சனி, 12 செப்டம்பர், 2020

தனியே தன்னந்தனியே..!









 


லயன் கிராபிக் நாவல் வரிசையில் 12வது இதழாக ரூ.100/- விலையில் வெளியாகியுள்ள சித்திரக்கதை தனியே தன்னந்தனியே.. 

கதாசிரியர் கிறிஸ்டோப் பெக் கதைக்கு சித்திரங்களால் மிரட்டல் வடிவம் கொடுத்திருக்கிறார் ஓவியர் சிரில் டெர்னான்.. பிரெஞ்சு மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்த க

அந்த சாலையில் வரும் வாகனங்கள் அவ்வப்போது விபரீதமாக ஏதாவது உருவத்தை காண நேரிடுகிறது.. அமானுஷ்யம் ஒரு புறமிருக்க ஆண்டுகள் 1951க்கும் 2016க்கும் தாவித்தாவிக் குதித்தோடுகிறது.. தன் குடும்பத்தையே சின்னஞ்சிறு சிலந்தியால் இழக்க நேரிடும் தந்தை தனியேதன்னந்தனியே வசிக்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் தான் வளர்த்து வந்த சிலந்திகளால் மரணத்தை அரவணைத்துக் கொள்கிறார்.. 

வேலை நிமித்தமாக இடம் மாறிப்போகும் பெண்ணும் அவளது சின்னஞ்சிறுமகனும் அதே சாலையில் காணாமல் போகிறார்கள்.. ரிச் ஸ்டாஸ்ஸர் அப்பகுதியின் ஷெரீப்.. அவரது துப்பறிவில் பலப்பல மர்மங்களும் விலகி சிறுவன் பால் மாத்திரம் உயிரோடு மீட்கப்படுகிறான்.. கருப்பு வெள்ளை சித்திரங்களின் டோனே மிரட்டலாக இருக்கிறது.. மௌனமான ஓவியங்களில் ஆயிரம் விவரிப்புகளும் கானகத்தின் மர நெரிசல்களில் நாமும் சிக்கித் தவிப்பதான மனோநிலைக்குத் தள்ளப்படுவது உறுதி.. சிறுமியின் அகோர மரணமும் அவளது ஆவியின் அவ்வப்போதைய தரிசனங்களும் அவ்வழியே செல்பவர்களை சிறுவனைக் காக்க வேண்டியே அமானுஷ்ய நகர்வுகள் அமைவதாக சித்தரிக்கப்படுவதும் கதையை இன்னொரு முறை வாசிக்க தூண்டுகின்றன.. லயன் கிராபிக் நாவல்களில் சிறப்பான தேர்வுகளில் இதுவும் ஒன்று எனலாம்.. இரசனையில் முதிர்ந்தோருக்கான இதழ் என விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஹாலிவுட் ஹாரர் இரக இரசிகராகவும் காமிக்ஸ் பிரியராகவும் நீங்கள் இருக்கும்பட்சத்தில் இது உங்களுக்கான கதையே..

-ஜானி சின்னப்பன், தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்..

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

வேதாளருக்கொரு சவால்..

 1986ல் அமெரிக்காவின் தொலைக்காட்சி வாயிலாக வேதாளர் தோன்றிய தினம்.. டிபெண்டர்ஸ் ஆப் எர்த் தொடரின் ஹவுஸ் டிவைடட் என்கிற கதை ஒளிபரப்பப்பட்டது..

 26&27வது வேதாளர்களின் கதை.. மேலும் இரண்டு பிள்ளைகளில் இளையவர் வேதாளராக தேர்ந்தெடுக்கப்படுவதும்.. மூத்தவர் ஏன் வேதாளராகவில்லை என்பதும் இந்த தொடரில் விளக்கப்பட்டது.. இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் அண்ணனின் பெயர் கர்ட்.. தம்பியின் பெயர் கிட்..

