ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

உழைப்பாளர்களுக்கு சல்யூட்!

வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே!
மே ஒன்றாம் தேதி பிரதி வருடம் உழைப்பாளர் தினமாகக் கடந்து செல்கிறது. அவர்களது வியர்வையும், இரத்தமும், தேசங்களைக் கட்டி எழுப்புகின்றன. அவர்களுக்கு கொஞ்சம் அட்வான்சாக நன்றி தெரிவித்துக் கொண்டாடும் விதமாக இந்தப் பதிவை அர்ப்பணிக்கின்றேன். 
நாம் இன்று அனுபவித்து வரும் அனைத்து வசதிகளும், முன்னர் யாரோ சிந்தித்து அதனை செயல்படுத்தி அதன் பலனையே அனுபவித்து வருகிறோம் அல்லவா. ஒரு சிலரைத் தவிர அந்த உழைப்பாளிகள் முறைப்படி கவுரவிக்கப்படுவதோ, சரித்திர ஏடுகளில் நினைவு கூறப்படுவதோ இல்லை. ஆனால் அவர்களது கடின உழைப்பும், பொறுமை நிறைந்த பணியும் காலம் கடந்தும் நம்மை சகல வசதிகளுடனும் வாழ்விக்கிறது. அப்படி ஒரு உழைப்பாளர்களின் திரள்தான் இரயில்வே துறையின் கட்டுமானப் பணியாளர்கள். இந்தியா 1853 ஆம் வருடம் மும்பையில் இருந்து தானே வரையிலான இரயில் என்ஜினை இயக்கியது சரித்திரம்.  

சென்னை டு ஆற்காடு வரையிலான இரயில் தடம் இன்னும் மூன்று வருடங்கள் கழித்து 1856ல் துவங்கியது. முதல் இரயில் இராயபுரம் முதல் ஆற்காடு வரை இயக்கப்பட்டது. (அரக்கோணம் என்று வரலாறு பாடப் புத்தகம் சொல்கிறது) ஆற்காடு நவாபுடன் ஆங்கிலேயர்கள் கொண்டிருந்த நட்பின் அடிப்படையில் பார்த்தால் முன்னது மிக சரியாகவே தோன்றுகிறது. 
இந்திய இரயில்வே பக்கம் :

இன்றைக்கும் நினைத்துப் பார்க்கையில் இந்திய இரயில் பயணங்கள் என்றுமே முடிவதில்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளதல்லவா. விமானங்கள்-கட்டணம் உயர்வு, பேருந்துப் பயணமோ ஓரளவுக்கு மேல் சகிப்பது கடினம். ஆனால் இரயில் பயணம் குறித்து நினைத்துப்பார்த்தால் என்னவொரு சுகானுபவம்? நான் டெல்லியில் பணியில் இருந்த போது தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் என்னை சுமந்து செல்லும் ஒவ்வொரு தருணமுமே சுகானுபவமே. பர்த்தில் ஏறிக் காலை நீட்டிப் படுத்து ஒரு காமிக்ஸை கையில் எடுத்து வாசித்தால்....அலாதி அனுபவம்தான் போங்கள்.
இந்த கட்டுரை எனது இரயில் பயணங்களைக் குறித்தது அல்ல. நம்ம இரயில் கட்டுமான ஊழியர்களை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கவுரவிக்கும் விதமாக ஒரு சித்திரக்கதை விளக்கக் கட்டுரை ஆங்கிலத்தில் வாசித்தேன். ஆஹா அருமை. இதை ஏன் தமிழ்ப் பேசிட செய்யக் கூடாது என்கிற ஆர்வமிகுதியால் ஏதோ பண்ணி இருக்கேன். பிடிச்சிருந்தா உங்க நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்???




உலகெங்கிலும் தங்கள் இன்னுயிரையும், இரத்தத்தினையும், வியர்வைத் துளிகளையும் நமக்காக, நம் நல்வாழ்வுக்காக சிந்திடும் உழைப்பாள சகோதர, சகோதரிகளுக்கு இந்தக் கட்டுரை அர்ப்பணம்.

