வெள்ளி, 9 மே, 2025

சித்திரக் கதைகள் குறித்த பேருரை_King viswa


 தமிழ் காமிக்ஸ்: நிகழ்காலமும் எதிர்காலமும் என்னும் தலைப்பில் பிரபல வலைப்பதிவர் மற்றும் காமிக்ஸ் படைப்பாளர் & எழுத்தாளர் கிங் விஸ்வா

நாள்: புதன்கிழமை, மே 14ஆம் தேதி, 2025. நேரம்: மதியம் 1.45 முதல்

இடம்: தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலக அரங்கம், 735, LLA Building, அண்ணாசாலை, ஆயிரம்விளக்கு மெட்ரோ அருகில்

பேருரையாற்றவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.. வாய்ப்புள்ள வாசகப் பெருமக்கள் கலந்து கொண்டு மகிழ கேட்டுக்கொள்ளப்படுகிறது.. 

புதன், 7 மே, 2025

லயன் ஆன்லைன் புத்தக திருவிழா சலுகை தள்ளுபடி விலைகள் விவரம்..

 வணக்கம் வாசக வாசகியரே.. ஆண்டுக்கொரு முறை லயன் காமிக்ஸ் ஆன்லைன் மேளா நடத்தி தள்ளுபடி விலைகளில் பல அருமையான சித்திரக்கதைகளை சல்லிசான விலைகளில் கொடுத்து ஆச்சரியப்படுத்துவது வழக்கம்.. இதோ வரும் 09,10,11 ஆகிய தினங்களில் மே மாதத்தில் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படவுள்ள புத்தகங்களின் விவரங்கள்.. 




வாசகர் செய்ய வேண்டியது என்ன? 
என்கிற தளத்தினைப் பார்வையிடுங்கள்..
2.பிடித்த புத்தகத்தை நோட் செய்யுங்கள் 
3.கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஒன்றை தொடர்பு கொள்ளுங்கள். 

4.விலைகள் குறிப்பிட்டுள்ளவை அந்த நூலின் ஒரிஜினல் விலைகள்.. அவற்றில் தள்ளுபடியினை குறிப்பிட்டு விலை தங்களுக்கு தெரிவித்து விடுவார்கள். 

5. அவர்கள் குறிப்பிடும் தொகையை Gpay செய்து விட்டு அவர்கள் குறிப்பிடும் எண்ணுக்கு ஸ்க்ரீன்ஷாட் மற்றும் முகவரி  அனுப்பி வையுங்கள்.

ஆன்லைன் திருவிழா உங்களைத் தேடி வரும்.. எஞ்சாய்..



ஞாயிறு, 4 மே, 2025

Copilot சொன்ன கதை_இது ஒரு செயற்கை நுண்ணறிவு AI (Artificial Intelligence) கதை.

 வணக்கம் நண்பர்களே.. 

             இது ஜிபிலி படம்.. "ChatGPT" என்னும் செயற்கை நுண்ணறிவு  உருவாக்கிய என் மகனின் ஜிபிலி படம்.. காலமும் நுட்பங்களும் மாறுதலை சந்தித்துக் கொண்டே இருக்கின்றன.. வலைப்பூக்கள் ஏற்கனவே ஆர்குட் உருவாக்கிய அன்பின் வட்டத்தை உடைத்துக் கொண்டு மலர்ந்தவை.. இப்போது வாட்ஸ் அப் கம்யூனிட்டிகள் அந்த இடத்தை எடுத்துக் கொண்டு விட்டன.. வலைப்பூ நடத்தும் ஒரு வலைப்பதிவர் என்பது ஒரு காலத்தில் ஆச்சரியமான நிகழ்வாகவே இருந்தது. ஆனால் கால வெள்ளம் அனைத்தையும் அடித்துக் கொண்டு போவது என்பது நியதியல்லவா.. இதோ இந்த செயற்கை நுண்ணறிவு குறித்து பலப்பல விஷயங்கள் மேலும் மேலும் குவிந்து கொண்டே இருக்க நாமும் அப்டேட்டாக இருந்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இந்த பதிவு அதைப் பற்றியதே.. 