தந்தையாரின் உத்தரவுக்கிணங்கி மலைமீதிருக்கும் வைரக்கல்லை எடுத்துவர ஒற்றுமையோடு செல்ல வேண்டிய நிலை கர்ட்டுக்கும், கிட்டுக்கும்.. அப்படி திரும்பி வருபவரே அடுத்த வேதாளர் எனும் நிலையில் கிட் கானகத்தில் சிங்கத்திடம் சிக்கிய கர்ட்டை காப்பாற்றி விடுகிறான். ஆனால் மலையில் தடுமாறி விழும் நிலையில் இருக்கும் கிட்டை கர்ட் கைவிடுகிறான். வைரக்கல்லோடு மண்டைஓட்டு மாளிகைக்கு சென்று தன்னை அடுத்த வேதாளராக்க வேண்டுகிறான். வேதாளர் என்ற பட்டமே அடுத்தவருக்கு உதவும் சேவை மனப்பான்மையுள்ளவருக்கே தரப்படும். ஆகவே தான் வெல்லும் வாய்ப்பிருந்தும் சிங்கத்திடமிருந்து உன்னைக் காப்பாற்றிய கிட்டே சிறப்பானவன் என்று வேதாளர் அறிவித்து விடுகிறார். கடுப்பாகி வெறியோடு வெளியேறுகிறான் கர்ட்..

தொடரின் ஒரு பகுதியை லிங்க்கில் தருகிறேன். வேதாளரை தோற்கடிக்க பேரரசர் மிங்கிடமிருந்து சக்தி பெறுகிறார் வேதாளரின் சகோதரர்.. தட்பவெப்பங்களை மாற்றியமைக்கும் சக்தியோடு எண்டாமா ஸ்பிரிட் ஆப் த விண்ட் எனப் பெயரை மாற்றிக் கொண்டு வேதாளரிடம் மோதுகிறார் கர்ட் வாக்கர்.. இறுதியாக அதே போட்டியை இம்முறை வைத்துப் பார்த்து விடுவோம் வா என்ற சவாலை ஏற்கிறார் கிட் வாக்கர்.. சவாலில் வென்றது யார்..? பரபரப்பான அனிமேஷன் தொடர்..

ஹைலைட்ஸ்..

*வேதாளருடன் அவரது மகள் சேர்ந்தே தனது பெரியப்பாவை எதிர்க்கிறாள்.

*குரானின் உருவமும் பண்டார் இனத் தலைவர் பட்டமும் நச்சென பொருந்துகிறது.. 

*மாண்ட்ரேக் இது சகோதரயுத்தம்.. வேதாளரே போய் மோதட்டும் என வழிவிடுகிறார்..

*ஹீரோ மின்னலையெல்லாம் தவிர்த்து வேதாளரை பாதுகாப்பாக அழைத்துப் போகிறது..தவற விடக்கூடாத அனிமேஷன் தொடர்.. 

-ஜானி சின்னப்பன், தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்..

https://youtu.be/sVzsly_t1OY

வியாழன், 10 செப்டம்பர், 2020

எம்பரர் திரைப்பட விமர்சனம்..


 அமெரிக்க மண்ணின் அடிமை முறையை எதிர்த்த முதல் விடுதலைப் போர்... 

எம்பரர் திரைப்படமாக 2020 யில் வெளியாகியுள்ளது.. பார்த்து இரசிக்கலாமே..

ஷீல்ட்ஸ் க்ரீன் Aka எம்பரர்.. அரச வம்சத்தில் வந்த கருப்பினத்தவர். அடிமைகளை வேலைவாங்கும் மேற்பார்வையாளராக அமெரிக்கர்களிடம் பணியாற்றி வருகிறார். அந்த அமெரிக்கர் சூதாடியாக இருந்து  தெற்கத்தியர் ஒருவரிடம் பண்ணையை தோற்று விட பண்ணையில் அராஜகங்கள் அரங்கேறுகிறது. தனக்கும் தன் மகனுக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்காக பொங்கி எழும் எம்பரர் சில வெள்ளையர்களைக் கொல்கிறார். அவர் மனைவி பதிலுக்கு கொல்லப்பட தப்பியோடும் பாதையில் வங்கிக் கொள்ளையன், நாக்கறுபட்ட கருப்பர், கருப்பினத்தவரை ஆதரிக்கும் வெள்ளையர், வெள்ளையர்களிடம் பணத்துக்காக காட்டிக்கொடுக்க நினைக்கும் கருப்பர், அடிமைமுறையை ஒழிக்கப் போராடும் வெள்ளையர் கும்பல் என கதை தடதடக்கிறது.. ஒரு கோட்டையை கைப்பற்றி பின்னர் இராணுவ வீரர்களிடம் தோற்கிறார்கள்.. அதுவே விடுதலை விரும்பிகளின் முதல் முழக்கம்.. விர்ஜினியா மாகாண ஹார்ப்பர்ஸ் ஃபெர்ரி என்ற இடத்திலமைந்த கோட்டை கைப்பற்றப்பட்டது.. அது நிகழ்ந்தது 1859ஆம் ஆண்டு அக்டோபர் 16 முதல் 18 வரை.. மூன்றே தினங்களிலேயே போராட்டம் அடக்கப்பட்டாலும் அன்றைய தின போராட்ட நாயகர்கள் ஜான் ப்ரௌன்,  ப்ரெட்ரிக் டக்ளஸ் இது உண்மை வரலாறு.. அமெரிக்க சிவில் யுத்தங்களின் கண நேர கீற்றுகளை அந்தப் போராட்டமே அடிமை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது என்பதில் மிகையில்லை.. அந்த இடம் வரலாற்றுநினைவிடமாக இன்றைக்கும் அமெரிக்காவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது..

