வெள்ளி, 21 டிசம்பர், 2012

007 JAMES BOND -THE FAMOUS BRITISH AGENT!!


காமிக்ஸ் என்னும் மாபெரும் மரத்தடியில் கூடி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டு வளமான மன நிலையை எட்ட வந்திருக்கும் அனைத்து தோழர்களுக்கும், தோழிகளுக்கும், எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். 
 உலக மக்களின் இதய நாயகனாகிய இரகசிய ஏஜெண்டு ஜேம்ஸ் பாண்ட் குறித்து இந்த பதிவினை துவக்குகிறேன்! அவர் ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்த சாகச பயணத்தில் நம்மையும் அவரோடு கூட தனது அதிரடிகளை கண்டு ரசிக்க அழைத்து சென்றமைக்கு ராயல் சல்யூட்! 

இங்கிலாந்து ராணியின் ஆட்சி நடக்கும் பிரிட்டிஷ் தேசத்தின் தலைசிறந்த உளவாளிகளில் நமது நாயகன் பெற்ற  நம்பர் 007. இவர் M -16 என்ற ராணுவத்தின் ரகசிய பிரிவின் சிறப்பான உளவாளி ஆவார். இயான் ப்ளம்மிங் என்கிற கதாசிரியரின் கைவண்ணத்தில் பறவை இயல் நிபுணர் ஒருவரின் பெயர் புகழ் பெற்ற பிரிட்டிஷ் உளவாளி ஜேம்ஸ் பாண்ட் ஆக உருமாறியது. இவர் கொலை செய்ய காரணம் தனது நாட்டு பற்றே ஆகும். தனது தாய் நாடான த கிரேட் பிரிட்டன் எப்போதெல்லாம் பிரச்சினையை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் தனதருமை உயிரையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கி சில பல சாகசங்களை செய்து பிரச்சினையை தீர்த்து வைப்பார். இவரது பாஸ் M. அவரது அந்தரங்க உதவியாளர் மனிபென்னி. கீழே உள்ள படம் உங்கள் ஆச்சரியத்தை அதிகபடுத்தலாம். ஆமாம் சாகசம் என்றாலே நாயகன் ஜேம்ஸ் தானே! எனவே அவரது இந்த அட்டை படமே. புயல் படலத்துக்கு பயன்படுத்த பட்டுள்ளது. 




