வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஏதோ தோன்றியது....


கவிதை எழுத நினைக்கிறேன்
குழப்பம் வந்து இடைமறிக்க
கலக்கம் என்னில் எதிரொலிக்க
சிக்கல் என்னில் சிறகடிக்க
கவலை வந்து கதவடைக்கக்
கண்ணீர் முட்டிக் கண் பூக்க
எதைக் குறித்து எழுதுவது
என்னும் ஒரு சிந்தனைப்
பிரளயம் என்னில் பிரவாகமெடுக்க
உணர்வுகளைக் காலடியில் போட்டு
நசுக்கிவிட்டுப் பேனாவை
மூடி உள்ளே வைத்தேன்

நான் வெறுமையாய்....

4 கருத்துகள்:

சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.

 வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...