ஞாயிறு, 26 மார்ச், 2017

தடையை உடைத்தெறி...!

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே..

நீங்கள் இப்பகுதிக்குப் புதியவரா? சித்திரக்கதைகள் குறித்த ஆர்வமில்லாதவரா? இதற்கு முன் பதிவினை வாசித்து விட்டுக் கடந்து சென்று விடலாம். இது சித்திரக்கதைகள், காமிக்ஸ்கள் மீதான ஆர்வம், நேசம், வெறி கொண்டோருக்கு மட்டும் தனிப்பட்ட சில தகவல்களை உள்ளடக்கிய பதிவு. தங்கள் வரவுக்கு நன்றி..

வணக்கம் மீண்டும் கடந்து வந்த காமிக்ஸ் இரசிகப் பெருமக்களுக்கு..
சமீபத்தில் ஒரு முக நூல் பக்கத்தை ஒரு நண்பர் ஆர்வத்துடன் துவக்கி தனது அத்தனை புத்தகங்களையும் சிறிது சிறிதாக அட்டை, உள் பக்கங்கள், விவரங்கள், கதையின் துவக்கப்பகுதி, முடிவுப் பகுதி அனைத்தையும் புகைப்படங்களாக வெளியிட்டு மனமகிழ்ச்சி கொள்ள செய்தார்.. அவரைப் போன்று இன்னும் சிலர் இதனை ஒரு தவமாகவே கருதி செய்து வருகின்றனர். அவர்கள் வைத்திருப்பதைப் பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள் என்று அவரை யாரோ இகழ்ச்சியாகப் பேசி இருக்கிறார். அவரோ மிகவும் எளிய மனம் கொண்டவர்.. மனமுடைந்து போய் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டார் அவரது பக்கத்தில்..


சித்திரக்கதைகள் ஒரு கட்டத்தில் மக்களின் பெரிய பொழுது போக்கு அம்சமாக இருந்ததும் பின்னர் காலப்போக்கில் இன்றோ ஆயிரங்களில் மட்டுமே குறுகலான வாசகர் வட்டம் கொண்டதாகவும் சுருங்கிப் போய் எப்போதோ ஒரு புதிய பதிப்பகம் வருவதும் பின்னர் காணாமல் போவதும் என்கிற நிலை இன்றுவரை தொடரவே செய்கிறது. அந்த சித்திரக் கதைகளின் பொற்காலத்தில் வந்த புத்தகங்களை எங்கோ யாரோ ஸ்கான் செய்வதும் பின்னர் ஏதோ ஒரு விதத்தில் வாசிக்க வாசகர்களுக்குக் கிடைப்பதும், புது முயற்சிகளும், ஆன்லைன் வாசிப்புகளும் என்று அடுத்த கட்டத்தை நோக்கிய பயணங்களும் சாத்தியமாகிக் கொண்டே இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் சேகரிப்பாளர்கள் கொடுத்த ஆதரவும், ஊக்கமும் மாத்திரமே இது போன்ற சாதனைகளை முன்னகர்த்திக் கொண்டு போனதை சராசரி வாசகர்கள் என்றைக்குமே மறந்து விடக்கூடாது. ஒரு புத்தகத்தைத் தேடி மாவட்டம், மாவட்டமாக, மாநிலம் மாநிலமாக அலைந்த நண்பர்களும் நம் மத்தியில் உண்டு. அனைவரது ஆதரவும், அன்பும் என்றைக்கும் தொடர வேண்டும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொண்டு அந்த நண்பர் தனது பணியினைத் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

சோதனைகள் என்பது இன்று, நேற்றல்ல நண்பரே எத்தனையோ சோதனைகள், உறவுகளால் கூட நம்மைப் புரிந்து கொள்ளாத நிலை வரும்..
உதாரணமாக என் உறவு ஒன்று தன் கருத்தைப் பதிவு செய்த நாட்குறிப்பின் பக்கத்தை உங்களுடைய பார்வைக்குக் கொண்டு வருகிறேன்..


இந்த வெறுப்புக்கு நான் என்ன செய்ய முடியும்? நான் காமிக்ஸ் வாசிப்பதும், அது தொடர்பான ஆலோசனைகளும், அது தொடர்பான எதிர்காலத்தை யோசிப்பதுமாக என் வாழ்வின் ஒரு பகுதியை அதில் செலவிட்டிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அது என் ஹாபி.. தபால் தலை சேகரிப்புகளும்,
நாணய சேகரிப்புகளும் எப்படி பாராட்டப்படுகிறதோ அதே போன்று சித்திரக்கதை வாசிப்பும் பாராட்டப்படாமல் போகாது என்பதற்கு உதாரணமாக அடுத்து வருவது மறைந்த எனது அன்புத் தம்பியருள் ஒருவரான நீங்கள் நன்கறிந்த நண்பர் சங்கி ஓம் என்கிற செல்லப் பெயர் கொண்ட ஓம் சங்கர். தற்போது நம்மிடையே அவரில்லாமல் போனாலும் அவரது எழுத்துக்கள் கடித ரூபத்தில் என்னோடு அவர் இருப்பதான உணர்வையே தந்து வருகிறது. அந்தக் கடிதமும் உங்கள் பார்வைக்கு...


