சனி, 6 ஏப்ரல், 2013

காவியம் புகழும் கிழவி! கவசத்திற்குள் இரு ஆவி!



பாட்டியின் பக்தர்களே! பக்தைகளே! அனைவருக்கும் வணக்கம்!
 
நட்புக்கு பெருமை சேர்த்ததில் பாட்டி மிகச் சிறந்து விளங்குகிறார்! அவ்வைப் பாட்டியின் அன்பான அரசன் வள்ளல் அதியமானின் நட்பும் கருநெல்லிக் கனியும் தமிழ் கூறும் நல்லுலகு மறவா பாத்திரங்கள்! அரியதோர் கரு நெல்லிக் கனியினை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து பறித்தெடுத்த மன்னன் அதியமான் அதனை தானுண்டால் நீண்ட நாள் வாழலாம் ஆயினும் அதனால் தனக்கு என்ன பெருமை? அரிய தமிழ் பாடல்கள் மூலம் ஆருயிராம் தமிழை வளர்த்து மகிழும் தனது நட்புக்கு உரிய அவ்வைப் பாட்டிக்கு அதனை வழங்கி விடலாம் என்றெண்ணும் உயரிய குணம் தமிழ் மண்ணின் உபச்சார குணத்தினை காட்டி மகிழ்கிறது! 

அவ்வை பாட்டி அந்த நாட்களின் அற்புதமான அறிவுரைகளை தன் தமிழ் பாடல்களால் நிலைத்து நிற்க செய்த பெருமைக்கு உரியவள்! 
கண்ணகிக்கு சிலை வைத்துள்ள அதே மெரினா பீச்சில் நம்ம தலைவிக்கும் சிலை உண்டு! 
ஔவையார் என்னும் பெயரோடு இருந்தவர் இருவர். அவருள் முன்னவர் சங்க காலத்தவர். பின்னவர் கம்பர் காலத்தில் இருந்தவர். சங்கம் இருந்தது பற்றி சங்கத் தமிழ் மூன்றும் தா எனும் அவரது பாடலால் அறியலாம். ஔவையார் இயற்றிய நூல்கள் மூதுரை, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் , நல்வழி முதலியன. ஔவையாரின் பாடல் வரிகளில் முக்கியமான சில:
- சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்!
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று!
- சொல்லாமலே பெரியார் சொல்லிச் சிறியவர் செய்வர்
  சொல்லியும் செய்யார் கயவரே!
- கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு!
- மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி பெறும்!
- அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்! (ஆத்திச்சூடி)
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!
- உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம் மனையில் உண்ணாமை கோடி  பெறும்!
- கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்!
- கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக் கோடாமை கோடி பெறும்! மேலதிக விவரங்களுக்கு:
தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்ட தமிழ் நாடு தேர்வாணையம் வழங்கும் போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் பல கேள்விகள் தொகுப்பாக இங்கே கிடைக்கிறது நண்பர்களே!
http://tnpscguidance.blogspot.in/

அப்புறம்?
ஹாட் அண்ட் கூல் ஸ்பெஷல் கிடைச்ச நண்பர்கள் மகிழ்ச்சியோடு படித்து கொண்டு இருக்க நாம இங்கே கொஞ்சம் பாட்டி கதை பார்க்கலாமா?


பாட்டி சொல்லும் கதைகளில் எப்போதும் மறக்கவியலாத ஒரு பாடம் இருக்கும்! மனித மனங்களில் விளையாடிக்கொண்டு இருக்கும் ஆணவத்தின் சேட்டைகளை, அவற்றின் ஆட்டம் கடைசியில் எங்கு சென்று முடிகிறது! என்பதில் பாட்டி கதைகள் பாடம் சொல்லிக் கொடுக்கும்! "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்கிற உன்னத நீதியை அவளது கதைகள் வலியுறுத்தி முடிபவையாக இருக்கும்! அப்படித்தான் இந்த கதை ஒரு போராட்டக் களத்தில் துவங்குகிறது! வாயுவேக வீரர்கள் இருவர். அவர்தம் கொள்கைகளை நிலைநாட்டும் முகத்தான் போட்டி ஒன்றை துவக்கி மோதுகிறார்கள்! 

