ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!

                 இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்பகத்தின் முதல் வெளியீட்டைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு மற்றும் கதைச் சுருக்கம்.. 

          நிற்க.. திருவண்ணாமலையில் புத்தகத்திருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.. இம்முறை வழக்கமான காந்தி நகர் பைபாஸில் இல்லாமல் நகராட்சி ஈசானிய மைதானத்தில் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதில் உணவுத் திருவிழா இடம்பெறவில்லை என்கிறார்கள். ஓரிரு நாட்களில் மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்படலாம். தகவல் தெரிவிக்கிறேன்..  

இனி என்டர் தி பேண்டம் உங்கள் பார்வைக்கு.. 

மாண்ட்ரேக் புகழ் எழுத்தாளர் லீ பால்க்கின் தி பேண்டம்  என்றே பிரபலப்படுத்துவதில் இருந்து மாண்ட்ரேக் எத்தனை புகழ்பெற்ற பாத்திரமாக ஆஸ்திரேலியா வரை நிலைத்திருந்திருக்கிறார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். சிட்னியில் இருந்து இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதும் ஆறு ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதன் ஓவியர் குறித்த குறிப்புகள் இல்லை. ஆனாலும் இந்த வகை ஓவியங்களை வரைந்தவர் யார் என்பதை போகிற போக்கில் அறிந்து கொள்வோம்.. 

வேதாள மாயாத்மாவின் தோற்றம் மற்றும் தொடர்ச்சி போன்றவை ஒவ்வொரு கதையிலுமே சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.. இந்த கதையிலும் துவக்கம் அதை வைத்துத்தான்.. 
இனி கதையின் சுவாரஸ்யமான அம்சங்கள்.. 
*கதை ஆரம்பிப்பதே மன்னார் வளைகுடாவில்... 
*அதில் வரும் இராணுவ வீரர் தான் மெட்ராஸில் இருந்து வருவதாக தெரிவிக்கிறார். 
*அரேபிய உடையில் வேதாளர் பாலைவெளியில் நிகழ்த்தும் சாகசம் இந்தக் கதை. 
*சுவாரஸ்யமான வசனங்கள் நிறையவே இருக்கின்றன..அதில் ஒன்று அமெரிக்காவின் மிஸ் அமெரிக்கா நீங்கள்தான்..இல்லையேல் தேர்வுக்குழு தவறு இழைத்திருக்கிறார்கள் என்று ஒரு வசனம் வரும்.. 
கப்பலில் பிரயாணித்து கொண்டிருக்கும் டயானா பால்மரிடம் இராணுவ வீரர் லெப்டினென்ட் பைரோன் பழகுகிறார்.. மோரிஸ் டவுனில் இருந்து புறப்பட்டதாக கூறும் டயானா தனக்குத் திருமணமாகி விட்டதையும் தெரிவித்து வைக்கிறார்.. இராணுவத்தினை சில தினங்களுக்கு முன்பாக மாபெரும் வனவாசிகள் சுற்றி வளைத்துக் கொண்டுவிட்டதாகவும் படுகொலை அரங்கேறியிருக்கும் நிலையில் அங்கே ஓர் மாவீரர் தோன்றி அவர்களை காப்பாற்றியதாகவும் அதனை தான் மெட்ராஸில் வான் தந்தியில் கேட்க நேர்ந்ததாகவும் பைரோன் தெரிவிக்கிறார். அவருக்கு விருதே தந்திருக்கலாம் ஆனால் மாயமாகி விட்டார் என்றதும் டயானாவுக்கு அவர் மாயாவியாரைத்தான் சொல்கிறார் என்பது புரிகிறது.. 
                      அவர்கள் பயணிக்கும் கப்பல் ஒரு புயலில் சிக்குண்டு கவிழ்ந்து விடுகிறது.. அதில் இருந்து தப்பும் பைரோன் ஒரு சில வாரங்களில் பெங்காலி வனத்துக்குள் அரும்பாடுபட்டு மாயாவியாரை அவரது மண்டையோட்டுக் குகைக்கே சென்று சந்தித்து தன்னுடன் டயானாவும் சிலரும் தப்பிக் கரை சேர்ந்ததாகவும் அரேபிய அடிமை விற்பனையாளர்களிடம் டயானா சிக்குண்டு தான் மட்டும் தப்பிக்க உதவியதாகவும் தெரிவிக்கிறார். வேதாளர் தனி விமானம் ஏற்பாடு செய்து கொண்டு பைரோன் துணையுடன் வனத்தில் இருந்து பாலைவனத்துக்கு இடம்பெயர்கிறார்.. அங்கே தேடல் துவங்குகிறது.. 
               செய்தி சேகரிக்க பணம் கொடுப்பது என்பது மிகவும் ரிஸ்க் நிறைந்தது.. உங்களிடம் இன்னும் அதிகம் பணம் இருக்கலாம் என்பதால் நீங்கள் கொல்லப்படவும் வாய்ப்பிருக்கிறது.. தங்க முட்டையிடும் வாத்து கதைதான்.. இங்கே மாயாவி தங்கத்தையே நீட்டுகிறார்.. அவரை பாலைப் பரப்பிலேயே புதைத்து விடும் வேகம் வெறியர்களுக்கு எழுவது உலக இயல்புதானே? கடைசி ஆசையாக கொஞ்சம் அருந்த நீர் கேட்கிறார்.. நீரை வாங்கி நெருப்பை அணைத்து விடுகிறார்.. காரிருள் அங்கே சூழ்கிறது.. 
வாங்கிக் கொள்ளுங்கள் வேதாள முத்திரை அற்பர்களே..!

