திங்கள், 30 ஜூன், 2014

3 Days to Kill

Hi,
உல்ப் என்கிற ரஷ்ய தீவிரவாதியை அழித்தொழிக்க வாட்டர் வர்ல்ட் புகழ் நாயகன் கெவின் காஸ்ட்னர் போராடும் திரைப்படம்தான் 3 days to kill...




                நாயகனுக்கு வித்தியாசமான நோய். விரைவில் இறந்து விடுவார் என்கிற சூழலில் தன் மனைவி, பெண் குழந்தையைத் தேடி பாரிஸ் வந்து சேர்கிறார். உல்பை பிடிக்க முயற்சித்து தோல்வி தழுவும் அவரை CIA உளவு வேலையில் இருந்து விடுவித்து விட்ட சோகம் வேறு. இந்த நிலையில் உல்ப் பாரிஸில் சுற்றிக் கொண்டிருக்க தன் குடும்பத்தைத் தேடி வந்த நாயகனும் பாரிஸில் இருக்க அமெரிக்கா ஒரு பெண் உளவாளியை அனுப்பி வைக்கிறது. அவள் நாயகனுக்கு தன் வழிக்குக் கொண்டுவர ஒரு சோதனை நிலையில் இருக்கும் ஊசி மருந்தினையும் தன்னுடன் கொண்டு வந்து கொடுத்து நாயகனைத் தூண்டி விட ஒரு பக்கம் குடும்பத்தில் சமாதானம் கொண்டு வர வேண்டும். அதே நேரம் உல்ப் சார்ந்த அனைத்து நபர்களையும் அழித்து ஒழிக்க வேண்டும். நாயகன் மகளோ தன் டீன் வயது குழப்பங்களுடன் திரிந்து கொண்டிருக்கிறாள். அவளை வழிப்படுத்த வேண்டும். கணவனை நீண்ட காலம் பிரிந்து இருந்த மனைவியின் கோபம். அப்பாவைப் பிரிந்து இருந்த மகளின் கண்ணீர். தன் குடும்பத்தினை இவ்வளவு காலம் பிரிந்து இருந்து விட்டோமே என்கிற தகப்பனின் ஆற்றாமை. இதனூடே ஒரு அருமையான கதையைப் பின்னி அமர்க்களப் படுத்தியுள்ளார் கதாசிரியர் லக் பெஸன்.  McG என்பவர் அருமையாக இயக்கியுள்ளார். மகளுக்கு சைக்கிள் கற்றுக் கொடுக்கும் காட்சி அருமை. அதிரடிகளை சம விகித்தில் கலந்து காக்டெயில் பரிமாறியுள்ளனர். நாயகனின் வீட்டை அவர் இல்லாததால் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் கறுப்பினக் குடும்பம் நாயகன் வந்ததும் அவருடன் கொள்ளும் ஒரு அருமையான உணர்வுகள் கலந்த பரிவு. ப்பா!!! நீங்கள் கட்டாயம் ஒரு முறையேனும் கண்டு களிக்க வேண்டும் ஜென்டில்மென் அண்ட் லேடீஸ்!!!! இத் திரைப்படத்தினைக் காண பரிந்துரைத்து + உதவிய அருமை நண்பர் ரமேஷ் சண்முகசுந்தரம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இன்று பிறந்த நாள் காணும் நண்பர் கிருஷ்ணா ராஜ குமாரன் அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!!! வாழ்க வளமுடன்!

அடுத்து நம்ம லக்கி லூக்கின் அதிரடி சிரிப்பிதழ் "பூம் பூம் படலம்" என் உறவினர்களை தரிசிக்க தஞ்சை வரை செல்லும் ஒரு பயணமது. செல்லும் வழியில் இந்தப் புத்தகத்தினை கடை  ஒன்றில் வாங்கி வாசித்து வயிறு புண்ணாகிப் போனது. அட்டகாசமான நைட்ரோ கிளிசரின் வெடி மருந்தை ஏற்றிக் கொண்டு கிளம்பும் ரெயிலைக் கொள்ளை அடிக்க முயலும் டால்டன் குழுவுக்கும் லக்கி லூக்குக்கும் இடையே நடக்கும் அதகளங்கள் ஆகச்சிறந்த நகைச்சுவையாகப் பரிணமிக்கும் கதை இது. வாங்கத் தவறாதீர்கள்!!
 சூப்பர்ஸ்டார் டெக்ஸ் வில்லர் காவல் கழுகாக இம்முறைப் பறந்து பறந்து தாக்கி வதம் செய்யும் கதை இது! don't miss it!!

