வெள்ளி, 22 ஏப்ரல், 2016

கணத்தின் கீற்றில்...

பிதுங்கிய சிந்தனையில்
கசங்கிய மூளையில்
கருவுற்ற பிழையுற்ற
காகிதக் குப்பைகளைக்
கதை, கட்டுரை, கவிதையெனக்
கிறுக்கிக் கசக்கிக்
கிழித்தெறிந்தேன்!
கணத்தின் கீற்றின்
மின்னி மறையும்
வெளிச்சத்தில் கண்டேன்
ஒரு தரிசனம்
நெகிழ்ந்தேன் நான்.
என்னைச் சுற்றிலும்
காகித மலர்கள்!
இறைவா! ஆசீர் அளித்த
உனக்கு நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...