சனி, 16 ஏப்ரல், 2022

029_மக்கபேயர்கள்_பகுதி_01_விவிலிய சித்திரக்கதை வரிசை

அனைத்து தோழமை உள்ளங்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த தினத்தை முன்னிட்டு இந்த விவிலிய சித்திரக்கதையினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். 
அனைவருக்கும் ஹேப்பி ஈஸ்டர்.. 
காமிக்ஸ் ஏலம் என்கிற மாய வலைகளில் ஆங்காங்கே சிறுசிறு நல்லவைகளும் இருக்கும். உங்கள் கனவு நூல்கள் கிடைக்கும். உங்கள் மனத்துக்குக் கடிவாளம் போட்டுக் கொண்டு உண்மையிலேயே ஏதேனும் ஒரு புத்தகம் வேண்டுமா? அது உங்கள் வாழ்க்கையில் அத்தனை தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றா என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து நாலா பக்கங்களிலும் நன்கு விசாரித்தறிந்து கொண்டு புதிதாக வரும் அத்தனை காமிக்ஸ்களுக்கும் உங்கள் ஆதரவை நல்கி பின்னரே உங்கள் கனவு புத்தகத்தை மாத்திரம் தேடி செல்லுங்கள். அதுவே உங்கள் பணத்துக்கும், மனத்துக்கும் நல்லது என்பதனை மாத்திரம் இப்போது இருக்கும் சூழலில் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.. 
சம்பவம்:001. என் 2005-2006 களில் அப்போதெல்லாம் இணையத்தில் முத்தமிழ் மன்றம் அண்ணன் ரத்தினகிரியார் மற்றும்  முத்து டிரை பாட் புகழ் முத்து விசிறியார் ஆகியோரின் பங்களிப்புகளும், கிரவுன் காமிக்ஸ் எனும் இணைய தளத்தில் சில ஸ்கான்களும் (ராணி காமிக்ஸ் இரத்தக் காட்டேறி_007) போன்றவைகளும்தான் எனக்கான ரிலாக்ஸ் டைம்ஸ்.. 
முகநூல் நட்பாக மலர்ந்த முதல் நட்பு அன்பு நண்பர் ஸ்ரீராமுடையது. அவர் உதவியுடன்தான் சித்திரக்கதையின் மாயவலை குறித்து அனைத்தையும் நான் அறிந்து கொண்டேன். அதற்கு முன்னர் என் நட்பு வட்டத்தில் ஓசி புக் படிக்கும் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் எல்லோரும் காமிக்ஸ் என்னும் கனவினை சிறு வயதிலேயே கைகழுவி விட்டவர்கள்தான். என்னை பலமாகக் கலாய்த்த பலரும் ஒரு கட்டம் வரை பார்த்து விட்டு இது திருந்தாது என்று தலையில் அடித்துக் கொண்டு  விலகியவர்களே.. 
சம்பவம்:002. சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் என்ற நண்பர் முகநூலில் தைரியமாக தனது கருத்துக்களை சொல்ல ஆரம்பித்த வேளை. அவரைக் கலாய்க்கிறேன் பேர்வழி என்று ஒரு சிலர் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்த வேளை.. சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். தனது இல்லத்துக்கே வரவழைத்து உபசரித்தார். அது மாத்திரமல்ல நண்பர்களே.. நான் கனவு கண்டு கொண்டிருந்த என் தேடல் இதழான முதல் ராணி காமிக்ஸ் இதழ் அழகியைத் தேடி.. அதனை அன்பளிப்பாக எடுத்துக் கொடுத்தே விட்டார். 
சம்பவங்கள் 003 தொடங்கி -இன்பினிட்டி(கால எல்லை கடந்தது)
எத்தனை எத்தனை நண்பர்கள்.. எத்தனை எத்தனை புத்தங்கங்கள்? காமிக்ஸ்கள்? நல்ல மனங்கள்? நிஜமாகவே காமிக்ஸ் குறித்து நான் சிலாகிப்பது என்னவென்றால் எனக்குக் கிட்டிய ஒவ்வொரு நட்பும் எனக்கு இறைவன் கொடுத்த வரமே.. எஸ்.. இதனைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் எனக்குக் கிட்டியதோர் அரிய வரமே..  மறக்க இயலாத நல்ல, நேர்மறையாளர்கள் நிறைந்த இடம் காமிக்ஸ் வட்டாரம். மற்றவை உங்கள் கைகளில்தான் இருக்கிறது. பார்த்துப் பழகி மகிழுங்கள். 
நன்றியுடன் நான்..     
இனி புத்தகத்துக்குள் புகலாம் வாருங்கள்.. 
உங்கள் நன்மைக்காக இறுதியில் வழக்கம்போல பிடிஎப் லிங்க் கொடுத்திருக்கிறேன்..  







இந்த நூலை பிடிஎப் வடிவில் வாசிக்க:

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...