jsc johny
தேடல்தான் அடிப்படை... நம்ம வலைப்பூ சித்திரக்கதைகளை மையமாகக் கொண்டியங்குகிறது..
ஞாயிறு, 18 ஜனவரி, 2026
செயற்கை நுண்ணறிவின் நன்மையில் சில...
சனி, 17 ஜனவரி, 2026
கருப்புச் சாட்டை: விடியலை நோக்கிய போர்
பதினெட்டாம் நூற்றாண்டின் அந்த நள்ளிரவு நேரம். அடர்ந்த காட்டின் நடுவே அமைந்திருந்த அந்த ஆங்கிலேயப் படைத்தளம் (Cantonment) அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதி புயலுக்கு முந்தைய அமைதி என்பது அங்கு காவல் இருந்த சிப்பாய்களுக்குத் தெரியாது.
மின்னல் வேக வருகை
திடீரென்று தூரத்தில் குதிரை குழம்புகளின் சத்தம் கேட்டது. "டக்... டக்... டக்..." என்று அந்தச் சத்தம் நெருங்க நெருங்க, காவலில் இருந்த வெள்ளையர்கள் விழித்துக்கொண்டனர். நிலவொளியில் ஒரு கறுப்பு உருவம், கறுப்பு நிறக் குதிரையில் காற்றாய்ப் பறந்து வருவதைக் கண்டனர்.
"யாரது?" என்று ஒரு அதிகாரி கத்துவதற்குள், கறுப்பு அங்கியில் முகம் மறைத்த அந்த வீரன் — கருப்புச் சாட்டை — கோட்டையின் வேலிக்குள் குதிரையைத் தாவிப் பாயச் செய்தான்.
துப்பாக்கிக் குண்டுகளும் வாள்வீச்சும்
"சுடுங்கள்! அவனைச் சுடுங்கள்!" என்று மேஜர் ஹாமில்டன் கத்தினான்.
சரமாரியாகத் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. ஆனால், கருப்புச் சாட்டை குதிரையின் பக்கவாட்டில் சாய்ந்து வித்தை காட்டி தப்பினான். அவனது கையில் இருந்த நீண்ட சாட்டை சொடுக்கப்பட்டபோது, அது துப்பாக்கிகளைப் பறித்தது. அடுத்த நொடி அவன் கையில் இருந்த வாள் சுழலத் தொடங்கியது. மின்னல் வெட்டுவதைப் போல அவனது வாள்வீச்சு ஆங்கிலேயர்களை நிலைகுலையச் செய்தது.
நாகவல்லியின் ஆக்ரோஷம்
அதே நேரத்தில், கோட்டையின் மற்றொரு பகுதியில் தீப்பந்தங்கள் எரிந்தன. அது நாகவல்லி. பெண் என்று பாராமல், கையில் இரண்டு குறுவாள்களை ஏந்திப் பாய்ந்தாள்.
* சூழ்ச்சியை முறியடித்தல்: ஆங்கிலேயர்கள் பீரங்கிகளைத் தயார் செய்வதைக் கண்ட நாகவல்லி, சிறுத்தையைப் போலப் பாய்ந்து அங்கிருந்த வெடிமருந்துப் பெட்டிகளுக்குத் தீ வைத்தாள்.
* வீரப்போர்: தன்னைச் சூழ்ந்த நான்கு சிப்பாய்களைத் தனது தனித்துவமான களரிப்பயற்று முறையினால் வீழ்த்தினாள். அவளது கண்களில் இருந்த தேசபக்தி நெருப்பு, வெள்ளையர்களை அச்சுறுத்தியது.
வீரப்போர் முடிவு
"கருப்புச் சாட்டை, இதோ பிடித்துக்கொள்!" என்று கத்தியபடி நாகவல்லி ஒரு சங்கிலியை வீசினாள். அதை லாவகமாகப் பிடித்த கருப்புச் சாட்டை, கோட்டையின் கொடிமரத்தில் இருந்த ஆங்கிலேயக் கொடியை அறுத்து எறிந்தான்.
"இந்த மண் எங்கள் மண்! உங்கள் அதிகாரக் கனவு இங்கே பலிக்காது!" என்று அவனது கர்ஜனை அந்தக் காடு முழுவதும் எதிரொலித்தது.