அது வேதாளரின் முத்திரை என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டு அதிர்ந்து போகின்றனர் கயவர்.. பாலைவெளியில் டயானா அடைபட்டிருந்த கூடாரத்துக்கு அருகில் நின்ற காவலர்கள் வண்ணவண்ண வெளிச்சங்கள் திடீரென எழும்புவதைக் கண்டு திகைத்து அது என்ன என்று தெரிந்து கொள்ள கணநேரம் கவனமின்றி செல்கின்றனர். அந்த இடைவெளியில் டயானாவின் குகையில் புகுந்து விடுகிறார் வேதாளர். இருவரும் சந்தித்த மகிழ்ச்சி கலைவதற்குள் எதிரிகளிடம் அகப்பட்டு விடுகிறார் மாயாவி.. கடத்தல் கும்பல் தலைவன் இது வேதாளரேதான் என்பதை அறிந்து.. 
"சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கிறீர்.. இப்போது எதற்காக வந்தீர்? "என்று கேட்க.. 
என் குடையை மறந்து வைத்து விட்டேன்  என்கிறார் வேதாளர்...  
இன்னும் எத்தனை காலம்தான் இந்த அடிமை வியாபாரத் தொழில் என்று வினவுகிறார். 
நான் தலைவனாக இருக்கும்வரை இப்படித்தான் என்று கூறி அவரை ஒரு எறும்புப் புற்றுக்குள் திணித்து சித்திரவதைக்கு விட்டு விட்டு அந்த கயவர் கும்பல் புறப்பட்டு விடுகிறது.. 
அவரை மீட்கப் போராடும் டெவில் நரிக் கும்பலால் படாதபாடுபட்டு தன் எஜமானரைக் காப்பாற்றும் முயற்சியில் தோல்வியைத் தழுவும் வேளையில் ஒரு புதிரான ஆசாமி அவரை மீட்டு நரிகள் பூட்டியதொரு இழுவை வாகனத்தில் தன் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்று குணமாக்குகிறார்.. அவர் பாலைவெளித் துறவி என்று மக்களால் அழைக்கப்படுபவர் என்று பின்னர் வேதாளர் தெரிந்து கொள்கிறார். அவரது முகத்தைக் கண்ட முதல் மனிதர் என்று வேதாளர் துறவியைக் கூறுகிறார். இரு அபூர்வமான பிறவிகள் ஒருவரையொருவர் சந்திக்கின்றனர். எறும்புகளின் விஷமும், பாலை வெயிலும் வேதாளரை பலவீனமாக்கி இருக்கின்றன.. துறவி நரிகளை வளர்ப்பு மிருகங்களாக மாற்றி வைத்திருக்கிறார். ஒரு பெண்ணுக்காகவா இத்தனை தூரம் சிரமப்பட்டிருக்கிறாய் என்று வெறுப்புடன் கூறுகிறார் துறவி.. அவரது வாழ்க்கை வரலாறு சித்திரங்களாக விரிகிறது.. 
மிகவும் அழகான பெண் ஒருத்தியை காதலித்தவர் ஒரு கட்டத்தில் பிரிய நேர்கிறது. அவள் பின்னர் குழந்தை குட்டி என்று பெற்றுக் கொண்டு குடும்பத்தில் ஐக்கியமாகி விட துறவிக்கு வாழ்க்கை வெறுத்துப் போய் விடுகிறது.. ஆனால் என்னுடைய டயானா முற்றிலும் வேறுபட்டவள் என்கிறார் வேதாளர்.. 
                 இது இப்படி இருக்க சுல்தான் ஒருவரிடம் அடிமை விற்பன்னர் டயானாவை விற்க முயற்சிக்க காத்திருக்கிறது ஆன்டி க்ளைமாக்ஸ்.. சுல்தான் அமெரிக்கப் படைகளை நமக்கெதிராகத் திருப்பி விட்டு விடுவாய் என்று கடிந்து கொண்டு அடிமை வியாபாரியை ஓட விடுகிறார். டயானாவும் வேதாளரும் எப்படி சேர்ந்தார்கள்? அடிமை வியாபாரியை வேதாளர் முடக்கிப் போட்டு வியாபாரத்தை நிறுத்தினாரா என்பது விலாவாரியாக முப்பத்து மூன்று பக்கங்களில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.. பதிவு நீளமாக சென்றால் வாசிப்பதற்கு சிரமம் ஏற்படலாம் என்பதால் இத்துடன் இந்த கதையை முடித்து வைக்கிறேன்.. என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.. 
விரைவில்...


வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

No.1048_The Ghost on flight 302 _ The Phantom_கதை சுருக்கம்

 

நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போவது வேதாளரின் கதையான விமானத்தில் ஒரு பேய் என்கிற சித்திரக்கதை.. அதன் வெளியீட்டு விவரங்கள் கீழே.. 

கதை_நார்மன் வொர்க்கர்
 யார்இந்த நார்மன் வொர்க்கர்? இதோ அவரது புகைப்படம்.. 

இந்த வேதாளர் கதையை எழுதிய நார்மன் வொர்க்கர் யாரென தெரியுமா? இவர் இந்தியாவில் இராணுவ வீரராக திகழ்ந்தவர்.. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த சமயம் இந்தியாவில் போராடிய வீரர் இவர். 
இதோ அவரைப்பற்றிய குறிப்புகள்.. 

நார்மன் வொர்க்கர் (1927 - 5 பிப்ரவரி 2005) ஒரு பிரிட்டிஷ் காமிக் புத்தக எழுத்தாளர் ஆவார், லீ பால்க்கின் தி பாண்டம் இடம்பெறும் காமிக் புத்தகங்களில் அவர் செய்த பணிக்காக மிகவும் பிரபலமானவர் .

நார்மன் 1927 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கென்ட்டில் பிறந்தார். அவருக்கு 17 வயதாக இருந்தபோது, ​​அவர் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவில் போராடினார். அதன் பிறகு, 1950 களில் அது திவாலாகும் வரை தனது தந்தையின் தளபாடங்கள் தொழிற்சாலையில் பணியாற்றினார்.

நார்மன் ஒரு காமிக் புத்தக எழுத்தாளராக முடியும் என்று பரிந்துரைத்தவர் அவரது உறவினர், மாடஸ்டி பிளேஸ் - படைப்பாளர் பீட்டர் ஓ'டோனல் ஆவார். இது ஸ்வீடிஷ் காமிக் புத்தக நிறுவனமான செமிக்கிற்காக தி செயிண்ட் மற்றும் பஃபலோ பில் இடம்பெறும் கதைகளை நார்மன் எழுத வழிவகுத்தது .

செமிக் பத்திரிகையில் தான் நார்மன் தி பாண்டம் என்ற புனைப்பெயருடன் கதைகள் எழுதத் தொடங்கினார் . முதலில், அவர் "ஜே. புல்" என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தினார், ஆனால் அவர் விரைவாக தனது உண்மையான பெயருடன் கதைகளில் கையெழுத்திடத் தொடங்கினார்.

ஸ்காண்டிநேவிய பாண்டம் தயாரிப்பின் மிகவும் பிரபலமான எழுத்தாளர் நார்மன் என்று வாதிடலாம்; அவர் 2004 இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு 127 கதைகளை எழுதி முடித்தார். வரலாற்று மீதான அவரது அன்பின் விளைவாக, பிற நூற்றாண்டுகளின் முந்தைய பாண்டம்கள் பலவற்றிற்கு பின்னணிக் கதைகளை வழங்குவதற்கு நார்மன் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் வேதாளர் கதை மாத்திரமல்லாது வார் பிக்சர் லைப்ரரி போன்ற அதிரடிக்கதைகளையும் இறங்கி அடித்திருக்கிறார். மிகவும் சிறந்த கதைகளை வாசகர்களுக்கு கொடுத்து அசத்தியவர். 