 கதைக்கு வருவோம்...

தப்பும் எம்பரரை பணத்துக்கு வேட்டையாடும் கும்பல் துரத்த ஒரு சர்ச்சில் கிளைமாக்ஸ்.. தனது மகனை மீட்டு அவனோடு இணைந்து செல்வதோடு படம் முடிகிறது.. திரையனுபவம் யதார்த்த விரும்பிகளுக்கானது..

- ஜானி சின்னப்பன்..தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்..


சித்திரத்துக்கொரு சிறுகதை...

 

ஓவியம் திரு.கந்தசாமி 

இராணுவ வீரர்கள் வரும் ஓசை தொலைவில் பூட்ஸ்களின் தடதடப்பில்
துப்பாக்கிகளின் உலோக ஒலியில்
அப்பாவிகளின் ஓலங்களில்.. 
விரைந்து தப்புங்கள் தோழரே..
நாளைய கனவு தேசத்துக்கு தூணாய் நீர் தேவை.. எம் இன்னுயிர் ஈந்தேனும் அவர்களைத் தேக்கி நிறுத்துவோம்..
நீர் தப்பிப் போவது பின்னடைவல்ல... புலியின் பதுங்கலென பின்னொருதினத்தில் உணரும் இத்தேசம்...
-ஜானி சின்னப்பன்..



திங்கள், 18 மே, 2020

ஆறாவது விரல்-காமிக்ஸ்

வெள்ளை இளவரசியை வெறித்தனமாக காதலிக்கும் நல்விவசாயியும் நல்லாசிரியருமான Saravanan Saran வம்சம் தழைப்பதற்கு
பெண் குழந்தை ஒன்று தேவதையாய் பிறந்திருக்கிறது

தாய் தந்தையரின் பாசத்தோடு வளங்களும் நலங்களும் தழைத்தோங்கி வாழ்ந்திட வாழ்த்துக்களுடன்
ஆசிரியரும் விவசாயியுமான திரு சரவணன் அவர்களுக்கு மகள் பிறந்த இந்த நாளின் சிறப்புப் பகிர்வாக

*ஆறாவது விரல் - மாலைமதி காமிக்ஸில் வெளிவந்த பழமையான அட்டகாசமான மர்மப் படக்கதை*

https://bit.ly/2s9dMZs

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Credits :comics    pdf times

சனி, 16 மே, 2020

பழிவாங்கும் பாட்சா..

ஸ்பைடர் படை வாட்ஸ் அப் குரூப்பில் நடந்த இன்ட்ரஸ்டிங்கான போட்டியொன்றில்
ராணி காமிக்ஸின் சூப்பர் ஹீரோ டைகர் அண்ட் ஹென்றி..உலக பயங்கரவாதிகள் இயக்கத் தலைவர் பாட்சாவுடன் மோதிசிறையில் அடைத்தபின்னர் என்னாயிற்று..?!?
என போட்டி வைத்திருந்தனர்.. அதில் இடம்பெற்ற எனது கதை..இதோ உங்கள் பார்வைக்கு...