குதிரையின் கால்கள் மண்ணைக் கிளப்ப, அந்தப் படைத்தளத்தையே உருக்குலையச் செய்துவிட்டு, இருவரும் மின்னல் மறைவதைப் போல இருளுக்குள் மறைந்தனர். மறுநாள் விடியலில், சிதைந்து கிடந்த கோட்டையைப் பார்த்த ஆங்கிலேயர்களுக்குத் தெரிந்தது — இது ஒரு தொடக்கம் மட்டுமே என்று!
என்றென்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி..
புராதன இந்திய அரசியலில் 'சி. ஐ. டி.'_ஏ.வி. சுப்பிரமணிய அய்யர்.
வணக்கங்கள் அன்புள்ளங்களே.. இன்று காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. சித்திரக்கதைகளை வாசித்து திகட்டிப் போகும் சமயங்களில் இப்படியான கட்டுரைகளையும் வாசித்தால் காலப்பயணம் மேற்கொண்ட ஒரு அனுபவம் நமதாகிப் போகும்.. நமக்கு நாட் நாட் செவன் என்றால் மிகவும் பிடிக்கும்.. அவர் ஒரு பிரிட்டிஷ் தேச உளவாளி.. இந்த கட்டுரை மணிக்கொடி இதழ் -1938 ல் இடம்பெற்றுள்ள உள்நாட்டு ஒற்றர்களின் அவசியம் குறித்ததான கட்டுரை.. இந்த பதிவுக்கு உதவிய சுதா அம்மாவுக்கு நன்றிகள்.. அபூர்வமான இந்த கட்டுரையை சேகரித்து அளித்தவர் அவரே.. இனி கட்டுரை..
இது முன்னாள் பாரதப்பிரதமர் மாண்புமிகு ராஜகோபாலாச்சாரியாரின் காலத்தில் நிகழும் கட்டுரை என்பதை மனதில் வைத்து வாசியுங்கள்..காங்கிரஸ் அரசாட்சி நடைபெறும் மாகாணங்களில் 'சி. ஐ. டி.' என்ற ரகசி யப் போலீஸ் இலாகா இன்னும் எடுபடாமலிருக்கிறதென்பதைப் பற்றி காங்கிரஸ் காரர்களில் ஒரு பகுதியார் திகைப்பும் வருத்தமுமுற்றிருக்கிறார்கள். அவர் களில் சிலர் பிரதம மந்திரி ஸ்ரீமான் ராஜ கோபாலாச்சாரியாரிடம் இதைப் பற்றிக் கேட்டு அவருக் கியல்பான சாமர்த்தியத் துடன் அளிக்கப்பட்ட பதிலையும் பெற றிருக்கிறார்கள். கடந்த தேசியப் போரா ட்டங்களில் ஈடுபட்டுக் கஷ்டப்பட்ட அகே கருக்கு அவர்களைப் பலவித அடக்கு முறை உபாயங்களால் ஒடுக்கி நசுக்கி சுக்கி வந்த சர்க்காரைச் சேர்ந்த 'சி. ஐ. டி.' இலாகா உத்தியோகஸ்தர்கள் மீது வெறு ப்பு இருக்கக்கூடியது சகஜம். ஆனால் 'சி. ஐ. டி.' இலாகா அவசியமில்லை யென் றாவது,அதன் காரணமாக அதை எப் போதாவது எடுத்துவிடலா மென்றாவது யாராவது நினைத்தால் அது பகல் கன வாகும். காங்கிரஸ் அரசாட்சியில் போ லீஸ், 'சி ஐ- டி.' முதலான அம்சங்கள் முன்போல் இருக்காதென்று காங்கிரஸ் காரர்கள் எண்ணிக் கொண்டிருந்தால் அவர்கள் அரசியல் சாஸ்திரத்தை முற்றி லும் மறந்தவர்களாவார்கள்.
பண்டைக்கால இந்தியாவில் 'சி.ஐ.டி.' க்கு ஒத்த ஸ்தாபனம் ஏதாவது 'இருக்கிறதா என்பதைப் பற்றியும், அப்படி இருந்திருந்தால் அதற்கு அடிப்படை யான கொள்கைகள் என்ன என்பதைப் பற்றியும் ஆராய்ந்து பார்ப்பது பிரயோ ஜனமாயிருக்கும்.