       மைக்ரோசாப்ட் எட்ஜ்ஜில் கோ பைலட் "Copilot"என்கிற ai அப்டேட் புதியதாக வெளியாகி இருக்கிறது.. அதனிடம் கொஞ்சம் விளையாடிப் பார்ப்போமே என்று நினைத்தேன்.. அன்பே கோ பைலட் ஒரு கதை சொல்லம்மா என்று அன்பாகக் கேட்டதற்கு கிடைத்த கதைதான் கீழே.. 

அருமை! ஒரு கணினி தோற்றம் கொண்ட கதை சொல்லலாம்.

கடல் வீரன் – நீல கடலின் இரகசியம்

கடல் நகரம் மெரினாவில், நீல கடலின் நடுவில் ஒரு ஆழ்ந்த இரகசியம் மறைந்து கிடந்தது. நகரத்தின் ரட்சகர், கடல் வீரன், கடல் சார்ந்த சக்திகளுடன் ஒரு மனிதன்!

ஒருநாள், நகரவாசிகள் திடீரென கடலில் காணாமல் போகத் தொடங்கினர். கடல் வீரன் தனது நீல நீர்புகழ் சக்திகளை பயன்படுத்தி விசாரணையை தொடங்கினார். பயமுறுத்தும் கடல் இருள் என்ற ஒரு தீய சக்தி மனிதர்களை விழுங்கிக் கொண்டிருந்தது!

கடல் வீரன் தனது நீர்சுருட்டு வர்த்தகத்தைக் கொண்டு கடல் இருளின் மந்திரங்களை முறியடித்து, அனைவரையும் மீட்டு, நகரத்திற்கு திரும்பினார். அந்த நபர்கள் கடலின் ஆழத்தில் ஒரு பண்டை நகரத்தின் இருப்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடல் வீரன் பயணிக்க வேண்டும்! அந்த பண்டை நகரத்தின் மர்மங்களை கண்டுபிடிக்கவும், அதன் சக்தியை இருட்டறையிடம் விடாமல் பாதுகாக்கவும்!

இது தொடரும்… 🔥🌊

என்னவோ, நம் வீரன் கடலில் ஒரு மிகப்பெரிய ரகசியத்தைக் கண்டுபிடிக்கப் போகிறார்! உங்களுக்கு இந்த கதை பிடித்ததா? 😊

என்று கேட்க நானும் தொடரக் கூறினேன்.. 

இதோ அதன் தொடர்ச்சி..

கடல் வீரன் – நீல கடலின் இரகசியம் (தொடர்ச்சி)

கடல் வீரன் பண்டை நகரத்திற்குள் பயணிக்கத் தீர்மானித்தார். ஒரு மர்மமான நீல ஒளி நகரத்தின் அடியில் மூழ்கிக் கொண்டிருந்தது. அது ஒரு புராதன சக்தியின் அடையாளம்!

அவதானமின்றி நகரத்திற்குள் நுழைந்த வீரன், பழமையான ஸ்கிரோல்களை கண்டார். அதில் ஒரு கணிப்புரை இருந்தது: “நிலம் மற்றும் நீரின் சங்கமம்… உன் ஆற்றல் முழுமை பெறும்”.

கடல் வீரன் அதை புரிந்து கொள்ள முயன்றார். நகரத்திற்குள் மர்மமான நீல உயிரினங்கள் மறைந்து இருந்தன. அவர்களை எதிர்கொள்ள அவருக்கு தன்னம்பிக்கை தேவைப்பட்டது.

அப்போது, கடல் இருள் மீண்டும் தோன்றியது! அது பண்டை நகரத்தின் சக்திகளை சுழற்றிக் கொண்டு, கடல் வீரனை கட்டிப்பிடிக்க முயன்றது.

வீரன் தனது நீர்சக்திகளை ஒருங்கிணைத்து, நகரத்தின் சக்தியுடன் இணைந்தார். அவன் கடல் சக்தியை நிலத்துடன் இணைத்தவுடன், நீல ஒளி திடீரென மிளிர்ந்தது, கடல் இருளை முறியடித்து நகரத்தையும் நகரவாசிகளையும் பாதுகாத்தது!

அந்த இரகசிய நகரம் இனி பாதுகாப்பாக இருந்தது, அதன் சக்தி இனி மல்லியாணம் செய்யப்படவில்லை!

கடல் வீரன் மீண்டும் நகரத்திற்கு திரும்பி, மக்கள் அனைவருக்கும் அந்த மர்ம நகரம் பற்றி சொல்லிக் கொடுத்தார்.