*************************
பரபரப்புடன் சிறையிலிருந்த பாட்சாவை சிறையிலிருந்து மீட்டுப்போனது சின்னதொரு குழு... 
வேகவேகமாக வெவ்வேறு வாகனங்களை மாற்றி தடங்களை மாற்றி தனது பதுங்குதளத்துக்குப் பாய்ந்து போய் பதுங்கினான் பாட்சா.. விடுப்பிலிருந்த ஹென்றியின் கைக்கடிகாரத்தில் அழைப்பு.. தலைவர் தொடர்புகொண்டு விவரம் சொன்னார்.. டைகரைத்தான் தொடர்புஎல்லைக்குள்ளேயே காணோம்.. விரைந்து போய் மெழுகு மியூசிய இரகசியக் கதவுகளைத் தாண்டி தலைவரை சந்தித்தார் ஹென்றி.. 
பாட்சாவைத் தேடும் படம் அசுர வேகத்தில் தொடங்கியது.. தனது பதுங்குதளத்தில் அதே நேரம் பாட்சா எக்காளமிட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.. மிக அழகாக அனைவர் கண்ணிலும் மண்ணைத் தூவி என்னை கொண்டு வந்து விட்டீர்கள்.. அனைவரையும் பாராட்டுகிறேன்.. உங்களுக்கொரு சூப்பரான செய்தி...
நான் சிறையில் சும்மா கம்பி எண்ணிக் கொண்டிருக்கவில்லை..நான் சிறையிலிருந்தபடியே உலகைக் கலக்கும் ஆயுதமான கிருமி ஆராய்ச்சிக் கூடம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்களை மிரட்டி  வடிவமைத்து அதன் இறுதிக்கட்டமாக வெற்றிகரமாக படு ஆபத்தான கிருமியொன்றினை உருவாக்கி வைத்திருக்கிறேன். ஆராய்ச்சியின் முடிவில் அந்த ஆராய்ச்சியாளர்களையும் கூண்டோடடு கைலாசம் அனுப்பி வைத்து விட்டாயிற்று.. சற்றே விட்டிருந்தீர்களானால் நமது அந்தக் குழுவே என்னை மீட்டிருக்கும்.. பல்வேறு நாடுகளிலும் அமைப்பை நிறுவியிருந்ததால் ஒவ்வொன்றும் தனித்தனியே என்னை மீட்க முயற்சி செய்திருக்கிறார்கள் போலும். நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள்.. அந்த கிருமிகள் அடங்கிய பெட்டி ஏற்கனவே திட்டமிட்டவாறு வானில் நிலைகொண்டுள்ள நமது ட்ரோன்களில் ஒன்றில் பொருத்தி வைத்திருக்கிறேன்.. அதனை ஐக்கியநாடுகள் சபையில் போய் மோதச் செய்யப் போகிறேன்.. உலகமெங்கும் குழப்பம் விளைவிக்கவும் மீண்டும் இந்த பாட்சாவை உலகமே திரும்பிப் பார்க்கவும் என்னைக் கண்டு நடுநடுங்கவும் செய்யப் போகிற ஆயுதம் அது.. அதன் கட்டுப்பாட்டு தூரவிசைக் கருவி இதோ என் காலடியிலுள்ள பொத்தானை அழுத்தினால் தானாகவே செயல்படத் தொடங்கிவிடும்.. ஹாஹாஹா என்றவாறே தனது இருக்கையின் எதிரிலிருந்த குமிழ் போன்ற அமைப்பை மிதிக்கக் காலைக் கொண்டு போனான்.. காலின் மீது சின்னஞ்சிறு ராக்கெட் ஒன்று சூழ்ந்து நின்ற கும்பலில் ஒருவனது பேனா முனையிலிருந்து புறப்பட்டு  முன்னேறிப் பாய்ந்தது.. நரம்பை முடக்கும் நச்சு ஒன்று பாட்சாவின் காலில் பாய லேசாக இரண்டு இரத்தத் துளிகள் எட்டிப் பார்த்தன.. காலை நீட்டமுடியாமல் சுருண்டான் பாட்சா.. கூட்டத்திலிருந்து 
"உன் ஆட்டம் முடிந்து விட்டது பாட்சா" என்றபடி சிரித்துக் கொண்டே வெளிப்பட்டார் டைகர்..
"உன் சதித் திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்தோம்..அதனை எப்படி முடிக்கப் போகிறாய் என்பதில் குழப்பம் வர நேரே களத்தில் குதித்தது எங்கள் படை.. நாங்களே உன் கும்பலைப் போன்று வேடமிட்டு உன்னை காப்பாற்றி உன்னைக் கொண்டே இந்த இரகசிய இடம்வரை வந்து விட்டோம்.. அந்த தொலைஇயக்குவிசையை மாத்திரம் எப்படி இயக்கப் போகிறாய் என்பதைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தோம்.. தவளை தன் வாயாலேயே கெடும் என்பதைப் போல நீயே உளறித் தொலைத்து விட்டாய்..டொட்டடாங்.."
பாட்சா பல்லைக் கடித்து அரைத்து ஆத்திரமானான்..
ஐயகோ காலில் செலுத்தியிருந்த பாரிச வாயு விஷம் அவனை அசைய விடவில்லை..
பேனாவின் மறுபகுதியிலிருந்த காமிராவின்  நடப்பவை அத்தனையையும் வெவ்வேறிடங்களிலிருந்து லைவ்வாக இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஹென்றியும் தலைவரும் கூடவே சொன்னார்கள்..
*டொட்டடாங்*
-நிறைந்தது-

