புதன், 30 டிசம்பர், 2015

இவன் வேறு மாதிரி.


-பொங்கல்.

-தீபாவளி.

-புத்தாண்டு.

-கிறிஸ்மஸ்.

-மிலாடி நபி. 

-ஈஸ்டர். 

-ரம்ஜான் என்று எத்தனை எத்தனைக்

கொண்டாட்டம் வந்தாலும் 

கொண்டாட வருவோரை 

வாவாவென்றும்,

கொண்டாடிப் பிரிவோரை 

நின்று செல் என்றும் 

உறவினராக இல்லை 

என்றாலும் உரத்து

அழைத்து அனுப்பி 

வைக்கும் ஆலமரம்தான் 

உங்கள் பகுதியின் போக்குவரத்துக் காவலர். 

உங்கள் நிம்மதி எங்கள் வெகுமதி.

போக்குவரத்தை நீ மதி.

அலட்சியங்களை நீ மிதி.

இதனை மனதில் 

நீ பதி.


-என்றும் அதே அன்புடனும், நேசமுடனும் உங்கள் இனிய நண்பன் ஜானி!

திங்கள், 21 டிசம்பர், 2015

கரைந்து மறைந்தவன்...


இனம் பார்த்துப் பழகினேன்
இடியுண்டு விழுந்தேன்.

மதம் பார்த்துப் பழகினேன்
மனமொடிந்து போனேன்.

சமூகம் பார்த்துப் பழகினேன்
சதி சறுக்கி விழுந்தேன்.

மொழி பிரித்துப் பழகினேன்
விழி நீர் வீழ விலகினேன்.

கட்சியின் வெளிச்சத்தில்
கரை வெட்டிகளின் பளபளப்பில்

தோரணங்களின் மயக்கத்தில்
விண் தொடும் விளம்பரங்களைப்

பார்த்துக் கலந்தேன்.
கால் தடுக்கி வீழ்ந்தேன்.

சாக்கடை மீதென் இனிய வதனம்.
இனி எழுவது சாத்தியமே இல்லை

என்றானதும் அப்படியே மறைந்து போனேன்
சூரியனின் முன் பனியாக.


ஆம். 
நான் கரைந்து மறைந்தவன். 

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

from the story of jesus..

வணக்கம் தோழமை உள்ளங்களே. அனைவருக்கும் வரும் கிறிஸ்துமஸ் தின முன் கூட்டிய நல்வாழ்த்துகள். புயல் வந்து கிழித்துப் போட்டது போன்று தாறுமாறாகக் கிடக்கும் தமிழகத்தில் உணவுப் பொருட்களை அள்ளி வழங்கிய அத்தனைக் கரங்களுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். உங்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக.   


















மீண்டும் சந்திப்போம். என்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி. 


எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...