இது தவிர fantomen, FREW பதிப்பகத்தின் பிற கதைகளிலும் தன் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் இவராவார். 
சரி ஓவியங்களைத் தீட்டியவரைக் கவனிப்போமா? ஓவியங்கள் ஜோஸ் கேசனோவாஸ் சீனியரின் கைவண்ணம். இவரும் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரரேயாவார்.  
அவரைப் பற்றிய குறிப்புகள் இதோ. 
1934 இல் பார்சிலோனாவில் பிறந்த ஜோஸ் மரியா காஸநோவாஸ் மாக்ரி, இராணுவத்தில் பணியாற்றிய பிறகு 1957 இல் ஸ்பானிஷ் காமிக்ஸிற்காக வரையத் தொடங்கினார். அவரது ஆரம்பகால படைப்புகளில் ஃபியூச்சுரோவிற்கான "எல் பெக்வெனோ முண்டோ" (1957) மற்றும் சூப்பர்-ஸ்ட்ராங்கிற்கான "சூப்பர்ஃபுர்டே" (1958) ஆகியவை அடங்கும், இவை இரண்டும் ஃபெர்மாவால் வெளியிடப்பட்டன. 1961 ஆம் ஆண்டு ஆர். மார்ட்டின் (விக்டர் மோரா) எழுதிய "எல் ஜபாடோ"வின் சாகசங்களை அவர் 1962 ஆம் ஆண்டு முழுமையாகப் பொறுப்பேற்கத் தொடங்கினார்.

அவரது தொழில் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் கூட அவரது மிகவும் விரிவான, சிக்கலான பாணி வெளிப்பட்டு வந்தது. மேலும் ஹிஸ்டோரியாஸ் செலேசியன் (ஜூல்ஸ் வெர்னின் "லாஸ் இந்தியாஸ் நெக்ராஸ்", 1966) மற்றும் ஜோயாஸ் லிட்டராரியாஸ் ஜூவனைல்ஸ் ("அன் டெஸ்குப்ரிமியென்டோ ப்ரோடிகியோசோ" (1978) மற்றும் "எல் பெரோ டி லாஸ் பாஸ்கர்வில்ஸ்" (1982) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள்) பக்கங்களில் உள்ள கிளாசிக் கதைகளின் தழுவல்களில் இது சிறப்பாகக் காணப்பட்டது. இந்தப் படைப்புகளில் சில ஸ்பெயினுக்கு வெளியே உள்ள சந்தைகளுக்காக உருவாக்கப்பட்டன, மேலும் காஸநோவாஸ் ஸ்பெயினின் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்றான "எல் கேபிடன் ட்ரூனோ"வை ஜெர்மன் வெளியீட்டிற்காக வரைந்தார். இதனால், காஸநோவாஸ் உண்மையில் தனக்குக் கிடைக்கக்கூடிய நற்பெயரைப் பெறவில்லை, ஏனெனில் அவரது படைப்புகள் பல நாடுகளில் காணப்பட்டன, ஆனால் பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே. அவரது துண்டுகளைத் தேடும் ரசிகர்கள் ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி, பின்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகளில் தேட வேண்டும். டச்சு வார இதழான டினாவிற்காக அவர் 1960களின் பிற்பகுதியில் "பொலியானா"வின் சாகசங்களை வரைந்தார்.

 இங்கிலாந்தில், 1970களின் பிற்பகுதியில் கிரெடிட்கள் வெளிவரத் தொடங்கியபோது, ​​2000AD மற்றும் ஸ்டார்லார்டின் பக்கங்கள் மூலம் அவரது பெயர் அறியப்பட்டது. அவர் உண்மையில் 1962 ஆம் ஆண்டிலேயே அநாமதேயமாக பங்களிக்கத் தொடங்கினார், ட்ரூ லைஃப் , லவ் ஸ்டோரி மற்றும் பல்வேறு காதல் நூலகங்களுக்கான கலைப்படைப்புகளை உருவாக்கினார்.தசாப்தத்தின் இறுதி வரை ஸ்டார் லவ் . 1970கள் மற்றும் 1980களின் முற்பகுதி முழுவதும் அவரது படைப்புகள் ஜூன் & ஸ்கூல்ஃப்ரெண்ட் , டாமி , சாண்டி , ஜின்டி , லிண்டி , பென்னி , எம்மா மற்றும் மாண்டி ஆகியவற்றில் வெளிவந்தன . அவர் எப்போதாவது மட்டுமே ஜட்ஜ் ட்ரெட்டை வரைந்தாலும், 1980களின் முற்பகுதியில் ஜட்ஜ் ட்ரெட் வருடாந்திரத்தின் பல்வேறு பதிப்புகளுக்காக அவர் வரைந்த மெகா-சிட்டி ஒன்னின் மற்றொரு குடிமகனான மேக்ஸ் நார்மலுடன் அவர் தொடர்புடையார் . ஐரோப்பாவின் பிற இடங்களில் பரபரப்பாக இருந்ததால், இங்கு அவரது பெரும்பாலான படைப்புகள் ஒற்றை துண்டுகளாக இருந்தன, பெரும்பாலும் 2000AD ("தார்க்ஸ் ஃபியூச்சர் ஷாக்ஸ்" மற்றும் "டைம் ட்விஸ்டர்ஸ்", சிலவற்றை ஆலன் மூர் மற்றும் பீட் மில்லிகன் எழுதியது), ஸ்க்ரீம்!! மற்றும் ஈகிள் . அவர் ஸ்டார்ப்ளேசருக்காக அரை டஜன் நீண்ட கதைகளை வரைந்தார் , அவற்றில் மிகல் கெய்ன் சாகசமான "சூப்பர்காப்" (1988). தனது மகனுடன் (ஜோஸ் காஸநோவாஸ் என்றும் அழைக்கப்படுகிறார்), அவர் 1991 இல் "சாம் ஸ்லேட் ரிட்டர்ன்ஸ்" வரைந்தார், மேலும் 1993 வரை வழக்கமான ரோபோ-ஹண்டர் கலைஞர்களில் ஒருவராக இருந்தார். 2004-05 ஆம் ஆண்டில் அவரது படைப்புகள் ஒரு பேய் வேட்டைக்காரனைப் பற்றிய ஜெர்மன் தொடரான ​​கீஸ்டர்ஜாகர் ஜான் சின்க்ளேரில் காணப்படுகின்றன மேலே கண்ட எழுத்தாளர் வொர்க்கருடன் இணைந்து இந்த ஒரு கதையில்தான் இயங்கி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.. 
ஒகே கதைக்கு வருவோமா? 