சர்.காரெய்ன் மற்றும் சர்.டாரண்ட் ஆகிய இரு வீரர்கள் சாகும் வரையில் மோதுவது என முடிவெடுத்து கையில் ஈட்டியுடன் ஆங்கிலேய முறைப்படி குதிரையில் இருந்து கொண்டு நேரடியாக முட்டிக் கொள்கிறார்கள். டாரண்ட் ஒரு வலிமை வாய்ந்த எதிரி என்று  காரெய்னின் காதலி அவனை எச்சரிக்கிறாள். அன்பே! நீ என் அருகில் இருக்கையில் மாமலையும் ஓர் சிறு கடுகாம்! எனவே அஞ்சாதே! என்று காரெய்ன் கூறிப் பாய்ந்து புறப்பட்டு களம் புகுகிறான்!  


ஈட்டிகள் பாய்கின்றன! தாழ்வான உயரத்தில் வலுவான இரு ஈட்டிகள் இடியென பாய்ந்து ஓசை எழுப்புகின்றன! 


அய்யகோ!! அந்தோ பரிதாபம்! காரெய்ன் வீழ்கிறார்! டாரண்ட் வெற்றிக் களிப்பில் அருகே நெருங்குகிறார்! பரவாயில்லை ! நான் நேருக்கு நேராக தரையில் நின்று போரிடுவேன் என்ற உறுதியுடன் மோதுகிறார் காரெய்ன்! 
 
புல்வெளியில் மின்னலென பளிச்சிட்டுப் பாய்ந்தன வாட்கள்! கவசங்களின் உராய்வு ஓசைகள் கோட்டையின் சுவர்களில் பட்டு எதிரொலித்தன! காரெய்னின் தலைக் கவசம் டாரண்டின் வாள் வீச்சின் முன்பு நிற்க முடியாமல் தெறித்து வீழ்கிறது! 
"வேறு ஒரு வீரனை காக்க நீ மோதினாய்! அவனைப் போன்று வீர மரணம் எய்த எண்ணுகிறாயா? இல்லை உனதருமை உயிருக்காக என்னிடம் உயிர்ப்பிச்சை கோரப் போகிறாயா?"_டாரண்ட்  
 "ஒரு வீரனாக என் கடமை என்னவென்றால், உனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன். ஒன்று, நீ வீரனாக உனதருமை உயிரை கௌரவமான முறையில் விடு! அல்லது உன் உயிரைக் காத்துக் கொள்ள நான் தோற்று விட்டேன் என்று கதறு!"_டாரண்ட். "அந்தோ! நான் இறந்து விட்டால் என்னருமைக் காதலி லேடாவை இழந்து விடுவேன் ஆகவே நான் தோற்று விட்டேன், விட்டு விடுகிறேன் என்று  காரெய்ன் தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறார்.  

நான் வாழ்வதே லேடாவுக்காகதான்! _காரெய்ன்
நீ நிச்சயமாகத்தான் சொல்கிறாயா? உன்னைப் போன்ற கோழையை அவள் விரும்புவாளா இல்லை என்னைப் போன்ற மாபெரும் வீரனை விரும்புவாளா? லேடா நீ என்ன சொல்கிறாய் ? _டாரண்ட் 
சில மணித்துளிகள் சென்றதும் லேடா தான் தேர்ந்து கொண்டவருடன் குதிரையில் விரைகிறாள்! ஏன் இப்படி செய்தாய் லேடா? என்று _காரெய்ன் புலம்ப, பெண்கள் வீரரையே விரும்புவர்! கோழைகள் விட்டுக்கொடுத்து தான் ஆகா வேண்டும் என்று டாரண்ட் சொல்லிச் செல்கிறார்! 