வெள்ளி, 15 மே, 2020

~அடேய் மதுப்பிரியா~


பாதையெங்கும் 
பூக்கள் வாசம்..
முட்களைப்போய் 
இரசிக்கிறாயே 
மானிடா..
தென்றலைத் 
தழுவ 
வாய்ப்பிருந்தும் 
புயலோடு 
மல்யுத்தம் ஏனடா...
விலகி செல்வது 
காந்தத்தின் 
இருமுனை..
சிந்தித்தால் 
உன் வாழ்வில் 
திருப்புமுனை..
இல்லையேல்...
வேதனை..
வேதனை..
வேதனை..

FREW 1048 The ghost on flight 302- கதை சுருக்கம்

Add caption
FREW 1048 The ghost on flight 302-
கதை: நார்மன் வொர்க்கர்
ஓவியம்:ஜோஸ் கேஸனோவாஸ்
இதுவரை Phantom @ வேதாளரை@முகமூடி வீரர் மாயாவியை அறியாதவர்களுக்காக:
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருகப்பல் சிங் கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டது. உயிர்பிழைத்து கரையொதுங்கிய ஒருவனை பிக்மி குள்ளர்களான பண்டார் இனமக்கள் காப்பாற்றுகின்றனர்..அவனது தந்தையை கொன்ற கடற்கொள்ளையனின் மண்டை ஓட்டின்மேல் சபதமெடுக்கிறான்..அநீதி, தீமை, கொள்ளையை தானும் தன் வம்சாவழியினரும் தடுத்தே தீருவோம் என்பதே அது..
அவரே முதல் வேதாள மாயாத்மா..
தற்போது 21வது வேதாளரின் ஆட்சியின் கீழ் கதை துவங்குகிறது..
வேதாளர் வாட்ச் மென் எனப்படும் மூவரின் சிலைகளை மலைமீது காண்கிறார். 


பேராபத்துகளின்போது அம்மூவரும் பெங்காலியாவை கவனித்துக் கொள்வார்கள் என்கிறார் மோஸ்.. கிம்பர்லி எரிமலை வெடிக்கப் போகிறதாகவும் அதனை சென்று கவனித்து பொதுமக்களை எச்சரிக்கவிருப்பதாகவும் அப்படியே அம்மூவர் சிலைகளையும் பார்த்து விட்டு வருவதாகக் கூறி புறப்படுகிறார் வேதாளர். கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் மலையேறி சிலைகளை காணும் வேதாளர் மேலே போன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாவதைக் கண்ணுறுகிறார். அந்த விமானம் ஏற்படுத்திய அதிர்வில் கைநழுவி கீழே விழுகிறார் வேதாளர்..
சில தினங்கள் கழித்து மயக்கம் தெளிந்து திரும்ப எழுந்து பார்த்தபோது சற்று தூரத்தில் விமானம் விழுந்து அந்த இடம் முழுவதுமே மரணத்தின் சாயல் படர்ந்திருப்பதையும் விமானத்தில் வந்த ஒரு விஞ்ஞானி மட்டும் தன்னருகே வருவதையும் காண்கிறார். தான் புரபஸர் ஐன்ஸ்டெல் என்கிறார்.. அவ்விஞ்ஞானியின் படுபயங்கரமான கிருமியொன்றின் கண்டுபிடிப்பால் பெங்காலியாவும் வனத்தின் அத்தனை உயிர்களும் செடி, கொடி வகைகளும்  மரணமெய்திவிட்டன என்கிறார். தான் 13ம்தேதி வெள்ளியன்று மோரிஸ் டவுனில் பெங்காலி ஏர்லைன்ஸில் ஏறியதாகவும் தன் ஆராய்ச்சிக் குறிப்புக்களையும் நாசகார கிருமியையும் தன்னுடன் கொண்டுவந்ததாகவும் விமானத்தை இருவர் கடத்தியதால் செக்யூரிட்டி சுட்டதில் விமானம் நொறுங்கி விழுந்து கிருமி வெளியேறி அந்த இடத்தையே நாசம் செய்து விட்டதாகவும் கூறுகிறார்..போதாக்குறைக்கு அவ்விடத்தின் நீராவியில் கலந்து
மேகமாக மாறி மோரிஸ் டவுனுக்குப் போய் மொத்த நகரையும் சுடுகாடாக்கிவிட்டது என்கிறார்..

