வெள்ளி, 24 டிசம்பர், 2021

027_எஸ்தர்_விவிலிய சித்திரக்கதை வரிசை_கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்-2021

அன்புக்குரிய உங்களுக்கு.. ஆண்டவராகிய ஏக இறைவன் மானிட இனத்தின் மீது கொண்ட அளவற்ற அன்பினாலும் இரக்கத்தாலும் தன் ஒரே பேறான மகனை மண்ணுலகம் ஜீவித்திருக்கும் பொருட்டாக பூமிக்கு அனுப்பித் தந்த நன்னாளையே கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவாக பூமி மாந்தர் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த தினத்தில் நாம் வாசிக்கவிருக்கும் விவிலிய சித்திரக்கதை எஸ்தர். தான் சார்ந்த இன மக்களை காக்கும் பொறுப்பானது தன் மீது சுமத்தப்பட்டபோது அவள் என்ன செய்தாள்? தனக்கான பணியினை எவ்வாறு இறைவனை முன்னிறுத்தி சாதித்தாள் என்பதனை இந்த விவிலியக்கதை  சித்திரங்கள் வழியாக உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறது.. வாருங்கள் வாசிப்போம். இறைவனது அன்பினை நாடுவோம். ஹேப்பி கிறிஸ்மஸ் அண்ட் ஹேப்பி நியூ இயர்..     



இந்த கதையை முழுமையாக வாசித்திட ஏதுவாக பிடிஎப் வடிவில்:

தரவிறக்கம் செய்து மகிழுங்கள்.. என்றும் அதே அன்புடன்.. ஜானி.



 

அமெரிக்காவில் அது நிகழ்ந்த ஆண்டு.. அறிமுகம்


வணக்கம் நட்பூக்களே! அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். அமெரிக்க மண்ணில் நிகழ்ந்த சில சம்பவங்களை சித்திரக்கதை வடிவில் இணையத்தில் காண நேர்ந்தது. அது தமிழில் வந்தால் எப்படி இருக்கும்? 
இப்படித்தான் இருக்கும்.  
சின்னதாக ஒரு முயற்சி.. 
பல்வேறு சித்திரக்கதைகளைப் பற்றியும் அறிமுகப்படுத்தி வாசிக்க செய்ய முயற்சிக்கிறேன். பிடித்திருந்தால் பொறுமையாகக் காத்திருக்கவும்.. யார் கண்டது. இந்த சித்திரக்கதை முழுவதுமே கூட வெளியாகலாம். ஹீ.. ஹீ.. ஹீ..   
என்றென்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன் 

கூடுதல் விவரங்கள் அறிந்திட நேரமும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு:
https://en.m.wikipedia.org/wiki/JCPenney
 

வியாழன், 16 டிசம்பர், 2021

கவிதையில் தொலைந்தவன்..ஜானி சின்னப்பன்

 கவிதைக்குக் கண்ணின்றித் தொலைந்து போன சிறுபயலென்னைத் திரும்பியும் கவிஞனாக்கிச் சென்றது ஒரு பேருந்துப் பெண்ணின் துப்பட்டாவின் உரசல் என்று கதைவிட்டாலும் கவிதையென்பீர்களோ..?!கவிஞனென்பீர்களோ?! கவிஞனென்பவனின் கவிதைகளின் ஆணி வேரில் பொய்யும் சேரும்போதினில்தான் கொஞ்சம் கொத்துமல்லி மிதக்கும் ரசமென மணமணக்கும்.. இன்றைய கணங்கள் நாளைய நினைவுகளாகக் கடப்பதைத் தடுத்து இன்றை இனிமையாக்கிடக் கவிஞனின் 

சிறு பொறிகள் கணங்களின் இனிமையை அள்ளித் தர இதயம் முழுதும் உயிர்ப்பு நிறைந்து ததும்பி அலைகிறது.. மழை நேரத்து தும்பியாய்...