வாசிக்க:

நண்பர் ராஜ் முத்துக் குமார் அவர்களது மின்னும் மரணம் ரெவ்யூ: 

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

Shriram _கனவு பலித்ததே!!!

Comics: கனவு பலித்ததே!!!: எனது சந்தோஷ அளவினை சொல்ல முடியவில்லை... மின்னும் மரணம் எனும் கதையினை நான் இதுவரை முழுவதுமாக தமிழில் படித்ததில்லை ... ...

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சித்திரையில் நித்திரை தொலைத்து புத்தம் புதியதோர் ஆண்டினில் முத்திரை பதிக்கக் காத்திருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நித்தமும், அலுப்பும், சலிப்புமென விடைபெறும் நாட்களுள் புத்தம் புது ஆண்டானது மலர்கையில் ஆங்கே நம்பிக்கை எனும் கீற்று அடிவானின் சூரியனாக சுடர்விட்டு எழும்பிடும் நமது நெஞ்சங்களில். புது ஆண்டு புது திட்டங்களுக்கான வாயிலாக நின்று உங்கள் குறிக்கோள்களை அடைவதற்கான சக்தியை நல்கிட இறைவனை வேண்டுகின்றேன்.
அம்பேத்கார் அவர்களது நினைவாக ஆங்காங்கே பாடல்களும் பரபரப்புகளும், கட்சிக் கொடிகளும், புத்தர் வணக்கங்களும் என நிறைவானதொரு அனுபவமாக மலர்கிறது இன்று....
வாழ்ந்தது போதுமா சித்திரக்கதையின் பதினேழாம் அத்தியாயத்தின் வாயிலாக நம் தமிழை வாழ வைக்கும் இலங்கை சந்ரா அவர்களின் நினைவாகவும் தமிழுக்கு அவர் ஆற்றிய பங்கினை நினைவு கூறும் வாயிலாகவும் அவரது இந்தக் கதையின் பாகத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
    என்றும் அதே தமிழ் மீதான தீராக் காதலுடன்_உங்கள் இனிய நண்பன் ஜானி!

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

காமிக்ஸ்கள் மொத்தமாக விற்பனைக்கு....

வணக்கம் நண்பர்களே!
என் நண்பர் தவமணி அவர்கள் விற்பனைக்கு தனது காமிக்ஸ் சேகரிப்பை மொத்தமாக கொண்டு வந்துள்ளார். வாங்குவோர் தொடர்பு கொள்க.
contact :chickbill123@gmail.com
கைவசம் உள்ளவை
முத்து காமிக்ஸ்
1 மீண்டும் முதலைகள்
2 பழி வாங்கும் புகைப்படம்
3 குள்ள நரிகளின் இரவு
4 வைர வேட்டை
5 நரகத்தின் நடுவில்
6 புயல் தேடிய புதையல்
7 திசை திருப்பிய தோட்ட
8 காற்றில் கரைந்த பாலர்கள்
9 நள்ளிரவு நாடகம்
10 மிஸ்டர் முகமுடி
11 கல்லறையில் ஒரு கவிஞன்
12 மரண மண்
13 மரணத்தின் நிறம் கருப்பு
14 பரலோக பாதை
15 சிறையில் ஒரு புயல்
16 யானை கல்லறை
17 காற்றில் கரைந்த கதாநாயகன்
18 புயல் படலம்
19 மின்னல் ஜெர்ரி
20 புதையல் பாதை
21 கதை சொல்லலும் கொலைகள்
22 தோட்ட தலைநகரம்
23 துரத்தும் தோட்டா
24 விசித்திர வில்லன்
லயன் காமிக்ஸ்
1 கொலை செய்ய விரும்பு
2 மர்ம மைனா
3 புலி வருது
4 கிசு கிசு மரணம்
5 மியாவ் மியாவ் மரணம்
6 திகில் நகரம் டோக்கியா
7 ஆவியின் பாதையில்
8 கடலோரக் கொலைகள்
9 தலை வாங்கும் தாரகை
10 வெள்ளைய ஒரு வேதாளம்
11 தேடி வந்த தூக்குகயிறு
12 ்இரத்தப்படலம் 7
13 ்இரத்தப்படலம் 8
14 ்இரத்தப்படலம் 4
15 பனியில் ஒரு நாடகம்
16 கனவே கொல்லாதே
17 தலைகிழ்லாய் ஒரு தினம்
18 வேங்கை வேட்டை
19 மந்திர மண்ணில் மாடஸ்டி
20 மரணத்தை முறியடிப்போம்
21 பெர்முடா படலம்
22 பறக்கும் பரலோகம்
23 தூங்கி போன டைம் பாம்
24 வேங்கையோடு மோததே
25 கார்ட்டூன் கொலைகள்
26 சுல்தன்னுக்கு ஒரு சவால்
27 பூமிக்கு ஒரு ப்ளக்மெயில்
28 பரலோக பரிசு
29 மாண்டவன் மீண்டான்
30 சிறுத்தைகள் சாம்ராஜ்ஜியம்
கிளாச்சிக்
1 விண்வெளி கொள்ளையர்
2 களிமண் மனிதர்கள்
இவை அனைத்துமே அருமையான கதைகள். அரிய வாய்ப்பினை நழுவ விடவேண்டாம். 
என்றும் அதே அன்புடன் 
ஜானி!

இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 076-106 வரையிலான குறிப்புகள்!

வணக்கம் தோழமை உள்ளங்களே!
இந்திய தண்டனை சட்டத்தின் அத்தியாயம் நான்கின் குறிப்பு பகுதியினை உங்களுடன் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். என்ஜாய்!
இது இந்திய சட்டத்தினை தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவிடும் விதத்தில் சிறு குறிப்பாக மட்டும் பகிரப்படுகிறது என்பதையும் மறுபடியும் நினைவூட்டுகிறேன்.
அத்தியாயம் _ நான்கு_விதி விலக்குகள்
இ.த.ச. பிரிவு – 76
சட்டப்படி கடமையாற்றும் பொது ஊழியர் செயலில் தீங்கு ஏற்பட்டாலும் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 77
சட்டப்படி நீதிபதி தண்டிப்பதால் அவர் செயல் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 78
உத்தரவு (அ) தீர்ப்புப்படி காரியம் செய்பவர் மீது குற்றமாகாது. அம்மன்றத்துக்கு உத்தரவிட அதிகாரமில்லை என்றாலும் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 79
சட்டப்படி கடமையாற்றுகிறவர் நல்லெண்ணத்துடன் சரியானதென நம்பி செய்வதில் எதிர்பாராமல் தவறு நேர்ந்தாலும் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 80
சட்டப்படியும், கருத்துடனும், கவனத்துடனும் குற்றக் கருத்தின்றி செய்யும் செயலால் துன்பம் (அ ) விபத்தானால் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 81
குற்றக் கருத்தின்றி நல்லெண்ணத்துடன் பெரிய தீங்கு நேர்வதைத் தடுக்க செய்யும் சிறு காரியம் மூலம் சிறு தீங்கு நடந்தால் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 82
ஏழு வயதுக்குட்பட்டவர் செயல் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 83
ஏழு முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட அறிவு முதிர்ச்சி பெறாதவர் செயல் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 84
சித்த சுவாதீனம் இல்லாதவர் செயல் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 85
போதை நபர் செயல் குற்றமாகாது. ஆனால் போதை அவர் விரும்பி ஏற்றிருக்கக் கூடாது. அறியாமல் வந்திருக்கவேண்டும்.
இ.த.ச. பிரிவு – 86
சில சட்டப்பூர்வமான செயல்கள் கருத்தோடும் தெளிவோடும் செய்தால்தான் குற்றமாகும். அவை கூட 85 இ.த.ச. படி பொருந்தும்.
இ.த.ச. பிரிவு – 87
18 வயதுக்கு மேற்பட்ட நபர் சம்மதப்படியான செயலில் துன்பம் நேர்ந்தால் குற்றமாகாது. ஆனால் செயலில் குற்ற நோக்கு கூடாது.
இ.த.ச. பிரிவு – 88
ஒருவர் இசைவுடன் அவரது நலனுக்காக நல்லெண்ணத்துடன் செய்யும் செயலில் துன்பம் ஏற்பட்டால் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 89
12 வயதுக்குட்பட்டவர், மன நலம் குன்றியவர் ஆகியோரின் பாதுகாவலரின் சம்மதம் பெற்று அவரது நலனுக்கு செய்யும் காரியம் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 90