புராதன காலத்தில் இந்த நாட்டில் 'சி.ஐ.டி.' இலாகாவிற்குரிய வேலை மிகவும் இன்றியமையாத தென்று கருதப்பட்டு, அதற்குக் கை தேர்ந்த நிபுணர்களே பொறுக்கப்பட்டார்கள். இவர்களுக்குக் தமிழ் நாட்டில் ஒற்றர்கள் என்று பெயர். எந்த காலத்திலும் ஒற்றர்களில்லாத அரசு கிடையாது. ஒற்றர்களின் வேலை மிகவும் கடினமானது; அதைத் திறம் படச் செய்வதற்கு நல்ல ஒழுக்கம், புத்தி யுக்தி,சாமர்த்தியம், பேச்சுவன்மை, நிதா னமான தன்மை யெல்லாம் அவசியம். இது காரணம் பற்றி ஒற்றர்கள் மிகவும் கண்ணியமாகவே அரசர்களால் நடத்தப் பட்டார்கள்.
ஒற்றர்கள் சம்பந்தமாக பண்டைத் தமிழ் நாட்டில் நிலவி வந்த கொள்கை களையும் கருத்துக்களையும் திருவள்ளுவரின் குறளில் தெளிவாகக் காணலாம். வள்ளுவருக்கு, சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டதாயும், பண்டைக்கால இந்திய அரசியல் தத்து வங்களின் களஞ்சியமாயு முள்ளது கௌதில்யரின் அர்த்த சாஸ்திரம். ஒற்றர்களின் அவசியத்தைப் பற்றியும், அவர்களுடைய வேலையைப் பற்றியும், அவர்களை வேலை ஏவுவதைப் பற்றியும் இந்நூல் விஸ்தாரமாகக் கூறுகிறது.
அரசர்களுக்கு ஒற்றர்கள் மிகவும் இன்றியமையாதவர்கள் என்பதை வள்ளுவர் ஒரு குறளில் காட்டியிருக்கும் தன்மை கவனிக்கத் தக்கது.
என்பது ஒற்றாடல் என்னும் குறள் அத்தியாயத்தின் முதல் பாட்டு, ஒரு அரச னுக்குத் தெளிந்த அரசியல் ஞானமும் ஒற்றும் இரண்டு கண்களாகும் என்பது
இந்தக் குறளின் பொருள். மனிதனுக்குக் கண் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் ஒற்றர்கள் அரசனுக்கு என்பது, காலத்தால் பாதிக்கப்படக் கூடாத ஒரு உண்மை. தன் நாடு, பிற நாடுகள், இவைகளில் நடைபெறும் எல்லா விஷயங்களையும் ஒரு அரசன் அறிந்துகொள்ளா விட்டால் அவனால் திறமையுடன் அரசாட்சி செய்ய முடியாது. அப்படி விஷ யங்களைத் தெரிந்துகொண்டால் மாத்திரம் போதாது. ஒற்றர்கள் மூலமாகக் கிடைத்த செய்திகளை நன்றாய் ஆராய்ந்து அவைகளை உபயோகித்துச் சிந்தனை செய்து, பின்னால் நேரக்கூடியவைகளை ஊகித்துக் காரியங்களைச் செய்வதற்குச் சான்றோர்கள் மூலம் தெளிந்த அரசியல் ஞானமும் அவசியம். மன்னனுக்கு ஒற்று கண் போலாகு மென்று வள்ளு வரே சொல்லியிருக்கும்போது, இந்தக் காலத்தில் 'சி. ஐ. டி.' அவசியமில்லையென்று யாராவது துணிந்து நினைக்க முடியுமா? முன்காலத்தில் அரசர்கள் செய்துவந்த வேலையையும், ஏற்றுவந்த பொறுப்பையும், இந்தக் காலத்தில் அர சாளும் மந்திரிகள் செய்துவருகிறார்கள் என்பது எளிதில் புலப்படும்.
அரசர்களுக்கு ஏன் ஒற்று அவசியமென்பது அடுத்த குறளால் விளங்கும். "எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் றொழில்."
எப்போதும் எல்லோருக்கும் என்ன நிகழ்ந்தாலும் அதை அறியவேண்டியது வேந்தனின் தொழில் என்கிறார் வள்ளுவர். மற்றத் தொழில்களை போல் அர சாட்சி நடத்துவதும் ஒரு தொழில் என்னும் கருத்து உயர்ந்தது. ஒற்றர்களை ஏவாத அரசர்களுக்கு, வெற்றியென்பது கிடையாது.