ஹீ! ஹீ ! ஹீ ! கண்ணுங்களா! நான்தான் கறுப்புக் கிழவி ஹெப்சிபா க்ரிம்! கதை இத்தோட முடிஞ்சிதுன்னு நடையைக் கட்டிடாதீங்க! சினிமால காட்டற மாதிரி ஆரேழு நூற்றாண்டுக்கு அப்புறமா லண்டன்ல, 

ஒரு பழம்பொருள் கடையில் ஜின்னி என்கிற பெண் குட்டி தன் அப்பாகிட்ட "இன்னொரு கவசமா அப்பா?" 
"ஆமா ஆனா இது ரொம்ப ஸ்பெஷல் ஜின்னி!" என்கிறார் அவளது தந்தை!  அந்த கவசத்தை ஒரு பாட்டுக்கு பரிசாகப் பெற்றதாகவும், அந்த கவசத்தின் உரிமையாளர் உண்மையில் சர்.காரெய்ன் பயன்படுத்தியது என்பதை அறியாமல் தூக்கிக் கொடுத்து விட்டார் என்று கூறுகிறார். இடைக்காலப் பாடல்களில் டாரண்ட்டிடம்காரெய்ன் தோற்று விட்டார் என்று உள்ளதே சரியா அப்பா!_ஜின்னி  
சரிதான்! துல்லியமாக சொல்லணும்னா டாரண்ட்டின் கவசம் கூட இங்கேதான் மேலே இருக்கிறது!_அப்பா 

அவர்கள் இப்போ ஒன்று  சேர்ந்தாச்சு! நான் இந்த இரு கவசங்களுக்கும் சேர்த்து மிக மிக அதிகமான தொகையைப் பெறுவேன்! இலண்டனில் உள்ள பழம்பொருள் சேகரிப்பவர் ஒருவரை நான் நாளைக்கு அழைத்து வருகிறேன்! 
 என்று கூறி கிளம்புகிறார் அவர்!
அன்றிரவு அகால வேளையை நோக்கி நிமிடங்கள் நகர்ந்தன. எங்கோ ஒரு ஆந்தை தின்ற எலி செரிக்காமல் அலறும் சப்தம்! தூர ஒரு நாயில் ஊளை ஓசை காதைக் கிழித்தது! வினாடிகள், நிமிடங்களாகின! நிமிடங்கள் மணித் துளிகளாயின! திடீரென ஏதோ ஒன்று நகரும் சப்தம்! நெஞ்சு படபடவென அடித்துக் கொள்ள சின்னி மாடியில் இருந்து இறங்கி வருகிறாள்! க்ரீச்! க்ரீச்! க்ரீச்! காலடியில் படிகள் நசுங்கின! இருளில் ஒரு உருவம் நிற்பதைக் கண்டு உற்று நோக்கிய சின்னி "டாரண்ட்டின் கவசம் கண்டிப்பாக தனது இடத்தில் இருந்து நகர்ந்து இருக்கிறது என்பதைக் காண்கிறாள்!


 மெல்லிய ஒளி என்னை ஏய்க்க முடியாது! அந்த கவசம் உள்ளே அவையின்றி நகர்ந்திருக்க முடியாது என்ற திட நம்பிக்கையுடன்,
 ஈ!ஈ! இன்னொரு பேயா?
டாரண்ட் _அடேய் பயந்தாங்கொள்ளி!