அவர் மட்டும் தப்பியது எப்படி என்று கேட்பதற்குள் அவர் மாயமாகிறார் ..

தன் இருப்பிடத்திற்கு செல்muலும் வழியெல்லாம் மரண தாண்டவத்தைக் கண்ணுற்று இறுதியில் குரான் தன் மடிமீதே இறப்பதை கண்டு கலங்கும் மாயாவி அவனை அடக்கம் செய்தபின் தன் மனைவி டயானா இருக்கும் இராணுவ மருத்துவமனைக்கு விரைகிறார்..மயக்கமுறுகிறார்..


வேதாளர் மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து எழுந்ததும் டயானாவும் மருத்துவரும் அவர் எங்கோ மயங்கிக் கிடந்ததாக குரானும் அவரது ஆட்களும் கொண்டு வந்து சேர்த்ததாக கூறுகின்றனர்.. அதெப்படி சாத்தியம் என்று குழம்புகிறார்.  கூறுகின்றனர்.. அதெப்படி சாத்தியம் என்று குழம்புகிறார்.  13ம்தேதி வெள்ளியன்று பெங்காலியா பேரழிவை சந்தித்து விட்டதாக வருந்துகிறார். டயானாவோ அன்று 11ம்தேதி புதன் கிழமைதான்.. அனைத்தும் உங்கள் பிரமையே என்கிறாள்.
தன்னாலும் இதை நம்பமுடியவில்லைதான் என்றாலும் கண்டிப்பாக இதில் ஏதோ மர்மம் உள்ளது.. இது நடக்கத்தான் போகிறதா என முன்கூட்டியே விசாரித்தறியலாம்..அப்படியெனில் நடக்கப்போவதைத் தடுத்து விடலாம் என்று விரைவாக முடிவெடுத்து

மருத்துவமனையின் போனில் நேரடியாக கர்னல் வொரோபுவை தொடர்புகொள்கிறார்..
ஆச்சரியமடையும் கர்னலிடம் ப்ளைட் 302  வெள்ளிக்கிழமை மோரிஸ் டவுனிலிருந்து புறப்படுவது உறுதிதானா என்று விசாரித்தறிகிறார்.. புரபஸர் ஐன்ஸ்டல் என்பவர் பயணிப்பதை  விசாரிப்பதற்கு க்குள் மருத்துவமனை ஊழியரின் குறுக்கீட்டால் அங்கிருந்து வெளியேறுகிறார் வேதாளர். டயானாவும், ஆக்ஸலும் வந்து தாக்கப்பட்டு கட்டிப்போட்ட நிலையிலுள்ள மருத்துவ மனை ஊழியரை அவிழ்த்து விட்டதும் முகமூடியொருவர் தன்னை தாக்கியதாகவும் இது வாழ்வா சாவா பிரச்சினை என்று கூறியதாகவும் சொல்ல டயானா மோரிஸ் டவுனுக்குப் போக முடிவெடுக்கிறாள்.

மோரிஸ் டவுனிலுள்ள பெங்காலி ஏர்லைன்ஸ்க்கு டெவிலோடு சென்று பயணிகள் பட்டியலை கேட்ட வேதாளரை விசித்திரமாக பார்த்துவிட்டு கம்பெனி சட்டம் அதற்கு அனுமதிக்காதென்கிறாள் ரிசப்ஷனிஸ்ட்.  அவரின் தோற்றத்தில் சந்தேகமடைந்து போலீஸ்காரர்களுக்கு தகவல் அனுப்புகிறாள். அங்கிருந்து மாயமாகிறார் வேதாளர். சைனாடவுனிலுள்ள தனது பழைய நண்பர் வு ஃபானிடம் போகிறார்..
இதற்கிடையே டயானா பிரசிடெண்ட் லுவாகாவை சந்திக்க அவர் வேதாளரின் தோற்றத்தை விவரமாக கமிஷனருக்கு தெரிவித்து அவரை யாரும் பார்த்தால் கைது செய்யாமல் தனக்கு தகவல் தெரிவிக்குமாறு சொல்கிறார் அதிபர் லுவாகா.. 302 விமானம் கிளம்பவிருப்பது சரியான தகவல் என்றும் பயணிகள் பட்டியலை மாத்திரம் கொஞ்சம் நேர அவகாசத்தில் வாங்கித் தர கமிஷனர் ஒப்புக் கொள்கிறார்..
சோர்விலும் அயர்ச்சியிலும் வேதாளர் சற்றே கண்ணயர்ந்திருக்க அவரைக் கண்ட பெண்ணொருவர் வு ஃபானிடம் யாரோ அவரது இடத்தில் இருப்பதாக. கூற "டாங் கேங்"(பிரபல பாரம்பரிய போதைக் கடத்தல் கும்பல்..வாசிக்க:ரங்கூன் புலி) -கிடமிருந்து அவரை வேதாளர்தான் காப்பாற்றியவர் என்கிறார்.