ஒற்றர்கள் மூலம் எவ்வெவர் சம்பந்தப் பட்டவரையில் உளவறிய வேண்டு மென் பதைப் பற்றிச் சொல்லும் பாட்டு விரிந்த கருத்தை யுடையது.
அரசர்கள் தங்களிடம் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுடைய பந்துக்கள், பகைவர்கள், இவர்களை ஆராய்ந்து அவர்களின் காரியாதிகளைத் தெரிந்து கொள்வதற்கு ஒற்றர்களை உபயோகப்படுத்த வேண்டும். வள்ளுவர் அகண்ட அரசியல் ஞானமும் உலக அறிவும் பெற்றவர் என்று சொல்லவும் வேண்டுமா? சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் ஒழுக்கத்தையும், அவர்கள் செய்யும் வேலையையும் ஒற்றர்கள் மூலம் தெரியவேண்டியது எல்வளவு அவசியம் அரசர்களுக்கு? நாம் இப்போது எவ்வளவோ முன்னேற்றமடைந்திருந்த போதிலும் இந்த அவசியம் தீர்ந்துவிட்டதென்று சொல்ல முடியாது. அந்தக் காலத்தில் அரசர்களுக்குத் தங்களுடைய சகோதரர்கள் தாயாதிகள் முதலிய பந்துக்களால் கெடுதி ஏற்படுவது சகஜமாயிருந்ததால் அவர்களைக் கண்காணிக்க வேண்டியது அவகியமாயிற்று. வேண்டாதார்கள் அல்லது விரோதிகள் கெடு தல்களை விளைவித்துக்கொண்டிருப்பார்களாதலால், அவர்களைப் பற்றிக் கட்டாயம் அரசர்களுக்குத் தெரியவேண்டும். இந்தக் காலத்திலும் இந்த அவசியமிருக்கிறது. எந்த அரசாட்சிக்கும் வேண்டாதவர்க ளிருப்பது உலக இயல்பு. அவர்கள் தங்களாலியன்றவரை அரசாட்சி செய்யும் மந்திரிகளைக் கவிழ்க்க முயற்சி செய்வதும் ஜனநாயக முறைக் கேற்றது தான். இதில் அவர்கள் சட்ட வரம்புக்குட்பட்டும் நியாய வரம்புக்குட்பட்டும் வேலை செய்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டிய பொறுப்பும் அவசிய மும் சர்க்காரைச் சேர்ந்தன.
ஒற்றர்களுக்கு யார் லாயக்கானவர்களென்பது கவனிக்கத் தக்க விஷயம். பல தினுசுகளான ஒற்றர்களுக்கு வேண் டிய வெவ்வேறு குணங்களை விஸ்தாரமாய்ச் சொல்லியிருக்கும் கௌதில்யர், எல்லா வகையான ஒற்றர்களுக்கும் தீர்க்க புத்தியும் நல்லொழுக்கமுமிருக்க வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார். ஏனையோர்களால் சந்தேகப்படக் கூடாத முகப் பொலிவும், எவர் எதிரிலும் கலக்கம்கொள் ளாத நெஞ்சமும், என்ன நேர்ந்தபோதிலும் இரகசியத்தை வெளியிடாத மன உறு தியும், மறைக்கப்பட்டிருக்கும் குற்றம், கள்ளங் கபடுகளைத் தெரிந்தோர் மூல மறிந்து, தெளிவாய் ஆராய்ந்து அரசர்களுக்குச் சொல்லக்கூடும் ஆற்றலும், துறவிகள் போல் இலகுவாய் உருமாறி நடமாடக்கூடிய சக்தியை ளுமே ஒற்றர்களாவதற்குத் தகுந்தவர்கள் என்பது வள்ளுவரின் கருத்து. யுள்ளவர்க
ஒரு ஒற்றன் மற்ற ஒற்றர்களைத் தெரிந்துகொள்ளாத முறையில் அரசன் நபர் களைத் தெரிந்தெடுக்க வேண்டும். ஒற்றனொருவன் கொண்டுவரும் செய்தியைத் தீர விசாரிக்காமல், அரசர்கள் நம்பக் கூடாதென்றும், ஒருவருக் கொருவர் தாக்கலில்லாமல் வேலை செய்த மூன்று ஒற்றர்கள் கொண்டுவரும் செய்தி ஒன்று போலிருந்தால் அதை நம்பலாமென்றும் கௌதில்யரும் வள்ளுவரும் சொல்லுகிறார்கள். ஒற்றர்கள் அவசியமாயிருந்தாலும் அவர்கள் கொண்டுவரும் செய்தி உண்மையில்லாவிட்டால் தீங்கு ஏற்படக் கூடுமாதலால் அவ்விதத் தீங்கு ஏற்படா வண்ணம் அரசர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இந்த உபாயம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒற்றர்களின் தொழில் மிகவும் பொறுப்பு வாய்ந்ததுமன்றி அபாயகரமாயுமிருப்பதால் இவர்களுக்கு அரசர்கள் ஏராளமான பொருளை ரகசியமாய்ப் பொது மக்கள் அறியாவண்ணம் கொடுக்கவேண்டுமென்று குறள் சொல்லுகிறது. ஒற்றர்களைப் பொது மக்கள் அறிந்து விட்டால் ரகசியச் செய்திகளைச் சேகரிக்கும் சக்தி ஒற்றர்களுக்குக் குறைந்துவிடும்.