தனக்குத் தீங்கு நேரும் அச்சத்தால் சம்மதம் கொடுக்கப்பட்டாலும், விஷயம் புரியாமல் சம்மதம் தந்தாலும் அது சம்மதம் ஆகாது.
இ.த.ச. பிரிவு – 91
சில காரியத்தால் தீங்கு நேர்ந்தாலும், நேராவிட்டாலும் அச்செயல் குற்றமாகும். அது சம்மதத்துடன் புரிந்தாலும் குற்றமே. (எ.கா.- கருச்சிதைவு)
இ.த.ச. பிரிவு – 92
ஒருவரின் சம்மதம் இல்லாமலே சூழ்நிலை அனுசரித்து அவர் நலனுக்கு நல்லெண்ணத்துடன் செய்யும் காரியம் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 93
நல்லெண்ணத்துடன் ஒரு செய்தியை பிறரிடம் தெரிவிக்கும் செயலால் அந்த நபருக்குத் துன்பம் ஏற்பட்டால் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 94
மிரட்டலுக்கு அடங்கி ஒருவர் செய்யும் காரியம் குற்றமாகாது. ஆனால் தானே மிரட்டல் விடுப்பவரிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது.
இ.த.ச. பிரிவு – 95
மிகச் சிறிய குற்றச் செயலால் மிகச் சிறிய தீங்கு ஏற்பட்டால் அது குற்றமாகாது.
தற்காப்புரிமை:-
இ.த.ச. பிரிவு – 96
தற்காப்புரிமை பயன்படுத்தும்போது எதிரிக்கு ஏற்படும் துன்பம் குற்றமாகாது. ஆனால் தற்காப்புரிமை அத்துமீறக்கூடாது.
இ.த.ச. பிரிவு – 97
தனது, அதேபோல், பிறரது உடல், உடைமை, காத்துக்கொள்ள தற்காப்புரிமை உள்ளது. இதில் 99 இதச பிரிவின்படி நிபந்தனை உள்ளது.
இ.த.ச. பிரிவு – 98
இளமை, குடிபோதை, அறிவு தெளிவின்மை, பைத்தியக்காரன், போதைக்காரன், இவர்களிடமும் தற்காப்புரிமை பயன்படுத்தலாம்.
இ.த.ச. பிரிவு – 99
பொது ஊழியர் நல்லெண்ணத்துடன் செய்யும் காரியத்தை எதிர்த்து தற்காப்புரிமை பயன்படுத்தக் கூடாது.
இ.த.ச. பிரிவு – 100
-எதிராளி நம்மைத் தாக்கிக் கொலை செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்படும்போது
-நம் உடலுக்கு எதிரியின் செயலால் கொடுங்காயம் ஏதாவது ஏற்படலாம் என்ற எண்ணம் தோன்றும்போது
-எதிராளி கற்பழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தாக்கும்போது
-இயற்கைக்கு மாறான முறையில் தன்னுடைய காம இச்சையை எதிரி தீர்த்துக் கொள்ளவேண்டும் என்ற வெறியுடன் நெருங்கும்போது
-கடத்திச் செல்ல வேண்டும் என்ற கருத்துடன் நம்மை அண்டியுள்ள ஒருவரை எதிரி தாக்க முனையும்போது
-சட்டவிரோதமாக ஒருவரை எதிரி காவலில் வைப்பதற்கென முயற்சி செய்து அதனினின்றும் சட்டப்பூர்வமான அலுவலர்களை அணுகி விடுதலை பெற முடியாத நிலை ஏற்படும்போது
ஆகிய ஆறுவித சந்தர்ப்பங்களில் எதிரிக்கு மரணம் ஏற்பட்டாலும் தற்காப்புரிமை படி குற்றமல்ல.
இ.த.ச. பிரிவு – 101
இ.த.ச. பிரிவு – 100-ல் உள்ளபடிதான் எதிரிக்கு மரணம் ஏற்படலாம். இதச 99ன் படி மரணம் குற்றமாகும். மற்றது குற்றமில்லை.
இ.த.ச. பிரிவு – 102