மறுதினம்..

சைனா டவுனைச் சேர்ந்த வு ஃபான் பெங்காலியா விமான நிலைய லாண்டரி சர்வீஸில் இருப்பதால் உள்ளே இரகசியமாக வேதாளரை அழைத்துப் போகிறார். 

கமிஷனர் லாமண்டா மூலமாக அதிபர் லுவாகா 302 விமான விவரத்தை வேதாளர் வந்து தெரிந்து கொண்டு போனதை அறிகிறார்..


வேதாளர் ரிசப்ஷனையே கவனித்துக் கொண்டிருக்கிறார் கடைசி நேரத்தில்  விஞ்ஞானி ஐன்ஸ்டைல் சட்டென உள்ளே நுழைந்து விட அவரைத் தடுக்கும் முயற்சிக்கு குறுக்கே விமான நிலைய பாதுகாப்புப்படை குறுக்கே வருகிறது.. அவர்களைத் தாக்கிவிட்டு தப்புகிறார்..

இடையே விமான பயணிகளில்  சிஸ்டர்கள் போன்று வேடமிட்டு இருவர் 302 வில் ஏறியிருக்கும் சங்கதி போலீசார் மூலம் அதிபர் லுவாகாவுக்கு தெரியவருகிறது..


கன்ட்ரோல் டவரிலிருந்து யாரோ ஒருவன் 302 விமானத்தின் குறுக்கே தடை ஏற்படுத்த முயற்சிப்பது தெரிகிறது. ஆனால் 302 மேலேறிப் போய் விட்டது.. அது வேதாளரே..

சட்டென இராணுவ தளத்தை நோக்கி முன்னேறுகிறார் வேதாளர். அதிபர் லுவாகாவும் விமான நிலைய அதிகாரி பாக்ஸ்டரை தொடர்பு கொள்ள முயன்று கொண்டே இருக்கிறார்..பாக்ஸ்டருக்கோ வேறொரு தலைவலி..யாரோ ஒருவர் (நம்ம வேதாளர்தான்) மிலிட்டரி ஜெட்டை கிளப்பிக் கொண்டு போக முயற்சிப்பதை தடுக்கவியலாது திணறிக் கொண்டிருக்கிறார்..

வுவை யாரோ பைத்தியக்காரன் அச்சுறுத்தி அங்கே கொண்டு வந்ததாக தெரிவிக்குமாறு சொல்லி விமானத்தை கிளப்புகிறார் வேதாளர்.. ஜீப்பை குறுக்கில் பாயவிட்டு வேதாளரை வீழ்த்த முயற்சிக்கும் இராணுவ வீரர்களை ஏமாற்றிவிட்டு சர்ர்ர்ரென மேலேறிப் பாய்கிறது ஜெட்..பாக்ஸ்டருக்கு 302வை தடுத்து நிறுத்துமாறு அதிபர் சொல்லும் செய்தி தாமதமாகவே கிடைக்கிறது..ஜெட் திருடுபோனதையும் அதிபரிடம் சொல்ல அதிபர் அங்கே புறப்பட்டு வருகிறார்..

ஜெட்டிலிருந்து 302வை இடைமறிக்கும் வேதாளர் விமானிகளை கீழிறங்குமாறு சைகை செய்கிறார்..