சற்று யோசனை செய்து பார்த்தால் 'சி.ஐ. டி.' சம்பந்தமாக இந்தக் காலத் தில் நமது அரசாங்கம் அநுஷ்டித்து வரும் முறைகளைவிடப் பண்டைக்கால த்து அரசர்களின் முறைகள் உயர்ந்தவையென்று விளங்கும். முதலாவதாக ஒரு வரின் குணங்களையும் திறனையும் பரி சோதனை செய்து 'சி. ஐ. டி'க்கு எடுப்ப தாகத் தெரியவில்லை. போலீஸ் இலாகாவிலிருக்கும் உத்தியோகஸ்தர்களில் சிலர் "சி. ஐ. டி" க்குப் பொறுக்கவோ தள்ளவோபடுகிறார்கள். எடுத்தபிறகாவது அவர்களுக்கு விசேஷப் பயிறசி அளிக்கப்படுவதாயும் தெரியவில்லை. இரண்டாவ தாக சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் ஒழுங்காக நடந்து வருகிறார்களா என்று பார்ப்பதற்கு ரகசியக் கண்காணிப்பு முறையாக இருப்பதாகத் தெரியவில்லை. மூன்றாவதாக, எதைப் பற்றியும் தெரிந்து கொள்ள, ஒருவருக்கொருவரைத் தெரியாத சிலரை அனுப்பி, அவர்களுடைய செய்தி ஒத்திருந்தால்தான் உண்மையெனக் கருத கருதப்பட வேண்டுமென்ற கொள்கை, நடை முறையில் அனுஷ்டிக்கப்படுவதாயுமில்லை. கால நிலைமைக் கேற்றவாறு 'சி. ஐ. டி.' ஸ்தாபனத்தின் அமைப்பும் வேலையின் தன்மையும் மாறிக் கொண்டு வருவது இயல்பு. இருந்த போதிலும் ஒற்றர்கள் சம்பந்தமாகப் பண்டைக்கால அரசியல் ஞானிகளாகிய கௌ தில்யர், வள்ளுவர் போன்றவர்களின் அடிப்படையான கொள்கைகள் காலத்தால் பாதிக்கப்படவில்லையென்பது நிச்சயம். எந்தக் காலத்திலும், குடியரசுள்பட எவ்வித அரசாட்சிக்கும் ஒற்றர் குழாம் அவசியமானது.
தற்காலத்தில் பூத, பௌதிக, விஞ் ஞான சாஸ்திரங்கள் வளர்ச்சியடைந்திருப்பதினால், அவைகளின் உதவி கொண்டு மிகவும் பயங்கரமான குற்றங் கள் நடைபெறுகின்றன. இவ்விதக் குற்றங்கள் செய்யும் பாதகர்களைப் பற்றிப் புலனறியவேண்டிய ஒற்றர்களுக்கு விசேஷமான அறிவும் தேர்ச்சியும் வேண்டும். அமெரிக்காவில் ஒற்றர்களைப் பொறுக்கி யெடுக்கும் விஷயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஒற்றர்களுக்கென்று ஒரு பயிற்சிச் சாலை இருக்கிறது. அதில் வாலிபர்கள் பல வருஷங்களாகத் தேர்ச்சி பெறுகிறார்கள். அதற்கப்புறமும் அவர்களுடைய வீரம், தைரியம், ரகசியங்களை வைத்துக்கொள்ளும் தன்மை சோதனை செய்யப்பட்டு, சோதனையில் வெற்றியுடன் வருபவர்கள் தான் இன்டெலிஜன்ஸ் செர்விஸ்' என்ற ஒற்றர்கள் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள். இப்போது அரசாட்சிக்கு எதிராக சதி செய்கிறவர்களையும், சமூகத்திற்குத் தீங்கிழைத்துப் பயங்கரமான குற்றங்களைச் செய்கிறவர்களையும், ஒற்றர்கள் கவனிக்கவேண்டியதிருக்கிறது. ஒற்றர்களை அமைத்துப் பயிற்சி செய்விப்பதில் அமெரிக்காவின் முறையை மற்ற நாடுகளும் பின்பற்றலாம்.
