திங்கள், 24 பிப்ரவரி, 2020

தாகம்...

தோலுரித்த பாம்பாய்..
வாலறுந்த பட்டமாய்..
கிளையுதிர்த்த இலையாய்..
கூவிச் சென்ற குயிலாய்..
சிறகுதிர்த்த சிட்டாய்..
வெறிச்சென வானாய்..
கனத்தது என் நெஞ்சில்..
நீ இல்லா நிமிடங்கள்..
மீண்டும் உயிர் பெறுவேனா..
காற்றில் உன் இதம்..
நம்பிக்கையோடு வழியில்
விழி வைத்து
தவத்துடன் நான்..
தாகம் தீர்க்க வா...
-ஜானி..
-கவியதிகாரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பன் நினைத்தால்.. _ஜானி..

  நண்பன் நினைத்தால்.. கதை ஜானி.. ஓவியம் சேட் ஜிபிடி. ஒரு சிறிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், நீர் நிறைந்த குளம், காற்றில் மெல்ல ஆடும் தென்...