நமது உடலுக்கு ஆபத்து என்ற அச்சம் தோன்றியதுமே நமக்குத் தற்காப்புரிமை கிடைக்கின்றது.
இ.த.ச. பிரிவு – 103
ரவில் வீடு இடித்துக் கொள்ளை, தீ, அத்துமீறுதல், திருடுதலால் மரண பயமெனில் தற்காப்புரிமையில் எதிரிக்கு மரணம் குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 104
பிரிவு 103ல் உள்ளது தவிர திருடு, தொல்லை, வரம்பு மீறல், செயலில் தற்காப்புரிமையில் எதிரிக்கு மரணம் தவிர மற்றது குற்றமாகாது.
இ.த.ச. பிரிவு – 105
நம் சொத்துக்கு ஆபத்து வரும்போது தற்காப்புரிமை கிடைக்கிறது. ஆபத்து நீங்கியதும் தற்காப்புரிமை இல்லை.
இ.த.ச. பிரிவு – 106
மரண தாக்குதலின்போது தற்காப்புரிமையில் நிரபராதிக்குத் தீங்கு ஏற்பட்டால் குற்றமில்லை.
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றிகள்_என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் _ஜானி!

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

வாழ்ந்தது போதுமா? _016_1972_veera kesari Magazine from Sri Lanka

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே! 
ஈழத்துத்தமிழ் மணக்க எழுத்தப்பட்ட இந்த சந்ரா அவர்களது சித்திரக்கதை மிக அபூர்வமான ஒன்று. இதனை தமிழ் மண்ணில் இத்தனை காலம் பாதுகாத்து வைத்திருந்து இன்று நம்முடன் பகிர்ந்து கொண்ட தமிழ் காமிக்ஸ் ரசிகர் திரு. அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்கள் போலவே இன்னும் அரிய சித்திரக்கதைகளை பாதுகாத்து புதையலாக எண்ணி வைத்து வரும் அரிய நபர்களை இந்த வலைப்பூதான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. இன்று வாழ்ந்தது போதுமா? தனது பதினாறாவது அத்தியாயத்தினை எட்டிப் பிடிக்கும் வேளைதனில் உங்களுக்கு ஒரு கேள்வி. உங்களில் எத்தனை பேர் இது போன்ற அரிய தொடர்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளீர்கள்? 
நிற்க. இந்த வாழ்ந்து போதுமா கதையமைப்பு உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறதா? இல்லை....நீங்கள் இரசித்துப் படித்து விட்டு கருத்தேதும் பதியாமல் செல்லும் எண்ணம் கொண்டவரா? ஏன் என்று கேட்டால் இடையே சிறிது தினங்கள் தொடர்ச்சி விட்டு விட்டு காத்திருந்தேன். எவருமே இந்த தொடரினைக் குறித்து இங்கு கதைக்கலை. என்ன நண்பர்களே? சரிதானா? அது குறித்து விவாதிக்கப் போவதுமில்லை இங்கே. எனக்கு நேரம் இருக்கும்போது, இதன் அத்தனைப் பாகங்களும் அரங்கேறும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன்.