மந்திரத் தென்றல் மாஜிக் விண்டின் அட்டகாசமானதொரு சாகசம் காத்திருக்கிறது. ஒரு தாக்குதலில் தன் நினைவை இழந்த ஹீரோ செய்யும் சாகசங்கள் இம்முறை வெய்யில் அடிக்கும் பாலையில்...தவற விடாதீர்.
மரண மண்டையார் மங்கூஸ் தலையார் பராக் பராக் பராக். அவரது நக்கலான புன்னகை எனக்கு மிகவும் பிடிக்கும். கவலையே படாமல் போட்டுத் தாக்கும் ஜென்மமப்பா!!!

இப்போதைக்கு அவ்ளோதான் நண்பர்களே!!! பை!!!

ஞாயிறு, 29 ஜூன், 2014

பழங்கள் வாங்குவோர் கவனத்திற்கு...

அன்பு வாசக தோழர்களே!
இனிய வணக்கங்கள்!!!
      இம்முறை ஒரு விழிப்புணர்வு செய்தியுடன் தங்களை சந்திக்கிறேன். முக்கனிகள் மா, பலா, வாழை. அவற்றில் மாம்பழம் என்றாலே திருட்டு மாங்காய் அடித்து ஆடிய பழைய நினைவலைகள் வந்து போவது இயற்கை. 
    கொட்டிக் கிடக்கும் மாம்பழங்களின் காலமிது. நாம் வாங்கும் மாம்பழங்களை எவ்வாறு தெரிவு செய்கிறோம்? நம்ம தேர்வு சரியானதுதானா? என்கிற கேள்விகளுக்கு இந்தத் தகவல் ஒரு சிறந்த அளவீடாக இருக்கும் என்று கருதுகிறேன்.   
   நம்ம க்ரைம் நாவல் 171 - ஒரு முல்லைப் பூவின் முடிவு 2010 ல் வெளியாகிப் பட்டையைக் கிளப்பிய ஒரு நாவல். இதில் வெளியான விளக்கம் ப்ளீஸ் விவேக்கில் வந்த ஒரு கேள்வி பதிலில் ஒரு பழம் இயற்கையாகப் பழுத்ததா இல்லை செயற்கையாகப் பழுத்ததா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என எஸ்.லோகநாதன், அனுப்பர்பாளையம், திருப்பூர் என்ற வாசகர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அண்ணன் ராஜேஷ் குமார் அவர்கள் அளித்த விடை இந்த நேரத்தில் மிகுந்த உதவியாக இருக்கும் என்கிற எண்ணத்தில் விடையை அப்படியே தருகிறேன். நன்றிகள் கேட்டவர்க்கும், விடை பகன்ற அருமை அண்ணனுக்கும், பதிப்பித்த அன்பு அண்ணன் அசோகனுக்கும்.

இயற்கையாகப் பழுத்து இருந்தால்:
- பழத்தைக் கையில் எடுத்துப் பார்த்தால் கனக்கும்.
- நல்ல வாசனையாக இருக்கும்.
- பழத்தின் தோல் பகுதி உறுதியாகவும், கடினமாகவும் இருக்கும். அதே  சமயத்தில் மேல் தோலில் சுருக்கங்கள் இருக்கும்.
- பழம் எல்லாப் பக்கமும் ஒரே நிறமாக இல்லாமல் லேசான பச்சை நிறம் அல்லது சிவப்பு நிறம் கலந்து தெரியும்.