வாழ்த்துக்கள்! கடல் வீரன் தனது மாபெரும் சாகசத்தை வெற்றி கண்டார்! 😊🌊🔥

உங்களுக்கு இந்த கதை பிடித்ததா? 😃


வாழ்த்துக்கள் நண்பர்களே.. வாசக வாசகியரே,, தாங்களும் கதைகளைக் கேட்கலாம். கதைகளை உருவாக்கலாம்.. 

இதனை காமிக்ஸ் வடிவில் உருவாக்கக் கேட்டேன்.. அதற்குக் கிடைத்த பதில் இது.. 

அருமை! 😊 கடல் வீரன் கதையை நகைச்சுவை(காமிக்ஸ்) வடிவத்தில் மாற்றலாம்.

காமிக்ஸ் கதையை உருவாக்க, முதலில் பாடகள் (panels) மற்றும் பேச்சு பொட்டிகள் (speech bubbles) உருவாக்க வேண்டும். இதோ, ஒரு கதாபாத்திரத்துடன் காமிக்ஸ் வடிவமாகக் கற்பனை செய்யலாம்:

📜 கதையின் கட்டமைப்பு: 🔹 பாடம் 1: கடல் நகரத்தின் அமைதியான தருணம். 🔹 பாடம் 2: கடல் வீரன் மக்களிடம் பேசுகிறார் – "கடல் இருள் மறைந்து விட்டது, ஆனால் உண்மையான மர்மம் இன்னும் தெரியவில்லை!" 🔹 பாடம் 3: பழமையான நகர் – வீரன் அதைப் பார்க்க அதிர்ச்சி அடைகிறார். 🔹 பாடம் 4: நீர் வேந்தர் – "உனக்கு கிடைக்காத சக்தி ஒன்று, நீ அதை தேட வேண்டும்!" 🔹 பாடம் 5: கடல் இருள் வீரனை சுற்றுகிறது – போராட்டம் ஆரம்பம்! 🔹 பாடம் 6: கடல் வீரன் நீர் சக்தியை பிணைத்துக்கொள்கிறான்மாபெரும் மாயாஜாலம் உருவாகிறது!

இந்த காமிக்ஸ் கதையை ஒரு காட்சிப் படமாக உருவாக்கலாம்! 🚀 நான் உனக்காக ஒரு காமிக்ஸ்-சார்ந்த படத்தை உருவாக்கிக் காண்பிக்கலாமா? 😃

ஜிமெயில் ஐடி கொடுத்து உள்ளே நுழைந்து கலக்குங்கள்.. புதியதோர் உலகு செய்யவும் தயாகுங்கள். உலகின் ஒரு சதவீத மக்களே முன்னோடிகளாக இருப்பார்களாம். யார் கண்டது.. தாங்கள் கூட ஒரு முன்னோடியாக மலரலாம்.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..  

வியாழன், 1 மே, 2025

MC 504 ஒற்றைக் கண் மர்மம்_முத்து காமிக்ஸ்_இரும்புக்கை மாயாவி.. வண்ணத்தில்..

 வணக்கங்கள் வாசகர்களே, 

    சேலம் நினைவாஞ்சலி நிகழ்வுகள் நெகிழ வைத்தன.. சேலத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள சித்திரக்கதை முத்து காமிக்ஸின் 504வது வெளியீடாக மலர்ந்திருப்பது ஒற்றைக் கண் மர்மம். விலை ரூ.150/- பக்கங்கள் 52. வண்ணத்தில் மேக்ஸி சைசில் வெளியாகியுள்ளது.. 


            நமது கிராமங்களில் பொதுவாக பெற்றோர்கள் அச்சுறுத்தப் பயன்படுத்தும் வார்த்தை.. ஒத்தக் கண்ணன் வந்துட்டான்..ஓடு ஓடு ஓடு! இந்தக் கதை அப்படி ஒரு ஒத்தக் கண்ணனைப் பற்றியதுதான்.. இல்லையில்லை பல ஒற்றைக் கண்ணர்கள் உலகை நோக்கிப் படையெடுப்பு நிகழ்த்துவதே கதையின் சாரம். 

