செவ்வாய், 24 மார்ச், 2020

*கொரோனா கோரங்கள்..*


மனப்பயம் 
அகற்றவே
முகத்திரை
தேடியலையும்
மாந்தரை
முகத்திரை
இல்லையென
தவித்தலைய
திண்டாடித்திரிய
அலைக்கழித்து
மறைத்திடும்
வியாபாரக்
கள்ளர்தம்
லாபநோக்கைக்
கண்டேன்..

கோர நோயின்
பிடியிலே
ஏழை
மாந்தர்தமை
மாண்டுபோக
கைவிட்டால்
நாளை 
நமக்கும்
வரும் கேடென
உணர்வீர்..
இன்றதை
பணமாய்
மாற்றத் துடிக்கும்
அறிவிலீர்...
-ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

V 24-எழுந்து வந்த எதிரி _ராபின் சாகசம்

வணக்கம் நண்பர்களே.. இது வி காமிக்ஸின் இருபத்து நான்காவது சாகசம். ரூபாய் நூறு விலையில் நூறு பக்கங்களில் தீபாவளி மாதமான இந்த அக்டோபர் 2025ல் ...