ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

ஏய்..மானிடா..ஜானி




பெற்ற தாயாய் 
உனைத் தாங்கும்
பூவுலகை 
வெற்றி கொண்ட 
கர்வம் கொண்டு 
நடைபயின்ற மானிடா...
அகிலம் அளக்க 
கடலைக் கடக்க 
யுத்தம் நூறு செய்திட்டாய்.. 
பல தலைகள்..
பல உயிர்கள்..
காவுகூட வாங்கினாய்..
ஒற்றை கிருமி 
உந்தன் தேகம் 
துரத்தக் கண்டு 
ஓடினாய்..
அடக்கியாளும் 
மனதை மாற்று.. 
சேவை செய்யும் 
இதயம் கைக்கொள்..
மீண்டும் வாழ 
வாய்ப்பிருந்தால்..
மீண்டு வா..வா..
மனிதனாய்..
-ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

XIII - சில பயணங்கள் முடிவதேயில்லை.. இன்று xiii பிறந்த நாள்..

 வணக்கங்கள் வாசகர்களே.. நமது அன்பு நாயகர் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு தன் இறந்த காலத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்று வரு...