இதுவரை_கடத்தல் தொழிலுக்கு சிறையில் உள்ள கைதியாகத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தப்ப வைத்து பயன்படுத்தும் கும்பலின் பிடியில் சிக்கும் சிங்காரம் சிங்காரமாக மாறி கடத்தல் தொழிலைத் தொடர்கிறான். அவனுக்கு உத்தரவிடும் அம்மணி ஜெயஸ்ரீ. உடன் கடத்தல் தோழன் தாஸ் எனப் பயணம் தொடர்கிறது. தாஸ் கொஞ்சம் அதிகமாக ஜெயஸ்ரீயை நெருங்கிட எண்ணுகிறான். அவளது சுய ரூபம் தெரிந்து அதிர்கிறான். பின்னர்....  

அப்புறம், வேளச்சேரி உதவி ஆய்வாளர் ஒருவரை சந்திக்க நேரிட்டது. அவரது ஒரு கருத்து மிக முக்கியமெனப் பட்டதால் இங்கு பகிர்கிறேன். வேலை நிமித்தம் வெளியே செல்லுமிடங்களில் சிற்றுண்டிகளுடன் வைக்கப்படும் சட்னிகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். அதே சமயம் அவற்றுடன் பரிமாறப்படும் சாம்பார் எடுத்துக் கொள்ளுங்கள். என்றார். ஏன் என்று கேட்டதற்கு சாம்பார் சுடவைக்கப்பட்டு பரிமாறப்படும் ஒரு சங்கதி என்பதால் அதில் கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. ஆனால் சட்னி வகைகள் அப்படி இல்லை. அரைத்து கெட்டியாக வைத்துக் கொண்டு தேவைப்படும்போது சாதாரணமாக என்ன நீர் என்று நாம் கண்டுகொள்ள முடியாத பகுதியில் பக்கெட்டில் இருக்கும் நீரை எடுத்து ஊற்றுகிறார்கள். அதுவும் சூடான பொருளல்லாததால் நம்மைத் தற்காப்பு செய்து கொள்ள நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். எனவே சட்னி வகைகளைத் தவிர்ப்பது நமது வயிற்றில் பன்ச்சர் ஆகாமல் நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவும் என்றார். கவனித்துக் குறித்துக் கொள்ள வேண்டிய சங்கதியாகப் பட்டதால் பகிர்ந்து கொண்டேன். கவனம் மக்கா!
மிகப் பெரும் உணவகம் அது. அதன் பணியாளர் பயன்படுத்தும் கழிப்பறையை எட்டிப் பார்த்தால் ....அய்யகோ! இவர்களா நமக்குப் பரிமாறுகிறவர்கள் என்கிற அதிர்ச்சிக்குள்ளானவன் என்கிற வகையில் அதனையும் இங்கு பதிவு செய்கிறேன்.
என்றும் அதே அன்புடன்_நட்புடன்_பாசமுடன்_ஜானி_உங்கள் இனிய நண்பன்...
டொக்!    

வியாழன், 9 ஏப்ரல், 2015

வாழ்ந்தது போதுமா? _015_1972_veera kesari Magazine from Sri Lanka

இந்த தொடரை பாதுகாத்து வழங்கி உதவிய திரு.அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களுக்கு நன்றிகள். தொடரின் மற்ற பாகங்களையும் வாசித்து விட்டு தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன். என்றும் அதே அன்புடன் ஜானி!

மனிதர்கள்....