காரெய்ன்_நான் ஒன்றும் பயந்தாங்கொள்ளி அல்ல! நீ என்னை அவமதிப்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்!
 நிறுத்துங்கள்_ஜின்னி
முடியாது! என்னை கோழை என்றெண்ணும் இவனை விடமாட்டேன்! இவன் என்னை வீரன் என்று ஏற்கும் வரை போராடுவேன் _காரெய்ன்
உண்மையை மறுப்பதா? நீ கோழைதான் அதை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டேன்!-டாரண்ட் 


 ஜின்னியின் பயம் ஆர்வமாக மாறியது கண்ணுங்களா! யாரவது அடிச்சிட்டு செத்தா யாரு கேக்குறா? வேடிக்கைதானே பார்க்கிறீங்க! ஹீ! ஹீ! ஹீ!
 அவன்தான் கோழையாச்சே! அவனுக்கு எதுக்கு நீ ஆர்வமூட்டுறே?-டாரண்ட்
"அவர் ஒண்ணும் கோழையல்ல! தான் தோத்தா சக வீரர்களிடம் அவமானப்பட வேண்டியிருக்கும்னு தெரிஞ்சும் காதலுக்காக சண்டையில விட்டுக் கொடுத்தார்! காதலுக்காக வாழ்ந்த அப்படி ஒரு மனுசன்தான் எனக்கு கணவனா வரணும்! அப்படி ஒருத்தரைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்! "
ஜின்னியின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் முருங்கை மரம் ஏறுன கணக்கா ஆவிங்க ரெண்டும் வீரர்களின் சொர்க்கம் புகுந்தன! ஹீ! ஹீ! ஹீ! பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையெல்லாம் படிச்சிருக்கீங்களா கண்ணுகளா?

ஜின்னி தன்னோட அப்பாகிட்ட என்ன சொல்வா? அவா சொல்றதை அவளோட அப்பா நம்புவாரா?  ஹீ! ஹீ! ஹீ! மண்டை ஒட்டு சூப் காத்திருக்கு கண்ணுகளா! அப்புறமா கனவில கதை சொல்ல வாறேன்! திகில் கதைங்க படிச்ச ரசிகங்கள் ஒரு பயங்கரமான கதையை நம்ம விஜயன் சார்ட்ட கேளுங்க! நமக்கு கடுதாசி போடுவாரா பாப்போம்! (குறிப்பு ஈ மெயில் நமக்கு தெரியாது! வேணும்னா டெலிபதி பண்ணுங்க)  ஹீ! ஹீ! ஹீ! 

ஹாய் நண்பர்களே! திகில், முத்து, லயன், ஜூனியர் லயன், மினி லயன் வரிசையில் முத்து மினி காமிக்ஸில் வெளியான அட்டைப் படங்களைக் கண்டு களிக்க அணுகவும் முதலைப் பட்டாளம் வலைப்பூ! 
http://mudhalaipattalam.blogspot.in/2013/04/blog-post.html? நண்பர் கலீல் அவர்கள் முத்து மினி காமிக்ஸ் பற்றி வெளியிட்டுள்ள பதிவு! அனைத்து அட்டைப் படங்களையும் கண்டு இன்புறுங்கள்! நன்றிகள் திரு கலீல் அவர்களே! 
அகில உலக அதி பயங்கர தலைப்புகளை சுமந்துகொண்டு வந்த இந்திரஜால் காமிக்ஸில் வெளியான தமிழ் கதைகளின் தலைப்புகளை கண்டு அதிர "காமிக்ஸ் கடந்த பாதை"http://tamilcomicskadanthapaathai.blogspot.in/ நன்றிகள் ஸ்டாலின், சிபி அவர்களுக்கு!
http://nallapisaasu.blogspot.in/ யாரோ புனித சாத்தானாம் கண்டுகினு வந்துடுங்க! வாழ்த்துக்கள் சோமசுந்தரம் அவர்களே! இதை எல்லாம் அப்பப்போ குறுஞ்செய்தி பண்ணிடனும்! சரியா? 

என்றும் அதே அன்புடன்! உங்கள் நண்பர் ஜானி! 

13 கருத்துகள்:

  1. யாராவது ஜானிக்கு வேப்பிலை அடிங்க . .

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹீ ஹீ டயாக்!டயாக்!டயாக்!