தி கோஸ்ட் ஆன் ப்ளைட் ௩௦௨(302) 
வேதாளர் பற்றிய குறிப்புகளுடன் கதை துவக்கம் பெறுகிறது.. வேதாளர் முதியவர் மோஸ் சந்திப்பு நிகழ்கிறது.   
 நாம் நடக்கும் சிலை மர்மம் வாசித்திருக்கிறோம் இல்லையா? ஆளரவமற்ற தீவில் எங்கோ பார்த்துக் கொண்டு நிற்கும் சில சிலைகள்.. கற்பனை சிறகுகளில் ஏறி இந்த கதைக்குள் பறந்து வந்து அவை அமைதியாக அமர்ந்திருப்பது பெங்கல்லா வனப்பகுதி மலையில்.. பார்வையாளர்கள், கவனிப்பவர்கள்  என்று மோஸ் அழைக்கிறார் அவர்களை.  வேதாளர் அவர்களை வெறும் கற்சிலைகளாக இருக்கலாம் என்று எண்ணுகிறார். ஒரு எரிமலை தன் சாம்பலை அந்த பகுதி எங்கிலும் வீசி வானைக் கருமையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அது எந்நேரமும் வெடித்து விடும் என்று ஒரு சந்தேகம். அந்த மலையை ஆராய ஏறிப் போகிறார் வேதாளர். உடன் ஹீரோ, டெவில் வர டெவிலை மட்டும் மலையில் அழைத்துக் கொண்டு ஏறி சிலைகள் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்கிறார் வேதாளர். 
வானில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானம் அதே நேரத்தில் செயலிழந்து கீழே விழுவது போன்று வந்து கடைசி வினாடியில் மேலே ஏறிப் பறக்க அந்த அதிர்வில் தரையில் உருள்கிறார் வேதாளர். அப்போது அவருக்கு கனவா நிஜமா என்கிற நிலையில் ஒரு உருவம் ஐன்ஸ்டீன் போன்ற தோற்றத்தில் வந்து பெங்காலி முழுவதுமே அழிந்து போய்விட்டது அதற்கு தான் கொண்டு வந்த ஒரு கிருமிதான் காரணம் என்று கூறுகிறது. வேதாளர் மயக்கத்தில் இருக்கும்போதே ஆட்கள், செடி கொடிகள், பல்லுயிர்கள் அனைத்துக்கும் பேராபத்து நேர்ந்து விட்டிருக்கிறது.. 
அதற்குக் காரணமான நச்சு தான் சுமந்து வந்த விமானத்தில் ஒரு கைப்பெட்டியில் வைத்திருந்ததாகவும், விமானக்கடத்தல் ஒன்று இரண்டு கன்னியாஸ்திரிகள் வேடத்தில் வந்த கயவர்களால் நிகழ்ந்ததாகவும் அவர் வேதாளரிடம் தெரிவித்து மறைகிறார். வேதாளர் மண்டை ஓட்டுக் குகைக்கு விரைகிறார். வழியெங்கிலும் மரணம் தன் முத்திரையைப் பதித்திருப்பதைக் காண்கிறார். அங்கே குரான் தான் இறக்கும் முன் ஆக்சல் நடத்தி வரும் மருத்துவமனைக்கு சென்று அவரது மனைவி டயானாவை சந்திக்கக் கூறுகிறார். பின்னர் டாக்டர் ஆக்சலின் மருத்துவமனையிலேயே மயங்கி விழுகிறார் வேதாளர். கண்விழித்தால் தான் காண்பது அனைத்தும் பொய் என்பதும் விமானம் புறப்படும் தினத்துக்கு இரு தினங்கள் முன்னால் தான் இருப்பதையும் காண்கிறார். அவரை நம்ப மறுக்கும் டயானா, டாக்டர் ஆக்சல் வேதாளருக்கு மயக்கஊசி போட்டு படுக்க வைத்து விடுகிறார்கள்.. சும்மா விடுவாரா வேதாளர்..? 


தன் வனக்காவல் படை தலைமையை உஷாராக்குகிறார். ஆனாலும் சம்பவங்கள் தொடர்கின்றன... தானே முன் நின்று இதனை முடிக்க வேண்டிய நிலைமை என்பதைத் தெளிவாக உணரும் வேதாளர் டெவில் துணையுடன் மருத்துவமனையில் இருந்து தப்பி விட அவரை முடக்கிப் போட அவரது மனைவி டயானாவும், டாக்டர் ஆக்சலும் முயற்சிப்பதுதான் விதி.. ஆனால் நம்மவர் காட்டாறாயிற்றே.. எத்தனை தடைகள் எதிரே நின்றாலும் மோதித் தள்ளிக் கொண்டு சமுத்திரத்தை நோக்கிப் பாயும் நதி போன்று தன் பயணத்தை அதிரடியாகக் கொண்டு போகிறார் வேதாளர்.. விமானம் புறப்படுவதையும் அதில் விஞ்ஞானி ஏறுவதையும் அவரால் தடுத்து நிறுத்த முடியாமல் போனாலும் இராணுவ ஜெட் எடுத்துக் கொண்டு தானே பறந்து சென்று மிரட்டி கீழே எப்படியோ இறக்கி விடுகிறார் மாயாவி (எ) வேதாள மாயாத்மா... 




மாரடைப்பில் விஞ்ஞானி இறந்து விட, கடத்தல்காரர்கள் மடக்கப்பட, பேராபத்து ஏற்படுத்தும் பெட்டியுடன் ஜெட்டில் சென்று எரிமலைக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் வீசி பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார் மாயாத்மா.. ஆம் இதுவும் அவருக்கான சிறப்புப் பெயர்தான்.. ஜனாதிபதி லுவாகா எல்லாவற்றையும் மூடி மறைத்து விடுகிறார். ஜெட் மட்டுமே அவருக்கு நட்டம்.. எரிபொருள் இல்லாததால் கடலுக்குள் இறக்கி விடுகிறார் வேதாளர்.. 
                        முதியவர் மோஸ் கூறியவாறே நமக்கும் மேலே நம்மை அக்கறையாகக் காப்பாற்றுவதற்காக கவனித்துக் கொண்டே இருக்கிறவர்களும் உண்டு என்பது இந்த கதையின் மூலமாக மாயாவிக்கு தெரியவருகிறது.. 
                 இதுவும் கிங் பியூச்சர் சிண்டிகேட்டின் காப்பிரைட் பெற்று வெளியிடப்பட்ட கதைதான். ஆஸ்திரேலிய FREW வெளியீடு.. 30+ பக்கங்களில் அதிரடியும், பேன்டசியும்  கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.. வேதாளர் வாழ்க.. நிறைவு.. 
என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி.. 

சித்திரக் கதைகள் திருவிழா -விருது நகர் மாவட்டம்

 

விழா ஏற்பாட்டாளர்களுக்கும் பங்கேற்பவர்களுக்கும் நம் சார்பில் வாழ்த்துக்கள்..

வியாழன், 13 பிப்ரவரி, 2025

ஒற்றைக் கண் மர்மம்..வண்ணத்தில்.. அறிவிப்பு

 ஆம் நண்பர்களே.. வருக.. வணக்கங்கள்.. லயன் காமிக்ஸ் வாட்ஸ் அப் சேனலில் வந்த எடிட்டர் திரு.விஜயன் அவர்களது அதிகாரப் பூர்வமான அறிவிப்பு.. மிக்க மகிழ்ச்சியானதொரு தகவல் இது முழு வண்ணத்தில் கிடைக்கப் போகிறது என்பதுதான். இந்த கதையானது முத்து காமிக்ஸ் வாரமலரில் தொடராக வெளியிடப்பட்டு மிகவும் சிறந்த கதையாக நிலைத்து நிற்கும் ஒரு கதையாகும்.. பதிப்பாசிரியர் திரு.முல்லை தங்கராசனை முன்னிறுத்திப் பயணித்த முத்து காமிக்ஸ் வாரமலரில் இதுவரையிலும் இருபத்திரண்டு மலர்கள் பூத்துக் குலுங்கி சித்திரக்கதை உலகினை சுவாரசியப்படுத்தியிருக்கின்றன.. இன்று ஓர் அபூர்வ இதழ் என்று பதுங்கிக் கொண்டு விட்டாலும் அவற்றில் வெளியான ஆகச்சிறந்த சித்திரக்கதைத் தொடர்களை முழுமையான ஒரு புத்தகமாகக் கொண்டு வருவது பாராட்டுக்குரிய ஒன்று.. 

