண்டு நண்பர்களே!
   
கண்ணகி மதுரையே பற்றி எரியும்படி செய்தாங்க. சீதையோ ஒரு ராமாயணமே உருவாக காரணமாக இருந்தாங்க. எமனின் பிடியில் இருந்து தன் கணவனையே சாவித்திரி. நான் எதுக்கு அவங்களோட வரலாறை துணைக்கு அழைக்கிறேன் என்று கருதும் மானிடர்களே! இப்போ பாக்கப் போறதும் ஒரு தாய்க் குலம்தான். அதுக்கு முன்னாடி என்னோட வரலாறை கொஞ்சம் கொடுத்து உங்களை மகிழ செய்யும் எண்ணம். நிறைய கதைகள் இருக்கு நண்பர்களே. என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் பலப்பல!!! நேரம் கிடைத்தால் கடலை போடும் உத்தேசம் இருக்கு நண்பர்களே! அவை நம்பும்படி இருக்குமா?? தெரியவில்லை? கீழே நான் வாழ்ந்த வாழ்வின் அடிப்படையை கட்டமைத்த எனது பிரியமான ஆயா மற்றும்  தாத்தாவின் புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு,

என்னை உருவாக்கி உயர்த்திய தாயும் தகப்பனும் ஆனவர்கள்! 

      அற்புதமான தமிழ் வரலாற்றில் பதிவான பாட்டிமார்கள் குறித்து நான் இங்கே பெருமையோடு பதிவிடும் அதே சமயத்தில் எனக்கு வாய்த்த என் தாய் வழி பாட்டி (எங்க ஊர்ல ஆயா என்று அழைப்போம்) திருமதி.தாயார் அம்மாள் அவர்களும், எனது தாத்தா திரு.அமிர்தம் (காவல்துறை) அவர்களது  அரவணைப்பில் வளர வேண்டிய கட்டாயம்,  என் தந்தையார் மற்றும் குடும்பம் ராணுவ பணி காரணமாக ஈராக் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது வந்தது. எனக்கு மூன்றரை வயதில் எனது பாட்டியார் எனக்கு பாடம் எடுக்கும் சூழல். என்னை என் தாத்தா அப்போதெல்லாம் தன்னுடன் டீ கடைக்கு அழைத்து செல்வார். அங்கே இருக்கும் சிறுவர் மலரை படிக்க கொடுப்பார். அதில் வந்த உயிரை தேடி என்ற திகில் கதை தான் நான் படித்து பயந்த முதல் கதை. அதன் பின்னால் ராணி காமிக்ஸ் வெளியீடு வந்த பின்னர் தினத்தந்தி வாங்கும் முகவர் எங்கள் ஊரில் இருந்தததால் அவரே எங்கள் ஊருக்கு ராணி காமிக்ஸ் அறிமுகம் செய்த புண்ணியத்தை கட்டி கொண்டார். என் ஆரம்ப படிப்புத் திறமை (ஹி ஹி ) ஒரு மாதிரி இருப்பதை உணர்ந்து என் ஆயா முதலில் படம் பார்த்து கதை சொல் பாணியில் பாடம் எடுக்க ஆரம்பித்தார். அப்போ அறிமுகம் செய்து வைத்த, விதைத்த பழக்கம்தான் இன்றும் உயிரோடு இருக்கிறது. சும்மாவா பெரியவர்கள் சொன்னார்கள் "ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்று?" அழகியை தேடியில் இருந்தே வாங்கி படிக்க செய்து புண்ணியம் கட்டி கொண்டார். இன்று எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் ஒரு காமிக்ஸ் உடனிருந்தால் கவலைகளை மறந்து மனம் சாந்தமாகி விடுகிறது நண்பர்களே. 
          அப்போ வாரமலரில் ஒரு கிழவி பேய் கதை வரும். அந்த பேய் ஒரு மரத்தில் வசிக்கும் கொடூரமாக நடந்து கொள்ளும் --- கொல்லும்! அதை படித்து பல நாள் உறக்கம் இல்லாமல் இருந்தது உண்டு நண்பர்களே. அதற்கு படம் வரைந்தவர் மிக பயங்கரமாக வரைந்து இருப்பார். ( அந்த பேய் ஸ்கான் உள்ளவங்க எனக்கு அனுப்புங்க நண்பா இங்கே பதிவிட தகுதியான படங்கள் அவை )

இப்போ நம்ம கதைக்கு வரேன்!
இவுங்கதான் நம்ம மனதை கவர்ந்த கருப்பு கிழவி!!! அறிவுரை சொல்வாங்க. ஆனால் அதை கேட்டு நடக்க நாம முதல்ல உயிரோடுதான் இருக்கமா என்று நம்மை ஒரு முறை சுற்றி பார்த்து , கையை கிள்ளி சோதனை செய்து கொல்ல வேண்டியிருக்கும் நண்பர்களே. ஹீ! ஹீ! ஹீ !