மணிக்கொடி இதழ் -1938-for Download
என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி
வெள்ளி, 16 ஜனவரி, 2026
புனித கலைப்பொருட்கள்_டோம்ப் ரைடர்_பாகம் ௦௧(மொத்தம் ௦௧-௦௪ல் முதலாவது)
வணக்கங்கள் அன்புள்ளங்களே..
இம்முறை நாம் கதை சுருக்கம் தெரிந்து கொள்ளவிருப்பது டோம்ப் ரைடர் சாகசமான புனித கலைப்பொருட்கள் பாகம் ஒன்று குறித்து.. நாற்பது ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க டார்க் ஹார்ஸ் நிறுவனத்தின் வெளியீடு இது..
நிறுவன குறிப்பு :
டார்க் ஹார்ஸ் காமிக்ஸ் எல்எல்சி மற்றும் அதன் உரிமதாரர்களால் 1986-2025 ஆம் ஆண்டு வர்த்தக முத்திரை (® அல்லது ™) மற்றும் பதிப்புரிமை பெற்ற (©) முழு உள்ளடக்கங்களும். டார்க் ஹார்ஸ், டார்க் ஹார்ஸ் காமிக்ஸ் மற்றும் டார்க் ஹார்ஸ் லோகோ ஆகியவை பல்வேறு பிரிவுகளிலும் நாடுகளிலும் பதிவுசெய்யப்பட்ட டார்க் ஹார்ஸ் காமிக்ஸ் எல்எல்சியின் வர்த்தக முத்திரைகளாகும். டார்க் ஹார்ஸ் என்பது எம்ப்ரேசர் குழுமத்தின் ஒரு பகுதியாகும் .
நிறுவன வலைத்தளம்:https://www.darkhorse.com/company/newsletter/
இந்த பாகத்தில் மொத்தம் இருபத்தி இரண்டு பக்கங்கள் மாத்திரமே.. ஆனாலும் அதிரடிகளுக்குப் பஞ்சமில்லை.
கே@8 என்கிற செய்தி சேனல் நிருபர் கேட், லாரா கிராப்டை பேட்டி எடுக்கிறார். வீடு தீப்பிடித்து எரிந்து பபோனதாகவும் பழுது நீக்கம் செய்து கொண்டு காலத்தைக் கடத்தியதாகவும் அதற்கு தனது மாளிகையின் நிர்வாகி வின்ஸ்டன் ஸ்மித் உதவி வருவதாகவும் கூறுகிறாள்.
வீட்டை சரி செய்ததாகக் கூறினாலும் உண்மையில் தனது சாகசங்களில் ஈடுபட்டிருந்ததை நமக்குக் காட்சிகளாக விவரித்துக் கொண்டே தன்னுடைய வீட்டை செப்பனிடுவது குறித்து பேட்டியாளரிடம் சுவாரசியமாக அளந்து விடுகிறாள்..
உதாரணமாக இந்த சுவாரசியமான கேள்வி பதில்..
கேள்வி: அது உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் தீவிரமான வேலையாகத் தெரிகிறது. அதை எப்படி அணுகினீர்கள்?
பதில்: பெரும்பாலும் உள்ளுணர்வு, கேட்.
- கேள்வி: "நீங்கள் ஒரு உத்வேகம், நீங்கள் கடந்து வந்த அனைத்தும், உங்கள் சாதனைகள் அனைத்தும்--"
- பதில்: "சிறிதளவு மூளை, சிறிது லட்சியம் மற்றும் ஒரு பெரிய அறக்கட்டளை நிதி உள்ள எவராலும் செய்ய முடியாதது ஒன்றுமில்லை."
இதுபோன்ற அருமையான உரையாடல்கள் இந்த கதையில் இடம்பெற்றிருக்கிறது..