*14.11.1982 அன்று வெளியிடப்பட்ட முதல் முத்து காமிக்ஸ் வாரமலரில் இடம்பெற்று அதுவும் முகப்புப் பக்கமாக அமைக்கப்பட்டது இந்த கதையின் சிறப்பம்சம்.. முத்து காமிக்ஸ் வாரமலர் தொடர்ந்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று பின்னர் நிறுத்தப்பட்டது.. 

*அறுபது காசுகளில் வெளியிடப்பட்ட பத்திரிகை டேப்லாய்ட் வடிவில் தினசரியை இரண்டாக மடித்தால் எத்தனை பெரியதாக இருக்குமோ அத்தனை பெரியதாக பெரிய சைஸ் பக்கங்களில் வண்ணங்கள் அன்றே மிரள வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.. 

*21 வாரங்கள் இந்த தொடர் தொடர்ச்சியாக ஓரிரு பக்கங்கள் என்று  வெளியிடப்பட்டது. முகப்பாக வரும் பக்கம் வண்ணத்திலும் மற்ற பக்கங்கள் கருப்பு வெள்ளையிலும் என்று அமைக்கப்பட்டிருந்தன.



*05.02.1984 அன்றுடன் தனது பயணத்தை இந்த கதை நிறைவு செய்தது.. 

*கடைசியாக வெளியானபோது அந்த முத்து காமிக்ஸ் வாரமலரின் விலை எண்பது காசுகள். 

 *அதன் அடுத்த இதழுடன் இருபத்தி இரண்டு என்கிற எண்ணிக்கையுடன் இந்த வாரமலர் தன் பயணத்தை நிறைவு செய்தது. 

*கடைசி இதழ் வெளியிடப்பட்டபோது அதில் துவங்கிய புதிய கதை என்ன தெரியுமா? 

*மாயாவிக்கோர் மாயாவி.. 

*19.02.1984 அன்றுடன் இந்த மாபெரும் பயணம் நிறைவானது. 

*அப்படியே தொக்கலில் விடப்பட்ட கதைகள் பட்டியலும் மிகவும் முக்கியம் என்று கருதுபவர்களுக்காக இதோ.. 

*வன ராஜா_(ராணி காமிக்ஸின் மன்னர் பீமா சாகசம்.) ஐந்தாவது பாகம்.. 

*நெக்லஸ் கடத்தல்_இன்ஸ்பெக்டர் ஈகிள் சாகசத்தின் மூன்றாவது பாகம். 

*தங்கமயில் தேவதை என்னும் நாவல் வடிவின் 14வது பாகம்.

*மாவீரன் ப்ரூஸ்லீ_சதி வலையில் ப்ரூஸ் லீ.._12வது பாகம்.(ராணி காமிக்ஸின் திசை மாறிய கப்பல்) 

நிறைவான கதைகள் என்றால் கபீஷ் மற்றும் சிறு கதைகள் ஓரிரண்டைக் குறிப்பிடலாம்.. 

ஒற்றைக் கண் மர்மம் கதை: 
ஊரை விட்டு ஒதுங்கி இருக்கும் ஒரு கலங்கரை விளக்கம்.. அருகில் ஒரு வெளிச்சம் அடர் இருளைக் கிழித்துக் கொண்டு வானில் இருந்து கீழே இறங்கி வருகிறது.. சைக்கிள் ஓட்டும் இருவர் ஏதோ சலசலப்பு கேட்கவே கலங்கரை விளக்கத்தின் கதவினை திறந்து தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

                   அதே கடற்கரையோர பகுதிக்கு மூன்று மாத விடுப்பில் அனுப்பப்படுகிறார் நம் நண்பர் லூயிஸ் கிராண்டேல் (எ) இரும்புக்கை மாயாவி. நிழற்படையே ஒன்று கூடி அவரை அந்தப் பகுதிக்கு விடுப்பில் சென்று தங்க சாவி வரை ஏற்பாடு செய்கிறது..  அப்போதே மனிதர் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா என்ன? 

இதுபோன்ற பலப்பல சிக்கல்களைக் கடந்து ஒற்றைக் கண் ஜந்துக்களுடன் மோதும் மாயாவிக்கு இறுதி வெற்றி கிட்டியதா? இந்த கேள்விக்கு விரைவில் வண்ணத்தில் பதிலளிக்கவிருக்கிறது லயன் காமிக்ஸ்.. முழுமையான கதையை வண்ண சேர்க்கைகளுடன் வாசிக்க ஆயத்தமாவோம்.. 
அதுவரை நாமும் அப்படியே இரசிகர்களாக கதைத்துக் கொண்டே கடப்போம்.. டெக்ஸ் வில்லரின் கதையான தலைநகரில் தலைமகன் ஒருபுறம் காமிக்ஸ் என்னும் கனவுலகம் வாட்ஸ் அப் குழுவில் விமர்சிக்கப்பட்டு சிறந்த பரிசினை எட்டிப் பிடித்திருக்கிறது ஓர் அட்டகாசமான விமர்சனம்.. அது இதோ.. 

கனவுலகம் விமர்சனப் போட்டி:
தலை நகரில் தலைமகன்
பிப்ரவரி ~2025

இரும்புக் குதிரையொன்று தன்னுடைய வழித்தடத்திலே சாவகாசமாய் பயணித்துக் கொண்டிருக்கிறது.. ஜாலியாய் விசிலடித்தபடியே..
கரும் புகையைத் துப்பிக் கொண்டே..

சற்று தூரத்தில் தெரிய வரும் நீண்ட குகைப் பாதையின் பயணத் தூரம் முடியும் முன்னமே, அந்த புகை வண்டியினுள் நடக்கவிருக்கும் அந்த அசம்பாவிதத்தை உணர்ந்திருந்தால் அந்த விசில் சத்தமும் வாய் மூடி மௌனித்திருக்குமோ என்னவோ..?!

இதோ அந்த குகைப் பாதை..
நீண்ட நெடிய கரும் பாதை..
அமர்ந்திருக்கும் ஸ்டாப்பர்ட் என்பவனை நோக்கி ஒரு நெடிந்த உருவம் ஒன்று முன்னேறுகிறது..
சரியாக நெஞ்சுக் கூட்டை குறி வைத்து கத்தி ஒன்று வலுவாக இறக்கப்படுகிறது..
சின்னதாய் ஒரு அலறல்.. இல்லை முனகல்..
அதுவும் கூட குகைப் பாதை எதிரொலி சத்தத்தில் அடங்கிப் போகிறது..
ஸ்டாப்பர்ட்டின் கைப் பை பிடுங்கப்படுகிறது..
வந்த வழியே நெடிந்த உருவம் நழுவுகிறது..

