செவ்வாய், 15 ஜூன், 2021

**ஆவலுடன்...**_ஜானி சின்னப்பன்



நீ இல்லாத 

என் சாலைகள் 

எப்போதும் வெறிச்சோடியே கிடக்கின்றன..


உன் சுவாசம் படிந்த

உற்சாகக் காற்று கிடைக்காமல்

ஒவ்வொரு மரமும் உணர்கிறது 

என் தவிப்பை..


உன் கலகலப்பான

சிரிப்போசை கேட்காத குருவிகள் தம் பாட்டுக்கு மெட்டமைக்க முடியாமல்

மௌனமாகின்றன..


ஈரப்பதம் மிக்க உன் கண்களின் தயவின்றி

இலைகளின் நீராவித் துளைகளில்

பாலைவனக் காய்ச்சல்..


நிலைமை இன்னும் மோசமாவதற்குள் ஒரு முறை இவ்வழியே கடந்து

போய் விடேன்..


உன் வரவுக்காய் ஆவலுடன்..


_ஜானி சின்னப்பன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

XIII - சில பயணங்கள் முடிவதேயில்லை.. இன்று xiii பிறந்த நாள்..

 வணக்கங்கள் வாசகர்களே.. நமது அன்பு நாயகர் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு தன் இறந்த காலத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்று வரு...