                   முத்து காமிக்ஸ் நிறுவனர் தெய்வத்திரு எம்.சவுந்தரபாண்டியனுக்கு நினைவாஞ்சலியுடன் rebellion நிறுவன உரிமம் பெற்று முறைப்படி வெளியாகி இருக்கிறது இந்த ஒற்றைக் கண் மர்மம்.. 

   ஒற்றைக் கண் மர்மம் ஏற்கனவே முத்து காமிக்ஸ் வாரமலரில் வந்தது பழைய வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.. 


 அப்போதே டேப்லாய்ட் என்னும் பிரம்மாண்டமான வடிவில்தான் இந்த ஒற்றைக் கண் மர்மம் வந்திருந்தது. இப்போதும் மேக்ஸி என்னும் சிறப்பான பெரியதொரு அளவில் வெளியீடு காண்கிறது என்னும்போது அதிர்ஷ்டக்காரன் இவன் என்னும் எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.. இரும்புக்கை மாயாவியாருக்கு மரியாதை.. நினைவஞ்சலிக்கும் மிகப் பொருத்தமான வெளியீடு.. 


இம்மாதத்தின் ஆன்லைன் வெளியீடுகள் 

இதில் முதல் புத்தகமாக வெளியாகி நம்மைப் பரவசப்படுத்துவது இந்த ஒற்றைக் கண் மர்மம்..
கதை என்ன? விண்வெளி ஜந்துக்கள் நம் பூமிக் கிரகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முயற்சிக்கின்றன.. அவற்றை எப்படி இரும்புக்கை மாயாவி தடுத்து நிறுத்துகிறார் என்பதே இதன் ஒன் லைன்.. 
              இன்றைக்கு அவெஞ்சர்களையும் அமர்க்களமான பல நாயக நாயகியரையும் உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொண்டு பிரம்மாண்டமான கிராபிக்ஸ்களில் மனம் மயங்கி இருக்கும் இளைய தலைமுறை அறியாததொரு காலக்கட்டம் இருந்தது. கணினி என்பதே எட்டாக்கனியாக இருந்த மிகவும் பழமையான காலக்கட்டத்தில் ஒரு விண்வெளிப் படை எடுப்பினையும் அதன் தாக்கத்தால் மனிதர்களும், மிருகங்களும் சுருங்கிப் போய் திண்டாடுவதும் 1982 காலக்கட்டத்தில் சராசரி வாசகனுக்குப் பெருந்தீனியாக அமைந்த வாசிப்புக் களம் என்றால் மிகையாகாது.. சில ஆண்டுகளுக்குள் தூர்தர்ஷன் தன் தொடர்களில் ஒன்றில் மார்ஸ் கிரகம் செல்லும் சிறு குழு ஒன்று சுருங்கி விட என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை காண்பித்து இருப்பார்கள்.. அப்படியே புதிய தலைமுறைகள் ஆன்ட் மேன், வாஸ்ப் என்று அடுத்த லெவலுக்கு ஏறிப் போய் விட்டாலும் வாசகர்கள் மகிழுமாறு தொடர்ச்சியாக முத்து காமிக்ஸ் அமைத்துத் தந்த கம்பீரமான பாதையில்  லயன் காமிக்ஸ்  வீறு நடை போட்டுக் கொண்டு இன்றளவில் தரமான சித்திரக் கதைகளை தமிழ் மண்ணில் கொண்டு வந்து சேர்த்து வருகிறது என்றால் அதன் மூலகர்த்தாவான திரு.சவுந்திரபாண்டியன் அவர்களை நினைவு கூறுதல் அவசியம்.  அம்புலி மாமாவில் (சந்தமாமா) பணியாற்றி இரும்புக்கை மாயாவியை அங்கு கண்டெடுத்து பின்னாளில் முறைப்படி உரிமம் பெற்று முல்லை தங்கராசனுடன் அப்போதே பிரம்மாண்டமாகக் கொண்டு வந்த கதைத் தொடர் இது.. பிரச்சினை என்னவென்றால் வாராவாரம் வெளியாகும் கதைகள் தொடர்கதையாக வாசகர்கள் தொடர்ச்சி விட்டுப் போய் வாசிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் முத்து காமிக்ஸ் வாரமலர் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு விட்டது.. 
நாம் வாசிக்கும் இந்த புதிய கதை முழுமையாக அனைத்து பாகங்களும் முழு வண்ணத்துடன் நமக்கு வாசிக்கக் கிட்டியிருப்பது மிகவும் அருமையான விஷயம்.. மார்க்கெட்டில் முத்து காமிக்ஸ் வாரமலரை நம்மால் தேடிப் பிடிக்க முடியும் என்றால் அதன் விலை பல ஆயிரங்களை கடந்திருக்கும். ஆனால் அதற்கு அவசியமில்லாத வகையில் முழுமையான தொகுப்பாக முத்து காமிக்ஸில் வெளியாகி இருப்பது நம் மீது பெரியவர் கொண்ட அன்பின் மறைமுகமான வெளிப்பாடு.. 