சன் டிவியில் ஒரு முறை காமிக்ஸ் வாசகர்களை அழைத்து பிரபலமான பவுன்சரின் இதழ் வெளியிடப்பட்டது. அந்த சமயத்தில் நான் அணிந்திருந்தது சங்கர் எனக்கு அனுப்பி வைத்திருந்த அன்பளிப்பான டி சர்ட் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்தியா டுடே தமிழ் பதிப்பில் ஒரு கட்டத்தில் நமது சித்திரக்கதை பற்றிய அலசலும் வலையில் வாழும் பாத்திரங்கள் என்கிற கட்டுரையும் எழுதியிருந்தனர்...
அது இதோ உங்கள் பார்வைக்கு...

அதில் மத்தியில் பார்த்தீர்களானால் நீங்கள் வாசிக்கும் இந்த வலைப்பூவினையும் ஒன்றாக சேர்த்திருந்தனர்.. இதுதான் நான் கடந்த பாதை.. இன்றைக்கும் பல்வேறு சோதனை முயற்சிகளும், பயிற்சிகளும் இருக்கும் இதழ்களை எந்த அளவுக்கு உயர்த்திப் பிடிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு உயர்த்திப் பிடித்தே வருகிறது இந்த வலைப்பூ... 

நிற்க.. அவமானங்களையும், அலட்சியங்களையும் எண்ணாமல் எந்த நோக்கத்தைக் கையிலெடுத்தொமோ அந்த நோக்கத்துக்கு மரியாதையும், மதிப்பும் சேர்க்கும் வண்ணம் நமது பாதையை அமைத்துக் கொள்வது என்றைக்குமே தவறு கிடையாது. அது மற்றவர்களுக்குப் பிடிக்கிறது, இல்லை என்பது நம்மை எப்போதும் தடை செய்ய அனுமதிக்காதீர். இதனை அந்த நண்பருக்கு உணர்த்தவே இந்தப் பதிவு... சரி மற்றவர்களுக்கு?
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.

சரி சரி என்னடா பலத்த பீடிகையுடன் ஆரம்பிச்சானே.. புது மேட்டரா இருக்குமோ என்று இது வரை வந்த புது ஆசாமிகளா நீங்கள்?
அப்படியே ஒரு கட்டுரையைத் தருகிறேன் வாசித்து விட்டுத்தான் போங்களேன்? தப்பே இல்லைங்க..

அவ்ளோதான்.. போய் அப்புறமா வாங்க...

பெரிய எழுத்து நல்ல தங்காள் கதை..ஐதீகப் படங்களுடன்..

வணக்கம் நட்பூக்களே..
இன்றைய தினமும் புதுப்புது பூக்கள் மலரட்டும்.. மகிழ்ச்சி பொங்கட்டும். இன்பம் நிறையட்டும். வாழ்வின் எல்லா வளங்களும் கிட்டட்டும்...

நல்ல தங்காள்...வாழ்வின் சோதனைகளின் உச்சம்..
வரலாற்றின் எச்சம்..
சாமானிய மாந்தர்களின் அவல நிலையை நாம் இவளது கண்களால் தரிசிக்கலாம்.

நண்பர் ஒருவரை உங்கள் வீட்டுப் பரணையை எனக்காகக் கொஞ்சம் பார்த்துப் பழைய நூல்கள் ஏதாயினும் தென்பட்டால் கொண்டு வந்து கொடு என்று நச்சரித்ததன் பேரில் இந்தப் புத்தகம் வெளிவந்து விழுந்தது.. அன்றைய நாட்களில் என்னிடம் ஸ்கான் செய்யும் வசதி இருக்கவில்லை. அதனால் நண்பர் திரு.சதீஷ் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்..
அவருக்கும் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்த திரு.அன்பு என்கிற நண்பருக்கும் இங்கே நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.. இந்த நூல் கொஞ்சம் பழமையான தமிழிலேயே இருக்கும். புரியாத வார்த்தைகளுக்காக நாலு அகராதிகளைத் தேடிப்பார்க்கலாம். தப்பில்லையே?

இனி..























































அப்புறம் என்ன நண்பர்களே...
வெயில் கொளுத்தத் தொடங்கிடுச்சு...
நிறைய தண்ணீர் குடிங்க..இளநீர், மோர் அதிகம் எடுத்துக்குங்க...
எலக்ட்ரால் பவுடர் வாங்கி வெச்சிக்குங்க..


ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு சின்ன பரிசு...

ஏதோ நம்மால் முடிஞ்ச ஒரு பக்க எடிட்...

மொத்த கதையையும் வாசிங்க நேரமெடுத்து...நல்லதொரு கதை..காலங்காலமாக சொல்லப்பட்டு நிலைத்து நின்று இருக்கிற இந்த நல்லதங்காள் கதையை உங்கள் நட்பூக்களுடன் பகிர்ந்து மகிழ வாழ்த்துகிறேன்..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்..

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...