ஒரு மாபெரும் அமெரிக்க அரசியல் சதுரங்க ஆட்டத்தின் முதல் காய் அங்கே நகர்த்தப்படுகிறது..

குகைப் பாதையின் முடிவு நெருங்க, நெருங்க ஒரு அதிரடிக் கதையின் மிரட்டல் களம் அங்கே அரங்கேறத் துவங்குகிறது..

வெளிச்சம் பரவிய புகை வண்டியின் மர்மக் கொலை நடந்த பெட்டியில் அலறல் சத்தங்கள் ஆட்டம் போடுகின்றன..

பக்கத்து பெட்டியில் இருக்கும் இரவுக் கழுகாருக்கும், வெள்ளி முடியாருக்கும் அலறல் சத்தங்கள் சுக்கா வறுவல்களை வாயில் ஊட்டி விட..
பதறிச், சிதறி ஸ்டாப்பர்ட்டை நெருங்குகிறார்கள்..
அவனோ ஏதோ ஒரு முக்கியச் செய்தியை தலயின் செவிகளில் கிசுகிசுத்து விட்டு செத்துப் போகிறான்..
அந்தக் கிசு கிசுப்பை கொலையாளியும் கண்டு கொள்கிறான்..

நவஹோக்களுக்காக லாரமியில் கால்நடைகள் வாங்குவதற்காக வந்த டெக்ஸ் & கார்சனின் பயணம் சட்டென்று திசை மாறி வாஷிங்டன் நோக்கிப் பயணமாகிறது..

அதி முக்கியமான பணி..
அமெரிக்க ஏகாதிபத்திய அரசியல் களத்தையே ஆட்டம் காண வைக்கும் விவகாரம் அது..

வடக்கு, தெற்கு யுத்தங்களின் உண்மை முகத்தை கிழித்தெறிய வைக்கும் ஆவணத்தை தாங்கிக் கொண்டு பயணிக்கும் டெக்ஸ் மற்றும் கார்சனின் தொடரும் பயணத்தில் தான் எத்தனை இடையூறுகள்..

துப்பாக்கிக் கட்டையால் பின் மண்டை வீக்கப் படையல்கள்..

பழுக்கக் காய்ச்சிய பிச்சுவா தலயின் மார்புகளில் கோலம் போட..

கைக் கட்டுகளை அவிழ்த்தெறிய எரியும் நெருப்பிலே கைகளைச் செருகி கட்டுகளை களைய..
கார்சனின் கைகள் நெருப்பிலே பொசுங்கிப் போக..

அச்சச்சோ.. ☹️☹️☹️

எத்தனை, எத்தனை இன்னல்கள்..
எத்தனை, எத்தனை பிரச்சினைகள்..
எத்தனை, எத்தனை இடையூறுகள்..

இத்தனைகளையும் தாண்டி வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் ஒரு செமத்தியான கோச் வண்டி சேசிங்கில் அதிரடியாய் பிரவேசிக்கிறார்கள்..
ஜனாதிபதியைச் சந்திக்கும் முன் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள்..

இந்தக் களேபரத்தால் ஈர்க்கப்பட்ட ஜனாதிபதி வெளியே எட்டிப் பார்க்கிறார்..

டெக்சும், கார்சனும் போலீசாரால் புடை சூழ நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்..
கண்கள் இடுங்க அவர்களைப் பார்க்கிறார் ஜனாதிபதி..

அடுத்தது என்ன..??!!

அட்டகாசமான சித்திர ஜால வித்தைகளோடு தூரிகைத் துகில் உரித்து பேரிகை முழங்கியிருக்கிறார் ஓவியர்.. 🔥🔥🔥🔥

கதைக்களமுமே அசாத்திய வேகத்தோடு பயணிக்கிறது..

குகைப் பாதை மத்தியில் நிழலுருவ ஓவியங்கள் அதகளம் செய்கின்றன..

வழக்கம் போலவே, தலயின் சீண்டல்களும், கார்சனின் புலம்பல்களும் ரகளை மேளாக்கள்.. 😄😄😄

முகப்பு அட்டை மரண மாஸ் காட்டுகிறது..
அள்ளித் தின்னத் தோன்றுகிறது..
அழகோ, அழகு அள்ளுகிறது..
அதுவும் அந்த தலைப்பின் எழுத்துரு வடிவம் அல்டிமேட்.. 🔥🔥🔥
வாசக நண்பருக்கு வாழ்த்துகள்..!!
👌🏻
பின்னட்டையில்..
நிலவொளியில் வெள்ளை மாளிகை பளீரிட, முன்னிலையில் துப்பாக்கியோடு தலயின் ஸ்டைலான போஸ் மிரட்டுகிறது.. 🔥🔥🔥

224 பக்கங்களும் காட்டுத் தீயாய் பற்றி எரிகின்றன.. 🔥🔥🔥

தல ராக்ஸ்!!
நம்ம குணா கரூர் அவர்களது விமர்சனம் கலக்கலாக இருக்கிறது அல்லவா. அவருக்கு நம் வாழ்த்துக்கள்.. 

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 





புதன், 12 பிப்ரவரி, 2025

LC 462 தலைநகரில் தலைமகன்_டெக்ஸ் வில்லர் _பிப்ரவரி 2025

வணக்கங்கள் அன்பு வாசகர்களே.. 

குறித்துக் கொள்ளுங்கள்.. 

திருவண்ணாமலை புத்தகத் திருவிழா...

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில்‌, 11 நாட்களுக்கு புத்தகத் திருவிழா... வருகின்ற 14-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

முடிந்தவர்கள் வாருங்கள்.. 

 


அமெரிக்காவின் வடதிசை தென்திசை பிரச்சனைகளுக்கு பிறகு அனைவரையும் சமமாக பார்ப்பதற்காக ஆபிரகாம் லிங்கன் பாதிக்கப்பட்ட தெற்கு க்கு வாரி வழங்குகிறார் இது போரில் வென்ற வடக்கத்தியர்களுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை  வடக்கன்ஸ் என்றாலே மல்லுக்கட்டு தானே...