தன் தேடலில் ஒரு எதிரியும் அதே தேடலில் ஈடுபட்டிருப்பது தெரியவர அங்கே மோதல் வெடிக்கிறது..
வியாழன், 15 ஜனவரி, 2026
இரும்புக்கை மாயாவி_திரைப்படம் தொடர்பாக..
வணக்கங்கள் வாசக வாசகியரே.. அனைவருக்கும் ஹேப்பி பொங்கல்..
ஒரே விஷயம்தான். ஒரு சர்வதேச கதையை நாம என்னதான் இந்திய ரீதியில் எடுத்தாலும் அதன் ஆன்மா சிதைந்து விடும்.. நிழற்படை தலைவர் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் சித்திரக்கதை வாசகர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து விட்ட ஒன்று.. அதனை எப்படித் தழுவி எடுத்தாலும் "பிரயோஜனமில்லை பாஸ்" நீங்க ஆயிரம் கோடி வசூல் பண்ணாலும் நாங்க வெறுமே வேடிக்கைதான் பார்ப்போம்.. இதை பொழுது போக்குக்காக பார்த்துக்கிறோம். எங்க லூயிஸ் கிராண்டேல் _லோக்கல் புஸ்பாவா எப்பயும் மாற முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்து கொள்கிறேன்..
என் கதை தொடங்கும் நேரமிது..வேதாளர்
அனைத்து நட்பூக்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
ஒரு வேதாளர் கதையை சமீபத்தில் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது நண்பர்களே..அந்த கதையின் காட்சிகள் சிறப்பானவையாக இருந்தாலும் அவற்றை செயற்கை நுண்ணறிவு எப்படி ஓவியமாக மாற்றுகிறது என்று கவனித்தபோது.. வேதாளரை அயர்ன் மேனாக மாற்றினாலும் களமும் அது சொல்ல வந்த செய்தியும் ஒன்றுதான்.. வேதாளனுக்கு மரணமில்லை என்பதே அது..
செவ்வாய், 13 ஜனவரி, 2026
சை பேரி_வேதாளர் கதைகளின் ஓவியர்_குறிப்பு..
சை பாரி 1928 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்தார், மேலும் ஃப்ளாஷ் கார்டன் காமிக் ஸ்ட்ரிப்பை வரைந்த காமிக்ஸ் கலைஞர் டான் பாரியின் சகோதரர் ஆவார். சை பாரி 1943 ஆம் ஆண்டு தொடங்கி நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் இன்டஸ்ட்ரியல் ஆர்ட்டில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். [ 3 ] ஒரு கலைஞராக அவரது முதல் வேலை ஃபேமஸ் ஃபன்னீஸ் என்ற காமிக் புத்தகத்தில் பணியாற்றுவதாகும் . [ 3 ] பாரி தனது சகோதரரின் கலை உதவியாளராக தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் 1940 களின் பிற்பகுதியில் ஒரு ஃப்ரீலான்ஸ் காமிக்-புத்தகக் கலைஞராக, முதன்மையாக லெவ் க்ளீசன் , மார்வெல் காமிக்ஸ் முன்னோடி டைம்லி காமிக்ஸ் மற்றும் டிசி காமிக்ஸ் முன்னோடி நேஷனல் காமிக்ஸ் உள்ளிட்ட வெளியீட்டாளர்களுக்கான ஒரு மைக்காரராக பணியாற்றினார். நேஷனலில், அவர் ரொமான்ஸ் காமிக்ஸ், மிஸ்டரி இன் ஸ்பேஸ் , டிடெக்டிவ் காமிக்ஸ், சூப்பர்பாய் , ஜானி பெரில், வேர்ல்ட்ஸ் ஃபைனஸ்ட் அட்வென்ச்சர் காமிக்ஸ் , ரெக்ஸ் தி வொண்டர் டாக் மற்றும் தி பாண்டம் ஸ்ட்ரேஞ்சர் உள்ளிட்ட அம்சங்களில் பணியாற்றினார் . [ 2 ]
