செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

குமண வள்ளல்_கோட்டோவிய வெளியீடு....








Available at....ocomics.com

ஐஸ் மச்சான் ஐஸ்!

இது என்னவளுக்கு ஐஸ் வைக்க எழுதிய கவிதை. ஊர்ப்பெயரை மாற்றி உபயோகித்து உங்கள் அவள்களை குளிரப் பண்ணுங்கப்பா.
அன்பே போதையூட்டுவதால் உன் பெயர் ஆல்கஹாலா?
மயங்க செய்வதால் நீ ஹெராயினா?
மிரட்சி கொள்ள வைப்பதால் நீ பூலான் தேவியா?
செல்ல முறைத்தலில் நீ சூர்ய காந்திப் பூவா?
அடம் பிடிப்பதால் நீ என் இன்னொரு பிள்ளையா?
சதி பல செய்வதால் நீ பெண் சாணக்கியனா?
நாடகம் தினம் நடத்துவதால் நீ ஷேக்ஸ்பியரின் வாரிசா?
நீட்டி முழக்குவதால் நீ அறிஞர் அண்ணாவின் அடுத்த பிறவியா?
கொழுப்பு அதிகரித்ததால் நீ ஹிட்லரும் கூடவா?
விடையேதும் தெரியாமல் சட்டையைக் கிழித்தலையும் பித்தனடி நான்.
என் சிந்தனையை சிறை வைத்தவளே
உனக்கு வைக்கவா மெரீனாவில் ஒரு சிலை?
இல்லை, இல்லை வைக்கலாம் வா மணலூர்ப்பேட்டை மாநகர மண்ணில் இன்னொரு உலை!
இல்லையேல் சிந்தித்தே சிதறிடும் என் தலை.
இன்னுமா புரியவில்லை இந்த கிறுக்கல் கிறுக்கியவனின் நிலை?

புதன், 27 ஜூலை, 2016

புதன், 1 ஜூன், 2016

Lion-Muthu Comics: 1 புலியும்...3 யானைகளும்..!

Lion-Muthu Comics: 1 புலியும்...3 யானைகளும்..!: நண்பர்களே, வணக்கம். சனிக்கிழமை (June 4th) காலை 11-30 மணிக்கு நுங்கம்பாக்கம் APEX PLAZA-வில் உள்ள THREE ELEPHANT புக் ஸ்டோரில் சீனியர...

செவ்வாய், 24 மே, 2016

சிறுமியர் காமிக்ஸ்_தமிழில் முதல் முறையாக_கால இயந்திரம்...!

வணக்கங்கள் தோழமை நிறை நெஞ்சங்களே. இதோ உங்களுக்காக ஜூடி. சிறுமியருக்கென்றே வடிவமைக்கப்பட்டதொரு சித்திரக்கதைப் புதையல். பூக்கள் என்ன நினைக்கும்? மலர்கள் எப்படி வாசம் வீசும்? தென்றல் எப்படித் தழுவிச் செல்லும்? அதுதான் சிறுமியர் சித்திரக்கதைகள். 
அதில் ஜூடிக்குப் பெரும் பங்கு உண்டு. இன்று தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் மூலமாகத் தமிழகத்தில் காலூன்றி இருக்கிறாள். அவளது அட்டகாசங்களுக்கு இது ஒரு சிறிய துவக்கப் புள்ளிதான். இதனை நெடும்பயணம் ஆக்குவதற்குத் தமிழ் மண்ணில்  உள்ள  சித்திரக்கதைப் பத்திரிகைகள் குறிப்பாக லயன்  குழுமம் ஆர்வம் காட்டினால் மிகவும் மகிழ்வேன். 






குறிப்பு:

அப்படியே pdf, cbr கொடுத்து விடுங்கள்  தோழர்களே. அது உங்கள்  கடமை. ஆங்காங்கே  முகநூலிலும் உங்கள் டைம் லைனில் பகிர்ந்தாலும் மகிழ்ச்சியே. 

என்றும் அதே  அன்புடன், உங்கள் இனிய நண்பன் ஜானி.

திங்கள், 9 மே, 2016

காயீன் & ஆபேல் _விவிலியப் படக்கதை_001

 இறைவனின் பேரன்புக்குப் பாத்திரமான இறைவனின் இனியவர்களே. இனிய வணக்கங்கள். அன்னையர் தின நல்வாழ்த்துகள் சகோதரிகளே. 
 இது விவிலிய சித்திரக்கதை வரிசையில் வந்த காயீன் & ஆபேலின் அடுத்த கட்ட பரிணாமம். இதனை வண்ணத்தில் உருவாக்கிட உழைத்த எல்பின் & தியோவுக்கு வாழ்த்துக்கள். இது தேவசி மற்றும் பென்னி ஆகியோரால் வரையப்பட்டு கதை புனையப்பட்ட விவிலியப் படக்கதை வரிசையில் முதலாவது நூலாகும். புத்தகங்கள் தேவைப்படுவோர் தொடர்புக்கு எண்கள், மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவகாசி ஜேம்ஸ் ஆர்ட்ஸ் இதனை பிரசுரித்துள்ளது. இந்தத் தொடர் துவக்கத்தில் நீங்கள் வாசித்த அதே காயீன் & ஆபேல் இரு வண்ண சித்திரக்கதையின் ஓவியங்கள் மற்றும் கதை ஓட்டம்தான். வண்ணத்தில் அசத்தி இருக்கின்றனர். தமிழும் புதிய தலைமுறைக்குகந்த விதத்தில் வடிவமைப்புக்குள்ளாகி இருக்கிறது. படித்து மகிழுங்கள். இறைவனின் அன்பை ருசியுங்கள். பொறாமையும், அன்பும் சந்திக்கும் தருணங்களை மனதில் என்றும் நினைவு கொள்ளுங்கள். அன்பே வெல்லட்டும். அன்பே இறைவன். அன்பே நித்யம்.  




































அன்பே உருவான ஆபேலின்  வாழ்க்கை உங்கள்  வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தால் அதுவே இந்த சித்திரக்கதையின் சிறப்பாகும். இறைவனது முன்னிலையில் பொறுமையும், மனத் தாழ்ச்சியும் மட்டுமே நன்மைகளைக் கொண்டு வரும் பிரியமானவர்களே. இந்த நூலை நமக்காக கொடுத்துதவிய விசுவாச நூலகம், புனித தாமஸ் மலை தேசிய திருத்தலத்தைச் சார்ந்த  ரோமன் கத்தோலிக்க சபையினர் அனைவருக்கும்  தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்  வாசகர்கள் சார்பில் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன். இந்த கூட்டு  முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும், வாசித்து மகிழ்ந்த அனைவருக்கும் இறைவனது இனிய ஆசீர் கிடைப்பதாக. 
நன்றி.
என்றும் அதே கிறிஸ்துவின்  அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி. 
குறிப்பு: பழைய விவிலிய சித்திரக்கதை வரிசை அதன் போக்கில் தொடரும். இந்த புதிய வண்ண விவிலியப் படக்கதை கிடைத்த நூல்கள் வரை தொடரும். 

சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.

 வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...