ஆபிரகாம் லிங்கனை ஸ்கெட்ச் போட்டு திட்டம் போட்டு பக்காவாக வில்கின்சன் பூத் என்ற நடிகனை வைத்து தூக்கி விடுகிறார்கள்

இந்த வரலாற்றை மையமாக வைத்து தலைநகரில் தலைமகன் என்கிற டெக்ஸ் சாகசம் லைன் காமிக்ஸ் 462வது இதழாக மலர்ந்துள்ளது 160 ரூபாயில் கரடு முரடான வன் மேற்கையும் அதன் கொடூரமான மனிதர்களையும் லட்சிய புருஷர்களையும் அநியாயமான சதி திட்டங்களையும் அழுத்தமான வில்லன்களையும் விளாவாரியாக கூறிக்கொண்டே போகிறார் நிஸ்ஸி.. அதனை மெருகூட்டுவது போல உயிரைத் தேடி ஓவியர் புகழ்பெற்ற  ஜோஸ் ஆர்டிஸ்.. பரபரப்புக்கு கேட்கவா வேண்டும்..

கதை சீராக வாஷிங்டனை நோக்கி பயணிக்கிறது ரயிலுக்குள்ளேயே ஒரு கொலை பிறகு ரயிலை நிறுத்த ஒரு பாம் ஸ்கெட்ச் நமது டெக்ஸ் ஜோடிக்கு.. 


தவிர்த்துக் கொள்ள முடியாத அதி முக்கியமான  கதை இந்த "தலைநகரில் தலைமகன்.."

ஆபிரகாம் லிங்கனை கொன்ற பிறகு பூத் என்னவானான்?  ஒருவேளை பூத் ஏதாவது தடயம் துப்பு விட்டுவிட்டு போயிருந்தால் அது ஒரு காலகட்டத்தில் வெளிவர முயற்சிக்கும் என்றால் அது வெளிவராமல் தடுப்பதற்கு எத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதில் ஒன்றில் இடையூறாக டெக்ஸ் ஜோடி களம் இறங்கினால் என்னவெல்லாம் நடக்கும் என்று தங்கள் கற்பனை ரயில்களையும் குதிரைகளையும் தட்டிப் பறக்க விட்டிருக்கிறார்கள் வரலாற்றில் பூத் என்ற நாடகம் நடிகன் ஆபிரகாம் லிங்கனை கொன்ற சம்பவம் உண்மை அந்த சம்பவத்தை வைத்துக் கொண்டுதான் எத்தனை எத்தனை கதைகள் வரலாற்றின் முக்கியமான ஒரு புள்ளியாக அந்த கருப்பு தினத்தை இது போன்ற கதைகள் தான் அவ்வப்போது நமக்கு நினைவூட்டுகிறது இங்க இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ இது போன்ற முக்கியமான ஒரு கருப்பு தினத்தை மையமாக வைத்து எந்த கதையை எழுதினாலுமே அது எதிர்ப்புக்கும் பிரச்சனைக்கும் தான் வழிவகுக்கும் ஆனால் அமெரிக்காவில் இப்போது இருக்கும் பிரசன்ட் பிரசிடெண்டையே கலாய்க்கும் வல்லமை படைத்தவர்கள் அமெரிக்கர்கள்  அவர்களை தாண்டி அவர்களின் உறவின் முறையாரான பிரிட்டிஷார் ஐரோப்பிய நாடுகள் உலக நாடுகளின் தலைவன் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்காவை அவ்வப்போது கதைகளில் புரட்டி போட்டு தான் வருகிறார்கள் அதற்குத் தகுந்த வரவேற்பும் கிடைத்து வருகிறது வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சிவப்பு ஹல்க்காக அமெரிக்கன் பிரசிடெண்ட்டையே உருமாற்றி அமர்க்களம் படுத்துகிறார்கள் வாருங்கள் அனைத்தும் ரசிப்போம் ரசிக சிந்தனையுடன் வாசக நட்புடன்

என்றென்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

Feb 2025 issues_பிப்ரவரி மாத காமிக்ஸ் இதழ்கள் விவரம்

 வணக்கங்கள் அன்பு வாசகர்களே.. 

இந்த பிப்ரவரி மாத வெளியீடுகள் 

ரங் லீ காமிக்ஸ் 

ஆந்தை இளவரசி 

_சித்திரக்கதை மற்றும் வாசிப்புகேற்ப வரிகள் என்று வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலமைப்பு எல்லா வாசகர்களையும் சென்றடையும் வாய்ப்பிருக்கிறது.. 

ஆபத்தே, போ! போ!

_பேமஸ் பைவ் துப்பறியும் இந்த கதை வண்ணத்தில் நன்றாக இருக்கிறது. 

லயன் காமிக்ஸ்

_வழக்கமாக குறைந்தது மூன்று இதழ்களை வைத்து நம்மைக் கட்டிப் போட்டுவிடும் லயன் இம்முறையும் குறை வைக்கவில்லை. 

குத்துங்க எசமான் குத்துங்க_ ஸ்பூன் அண்ட் வொயிட் சாகசம் 



           சைனா டவுனில் நிழல் உலக தாதாவின் மைந்தன் ச்சீ தூ போ..ஹி ஹி  நமது நாயகர்களின் கனவுக்கன்னி நிருபர் பால்கனியை கைவசப்படுத்திக் கொள்வதை கொலைவெறியோடு தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள் நம்மவர்கள் ஸ்பூன் அண்ட் ஒயிட்.. என்னப்பா நடக்குது இங்கே என்று கேட்கும் முன்னரே அடுத்தடுத்த சம்பவங்கள் திணறத் திணற வாசகர்களை மொய்த்துக் கொண்டுவிடும் இது நகைச்சுவை மாத்திரமே என்றில்லாத பெரியவர்களுக்கான கதையும் கூட.. இதில் விக்ரம், கைதி நரேன் கதையின் ரெபரன்ஸ் உண்டு.. 

தலைநகரின் தலைமகன் _டெக்ஸ் வில்லர். 



டெக்ஸ் கார்சன் ஜோடி இரயிலில் ஏறி விட்டாலே எப்போதும் அதகளம்தான்.. இதோ இன்னொரு அதிரடிக் களம்.. 

சிரிக்கும் விசித்திரம்_ஸாகோர் 



ஸாகோர் தன் மிரட்டல் சாகசத்தில் இம்முறை மோதுவது சிரிக்கும் வில்லன்களுடன்.. சிறப்பான வடிவமைப்பும் கௌபாய் பின்னணியும் முகமூடிக் கும்பலும் என்று அமர்க்களப்படுத்தக் காத்திருக்கிறது.. 



லயன் எலக்ட்ரிக் ௮௦ என்னும் தனித்தடத்தில் கொண்டு வந்துள்ள புத்தகங்கள் குறித்து விளம்பரம்.. 


இந்த மாதத்தில் வகம் காமிக்ஸ் எந்த வெளியீடுகளும் இல்லை என்பது சற்றே வருத்தம்தான்.. ஆனால் சரித்திர நாவல் ஒன்றைக் கொண்டு வந்து ஜனவரியிலேயே நாங்கள் சித்திரக்கதைகள் மாத்திரமல்ல சரித்திரக்கதைகளையும் வெளியிடுவோம் என்று கூடுதல் நாவல் வாசகர்களுக்கும்  இன்னும் நெருக்கம் காண்பித்து வருகிறது. ஆகவே அடுத்தடுத்து வகம் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்று வரும்போது இந்த பிப்ரவரியின் சிறியதொரு இடைவெளியை நாம் ஸ்கிப் செய்து விடலாம். 