சரித்திரம் அறிந்த நாயகன் ஜேம்ஸ் பாண்டினைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தாலும்  அவரது தனி பெரும் குணமான துப்பறியும் தன்மை குறித்தே நான் பெரும் ஆர்வம கொள்கிறேன். மிக சிறப்பாக அனைத்து கதைகளிலும் தன் இனிய உயிரை பணயம் வைத்து துப்பறிவார். உரிய நேரத்தில் மட்டும் சாகசம் புரிந்து தனக்கிடப்பட்ட பணியை செவ்வனே முடிப்பார். அவரது தனி திறமையான காதல் மன்னன் தனது நாட்டு நலனுக்காக என்றால் அதை மிக ரசித்து செய்வார். அவரது ஒவ்வொரு கதைக்கும் ஜோடி மாறும். என்றாலும் அவர்களும் சாகசத்தில் சளைத்தவர்களில்லை! ஜேம்ஸ் போன்றே தாங்கள் சார்ந்த நாட்டுக்காக தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடினமான பணிகளையும் துச்சமென மதித்து பணியில் பல சாதனைகளை ஈட்டுவார்கள்! என்றுமே அவரவரது நாடு அவரவர்க்கு பொன்னாடுதானே? கொண்ட கொள்கையை எக்காரணம் முன்னிட்டும் விட்டு தராமல் தனது பணியே போனாலும் கவலை படாமல் நாடு! நாடு! நாடு! அதை நாடு! நாடு! என்று தேசத்தின் மீதான நமது பற்றினை அதிகரிக்க செய்யும் கதை வரிசை ஜேம்ஸ் பாண்ட் கதைகளே!   
ராணி  காமிக்ஸ், முத்து காமிக்ஸ் இரண்டிலும்
ஜேம்ஸ் பாண்ட் கதையின் ஆக்கம் மிக சிறப்பான ஒன்று. அதில் அவர் பயன்படுத்தும் அனைத்து வித சாதனங்களும் தகவல் தொடர்பு, ஆயுத படைக்கலங்கள் போன்றவையும் மிக சிறப்பாக சித்தரிக்க பட்டிருக்கும்.
ஆங்கில கதைகள் தரமானவை! படிக்க ஆங்கிலம் அதிகம் தெரிந்திருக்க வேண்டும்! (ஹி ஹி ) நாவல் வடிவங்கள் கண்ணை கட்டும் (மீண்டும் ஹி ஹி ஹி ) அதனாலும் நாங்கள் எல்லாம் ஆங்கிலத்துக்கே அலர்ஜி உண்டு பண்ணி விடுவோம் என்பதாலும் ஆங்கிலத்தில் படங்கள் பார்த்ததோடு சரி! முடிந்த நண்பர்கள் முயற்சித்து பாருங்கள்! ரசனை மிகு ஆங்கில கதையை ஆங்கில வடிவில் படிக்க நிச்சயம் நன்றாகவே மிக அருமையாகவே இருக்கும்.
ராணி காமிக்ஸில் வந்த கதைகள் அனைத்துமே அட்டகாசமாக இருக்கும். மறு பதிப்பு என்ற பெயரில் செய்த காமெடிகளை மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளாமல் விட்டு விட்டால் ஜேம்ஸ் பாண்ட் ராஜ்யமே அதிகமாக ஆக்கிரமித்திருக்கும் என நினைக்கிறேன்.! ராணி வெளியீடுகளின் தனி தன்மையான அட்டை லேமினேஷன் மிக தரமாக அமைந்து இருக்கும். என் தங்கைகளின் முதல் வேலையே அந்த லேமினேஷன் பேப்பரை கிழித்து விளையாடி என்னிடம் வாங்கி கட்டி கொள்வதுதான்! ஆமாம் அவர்களும் காமிக்ஸ் ரசிகைகளே! நாங்கள் மிக ரசித்த புத்தகம் கடல் பூதம்! ஸ்கேன் கிடைத்தால் போடுகிறேன்!    

புத்தக கண்காட்சி! க்கு சென்னை வரும் நண்பர்களுக்கு அட்வான்ஸ்  நல்வரவு! வாங்க முடிந்தால் சந்திப்போம். அப்புறம் கொஞ்சம் நண்பர்களது வலை தளங்களில் இருந்து சுட்ட ஸ்கேன் போட்டு இந்த பதிவுக்கு ஒரு கமா வைத்து விட்டு







வருகிறார் நமது மறுபதிப்பு நாயகன் கூடிய விரைவில்.. வேற வழியில்லை இதை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். நான் என்ன பண்றது நண்பர்களே! காக்கா மூக்கால கிறுக்கினாலும் அதிலும் ஒரு அழகு இருக்கிறது என்று நம்புபவன் நான்!!! ஹி! ஹி! ஹி! அதில் அதிகமாக கிடைக்காத புத்தகங்கள் இடம் பெற்று உள்ளன ஆனால் வண்ணங்கள் பல நேரம் எண்ணங்கள் போல இருப்பதில்லையே! ஆகவே பொறுத்தருள்க! 

