திங்கள், 17 பிப்ரவரி, 2020

வதைக்காதே..வா..

இமை மூடியபொழுதினில் உன்நினைவென்னை வதைக்குதடி..
தென்றலாய் வந்து தீண்டிப் போனாய்..
தீயாய் தகிக்குதென் நெஞ்சமடி...
அலையாய் வந்து நனைத்துப் போனாய்..
வெந்நீரில் மீனாய் வதைக்குதென் இதயமடி...
கதிர்வீச்சாய் உன் கண்கள் ஒளிவீச
என் நெஞ்சில் பாய்ந்ததே ஓர்
 ஈட்டியடி..
மீண்டும் வருவாய்..
நகைத்தென்னைக் கொல்வாய்..
தயாராய் காத்திருக்கிறேன்..
வா...
....
தூண்டில் மின்னிதழுக்காக..
ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

XIII - சில பயணங்கள் முடிவதேயில்லை.. இன்று xiii பிறந்த நாள்..

 வணக்கங்கள் வாசகர்களே.. நமது அன்பு நாயகர் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு தன் இறந்த காலத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்று வரு...