வணக்கம் நண்பர்களே!
உலகில் எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை தனிப்பட்ட உலகங்கள் உண்டு என்று எங்கோ ஒரு சிந்தனையாளர் தனது சிந்தனையை செதுக்கிச் சென்றார். எனக்கு ஒரு பெரியவரைத் தெரியும். அவர் ஆயுதப்படையில் காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் முகாம் எழுத்தராகப் பணிபுரிகிறார். அவரது விசேஷமான செய்கை என்னவெனில் ஒவ்வொரு புத்தாண்டு மலரும் வேளையிலும் தன் வட்டாரத்தில் தனக்கு உதவியாளராகப் பணியிலுள்ள அனைவரையும் அழைத்து தன் கையொப்பமிட்ட பத்து ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பாகக் கொடுத்து இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா செல்வ வளங்களையும் வாரி வழங்கட்டும். எனது ஆசீர்கள் என்பார்.  அது அவரது சிந்தனை. அவரின் எண்ணம் உயர்வானது என்பதால் ரூபாய் நோட்டில் செய்த இனிசியலை பெரிதாக்காமல் அந்த ரூபாய் நோட்டினை வீட்டில் பத்திரப்படுத்தி வைக்கும் நண்பர்கள்தான் அதிகம். வருடத் துவக்கம் இது போன்று கிடைக்கும் அபூர்வப் பரிசுகள் மனதுக்கு நெகிழ்ச்சியை கொடுக்க வல்லவைதானே!
 தான் ஆடாவிட்டாலும் தன் தசை  ஆடும் என்பது முதுமொழி. முன்தினம் இரவு சுமார் இரண்டுக்கு மேல் நெஞ்சைப் ஒரு இம்சை வந்து பிசைவதாகவே தோன்றியது. அது வலியுமல்ல. ஏதோ ஒன்று தப்பாக நடக்கிறது என்று மட்டும் புரிந்தது. ஆனால் அது என்ன என்பது மட்டும் பிடிபடவில்லை. சுமார் மூன்றரைக்கு என் கைபேசி அலறிற்று. என்னமோ ஏதோவென்று பயந்து கொண்டே போனை எடுத்தேன். எனக்குப் பிரியமான என் தாத்தாவின் சகோதரர் திரு.சாமிநாதன் அவர்கள் காலமாகிவிட்டார் என்கிற செய்திதான் அது. நாங்கள் பழகியது வெகு சில சந்தர்ப்பங்களில்தான் என்றபோதிலும், அந்த இடைவெளியில் என்னை அவருக்கு மிகப் பிடிக்கும் என்பது ஒரு புறம் இருக்க, அவரை சந்தித்தே பல வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில் இன்று நேர்ந்த இந்த விசித்திரமான இனம்புரியாத அனுபவம் குறித்து உங்களுடன் பகிர்வதில் ஒரு ஆறுதல். 
என் சகோதரர் செந்தழல்ரவி தனது வலைப்பூவில் எங்கள் தாத்தா குறித்து எழுதியுள்ள பதிவு....http://tvpravi.blogspot.in/2014/05/blog-post_9.html
இடையே இங்கேயே வசித்து நான் காண விரும்பி வந்த இனியவர்கள் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும், செவியில் இறைவனை நனைத்துக் கொண்டே இருந்த அன்பு அய்யா நாகூர் ஹனீபா அவர்களும் மீளாச் சொர்க்கம் எய்தி வருத்தத்தின் சதவீதத்தை அதிகரித்து விட்டனர். அன்னார்களது ஆன்மா இனிய இறைவனின் ஜோதியில் கலந்து சாந்தியும் சமாதானமும் அடைய வேண்டிக் கொள்கிறேன். 
அப்புறம்....அப்புறமே!!
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பர் ஸ்பைடர்மேனின் தோழன் ஜானி!
  

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஒரு குசும்பு பிடித்த வாசகரின் கைவண்ணம்!!!

வணக்கம் நண்பர்களே! காமிக்ஸ் வாசித்து ரசித்த குழந்தைத்தனமான பருவத்தில் நம் கைகளில் காமிக்ஸ்கள் என்ன பாடு பட்டிருக்கின்றன பாருங்கள். இப்படி ஒரு அட்டகாசமான அமர்க்களமான பருவத்தைத்தான் நாம் காலப்போக்கில் இழந்து விட்டிருக்கிறோம்.  
நன்றிகள்: நண்பர் சரவணாrsk...... 
வேறென்னங்க! வண்டி ஓட்டும்போது பார்த்து ஓட்டுங்க. வெயிலை நினைத்து தலைக்கவசம் (ஹெல்மட்) அணிவதைத் தவிர்க்காதீங்க! யாராவது நடந்து போறவங்க தெரியாத்தனமா குறுக்கே வந்துட்டா வண்டி ஆக்சிலரேட்டரை முறுக்காதீங்க. போனா போவட்டும்னு கொஞ்சம் விட்டுக் கொடுங்க. ஜாலியா இருங்க. இன்னிக்கு சேதி அவ்ளோதாங்க. என்றும் அதே அன்புடன் உங்கள் தோழன் ஜானி! 

