திங்கள், 21 டிசம்பர், 2015

கரைந்து மறைந்தவன்...


இனம் பார்த்துப் பழகினேன்
இடியுண்டு விழுந்தேன்.

மதம் பார்த்துப் பழகினேன்
மனமொடிந்து போனேன்.

சமூகம் பார்த்துப் பழகினேன்
சதி சறுக்கி விழுந்தேன்.

மொழி பிரித்துப் பழகினேன்
விழி நீர் வீழ விலகினேன்.

கட்சியின் வெளிச்சத்தில்
கரை வெட்டிகளின் பளபளப்பில்

தோரணங்களின் மயக்கத்தில்
விண் தொடும் விளம்பரங்களைப்

பார்த்துக் கலந்தேன்.
கால் தடுக்கி வீழ்ந்தேன்.

சாக்கடை மீதென் இனிய வதனம்.
இனி எழுவது சாத்தியமே இல்லை

என்றானதும் அப்படியே மறைந்து போனேன்
சூரியனின் முன் பனியாக.


ஆம். 
நான் கரைந்து மறைந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வேதாளர் திரைப்படத்தின் 29 ஆண்டுகள்..

 வணக்கம் ப்ரண்ட்ஸ்.. வேதாளரின் திரைப்படமான தி பேண்டம் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகிறது: 1996 ஆம் ஆண்டு வெளியான "தி பாண்டம்" தி...