1950களின் முற்பகுதியில், சை பாரி ஒரு மைக்காரராக மிகவும் பிரபலமாக இருந்தார், மேலும் அவர் சிறந்தவர்களில் ஒருவராக இருந்தார். யுனைடெட் ஃபீச்சர் சிண்டிகேட்டிற்கான டார்சன் காமிக் ஸ்ட்ரிப்பிலும் , கிங் ஃபீச்சர்ஸ் சிண்டிகேட்டிலிருந்து ஃப்ளாஷ் கார்டன் காமிக் ஸ்ட்ரிப்பிலும் அவர் தனது சகோதரர் டானுக்கு உதவினார். 1957 இல் வெளியிடப்பட்ட காமிக்ஸ் துண்டுப்பிரசுரமான மார்ட்டின் லூதர் கிங் மற்றும் மாண்ட்கோமெரி ஸ்டோரியை வரைய கேப் ஸ்டுடியோவால் அவர் பணியமர்த்தப்பட்டார். துண்டுப்பிரசுரத்தின் முதல் பதிப்பின் அட்டைப்படத்தில் பாரியின் கையொப்பம் தெரிந்தது, ஆனால் பின்னர் அச்சிடப்பட்ட ஒரு உரைப் பெட்டி அதை உள்ளடக்கியது. [ 4 ] ஆல்ஃபிரட் ஹாஸ்லர் மற்றும் பெண்டன் ரெஸ்னிக் ஆகியோரால் எழுதப்பட்டு , ஃபெலோஷிப் ஆஃப் ரிகன்சிலியேஷன் மூலம் விநியோகிக்கப்பட்ட தி மாண்ட்கோமெரி ஸ்டோரி , "நிகழ்வைப் பற்றி மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக அகிம்சை பற்றியும் இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுத்தது." பல தசாப்தங்களுக்குப் பிறகு, ஜார்ஜியா காங்கிரஸ்காரர் ஜான் லூயிஸின் மார்ச் முத்தொகுப்பை இந்த நகைச்சுவை ஊக்கப்படுத்தியது . [ 5 ]
1961 ஆம் ஆண்டில், கலைஞர் ரே மூருக்குப் பிறகு வந்த தி பாண்டம் கலைஞர் வில்சன் மெக்காய் இறந்த பிறகு , கிங் ஃபீச்சர்ஸ் அந்த ஸ்ட்ரிப்பை எடுத்துக்கொள்ள பாரியை நியமித்தார். மூன்று ஆண்டுகளுக்குள் பாண்டமின் வாசகர்களின் எண்ணிக்கை 900 க்கும் மேற்பட்ட செய்தித்தாள்களாக அதிகரித்தது, இதுவரை மிகவும் பிரபலமான பாண்டம் கலைஞராக மாறியது, ஹிஸ் பாண்டம் கதாபாத்திரத்திற்கு இதுவரை கண்டிராத யதார்த்தத்தையும் பாணியையும் சேர்த்தது. 1994 இல் ஓய்வு பெறும் வரை பாரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் இருந்தார். [ 2 ] பாரி அடிக்கடி பென்சில் கலைஞர்களைப் பயன்படுத்தி ஸ்ட்ரிப்பில் பணியாற்றினார், முதன்மையாக ஒரு மை வேலை செய்தார் , இருப்பினும் நேரம் அனுமதிக்கப்பட்டபோது அவர் பெரும்பாலும் முழு கதைகளையும் வரைந்தார்.
பாரியின் முதல் பாண்டம் தினசரி துண்டு ஆகஸ்ட் 21, 1961 அன்று வெளியிடப்பட்டது மற்றும் அவரது கடைசி துண்டு செப்டம்பர் 3, 1994 அன்று வெளியிடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமைகளில் பில் லிக்னாண்டேவுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டார். அவரது முதல் பாண்டம் ஞாயிறு பக்கம் மே 20, 1962 அன்று வெளியிடப்பட்டது, கடைசி பக்கம் செப்டம்பர் 18, 1994 அன்று வெளியிடப்பட்டது.
செயற்கை நுண்ணறிவின் நன்மையில் சில...
வணக்கங்கள் வாசக வாசகியரே..எந்தவொரு அறிவியலின் வியத்தகு முன்னேற்றத்தையும் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தினால் நல்ல பல ஆச்சரியங்களை நாம் சந்...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
ஆம் நண்பர்களே.. வருக.. வணக்கங்கள்.. லயன் காமிக்ஸ் வாட்ஸ் அப் சேனலில் வந்த எடிட்டர் திரு.விஜயன் அவர்களது அதிகாரப் பூர்வமான அறிவிப்பு.. மிக்க...
-
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. சில அரிய சித்திரக்கதை புத்தகங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற கனவ...






