சனி, 7 மார்ச், 2020

*ப்ரியமானவளுக்கு...*_ஜானி சின்னப்பன்



சுடாதே
தென்றலே
சுட்டபின்
காயங்கள்
ஆறாதே..

உன் வார்த்தை
பாயுதே அம்பாய்
நீயே பெரும்
தீப்பிழம்பாய்..
ஈரம் கசிகிறது
இதயத்தில்..

கலங்குகிறது
கண்கள்..
இமைகள்
அதை மூடி
அழுகை மறைத்ததே..

வார்த்தைகள்
புரிதல்கள்
நிதர்சனம்
அனைத்துமே
அற்பமே
அன்பே
உன் இருப்பே
என் உயிர்ப்பென்று
உணர்வாயோ
உயிரே..

நமக்குள் ஏனடி
வம்பு?
வாய்ச்சொல்
வீரியத்தால்
உனை இழக்க
எனக்கேதடி
தெம்பு?
துயரத்தைத்
தூக்கிப்போட்டு
சேர்ந்தே வாசல்
மிதிப்போம்..

மௌனத்தின்
அமைதியின்
தனிமையின்
ஒன்றிப்பில்
களித்திருப்போம்..

வேண்டாமடி
முறிவுகள்..
கட்டுப்போட்டு
இறுக்கம்
சேர்த்து
பிரிவை
பிரிந்தோட
செய்வோம்..
வா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...