செவ்வாய், 29 செப்டம்பர், 2015

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 072-73_ A Rare Srilankan Tamil Comics!

வணக்கம் தோழமை உள்ளங்களே!
வாழ்ந்தது போதுமா? வின் 10.01.1973 புதன் கிழமை வெளியான எழுபதாவது அத்தியாயம் இங்கு தொடர்வது வெள்ளிக்கிழமை எழுபத்து இரண்டாவது பாகத்தில் இருந்து. அந்த 11.01.1973 வியாழன் கிழமை வெளியான  எழுபத்து ஒன்றாவது பாகம் கிடைக்கப் பெறவில்லை. வீர கேசரியிலும் இது குறித்து தகவல் சேகரிக்கும் பணியை நண்பர் திரு. அபிஷேக் அவர்கள் மேற்கொண்டார். ஒருவேளை எதிர்காலத்தில் யாரிடமாவது இருந்து கிடைத்தால் நாங்கள் பகிர்கிறோம். இந்த அரிய முயற்சியில் உங்கள் தேடல் பங்கும் தேவை தோழர்களே. 
நாம் ஆவணப் படுத்துவது நம்மோடு நில்லாமல் எதிர்காலத்துக்குக் கொண்டு செல்லும் புனிதமான பணியாகவே இதனை மேற்கொண்டு வருகிறோம். ஒருவேளை உங்கள் வசம் அந்த இழந்த பாகம் கிடைத்தால் கொடுங்கள் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

 எழுபத்து ஒன்றாவது அத்தியாயத்தில் நம் சிங்  ஜெயஸ்ரீயிடம் அவளது மர்மத்தலைவன் யார் என்று கேட்டிருப்பான். அப்போது மறைவிடத்தில் நடந்தது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மர்மத்தலைவன் தன்னை வெளிப்படுத்தி சிங்கை அதிர வைத்திருப்பான். அதிர்ச்சி அடைந்த சிங் அதிர்ச்சி மிக்க விழிகளால் யார் நீ என்று கேட்க, கதை தொடர்கிறது. 

என்றும் அதே அன்புடன் சீக்கிரமே கேசரி கிண்டும் முயற்சியில் உங்கள் இனிய நண்பன் ஸ்பைடர் மேன் ஹி ஹி ஹி அவனது இரசிகன் ஜானி!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...