சனி, 29 மார்ச், 2025

ஆசிரியர் திரு.எம்.சௌந்தரபாண்டியன் _அஞ்சலி

சிற்றிலக்கிய வகையான சித்திரக்கதைகள் வெகுஜனப் பார்வைக்கு வருவதும் கால ஓட்டத்தில் நிலைத்து நிற்பதும் பெரிய சவாலான நாட்கள் அவை. இந்திரஜால், அம்புலி மாமா போன்ற பெரும் பத்திரிக்கைகளுக்கு இணையாக தமிழில் களமிறக்கி சிவகாசி மண்ணுக்குப் பெருமை தேடித்தந்த முத்து காமிக்ஸின் புகழுக்கு காரணமான பெரியவர் திரு.சௌந்தரராஜன் இறைவனடி சேர்ந்து விட்டார். அவருக்காக இறைவனை வேண்டுவோம். 


திரு.ஜெயமோகன் தனது கட்டுரையில்

 முத்து காமிக்ஸ் நூல்களை நான் என் எட்டாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறேன்இன்றும்கூட மாதம் ஆயிரம் ரூபாய்க்கு அந்நூல்களை வாங்கிவிடுகிறேன்மூளை சூடாகாமல்இயல்பாக வாசிக்கத்தக்கவைவணிக எழுத்தின் சில்லறைப் பாவனைகளும் அற்றவைநம்மை சிறுவனாக உணரச்செய்பவைகுறிப்பாக நான் டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகன்என் நண்பர் கடலூர் சீனுஜா.ராஜகோபாலன் எல்லாருமே முத்து காமிக்ஸ் ரசிகர்கள்தான்.

ஐரோப்பிய ,அமெரிக்க காமிக்ஸ்களின் ஓவியச்சட்டகங்கள் மிகத்தேர்ச்சி கொண்டவைசினிமா எனக்குச் சலிப்பூட்டுகிறதுஅதில் நான் கற்பனை செய்ய ஏதுமில்லைஆனால் காமிக்ஸ் ஒரே சமயம் காட்சியனுபவமாகவும்என் கற்பனையைத் தூண்டும் வாசிப்பனுபவமாகவும் உள்ளதுஆகவேதான் இந்த மோகம்.

முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன் மறைந்தார்அவருக்கு அஞ்சலி.

என தெரிவித்துள்ளார். சித்திரக்கதை வாசகர்களை துயரத்தில் ஆழ்த்தி மறைந்த ஐயா திரு.சௌந்தரபாண்டியன் தன் இறுதி மூச்சுவரை சித்திரக்கதைகளையே சுவாசித்தவர். மிக சமீபத்தில் ஒரு வாட்ஸ் அப் குழு அவருக்காக உருவாக்கப்பட்டிருந்தது. அதில் சித்திரக்கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்து தெரிவித்துக் கொண்டே இருப்பார். அந்த தீபத்தை தொடர்ந்து ஏந்திப் பயணிக்க வாசகர்களும் லயன் குடும்பத்தாரும் சித்திரக்கதை நேயர்களும் தயாராகவே இருப்பார்கள். அவரது கனவு என்றுமே இளமையாக இனிமையாக அன்னாரது நினைவுகளுடன் தொடரும்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நியாயம்தானே?!?

 ஒரு மனுஷன் உயிரோடு இருக்கும் போது, நமது ஊடகங்களை பெரும் உறக்கம் ஆட்கொண்டு விடுகிறது!  50 ஆண்டுகளைத் தொட்டு நின்ற 2022-ல்.... அல்லது பொன்விழ...