பாட்டி சொல்லும் அறவுரை மற்றும் அறிவுரைகள் நமக்கு மட்டும் அல்ல மானிடர்களே! ஆவி உலகை சேர்ந்தவர்களுக்கும்தான்! நல்லதை நினைப்பவன் வாழ்வான்! மற்றவன் வீழ்வான்! அதான், நம்ம பாட்டி சொல்லும் கதைகளின் அடி நாதம்!!! எனினும் தவறிழைப்பவன் தண்டிக்கப்படும் விதம் படு பயங்கரமாக இருக்கும் நண்பர்களே!! உஷார்!

       "உப்பை தின்றவன் கண்டிப்பாக தண்ணீர் குடித்தே தீர வேண்டும்" என்ற கொள்கையை தன் கதைகளில் எப்போதும் எடுத்தாண்டு வரும் என் அன்பான எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் (ஆயிரம் நாவல்கள் எழுதிய அபூர்வ சிகாமணி ) சிந்தனையை போலவே இந்த பாட்டி சொல்லும் கதைகளும் நியாயம் வெல்லும் என்றே போதித்தாலும் சில சமயங்களில் பொய்யும் ஜெயிக்கும் (தற்காலிகமாகத்தான்) எனவும் சொல்லி பயமுறுத்தும்! 

   எங்கள் அன்பை பெற்ற ஆசிரியர் திரு.அசோகன் அவர்கள் சமீபத்தில் கூட கிராபிக்ஸ் நாவல் வெளியிட்டார். அதை எழுதியவர் டாக்டர் திரு.L.பிரகாஷ். அவர் தனது வாசகர்களுக்கு எழுதும் வார்த்தைகள் எல்லாம் எடிட்டர் ஏரியாவில்  இடம் பெறும். ஸ்கான் செய்து கொடுத்த திரு ஜான் போஸ்கோ அவர்களுக்கு (ஹி ஹி என் மச்சானுக்குதான் நன்றிகள்!) 


திரு.அசோகன் அவர்களை வைத்தோ அல்லது திரு ராஜேஷ் குமார் அவர்களை வைத்தோ நெவெர் பிபோர் ஸ்பெஷல் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று இந்த இடத்தில் என் கோரிக்கையை வைக்கிறேன். திரு பட்டு கோட்டை பிரபாகர், திருவாளர்கள் சுபா ஆகியோரையும் கேட்டு பார்க்கலாம் என்பது எனது அன்பான வேண்டுகோள்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே! நம்ம விஜயன் சாருக்கு தொலை பேசியில் சொல்லலாமே! புறப்படுங்கள் தோழர்களே! சாதனை சரித்திரம் படைப்போம்!

இங்கே ஒரு கிழவியின் கதை உங்க அன்பான பார்வைக்கு மட்டும்! நட்புக்காக மட்டும். இதனை பதிவிடுவதில் எந்த லாப நோக்கும் கிடையாது நண்பர்களே! உங்களுக்கு கிடைத்து இருப்பின் அந்த புத்தகம் கிடைத்த விதம குறித்து பின்னூட்டம் இடுங்களேன். இந்த நூல் கிடைக்க பெறாதவர்கள் மட்டும் கீழே போங்க . மத்தவங்க தாவிடுங்க! நன்றிகள் திரு விஜயன் அவர்களுக்கு போய் சேர வேண்டும் நண்பர்களே. தரமான மொழி பெயர்ப்பு. சிறப்பான தேர்வுகள் என்று தன் லயன் , முத்து , கிளாசிக்ஸ் காமிக்ஸ் வரிசைகளை வடிவமைத்து வருகிறார். வரப் போகும் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் நிறைய பக்கங்களுடன் அதிரடிக்க காத்து இருக்கிறது. நீங்கள் தயாரா? இங்கே வந்து இருக்கும் கதை ஹாரர் ஸ்பெஷல் புத்தகத்தில் வந்த ஒரு சிறு கதை.
அதிர வைக்கும் அட்டை. சிவகாசி பிரகாஷ் பப்ளிஷர்ஸ் கைவண்ணத்தில் என்னமாய் மிரட்டி எடுக்கிறது பாருங்கள்.