கன்ட்ரோல் ரூமிலுள்ள பாக்ஸ்டரை அனுமதி வேண்டுகிறார்கள் விமானியர்.. அதேநேம் அதிபர் லுவாகாவும் உள்ளே வர சுமார் 300 மனித உயிர்கள் ஆபத்திலிருப்பதை அதிபரிடம் சொல்கிறார் பாக்ஸ்டர்.. மைக்ரோபோனில் அதிபரே தொடர்பு கொண்டு கடத்தல்காரர்கள் விமானத்திலிருப்பதால் உடனடியாக கீழிறங்குமாறு கட்டளையிடுகிறார்..

கடத்தலுக்குத் தயாராக இருந்தவர்களை கைது செய்கிறார்கள்..

அவர்களிடமிருந்து கையெறிகுண்டுகளும், ஆயுதங்களும் கைப்பற்றப்படுகிறது..

விமானத்திலிருந்த புரபஸர் ஐன்ஸ்டல் மாரடைப்பால் தன் சீட்டிலேயே மரணிக்கிறார்.. 

இராணுவ ஜெட்டினைதொடர்பு கொள்ளும் லுவாகா பத்திரிக்கையாளர்களை தவிர்த்துக் கொள்வதற்காக தனியே  ஜீப்பில் போய் வேதாளரை தனியே சந்தித்து பேசிவிட்டு விஞ்ஞானியின் பெட்டியைத் தருகிறார்.. அதனை பெற்றுக் கொண்ட வேதாளர் கால்மணிநேரத்தில் உயிர்ப்புடன் புகைந்து கொண்டிருக்கும் 

கிம்போர் எரிமலைக்குள்  நெருப்பு குழம்புக்குள் கிருமிகள் அடங்கிய பெட்டியை வீசி  அழிக்கிறார்.. ஜெட்டில் எரிபொருள் தீர்ந்துவிட அதனை கடலில்  அமிழ்த்தி விட்டு நீந்திப் போய்விடுகிறார் வேதாளர்.. 

மனித உயிர்களைக் காப்பாற்ற ஒரு விமானத்தினை பலியிடுவது தவறல்லவென அதிபர் திருப்தியடைகிறார்.. 

கேள்விகளால் துளைத்தெடுக்கக் காத்திருக்கும் பத்திரிக்கையாளர்களை எதிர்கொண்டு 302 விமானக்கடத்தல் தடுக்கப்பட்டது..300 உயிர்கள் காப்பாற்றப்பட்டு விட்டன.. கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுவிட்டனர் என தெரிவிக்கும் லுவாகாவை அந்த ஜெட் பற்றி விளக்கம் கேட்கிறார்கள் நிருபர்கள்..

அடையாளம் தெரியாத விமானம் அந்த ஜெட் என்று சிம்பிளாக விளக்கமளித்து விட்டு நடையைக் கட்டுகிறார் லுவாகா..


சில தினங்களுக்குப் பின்னர் டயானாவோடு தான் கீழேவிழுந்து தலையில் அடிபட்ட இடத்தை சென்றடைகிறார் வேதாளர்..

அந்த விபத்து இதே நேரத்தில்தான் நடந்திருக்கிறது.. இன்னும் நடக்காத விபத்தில் இறந்துபோன ஒருவரின் ஆவியை வேதாளர் சந்தித்ததும் புதிரே..இதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கலாம் என்கிறாள் டயானா. 

முதியவர் மோஸ் இவை நடந்தது உண்மைதான். ஆனால் கற்சிலையாக காட்சிதரும் வாட்ச்மென் மூவரின் சித்து விளையாட்டே இது.. நேரத்தையும் காலத்தையும் அவர்களே மாற்றியமைத்துள்ளனர் என்கிறார் வேதாளர்.. 

நீங்கள் இதை நம்புகிறீரா எனும் டயானாவிடம்..வாட்ச்மென்களின் இரகசியத்தை அவர்களே பாதுகாத்துக் கொள்ள விட்டுவிடலாம் என்கிறார் வேதாளர்.. கதை நிறைவடைகிறது..




ஞாயிறு, 10 மே, 2020

பின்ன ஞான் வரும்...*திகில் வினாடிக்கதை*

*திகில் வினாடிக்கதை*
அதுவரை ஊரடங்கி வீடடங்கிக் கிடந்த மதுப்பிரியர்கள் கும்பல்கும்பலாய் மரத்தடி நிழலின் கீழே நண்பர்களோடு குந்தி கும்மாளமிட்டுக் கலைந்தார்கள்..
பரிசாக வீட்டுக்குப் போனது கொரோனா..
-jscjohny

சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.

 வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...