செயற்கையாகப் பழுத்து இருந்தால்:
-                               - பழத்தினைத் தூக்கிப் பார்க்கும்போதே எடை குறைவாக மிகவும் லேசாக இருக்கும்.
-                              -பொதுவாக பழங்களை பழுக்க வைப்பதற்கு வியாபாரிகள் கால்சியம் கார்பைடு என்கிற இரசாயனப் பொடியை அல்லது கல்லை (ஒரு வியாபாரி தூள் என்று சொல்வார்கள் என்கிறார்) உபயோகப் படுத்துவார்கள். அந்த இரசாயனத்தின் விளைவாக பழங்களின் தோல் பகுதியில் வெள்ளைப் புள்ளிகள் காணப்படும்.
-                            -  இரசாயனத்தின் பாதிப்பால் சதைப் பகுதி சேதமடைந்து அதன் காரணமாய் தோல் பகுதி மென்மையாக இருக்கும்.
-                             - இயற்கையான பழ வாசனைக்குப் பதில் வேறு மாதிரியான ஒரு நெடி அடிக்கும்.
-                             - பழத்தின் நிறம் முழுமையான மஞ்சள் நிறமாக பார்ப்பதற்கு அழகாய் இருக்கும்.
போனஸ் நியூஸ்
கால்சியம் கார்பைடால் பழங்களைப் பழுக்க வைப்பது சட்டப்படி குற்றம். இந்தப் பழங்களை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல் பிரச்சினை, உணவு நஞ்சாகும் அபாயம் ஏற்படும். கால்சியம் கார்பைடுக்கு பழ வியாபாரிகள் மொழியில் மசாலா அல்லது பவுடர் என்று பெயர். ஒரு கிலோ கால்சியம் கார்பைடின் விலை ஐம்பதுக்குள்தான் இருக்கும். இதைக் கொண்டு எட்டு முதல் பத்து டன் மாம்பழங்களைப் பழுக்க வைத்து விடலாம்.
புத்தகத்தினைக் கொடுத்து படிக்க உதவிய நண்பர் மைக்கேல் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!!

       என்ன நண்பர்களே மாம்பழம் வாங்கலியோ மாம்பழம்!!!

செவ்வாய், 24 ஜூன், 2014

விஸ்வாவின் விஸ்வரூபம்!!!

            அருமை காமிக்ஸ் உலாவல் மேற்கொள்ளும் தோழர்களுக்கு என் இனிய வணக்கங்கள்! 
       நண்பர் கிங் விஸ்வாவை அறியாதோர் இருக்க முடியாது! பல மரமண்டைகளுக்கிடையே மலர்ந்த மல்லிகை இவர்.  விமர்சனங்களை ஓரம் தள்ளி தனது பாணியில் பதில் கொடுத்துள்ளார் என்றே நினைக்க வைக்கிறது இவர்தம் கலக்கல் அணுகுமுறைகள்! புதிதாக தமிழ் காமிக்ஸ் உலகம் பதிப்பகத்தினைக் கொண்டுவந்ததுடன் தில்லாக முதலில் காமிக்ஸ்களை களம் இறக்காமல் காமிக்ஸ் மட்டுமில்லை இன்னும் பல சாதனை இதழ்களை வெளியிடவிருக்கிறோம் என தமிழ் கூறும் நல்லுலகுக்கு தன் வரவை அழுத்தமாகத் தெரிவிக்கும் வண்ணம் சிங்கப்பூரில் சிகரம் தொட தொடர்ந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் அருமை சகோதரி கிருத்திகா அவர்களின் (முத்து விசிறியாரின் துணைவி இவர் என்பது தனிச்சிறப்பு!!!). அருமையான பயண நாவலான உல்லாசக் கப்பல் பயணத்தினை நாவல் வடிவிலேயே வெளியிட்டு தனது இன்னிங்க்சை வெற்றிகரமாகத் துவக்கியுள்ளார். வாழ்த்துக்கள் தோழர் விஸ்வா!!! 
வாண்டு மாமாவை சந்திக்க நினைத்தபோதெல்லாம் எங்கள் பணிகளின் கடுமையைத்தாண்டி சென்று தரிசிக்க முடியாமல் போய்விட்டது. சொக்கலிங்கம் சாரிடம் இதுகுறித்து சமீபத்தில் கூட வருத்தம் தெரிவித்தேன்.
அன்னாரை சந்திக்கும் கொடுப்பினையும் அன்னாரைக் குறித்து அவ்வப்போது தகவல்களை அள்ளித் தெளித்தும் அன்னாருக்கு உரிய மரியாதையை எப்போதுமே எடுத்துக் கூறுவதில் விஸ்வா காட்டிய அக்கறை அருமையான நினைவலைகளாகும்.
வாண்டு மாமா எங்கிருந்தாலும் வாழ்க! உங்கள் நினைவலைகள் என்றும் எங்களுடனே பயணிக்கும்!!!
என்றும் அதே அன்புடன் ஜானி!!!

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...