செவ்வாய், 15 ஜூன், 2021

**ஆவலுடன்...**_ஜானி சின்னப்பன்



நீ இல்லாத 

என் சாலைகள் 

எப்போதும் வெறிச்சோடியே கிடக்கின்றன..


உன் சுவாசம் படிந்த

உற்சாகக் காற்று கிடைக்காமல்

ஒவ்வொரு மரமும் உணர்கிறது 

என் தவிப்பை..


உன் கலகலப்பான

சிரிப்போசை கேட்காத குருவிகள் தம் பாட்டுக்கு மெட்டமைக்க முடியாமல்

மௌனமாகின்றன..


ஈரப்பதம் மிக்க உன் கண்களின் தயவின்றி

இலைகளின் நீராவித் துளைகளில்

பாலைவனக் காய்ச்சல்..


நிலைமை இன்னும் மோசமாவதற்குள் ஒரு முறை இவ்வழியே கடந்து

போய் விடேன்..


உன் வரவுக்காய் ஆவலுடன்..


_ஜானி சின்னப்பன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பன் நினைத்தால்.. _ஜானி..

  நண்பன் நினைத்தால்.. கதை ஜானி.. ஓவியம் சேட் ஜிபிடி. ஒரு சிறிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், நீர் நிறைந்த குளம், காற்றில் மெல்ல ஆடும் தென்...