அவர் குறித்த இந்த பதிவுகளையும் http://en.wikipedia.org/wiki/James_Bond தோழர் கிங் விஸ்வா அவர்களது பதிவினையும் நமது  நாயகனின் ப்ளாக்கினையும் ஒரு முறை அலசி ஆராய்ந்து விடுங்கள். அப்புறம் நண்பர்களே நந்தனத்தில் பதினொன்றாம் தேதி முதல் இருபத்து இரண்டாம் தேதி வரை வரும்  ஜனவரி மாதம் நடைபெற உள்ள முப்பத்து ஆறாவது புத்தகக் கண்காட்சிக்கு வந்து விடுங்கள். அதுவும் சரியாக ஆறு மணியளவில் முத்து காமிக்ஸின் மிக மிக தீவிர ரசிகர்கள் அனைவரும் சிறப்பு அழைப்பாக இதனை எடுத்து கொண்டு வந்துடுங்க. நெவெர் பிபோர் ஸ்பெஷல் என்கிற மிக பிரம்மாண்டமான புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது. இடம்: சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தின் மிக அருகில் உள்ள நந்தனம் காலேஜ்தான். வெளியூர் நண்பர்களுக்காக இந்த புகைப்பட பதிவினை சமர்பிக்கிறேன்.
அடையாளத்திற்காக முகப்பின் புகைப்படம்.இது.



நுழைவு வாசல் ஒன்று கீழே காட்டப்பட்டு உள்ளது. தேவர் சிலை அருகில் உள்ள சிக்னல் பக்கத்தில் சைதாப்பேட்டைல இருந்து வந்தால் ரைட்டு பக்கம்.

அடுத்த கேட் கீழே காட்டப்பட்டு உள்ளது இதன் வழியாக வந்தால் கொஞ்சம் எளிது.

அப்படியே உள்ள வந்தா இது போல பசுமையாக வாசல் விரியும். நேராக சென்றால்..... 

 பக்கங்களில் கோல்ப் மைதானம் இருக்கும். ரசித்து சந்தோஷமாக உள்ளே நேராக ரோட்டிலேயே போய்க்கினே இருங்க.
இந்த லெப்ட் பக்கம் ஒதுங்குங்க!




இந்த வாசல் அருகே செக்யூரிட்டி இருப்பார். கண்காட்சியை நெருங்கி விட்டீர்கள் 
அதனுள்ளே கீழே கண்ட காட்சிகள் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்களது இசை நிகழ்ச்சிக்காக (27 Dec i think) தயாராகிகொண்டு இருக்கிறது.  








 எனவே இங்கேதான் அந்த சரித்திர பிரசித்தி பெற போகிற சம்பவம் முத்து முத்தான உங்களை போன்ற வாசக இளம் உள்ளங்களை நம்பிக்கை தூண்களாக கொண்டு நடைபெற இருக்கிறது நண்பர்களே! கண்டிப்பாக வந்துடுங்க! உங்களை எதிர்பார்க்கும் காமிக்ஸ் உள்ளங்களில் ஒருவன்-உங்களில் ஒருவன்! ஜானி!