அடிக்கடி வலைப்பூவில் சந்திக்க இயலாவிட்டாலும் கிடைத்த நேரத்தில் பதிகிறேன். நன்றி. 

புதன், 25 டிசம்பர், 2024

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்


 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். அவரது பல்வேறு கட்டுரைகளையும் ஒரு தொகுப்பாக தொகுத்து ஏழு நூல்களாக நமக்குப் பரிமாறவிருக்கிறார். அதற்கான வெளியீட்டு விழா இன்று இன்னும் பதினைந்தே நிமிடங்களில் துவங்கவிருக்கிறது.. அவரை ஒரு இரசிகனாகவும், நண்பனாகவும், இப்போது பணிமாறுதலால் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் சற்றே  தூரத்தில் இருந்தும்  இரசித்து வாழ்த்திக் கொள்கிறேன்.. அவரது வலைப்பூ இணைப்பு இதோ.. 

https://tamilcomicsulagam.blogspot.com/

நாம் ஒரு கதையைப் படித்து விட்டு அப்படியே கடந்து சென்று விடுவோம். அதன் பின்னணி, அதில் சம்மந்தப்பட்ட ஓவியர்கள், கதாசிரியர்கள் பற்றிய குறிப்புகளை சுவாரசியம் கலந்து தருவது இவரது பாணி.. ஆன்லைனில் வாசித்த கட்டுரைகள் இப்போது சிறப்பாக எடிட் செய்யப்பட்டு ஓவியங்கள் இணைத்து புத்தகமாகக் கையில் ஏந்தும்படி வெளியாவது கணினி உலகுக்கு அப்பாற்பட்ட சராசரி வாசகர்கள் உலகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்திடும் என்பதில் ஐயமில்லை.. ஆரவாரமான சென்னை புத்தக திருவிழாவில் இந்த நூல்களை வாங்கி மகிழலாம்.. கிடைக்கும் ஸ்டால்கள் குறித்த விவரங்களுக்கு ஸ்டே ட்யூன்ட்.. 

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன். 

ஸ்ப்லாஷி_ஒரு ப்ளாடிபஸ்_அறிமுகம்_சிறார் காமிக்ஸ்!

 இனியவர் இயேசு பிறப்பின் கொண்டாட்ட நிகழ்வான  கிறிஸ்துமஸ் தின நன்னாள் வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே.. அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்களும்.. 


ஸ்ப்லாஷி.. தமிழில் முதன்முறையாக அறிமுகப்படுத்திக் கொள்வோம்.. குட்டிப் பையன் ஸ்ப்லாஷி ஒரு பிளாட்டிபஸ். அவனுக்கும் மற்ற சிறுவர்கள் போன்று ஆட்டம் போடுவதும் ஓட்டம் விடுவதுமே ஆர்வம். ஆல் கலர் காமிக்ஸ் என்கிற இதழில் இந்த சுட்டிப் பையன் காணக்கிடைத்தான். அவன் தமிழில் பேசினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைக்கு உயிர்கொடுக்க ஒரு சின்னஞ்சிறு முயற்சியே இது.. என்ஜாய்.. 


இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களுடன் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.. ஹேப்பி xmas! 

  

வெள்ளி, 20 டிசம்பர், 2024

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்... 

இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்" லென்று முழுவண்ணத்தில் நமது குட்டி ஆஞ்சநேயர் களமிறங்கி வனத்தின் அப்பாவி ஜீவன்களுக்குப் பாதுகாப்பு நல்குகிறார்.. அந்த சித்திரக்கதை விவரங்கள் இதோ.. 

லயன் லைப்ரரியில் வெளியாகி இருக்கும் கபீஷ்தான் அந்த நாயகன்..
சிறார் மனங்களை கவர்ந்து இழுத்த நாயகன் சுட்டிப்பயல் கபீஷ்.. தமிழில் சிறப்பான வடிவங்களில் ப[பலமுறை வெளியிடப்பட்டு நற்பெயரைப் பெற்ற இந்தத் தொடரில் வேட்டையன், புலி, நரி என்று வில்லத்தனங்களும் அப்பாவி முயல்களும் சிறுவர்களுக்குப் புது உலகினை எப்போதும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பதுதான் விஷேசம்.. இந்த கபீஷ் இப்போது முழு வண்ணத்தில் நம்மை மகிழ்விக்க நூறு ரூபாய் விலையில் லயன் லைப்ரரியின் நாற்பத்து மூன்றாவது வெளியீடாக மலர்ந்திருக்கிறது.. 
முன்பு பூந்தளிர்-பைக்கோ க்ளாசிக்ஸ் பதிப்பகங்கள் தொகுப்பாக வெளியிட்டிருக்கின்றன.. 
 



1989ம் ஆண்டில் வெளியான ஒரு விளம்பரம்.. பூந்தளிர் கொண்டு வந்த தொகுப்பினைப் பற்றிய குறிப்பு.. 
லயன் தளத்தில் ஆன்லைனில் வாங்க லிங்க் இதோ.. 

https://lion-muthucomics.com/latest-releases/1270-kapish-special-1.html

புதன், 18 டிசம்பர், 2024

க்வாக் சுந்தரம் பராக்! பராக்! பராக்! _கணேஷ் பாலா கலக்கல் பதிப்பில்..

 செ.பு.க.-1

=======


வரவிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்காக நான் தங்கத்தாமரை பதிப்பகத்துக்காக வடிவமைத்த சில விசேடமான புத்தகங்களைத் தினம் ஒன்றாக இங்கே அறிமுகம் செய்யலாம் என்றிருக்கிறேன்.

அந்த வரிசையில் முதலாவதாக... முகத்தில் புன்னகை விலகாமல் படிக்க வைக்கும், படித்த பிறகும் ஓவியங்களை ஒருமுறை பார்த்து ரசிக்க வைக்கும், பிறிதொரு நாளில் மன உற்சாகத்துக்காக மீண்டும் படிக்கத் தூண்டுகிற ஒரு சித்திரக் கதை புத்தகம். இல்ல, வேணாம்.. படக்கதை புத்தகம்.. இல்லையில்ல.. காமிக்ஸ்ன்னே வெச்சுக்கலாம் (குணா கமல் குரலை மனதுக்குக் கொண்டு வரவும்)

எழுநூற்று எழுபத்தேழு ரூபாய் எழுபது பைசா விலை வைக்க வேண்டிய இந்த காமிக்ஸ், உங்களுக்காக வெறும் 70 ரூபாயிலேயே பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன், ச்சே, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொல்கிறேன், ச்சே, கொள்கிறேன்.

மேலும் அதிக விவரங்களை அறிந்து கொண்டு வாங்கி ஆதரிக்க உதவியாக இந்த பதிவினையும் இரசியுங்கள்.. 

க்வாக் சுந்தரம் -ஒரு அறிமுகம்

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...