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

ஈஸ்டர் திருவிழா நல்வாழ்த்துக்களுடன்....ஜானி!

         இறைமகன் இயேசுவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இயேசுவின் உயிர்த்தெழுதலின் நினைவாகக் கொண்டாடப்படும் தினம்தான் ஈஸ்டர். மக்களுக்காகவே மரித்தார். மக்களுக்காகவே உயிர்த்தார். மக்களுக்காகவே மீண்டும் வருவார். இறுதித் தீர்ப்புதினம் அவர் கரங்களில் உள்ளது. இதுவே கிறிஸ்துவைப் பின்பற்றும் எங்களது நம்பிக்கை. நண்பர்களுக்கு இம்முறை ஒரு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சித்திரக்கதையினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவருக்கும் என் இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள். இந்த சித்திரக்கதையினை அன்பளித்து உதவிய அன்பு நண்பர் தமிழ் காமிக்ஸ் உலகம் பதிப்பாசிரியர் திரு.கிங் விஸ்வா அவர்களுக்கும், புத்தகத்தினை அருமையாக வலைப்பூவுக்கு ஏற்றவிதத்தில் மேம்படுத்த ஆலோசனைகள் கொடுத்து உதவிய தமிழ் காமிக்ஸ் டைம்ஸின் நிர்வாகியுமான நண்பர் திரு சொக்கலிங்கம் அவர்களுக்கும் எனது இனிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
வரலாறு என்பது நடந்த ஒன்றின் பதிவே. விவிலியம் உணர்த்தும் வரலாற்றில் இறைமகன் இயேசு விண்ணிலிருந்து மானிடராகப் பிறந்து மரியாளின் அன்பிலும், யோசேப்பின் அரவணைப்பிலும் உலகில் உலவி அநேகம் மானிடரை ஆசீர்வதித்தும், நோயாளிகளைக் குணமாக்கி, பேய் பிடித்தோரை சொஸ்தமாக்கி, தொழுநோயாளிகளிடம் பரிவு காட்டி மனிதருக்கோர் உதாரணமாகத் திகழ்ந்து தனது அன்பின் பூரணமாக தன்னையே மக்களுக்கு அர்ப்பணித்து, தீயோரின் சதியால் சிலுவையில் அறையப்படுகிறார். மரித்தோரிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுகிறார். மானிடரின் கண்கள் நோக்க விண்ணிற்கு ஏறி இறைவனின் வலது பக்கம் அமர்கிறார். மீண்டும் வருவார். புதிய வானம், புதிய பூமி மலரும். நல்லோர் அவரது அரசில் வளம் பெறுவர். தீயோர் ஒதுக்கப்படுவர். அவரது ஆட்சிக்கு முடிவிராது. ஆமென்.

வாசித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றிகள் பல. இனி சித்திரக்கதைக்குள் புகலாமே.
































அப்புறம் புத்தகத் திருவிழாவுக்கு உங்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன். புத்தகங்கள் கையில் பிடித்து வாசிப்பதில்தான் அழகிருக்கிறது என்று தீவிரமாக நம்பும் நண்பர்களுள் நானும் ஒருவன். அதன் வாசமே நம்மை ஆழ்ந்த வாசிப்புக்குள் வழிநடத்தும் என்பது அனுபவபூர்வமான உண்மை. ஆகவே வாருங்கள், நிறைய புத்தகங்களை வாங்குங்கள். வாங்கி வாசித்து மகிழுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஈஸ்டர் விழா முடிந்து இந்தப் பரிசினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நேரிட்டதற்கு பணிகளும் காலமும் இடம்தரவில்லை எனினும் சாரி தோழமை உள்ளங்களே! 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி! 

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...