சனி, 3 அக்டோபர், 2015

வீரகேசரி - ஒரு வித்தியாசமிகு விளம்பரம்.

வணக்கம் வாசக நெஞ்சங்களே.
இந்த விளம்பரத்தை ஏற்கனவே நமது வலைப்பூவில் அளித்துள்ளேன். இத்தனை காலமாக இந்தத் தொடரைத் தொடர் போன்றே கொண்டு வர எண்ணி இருந்தாலும் நேரமும் காலமும் சிறிதே சிறிது நீட்டி விட்டது, தாங்கள் அறிந்ததே. ஆனால் இந்த விளம்பரம் கூறும் செய்திகளை யாரெல்லாம் உற்று நோக்கி இருக்கிறீர்கள்?

*முதல் விளம்பரம் ராஜ ஸீமா என்று ஒரு தியேட்டர் இருப்பதாகவும் அங்கு சிவாஜி - ஜெயலலிதா நடித்த பட்டிக்காடா பட்டணமா என்ற திரைப்படம் விரைவில் திரையிடப்பட விருப்பதாகவும் என்றோ ஒரு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து இரண்டுகளில் ஒரு அக்டோபர் மாத வியாழனில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

*சற்று கீழே உற்று நோக்கினீர்கள் என்றால் நமது சித்திரக்கதை நாயகர்களில் குறிப்பிடத்தக்க பாத்திரமான டேஞ்சர் டயபோலிக்கின் ஆங்கில வண்ணப்படம் காலை பத்தரை மணிக்கு மட்டும் ராஜ ஸீமாவில் திரையிடப்படுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கவனித்தீர்களா? இது மிகவும் அரிதான ஒரு செய்திதானே? நமது நாயகன் அபாய மனிதன் டயபோலிக் நம் மண்ணையும் தொட்டுவிட்டுத்தான் இலங்கை சென்று இருப்பான் இல்லையா? அதன் பின்னரே லயன் காமிக்ஸ் மூலமாக 1987 வாக்கில், நாற்பத்து நான்காவது வெளியீடாக
வெளியாகி நம்மை இன்பக்கடலில் ஆழ்த்தி ஒரேயொரு முத்தான கதையுடன் வெகுகாலம் காக்க வைத்துப் பின்னர் இப்போது லயனின் புத்தம்புது அவதாரத்தில் அடிக்கடி சந்திக்கத் துவங்கி இருக்கிறான். 

*உடனடி  உலகில் அவசர அவசரமாக அள்ளி விழுங்கி அலுவலகத்துக்கு மூட்டைக் கட்டிக் கொண்டு ஓடிடும் இயந்திரத்தனம் நிறைந்த காலத்தில் வாசிப்பு என்பதும் வெறுமே இயந்திரத்தனமாக மென்று விழுங்கும் ஒரு சங்கதியாக மாறிக்கொண்டே வருகிறது.  எனவே வாசகர்களின் இரசிப்புத் தன்மையும்  -உடனடி வாசிப்பாகத் தேய்ந்து மறைந்து கொண்டே வருகிறது என்பதை இங்கு சுட்டிக் காட்டவே இதனை இங்கு குறிப்பிடுகிறேன். யாரையும் கலாட்டா செய்வதற்காக இல்லை. நமக்குத் தெரிந்த ஒரு நாயகனைக் குறித்து இதுவரை யாருமே மூச்சு விடவில்லையே நண்பர்களே? வாசிப்புத் தன்மை சாதாரண வாசகர்களிடம் இருக்கலாம். ஆனால் சித்திரக்கதை வாசிப்பு என்பது அதைவிட ஆழமானதொரு அனுபவம்தானே? அதன் முத்துக்களைக் கண்டெடுத்தவர்கள் இன்னுமின்னும் மின்னுவார்கள் என்பதுதான் நாம் காண்பது. அதனை மீண்டும் வளமாக்கிக் கொள்ள வேண்டுமாக நம் திசை இருக்க வேண்டும். உற்றுப் பார்த்துப் படிங்க மக்கா. ஹீ ஹீ ஹீ.

*அப்புறம் அந்த சிவாஜி-பத்மினி நடித்த படம் என்ன என்று யூகியுங்களேன்?

*வவுனியா போலீஸ் -வவுனியா காவல் நிலையத்துக்கு எதிரில் ஒரு கட்டிடம் விற்பனை விளம்பரம்.
*கொழும்பு மாநகர சபையின் வரி செலுத்தும் அறிவிப்பு என்று இந்தப் பக்கமே நிறைய தகவல்களைக் கொட்டுகிறதுதானே?

என்றும் அதே அன்புடன்-உங்கள் இனிய நண்பன் ஜானி.

   

1 கருத்து:

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...