புதன், 30 செப்டம்பர், 2015

நல்லவன்@கெட்டவன்

இவன் நல்லவன் என்று
மற்றோர் உரைக்கையில்
புனிதர் கிரீடத்தைத்
தலையில் சுமந்து
எளிமையின் முகமூடியை
முகத்தில் அழுத்திக் கொண்டு
அய்யோ பாவம் அப்பாவி
ஒருவனின் புகழ்ச்சி இது
என்னுமோர் எண்ணம்
நொடியின் கீற்றுப்
பொழுதினில் தோன்றி
மறைவதைப் புன்னகைப்
புதைகுழியில் பிடித்துத்
தள்ளி மிதித்து மூடிப்
புன்முறுவல் வழிக்கிறேன்
யான்! ஆழ்ந்த என்  
மனதின் இருளிலோ
என் மிருகம்
பிரியாணி கிடைத்தது
போன்று என்னுள்ளே

இளித்துச் சிரிக்கிறது! 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

XIII - சில பயணங்கள் முடிவதேயில்லை.. இன்று xiii பிறந்த நாள்..

 வணக்கங்கள் வாசகர்களே.. நமது அன்பு நாயகர் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு தன் இறந்த காலத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்று வரு...