    பதிலளிநீக்கு
  3. இதுக்குதான் ஈரோடு சர்வாதிகாரியின் வலைப்பூ பக்கம் போகாதிங்கன்னு சொன்னேன் .. பாருங்க காத்து லைட் ஆக அடிசுருக்கு ... என்ன தலைப்பு ? அப்பாப்பா ?

    ஓகே ...

    இந்த தலைப்பை விஜயன் சார் வரும் +6 இல் ஐந்தாவது புத்தகமாக வெளிவிட இருக்கும் கருப்பு கிழவி கதைகளுக்கு பயன்படுத்தி கொள்ள நான் சிபாரிசு செய்கிறேன் ...

    ஏன்னா தலைவரே ஓகே வா ? ?

    பதிலளிநீக்கு
  4. ஆமா ஒளவையாருக்கும் எப்ப சூனியம் வச்சாங்க? :)
    ஒளவையாரை நான் மறக்க முடியாது . ஈரோடு " ஒளவை சிறுவர் நூலகம் " எனது வாழ்க்கையை மாற்றியமைத்தது மறக்கமுடியாது. பல பெயர் தெரியாத காமிக்ஸும் அங்குதான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    நண்பர்களே ! கிழிவியை காதலிக்கும் முதல் காவலர் யார் தெரியுமா?

    பதிலளிநீக்கு
  5. நாகா அவர்களே கறுப்புக் கிழவிக்கும் காமிக்ஸ் உலகில் ஒரு தனி இடம் உண்டுங்க! அதிரடி ஆறில் ஒரு இடத்தை பிடித்தே ஆக கிழவி முடிவெடுத்தால் யாரால் தடுக்க முடியும்???????

    பதிலளிநீக்கு
  6. ஸ்டாலின் ஜி! "பாட்டிகளுக்கு பஞ்சமில்லை!" தலைப்பு ஓகே வா? நீங்களே பாட்டியின் பக்தன் என்பதை இங்கே பதிவு செய்து காதலர் பட்டத்தை வாண்டட் ஆக பதிவு செய்து விட்டீர்! வாழ்த்துக்கள்! காவலர்? ஓகே நீங்கள் ஒரு நீதிக் காவலர்தான் அதுக்காக குயிஸ் போட்டி வெச்சா விட்டுடுவோமா? ஹி ஹீ ஹி

    பதிலளிநீக்கு
  7. கறுப்பு ஆயாவை ரொம்ப பிடிச்சுகிட்டே போகுது. இதே மாதிரி கதைகளை போடுங்களேன். எழுத்து நடையும் மெருகேறி இருக்கிறது ஜானி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயாவை ஆதரித்தமைக்கு நன்றிகள்! ஆயா போகப்போகக் கலக்கி எடுப்பார்! அதுவும் லயனில், முத்துவில் வண்ணக்கலவையில் தன் எண்ணக்கலவையைத் தூவி நம்மை மகிழ்ச்சியிலும், பீதியிலும் ஆழ்த்துவாளெனப் பட்சி பலத்த குரலெடுத்து அலறுகிறது! ஹி! ஹீ! அது ஆந்தையாச்சே! அப்புறம் எழுத்து மெருகேறுகிற மாதிரி தெரிந்தால் அது தங்களது பெருந்தன்மையையே காட்டுகிறது ஜி! ஹி! ஹி! ஹி!

      நீக்கு
  8. //காவியம் புகழும் கிழவி! கவசத்திற்குள் இரு ஆவி!//

    Title Super

    பதிலளிநீக்கு
  9. நமது காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும்

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
    .

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் மன்னரே! புறாவுக்காய் தசையீந்த பெருமானே! புதிய ஆண்டு புத்தம்புது வளங்களை வாரி வழங்கட்டும்!

    பதிலளிநீக்கு
  11. நன்றிகள் நண்பரே! தங்களுக்கும் எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள்! உழைப்போம்! உயர்வோம்!

    பதிலளிநீக்கு

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...