புதன், 30 செப்டம்பர், 2020

305~The Three Musketeers 2011




அலெக்ஸாண்டர் டூமாஸின் புகழ் பெற்ற நாவல் இது. ஆர்தோஸ், போர்த்தோஸ், அராமிஸ் ஆகிய மூவரும் தான் மூன்று மஸ்கட்டீர்கள். இவர்களைத் தவிர கதையின் இளவயது நாயகன் ஒருவன் இருக்கிறான். அவன் தான் ஹீரோ. பழைய மஸ்கட்டீர்களை மிலேடி ஒரு முக்கியமான சமயத்தில் ஏமாற்றிவிட்டு எஸ்கேப்பாக, அதன் பிறகு ஹீரோ தானும் மஸ்கட்டீராவேன் என்று கிளம்புகிறான். ஒரு சமயம் மூன்று மஸ்கட்டீர்களோடு அரசிற்கு எதிரான ஆட்களுடன் சண்டையிட்டு அவர்களுடன் ஒட்டிக் கொள்கிறான். அதன் பிறகு ராணியில் வேலைக்காரியாக இருக்கும் சூப்பர் பிகர் கான்ஸ்டன்ஸை கண்டதும் காதலிக்க ஆரம்பிக்கிறான். ப்ரான்ஸ் ராணிக்கும் பக்கிங்ஹாம் ராஜாவுக்கும் காதல் அவர் ராணிக்கு பரிசாய் ஒரு வைர அட்டிகையை கொடுக்க, அதை மிலேடி கும்பல் கடத்திப் போய்விடுகிறது. அதன் பின்னணி பக்கிங்ஹாமுக்கும், ப்ரான்ஸுக்குமிடையே சண்டை மூட்டுவதற்காக. ராணி பதறிப் போய் மூன்று மஸ்கட்டீர்களை கூப்பிட்டு அதை திரும்ப காப்பாற்றி வர சொல்லுகிறாள். அவர்கள் காப்பாற்றினார்களா? இல்லையா என்பதுதான் கதை.


அபாரமான ஒளிப்பதிவு. சிஜி ஒர்க், ப்ரம்மாண்டமான மாளிகைகள், செம ரிச்சான ப்ரொடக்‌ஷன் வேல்யூ, என பிரம்மாண்டம் காட்டியிருக்கிறார்கள்.

சுருக்கமா சொல்லலும்னா நம்மூர்ல டைரக்டர் சங்கர் படம் மாதிரி.!


லாஜிக்கை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு ஜாலியாய் ரசிக்க வேண்டிய படம் இது.

படம் தொடங்கி கொஞ்ச நேரம் கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை..

அப்பறம் போகப் போக பட்டய கௌப்புது.

இதோட ரெண்டாம் பாகம் 2013-ல ரிலீசாகி இருக்கு..

ஆனா தமிழ்ல இல்ல.

இது போன்ற திரைப்படங்களை இரசிக்க நண்பர் குணாவின் பெருமுயற்சியில் உருவான தமிழ்மினிக்கு வாருங்கள்..

லிங்க்..

t.me/tamilminitamil


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...