  அடுத்தடுத்து இது போன்ற மிரட்டல் விடுப்பது கிழவி கருப்புவின் வழக்கமான பாணி!!
படித்த நண்பர்களுக்கு இங்கே ஒரு வேண்டுகோள். ஹீ ஹீ ஹீ வேறென்ன அற்ப மானிடர்களே! நான்தான் கருப்பு கிழவி பேசுறேன் நானும் என் ஆவி கூட்டமும் உங்களை மிரட்ட நினைக்கிறோம். அடுத்த வருடமாவது எனக்கு வாய்ப்பு தர சிவகாசிக்கு தட்டவும். இல்லை உங்க கனவுல வந்து உங்களை கலாட்டா பண்ற நெனப்புல இருக்கேன் அம்பிகளா!! ஹீ ஹீ ஹீ ஹீ ஹீஈஈ!!!!!! (குரல் மெல்லியதாகி கொண்டே போகிறது)

சரி நண்பர்களே! அப்புறம் என்ன எங்க பாட்டி தங்க பாட்டி நிறைய கதை கைவசம் வெச்சு இருக்காங்க. நீங்க மனசு வெச்சா கதை சொல்லி பயமுறுத்துவாங்க! மீண்டும் சந்திக்கலாம் நண்பர்களே! அது வரை உங்களிடமிருந்து விடை பெறுவது பாட்டியோட குட்டி பேய்......ஈஈஈஈஈஈ......

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

இதுதான் சிவப்பிந்திய எழுச்சி!

அன்புக்கு மட்டுமே அடி பணியும் நண்பர் கூட்டங்களே!

எதற்கும் அஞ்சா, அடி பணியா ஒரு வீரனின் கதை என்று தலைப்பில் இருந்தாலும் இதில் இரண்டு வீரர்களின் லட்சிய பயணங்கள் காட்டபட்ட்டுள்ளன. 
இந்த கதை இடம் பெற்றது முத்து காமிக்ஸில். நெஞ்சில் வீரமும், மண்ணின் மானமும் சுமந்து வாழ்ந்த மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது அதை எதிர்த்து சீறி எழுவது வீரர்களின் அடிப்படை குணம். அப்படி எழும் தனி மனிதனின் கதை மட்டும் அல்ல இது ஒரு சமூகத்தின் போர்க்குரல் இது "எவர்க்கும் அடிபணியோம்" என்பதை உரக்க கூவி சொல்லும் வெற்றி கதை இது.   

முதலில் ஒரு அடிமை செவ்விந்திய வீரன்:
    பாசமிகு குடும்பத்தினை, அன்பான சமூகத்தின் அரவணைப்பை, ராணுவ வீரர்களின் அடக்கு முறையில் இழந்து விட்டு வாழ்வை தொலைத்து விட்டு விட்டேத்தியாக வாழ்ந்து கொண்டிருந்தவன் "சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்ற கதையாக யுத்த இசையை ஒரு சாதகன் வாசித்ததை கேட்டு பழைய நினைவுகளால் கிளறப்பட்டு பொங்கி எழுகிறான். தன்னை வெறும் குடிகாரனாக நினைக்கும் வெள்ளையர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் நோக்கில் மீண்டும் அடிமை வாழ்வை மேற்கொள்ள மாட்டேன் என்று தன் இயற்கை கடவுளின் மீது உறுதி எடுக்கிறான். தன்னை அவமானப்படுத்திய குடிகாரர்களை அளித்து விட்டு பின்னர் தன் லட்சியப் பயணத்தை துவக்குகிறான். கண்ணில் படும் அத்தனை வெள்ளையர்களின் மீதும் தாக்குதல் தொடுக்கிறான்.
இரண்டாவது ஒரு வெள்ளை வீரன்:
பில் ஆடம்ஸ் எனும் அந்த வீரன் மேலே கண்ட செவ்விந்தியனின் விஸ்வரூபம் வெளிப்படும் வேளையில் வருகிறான். அவன் தன்னை தொடர்வது கண்டு அவனை மடக்கும் செவ்விந்தியன் தன் மக்களுக்காக குரல் கொடுத்தவன் இந்த வெள்ளையன் என்று அறிந்து உயிருடன் விட்டு விட்டு புறப்படுகிறான். 
 ஜெனெரல் கஸ்ட்டர்--என்ற மனிதன் தன்னிடம் இருக்கும் படைகளை செவ்விந்தியர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் பயன் படுத்துகிறான். அதில் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் நமது செவ்விந்திய வீரன்.
    
    அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கிராண்ட் அனுப்பிய வீரனே வெள்ளை வீரன். செவ்விந்தியர்கள் அவனது படைகளை லிட்டில் பிக் ஹார்ன் எனும் இடத்தில் 1876 June 25 அன்று சந்திக்கின்றன. தன் வலிமை - எதிரி வலிமை அறிந்து மோதல் மேற்கொள்ள அந்த ஜெனரல் கஸ்டருக்கு பாவம் திருக்குறள் தெரியாது.  யுத்த தந்திரம் அறியாதவன். மேலும் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்ற உயர்ந்த தத்துவம் அறிய அவன் தமிழ் நாட்டில் பிறந்தவனல்லவே!!!

     எனவே அவனது படையை மூன்றாக பிரித்து வெவ்வேறு திசைகளில் தாக்குதல் தொடுக்கிறான். இதில் என்ன கொடுமை என்றால் எல்லோரும் அவரவர் இடத்தில் நிலை கொள்ளுமுன் செவ்விந்திய ஒற்றர்கள் கண்டு கொண்டு தங்கள் அணிகளை உஷார் படுத்தி விடுகின்றனர்.  இது குறித்து நம்ம இரண்டாவது வீரன் எவ்வளவோ எச்சரித்தும் படையின் போக்கினை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போகிறது. வெள்ளையர்களை வஞ்சம் தீர்த்து கொள்கின்றனர்.  அன்று மட்டும் இறந்த அமெரிக்க வீரர்கள் 263 பேர். இவ்வாறு செவ்விந்திய வரலாற்றிலேயே மிக முக்கிய இடம் பிடித்த செவ்விந்தியர்களின் எழுச்சி அமெரிக்க வரலாற்றை அசைத்து பார்த்தது. இந்த இனம் சியோக்ஸ் எனப்படும் இனம். வரலாறு இதனை பதிவு செய்து வைத்திருக்கிறது. 
                      
அப்புறம் என்ன நண்பர்களே! விடை பெறுவோம்! மீண்டும் சிந்திப்போம்! என்றும் அன்புடன்---ஜானி. 

திங்கள், 10 செப்டம்பர், 2012

ஒரு டமால் டுமீல் படலம்!!

வணக்கம் நண்பர் கூட்டங்களே!
முதலில் நம் நண்பர் திரு.சௌந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
நிகழும் மேற்கு அதிரடியில் மாதம் ஒரு வாசகர் பக்கத்தில் இடம் பெற்ற பெருமை அவரையே சாரும்!

வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல்!!! மிக அட்டகாசமாக வெறும் ரூபாய் நூறில் அதிரடியாக வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டுள்ள புதிய புத்தகம். வெளியீடு முத்து காமிக்ஸ். கண்டிப்பா உங்க பிரதியை தவற விடாதீர்கள் நண்பர்களே. 
அட்டை இப்படிதான் அதி அற்புதமாக பாலையின் சோகத்தை மனதில் பதிய வைப்பது போல இருக்கு! அமெரிக்க நாட்டின் அதிரடியான துவக்க பக்கங்களை வரலாறு என்றுமே மறவாது. சிவப்பு இந்தியர்களின் வளமை மிக்க தேசத்தை சொந்தம் கொண்டாட அமெரிக்கோ வெஸ்புகி வழியமைத்து கொடுத்தார். கொலம்பஸ் முதலில் கண்டு பிடித்தாலும் அதனை முறையாக உலகுக்கு இது இந்தியா அல்ல-வேறு நாடு என்று அறிவித்ததால் அமெரிக்கோ "அமெரிக்கா" நாட்டின் பெயரில் இடம் பிடித்தார். ஆரம்ப களத்தில் பல்வேறு நாடுகளின் மக்களும் வந்து சொந்தம் கொண்டாட, அதனால் சிவப்பிந்தியர்கள் திண்டாட, நாமெல்லாம் இன்று படித்து மகிழும் அத்தனை அதகளமும் அரங்கேற, அதில் ஒரு பங்காக இன்று நம் முன்னால் மரண நகரம் மிசெளரி::
நம்ம டைகர் பற்றி அறிமுகம் தேவையா? இருந்தாலும் நம்ம திசையில் ஒருக்கா யாரவது ஒதுங்கினா அவங்களுக்கு புரிய வைக்க ஒரு கதை. மத்த நண்பர்கள் தாவிடுங்க. இவர் நம்மில் ஒருவன். சாதாரண மனிதன். மிக மட்டமான நிலை வரை கீழ இறங்கி அடிப்பார். மேல ஏறியும் அதிரடிப்பார். சும்மா இல்ல அந்த கால அமெரிக்க பிரசிடென்ட் வரை இவரது நட்பு உண்டு. நட்புக்கு உயிரையும் கொடுப்பார். கதையின் நாயகனாக வாழ்வார். படிக்கும் வாசகர்கள் தாங்களே டைகர் ஆக உணர வைப்பார். நல்ல ஒரு நாயகர். நம்ம முத்து காமிக்ஸ் தங்க கல்லறை மூலம் அறிமுகம் ஆகி வாசக நெஞ்சங்களில் வாழ்கிறார். அட்டகாசமான கௌ பாய்! 
கதை நாயகன் புதியவர். கதை சொல்லும் விதம் சோகத்தை வரவழைக்கும். அந்த காலகட்ட வாழ்வை பதிவாக்கி உள்ளனர். நாயகர் நம்ம பதினாறாவது ஆண்டு மலரில் இடம் பெற்ற பெயரில்லா (அல்லது முக்கியதுவம் அற்ற) நாயகர் போன்று இருக்கிறார். வெஸ்டர்ன் என்ற பெயரில் வெளி நாட்டில் வெளியான கதை தொடரில் இடம் பிடித்த கதை வரிசை. 

இது போன்ற அதிரடிகளுக்கும் பஞ்சம் இல்லை நண்பர்களே 


 அதிரடிகளுக்கு எல்லாம் அரசனின் அறிக்கை கீழே::




யூனியன் பசுபிக் மற்றும் சென்ட்ரல் பசுபிக் கம்பெனிகளின் அடிதடியில் நடுவே டைகர் புகுந்து புறப்படுகிறார். இரும்புக்கை பொருத்தி இருக்கும் கயவன் செவ்விந்திய கூட்டங்களை யூனியன் பசுபிக் கம்பனிக்கு எதிராக திசை திருப்பி விட அடிதடி ஆரம்பம். டைகர் தலையீட்டை முறியடிக்க முயலும் இரும்புக்கை அரக்கனின் அதிரடி அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த கதையில். எனவே மறக்காமல் வாங்கி விடுங்க. இதன் ஆரம்ப பாகங்களை நம்ம விஜயன் சாரிடம் கலாட்டா பண்ணி பதிப்பிட வைத்து விடலாம் நண்பர்களே. 

லார்கோ வரார்! பராக்! பராக்!


வாழ்த்துக்கள் மகேந்திரன்! 








  அனைத்து ஸ்கான்களுக்கும் நன்றி சௌந்தர் அவர்களையே சாரும்! அவரது பதிவு http://tamilcomics-soundarss.blogspot.in/ அங்கே காத்திருக்கிறது!
மறக்காம வாங்கிடுங்க நண்பர்களே டுமீல்! டுமீல்! 

புதன், 5 செப்டம்பர், 2012

அதிரடியின் திசை மேற்கு!

அன்புள்ளம் கொண்ட அரிய நண்பர்களே! அனைவருக்கும் வணக்கங்கள் ! மரண நகரம் மிசெளரி-எமனின் திசை மேற்கு ஆகிய மேற்கு உலக அதிரடி பக்கங்களை இன்னும் சில நாட்களில் ருசிக்க உள்ள நாம், ஒரு நினைவு கூறும் முயற்சியாக கணவாய் கதைகள் என்ற பெயரில் முத்து காமிக்ஸில் வந்த கதை வரிசையின் முதல் பாகம் உங்கள் பார்வைக்கு, மற்ற பாகங்கள் குறித்த அறிவிப்பு வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் புத்தகத்தில் வரலாம் என்று ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறேன். இந்த நூல் ஹாரர் ஸ்பெஷல் புத்தகத்தின் பின் இணைப்பாக வெளியானதாகும். 









சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.

 வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...