சனி, 15 டிசம்பர், 2012

ஏர்போர்ட்டில் மாயாவி - பொன்னி காமிக்ஸ்


வணக்கம் தோழமை கொண்ட நெஞ்சங்களே!
 உங்கள் நெஞ்சில் மகிழ்ச்சியை பெருக்கெடுத்து ஓட (இல்லைனா என்னை ஓட ஓட விரட்டி வரவைக்க போகிற ஹி! ஹி! ஹி! ) இந்த அற்புதமான கதைத் தொகுப்பை உங்கள் முன்னர் சமர்பிப்பதற்கு முன்பு தற்காப்பு நடவடிக்கை ஒன்றை எடுத்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். அந்த இளவரசன் குதிரை மேல ஏறி பறந்து போனானாம்! என்பார் என் பாட்டிம்மா. நான் “அது எப்படி பாட்டி பறக்கும்? அதுக்கு ரெக்கை இல்லையே? என்று கேட்டால், “ கண்ணே! கதைக்கு கண்ணும் கிடையாது! காதும் கிடையாதுடி செல்லம்!! என்று நான் லாஜிக் பார்த்து கேட்கும் கேள்விக்கெல்லாம் எங்க ஆயா தாயார் அம்மாள் அவர்கள் அழகாக முற்றுபுள்ளி வைத்து விடுவார்கள். அதே கதைதான் இங்கேயும்!
நண்பர்களே!
நான் சொல்வது ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஐந்துகளில் (In the year 1985 and above and below and between ) நான் பிறந்து வளர்ந்த மண்ணான விழுப்புரம் மாவட்டம் மணலூர்ப் பேட்டையில் முதல் தொலைக்காட்சி பெட்டி வந்திறங்கியதே எனது தந்தையார் ஈராக்கில் இருந்து திரும்பிய காலத்தில் தான். காஸ்பர், மிக்கி மௌஸ், Snake on the monkey shadow, Super Man போன்ற திரைக் காவியங்களை வீட்டுக்கு வெளியில் வைத்து VCR ல் ஓட விட்டால் அதை அற்புதம்! ஆச்சரியமென வேடிக்கை பார்க்க, கண்டு ரசிக்க, ஒரு மிக பெரிய கூட்டமே திரண்டு வரும். அப்போது எங்கள் ஊரில் ஒரு தியேட்டர் இருந்தது “கணேஷ் அது எழுப்பும் குரலோசை விநாயகனே! வினை தீர்ப்பவனே! என்று என் தெரு வரை கேட்கும். இன்று அந்த தியேட்டர் இல்லை! எல்லாரும் உழைப்பில் மூழ்கிவிட்டனர். MONEY MINDED ஆகி விட்டனர்.
   அதன் பின்னர் மெதுமெதுவாக எங்கள் ஊரில் நிறைய தொலைக் காட்சி பேட்டிகள் அணிவகுப்பு துவங்கி விட்டது. அதில் திருமதி இந்திராகாந்தி அவர்களது இறுதி சடங்குகளை காண வசதியாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை உயரமான வீட்டின் மாடியில் பொறுத்தி விட்டனர். அன்னாரது இறப்புக்கு எங்கள் ஊரே சேர்ந்து துக்கம் கொண்டாடியது. ஊரில் கட்சிக்காரர்கள் என்றாலே வீட்டின் மீது கட்சிக் கொடி வண்ணமயமாக பட்டொளி வீசிப்  பறக்கும்! கட்சி ஊர்வலங்கள் என்றாலே ஊரில் லாரியின் முன்னால் ரதம் போன்று அலங்கரித்து சிறுவர்களை பொறி, வெல்லம் கொடுத்து உட்கார வைத்து விடுவார்கள். பின்னால் ஏறி ஒரு கும்பல் கட்சி பெயரை சொல்லி கத்தித் தீர்க்கும். எனக்கு பொறிதான் நண்பர்களே (ஹி! ஹி! ஹி!) வீட்டுக்கு தெரியாமல் ஏற்றி உக்கார வைத்து விட்டனர். இது குறித்து சொல்ல வந்த காரணம் எங்கள் ஊரில் ஒரு நிகழ்வை தெரிந்து கொள்ள அப்போதெல்லாம்  பெரும் துணையாக இருந்தது பத்திரிகைகள், மாத வார இதழ்கள்தான். எனவே காமிக்ஸ்கள் கொட்டிக்  கிடக்கும். அப்போது படித்து கொண்டிருந்த சீனியர் அண்ணன் ராதா கிருஷ்ணன் அவர்களிடமும், (மேஸ்திரியாக சென்னையில் தற்போது வாசம்) லக்ஷ்மி அக்காவிடமும், (குடும்பத்தலைவியாக உள்ளார்  ) அண்ணன் குணசேகரன் அவர்களிடமும் (எல்லை பாதுகாப்பு படையில் இருக்கிறார்! ஓவியம் வரைவதில் ஜித்தர்! வீட்டில் ஒரே சத்தியராஜ் ஓவியமாகவே இருக்கும்,அப்பா மருத்துவர்! குத்துச் சண்டை கற்றுக் கொடுத்ததில் என் குரு! காமிக்ஸ் பகிர்ந்ததில் என் நண்பன்! அண்ணா தொடர்பு கொள்ளுங்கள் ப்ளீஸ்!!) இருந்து நிறைய காமிக்ஸ்கள் அறிமுகம் ஆகின. என் சித்தப்பா திரு. அருள் சாமி  ( குன்னு சித்தப்பா என்று செல்லமாக அழைப்போம்) அவர்கள் ஒரு வாடகை நூல் நிலையம் நடத்தி வந்தார். அது மணலூர்ப் பேட்டை பேருந்து நிலையத்தின் மிக அருகில் அமைந்து இருந்தது. சிறு வயதில் அவ்வப்போது அங்கே நுழைவேன். 
தாத்தா திரு.அமிர்தன் அவர்களுடன் செல்லும்போது டீ கடையில் கிடைக்கும் சிறுவர்மலர்தான் அதிகமாக ஆரம்பத்தில் நான் படித்தது.அதில் வரும் உயிரை தேடி கதை இது எனக்கு மிக மிக மிக பிடித்தமான கதை!
கூடுதல் விவரம் இங்கே http://www.comicology.in/2009/03/survival-siruvar-malar-1988-i.html!

