செவ்வாய், 2 ஜூலை, 2019

வருமா மீண்டுமொரு மழைக்காலம்...?

காய்ந்து போன குளங்களே...நிரம்பி வழிவதெக்காலம்...?
துள்ளித் திரிந்த மீன் கூட்டங்களே.. மறுஜென்மம் கொள்வதெக்காலம்...? தீய்ந்து போன பாசிகளே..
விழித்தெழுந்தும் உயிர்ப்பூப்பதெக்காலம்..?
பாய்ந்திரை கவ்விடும் மீன்கொத்திகளே..உங்கள் வயிறுநிறைவதெக்காலம்...?
கும்மாளம் போடும் தவளைகளே...உங்கள் பாடலைக் கேட்பதெக்காலம்...?
எழும்பி அடங்கும் அலைகளே...
உங்கள் வளைவுகளில் இதயம் தொலைப்பதெக்காலம்?
மிதக்கும் பூச்சிக்கூட்டங்களே..
உங்கள் இறகொலி கேட்பதெக்காலம்?
உயிரை ஈயும் மாமழையே நீ தரணியேகுவதெக்காலம்...
விரைந்து வருவாய் நானிலம் நனைப்பாய்... உயிர்களைக் காப்பாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...