-ஜானி சின்னப்பன்

திங்கள், 13 டிசம்பர், 2021

இது ஒரு வன்மேற்கின் கதை_ஜானி சின்னப்பன்

 பூம்...

வெடித்ததொரு டைனமைட்..

அதிர்ந்ததந்த சுரங்கம்..

வெளிப்பட்டதோ வண்டி வண்டியாய்த் தங்கம்..

சுரங்கத்தை சுரண்டி இயற்கையைச் சுரண்டியவர்களைச் சுரண்டிப் போகவொரு கூட்டம்..தெரு முக்கிலேயே காத்திருக்கும்.. கௌபீனத்தில் கட்டி வைத்திருந்தாலும் கவர்ந்து விடுமந்தக் கர்வமிகு கூட்டம்.. தீயதை ஒழிக்கவென்றே ஆங்காங்கே செரீப்புகளும் மார்சல்களும் அவதாரமே எடூத்து வந்து

டுமீல் டுமீலெனச் சுட்டாலும் புற்றீசல் கூட்டத்தை யாரால் தடுத்திட முடியும்?

நாளொரு கொலையும் பொழுதொரு வதமுமாய் திமிலோகப்படுமந்த மதுபானக் கூடம்.. உடையும் பாட்டில்களும் ஓடிப் பதுங்கும் பேரழகுப் பதுமைகளும் பஞ்சமில்லாப் பாலை வெளிகளும் கரைதெரியாப் பாலைவனக் கடல்களும் பாய்ந்து வரும் புரவிக் கூட்டமும் வெட்டியான்களின் வாய் நிறைந்த இளிப்புகளும் லாடங்கள் தெறிக்கும் கொல்லர் கூடமும் விற்றுத் தீர்ந்தே சலித்துப் போகும் தோட்டாக் கடைகளும் தினம் தினம் மரணம் தின்னும் இரத்த பூமியும்.. கண்டேன் வன்மேற்கிலொரு வன்முறைக் காவியத்தை...ஜானி சின்னப்பன்

தூரத்திலே..ஜானி சின்னப்பன்

 விழுந்தும் வீழ்ந்தும் 
அழிந்தும் அழுகியும்
மங்கியும் மறைந்தும்
வெம்பியும் வேகமாயும்
மாய்ந்து போகுதென் 
மனசு..
மங்கையவள் 
மலர்ப்பாதங்களின் 
கொலுசொலிகள்
கொஞ்சம்
தொலைவிலே
கேட்கும் அந்த
வினாடி..

மனப் பறவையின் தாகம்_ஜானி சின்னப்பன்




அன்று ஒரு நாளில்
அற்புதமாய் துவங்கிப்பின்
அர்த்தம் அறுந்து
போனதொரு தினத்தின்
அர்த்தமற்ற தருணங்கள் 

அர்த்தமற்றதாய்
மாறிப் போனதொரு
முழு நிலவின்
வெளிச்சப் புன்னகை
சிந்தியதொரு
அர்த்தமற்ற இரவுப் பொழுதின் 

கடந்து போன வினாடிகளில்..
நீயென் மனதைக்
கிழித்துப் போனபின்னே
நடந்ததை நீயறிவாயோ?!?
உன் வார்த்தைகளற்ற 

மௌன வாளின் வீச்சில் 

அறுந்து போன அத்தனை 

நரம்புகளும்
உன் நினைவுகள் இழையோடும்
பட்டுப் போனதொரு கல்
மரமாய் நின்றே
கால் மரத்துப் போனாலும்
நிச்சலனமாய் இலையுதிர்த்து
தவம் கலையா இமை கிழித்து
மூப்பு நையப் புடைக்கும் 

அந்திப் பொழுதுகள் 

அமைதியாகக் கடப்பதை 

அர்த்தமின்றி உற்று நோக்கி 

நிலாக்களை பிடித்துப் பிடித்து 

விளையாடும் ஆட்டத்தில் வழிந்தோடிப் போகிறதென் பெரு மூச்சுக்கள்...
இக்கணமோ எக்கணமோ..
எப்போதும் உள்ளுக்குள்
சக்தியை சேகரித்துக் 