-எங்கள் ஊரில் லயன், முத்து காமிக்ஸ், ஜூனியர் லயன், மினி லயன், மேத்தா காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ் வாங்கிவரும் ரசிகர்கள் மூலமாகவும், ராணி காமிக்ஸ் கடைகளில் நேரடியாக விற்பனையின் மூலமும் கிடைத்து வந்தன.
-பொன்னி காமிக்ஸ் மதுரையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் எங்கள் மண்ணின் மைந்தர்களால் ஆராதிக்கப்பட்டவள்!!!
-நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு கிராமங்களில் வீடு வீடாக புகுந்து புறப்பட்ட காமிக்ஸ்களின் வரிசையில் இவளுக்கும் மிக பெரிய பங்குண்டு. 
-புத்தகங்களின் பொற்காலம் அது!
-தொலைக்காட்சி மக்களிடையே புகுமுன் காமிக் புத்தகங்களின் வீச்சு பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்த காலம் அது. 
-சீனக் கதைகள் ஒரு தலைமுறை ஹீரோ, அடுத்த தலை முறை ஹீரோ என்று அடுத்தடுத்த கதைகளாக வெளியிடப்பட்டது. அந்த கதை படித்த நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும். ப்ளீஸ்!   
-பொன்னியில் என்னை அதிகம் கவர்ந்தவர் மாயாவிதான்!! அதை தவிர ஒரு விஞ்ஞானி;அவரது கிறுக்கு கண்டுபிடிப்புகள்;அவை ஏற்படுத்தும் கலாட்டாக்கள்; அதை அடக்க ஒரு ஹீரோ என்ற ரீதியில் நிறைய கதைகள் வெளியாகின. அவை அந்த காலத்தில் எனக்கு மிக பிடித்த கதைகள்!!
-மிக மிக மிக கவனமாக படிக்க வேண்டிய ஒரு செய்தி
அன்பு நண்பர்களே! இரும்புக்கை மாயாவி படித்து விட்டு அதை சொல்லி நான் செய்த கலாட்டாக்களால், என் அராஜகம் அத்து மீறுவதை பொறுத்து கொள்ள முடியாத என் மாமாக்கள் திரு.பிரபு (தற்போது இங்கிலாந்தில்)மற்றும் திரு.சாலமோன் (தற்போது திருக்கோவிலூரில்) ஆகியோர் என்னைப் பிடித்து ஒரு ஈசி சேரில் கையையும், காலையும் கட்டி வைத்து, ஒயரை கனெக்ட் செய்து, பிளக்கில் செருகி விடுவேன் என்று அச்சுறுத்த நான் அலறிக் கத்த எனது ஆயா வந்து காப்பாற்றி, என் மாமாக்களை திட்ட, ஒரு குட்டி கலாட்டாவே அரங்கேறியது. அன்று மட்டும் மின்சாரம் பாய்ந்திருந்தால் நான் மாயாவியாக, பேயாவியாக  இன்று அலைந்து காமிக் தேடும் ஆவியாக திரிந்து கொண்டிருந்திருப்பேன். நிற்க! அவர்கள் இருவருமே காமிக்ஸ் ரசிகர்களே! ஆனால் என் சிறுவயது குறும்பு அப்படிப்பட்டது!! ஹி! ஹி! ஹி!   
     ஒரு கட்டத்தில் வெறுப்பான என் பாட்டி, அத்தைகள் ஓட ஓட விரட்டி பிடித்து, என்  உச்சி மண்டையில், தோல் செருப்பு துண்டை, நெருப்புக் காட்டி சூடு வைத்தாவது பிடித்த பேய் இறங்கும் என்று சூடு வைத்தனர். ஹெஹெஹெஹ் ... சரி சிரித்து கொண்டே கதைக்கு வரலாமா? 
இது அக்மார்க் உள்நாட்டு தயாரிப்பு நண்பர்களே! ஆதலால் கதை களமும் வேறு மாதிரியானது. நல்ல உள்ளம் கொண்ட மனிதரான மாயாவி தனது கரத்தை இழந்து ஒரு விஞ்ஞானியை காப்பாற்றுவார். அதில் அவர் கை துண்டாகி விடும். இதனை கண்காணிக்கும் வேற்று கிரக ஆசாமிகள் அவருக்கு செயற்கை கை பொருத்தி விடுவார்கள். அதிலிருந்து அதிரடி ஆரம்பம்!   
சங்கம் வளர்த்த மதுரையம்பதியில் மலர்ந்த காவியம் சிலப்பதிகாரம் மட்டுமல்ல தோழர்களே. வெளி நாட்டு கதையின் பாதிப்பில் உள்நாட்டு ராஜாக்களின் கைகளில் மிளிர்ந்த அருமையான வெளியீடான பொன்னி காமிக்ஸ் பெருமையுடன் வழங்கும் "ஏர்போர்ட்டில் மாயாவி!!"
































