வெள்ளி, 25 ஜூன், 2021

**அக்கறை எனக்கேதடி?**_ஜானி சின்னப்பன்

 



காற்றிடை வெளியாய்... 

மரத்திடைக் கனியாய்.. 

அந்திச் சூரியனின் அழகாய்.. 

மாலை நேரத்தின் இதமாய்.. இலையிடை நரம்பாய்... 

வேருக்குள் ஓடிடும் நீரோட்டமாய்..

என் இதயத்தில் என்றுமே 

ஓடும் உன் நினைவாய் 

சலசலக்கிறது என் வாழ்வின் ஓடை.. 

உன் பிரிவின் நினைவடுக்குகள் மேலெழுகையில் என் விழிநீர் 

கசியும் மெல்லிய  ஓசை 

இந்த ஆர்ப்பரிப்புகளுக்குள் 

புதைந்து போகிறது.. 

விதியின் சதிகளை.. 

மதியின் மூர்க்கங்களை.. 

என்னுள் ஆழ விதைத்துக் கொண்ட நம் நிழல் நினைவுகளை 

அமைதியின் ஆழத்துக்குள் மௌனத்தோடு அசைபோடுகிறேன்.. ஓடட்டும்...

விநாடிகள்..

நிமிடங்கள்..

நாட்கள்..

ஆண்டுகள்.. 

இவற்றின்மேல் அக்கறை எனக்கேன்?  

_ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...