காத்திருக்கும் எந்தன் இதயப் பறவை
கடந்திடும் என்றாவதொரு
பொல்லாத பொழுதில்
தசை கிழித்துப் பறந்து வந்துன்னைத் தேடியலைந்துன் இதயத்தில் சரணடைந்துன் ஆன்மாவில் ஐக்கியமாகிடத் தவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுதல் என்னால்
இயலாதடிப் பெண்ணே..
ஜானி சின்னப்பன்

சனி, 11 டிசம்பர், 2021

காமிக்ஸ் வானொலி பாட் கேஸ்ட்..

 ஒரு புதிய முயற்சியாக கிருஷ்ணா, சுரேஷ், கலீல் மற்றும் லக்கி லிமட் சேர்ந்து Tamil Comics Cast என்ற ஒரு காமிக்ஸ் podcast  ஆரம்பித்துள்ளனர்.. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..



முதல் podcast ஆக இந்த மாதம் வெளிவந்த ஸ்டெர்ன் கதையை பற்றி பேசியுள்ளோம். இது ஸ்டெர்ன் கதையை பற்றிய ஒரு விரிவான audio கலந்துரையாடல். இதை கேட்டு உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறோம். அடுத்தடுத்து பல முயற்சிகளை இதில் மேற்கொள்ள இருக்கிறோம். உதாரணமாக காமிக்ஸ் ரசிகர்கள் உடனான உரையாடல் ,அவர்களின் அனுபவங்கள் மற்றும் அவர்களின் சேகரிப்புகள் போன்ற பல ஐடியாக்கள் உண்டு.

இணைந்து கேட்டு மகிழ..

https://anchor.fm/tamil-comics-cast/episodes/02---e1bibov

திங்கள், 6 டிசம்பர், 2021

வேதாளம் புதிது 2.0- வி.எம்.ராஜா சார்

வணக்கங்களும் அன்பும் நண்பர்களே.. என்னுடைய அன்புக்குரிய திரு.வின்சென்ட் மோசஸ் ராஜா அவர்களை செல்பிக்களாகப் போட்டு கொடுமைப்படுத்தி கனவில் வேறு தொல்லை கொடுத்தேனாம்.. ஹீஹீஹீ.. எடுத்தார் தூரிகையை.. தீட்டினார் காமிக்ஸை.. போட்டுத் தாக்கோ தாக்கென்று தாக்கி வயிறுகலங்க சிரிக்க வைக்கும் இந்தக் கதையை கொடுத்திருக்கிறார். அவருக்கும் சுட்டி விகடன்நிர்வாகத்துக்கும் என் இதயப் பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டு மீண்டும் சுட்டி விகடன் வெளியாகி இளநெஞ்சங்களை மேகிழ்விக்க வேண்டுமென்ற ஆவலுடனும் எதிர்பார்ப்போடும்.. உங்களுடன் நானும் காத்திருக்கிறேன்.. படிச்சிட்டு திட்டாதீங் பாஸூ.. வேதாளத்தையும் இட்டாந்து செல்பியைப் போடுவோம்ங்கிறேன்.. பைபை..




 

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

ஒரு டெலிபோனின் ஓசை மற்றும் வந்ததே கா(த)ல் வந்ததே!_புதுமை சித்திரக்கதை

வணக்கம் தோழமை உள்ளங்களே..இது ஒரு டூ-இன்-ஒன் சித்திரக் கதை. அப்படி என்ன புதுமை என்கிறீர்களா.. வாசித்துப் பாருங்களேன்.. 


இதோ தரவிறக்க சுட்டி.. எஞ்சாய்..

https://www.mediafire.com/file/uprd3lrrml5h9a0/jscjohny_birthday_special.pdf/file



காத்திருந்த கைகளே..!_ஜானி சின்னப்பன்








பிடிஎப் வாசிக்க அடுத்த போஸ்ட்டையும் பார்த்துடுங்களேன்..

 

ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு

  வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...