வியாழன், 14 ஜூலை, 2022

இதைக் கேளேன் கண்மணி_ஜானி சின்னப்பன்

 ஏய் பெண்ணெனும் மாயக் கன்னியே..

ஆரவாரமில்லாப் பேரழகியே..

ஆர்க்கும் இல்லாத அக்கறை அடியவனுக்கு ஏனடி உன்மேல்..

நீறுபூத்த நெருப்பாய் நெஞ்சம் கதகதப்பை உணர்வது உன் அண்மை சாத்தியப்படாத நினைவுகளில்தான்..


அண்டி வந்தால் எம்பிப் பறக்கும் சின்னஞ்சிறு தும்பி நீ..

பின்தொடர்வதிலே

சித்தத்தில் பித்தனென நான்.. 


காலங்கள் உருண்டோடட்டும்..

கல்லறைக்குள்ளும் அடங்காத

ஆன்ம ஈர்ப்பை எப்போது எங்கே எப்படி விதை போட்டு செடி வளர்த்து ஆலமரமாய் ஆக்கினேன் நான்? 

யோசித்ததில் தலைவலியே மிச்சமாய்.. 

என் எஞ்சிய எண்ணங்களின் எச்சத்தில் மனக்கூட்டுக்குள் அடைந்து கொள்கிறேன் சிறு பறவை போல்..

#விஜயாமைந்தன் #ஜானிசின்னப்பன் #கவியதிகாரம் #ActionChapter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...