 இந்த கதைக்கு நன்றிகள் அனைத்தும் பொன்னி காமிக்ஸ் நிறுவனத்தினருக்கே சேரும்! அவர்கள் ஆட்சேபிக்கும் பட்சத்தில் கதை சுருக்கி சொல்லப்படும் என்று தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
அடுத்த காமிக்ஸ் பற்றி அட்டகாசமான விளம்பரம் மலர்கிறது பாருங்கள்! வருமா இப்படி ஒரு அட்டகாசமான சிந்தனை??
 முந்தைய இதழ்கள் கிடைக்கும் வண்ணம் அழகாக இருப்பு பட்டியலை பின் அட்டையை அலங்கரிக்க செய்துள்ளனர்!

மீண்டும் மீள, மிளிர வேண்டும் காமிக்ஸ் கலை!!! என்ற என் எண்ணங்களை தெரிவித்து கொண்டு விடை பெறுகிறேன். வர்ட்டா? என்னிக்காவது கையில மாட்டட்டும் என்று கொலை வெறியில் நீங்கள் ஆழு முன் பாய்!! பாய்!! சீ யு!!! 
இது வரை விடாமல் படித்து அழுவாச்சியில் இருக்கும் உங்களுக்கு நிறைந்த வாழ்த்துக்களுடன் --ஜானி 
பின் குறிப்பு! விரைவில் சந்திப்போம்!! மறுபடி ஒரு பொன்னி காமிக்ஸ் உடன்! ஹீ! ஹீ! ஹீ!

பாட்டன் காட்டிய பாதை-சிறு சித்திர அறிவுரைக் கதை

கஞ்சனாக துவங்கினாலும் முன்னோரின் அறிவுரையைக் கேட்டுத் திருந்திக்கிட்ட நண்பனைப் போல நாமும் திருத்தத்துடன் வாழ்க்கையை வாழப் பழகிக்கணும் கண்ணுங...