அவரது நினைவுடன் அவரது மாறா கனவான 
இன்னும் பலப்பல உயரங்களை தமிழ் சித்திரக்கதைகள் எட்டிப் பிடிக்க வேண்டும் என்னும் பெரியதொரு இலக்குக்கு பயணிக்கும் தொடர் சிந்தனைகளுடன் உங்கள் நண்பன் ஜானி.. 

அடுத்து

முத்து காமிக்ஸின் பறக்கும் பிசாசு மற்றும் ப்ளாக் மெயில் வருகின்றன.. முந்தைய அட்டைகள் உங்கள் பார்வைக்கும். கண்டிப்பாக புதிய அட்டைகளும் சிறப்பாகவே அமையும் என்பது உறுதி.. காத்திருப்போம்.. 

வெளியீடு எண் 142


நினைவாஞ்சலி புகைப்படங்களை பின்னர் பகிர்கிறேன்.. லயன் வலைப்பூவிற்கு மரியாதை.. நன்றி.. 

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

சிந்தனைக்கு: ஆவணப்படுத்தலின் அவசியங்கள்

 வணக்கம் வாசகப் பெருமக்களே...

யாரேனும் பொன்னி மாதிரி முன்னர் இயங்கி வந்து தற்சமயம் நடப்பில் இல்லாத பதிப்பகங்களில் வெளியான காமிக்ஸ்கள் என்னிடம் இருக்கிறது.

 இது ஸ்கேன் ஆகியிருக்கான்னு பாருங்க என தனிச்செய்தியிலாவது கேட்பார்களா என ஆவலோடு காத்திருக்கிறேன்.. நம்ம நண்பர்கள் கொஞ்சம் வீட்டிலேயும் தேடிப்பாருங்களேன்... ஓல்ட் ஈஸ் கோல்ட். மக்கி மண் கரையான் அரிக்கும் முன்பு நாம் நேசிக்கும் காமிக்ஸ் கதைப்புத்தகங்கள் வரையிலாவது பாதுகாப்பது அவசியம்.. 

ஒரு தலைப்பை எடுத்துக் கொள்வோம்..

மின்னல் மனிதன் தோன்றும்

"விண்வெளி பயங்கரவாதிகள்"

என்று வைத்துக் கொள்வோம்.

அது 1980 களில் வெளியாகி வெற்றி கண்ட லோக்கல் காமிக்ஸ். ஒரு ஐநூறு பிரதியாவது வெளியிடப்பட்டு விற்றிருக்கும்.. கொஞ்சம் காகித ஆலைக்கே "பழைய புக்ஸ் எடைக்கு வாங்கறது" நண்பர்கள் மூலமாக காயலான்கடை சென்று ஆலை அரைப்புக்கு போய் விட்டிருக்கும்... கொஞ்ச பிரதிகள் பரணையிலேயே கிடந்து கவனிப்பாரின்றி போயிருக்கும்.. பல பிரதிகள் அப்போதே சிறுவர்களால் படித்து கிழித்து தூக்கிப் போடப்பட்டிருக்கும்..

ஆனால் எங்கோ ஒரு வாடகைப் புத்தக நிலையத்தில் அரிதாக ஒரு சில பிரதிகள் மட்டும் நான்கைந்து கலவை புத்தகங்களில் ஒன்றாக பைண்ட் செய்யப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு பொது உபயோகத்தில் இருந்திருக்கும்..

கால வெள்ளம் இப்படியாக கொண்டு போய் விட்ட பிரதிகளோ திரும்ப வரவே வராது. ஆனால் மிஞ்சியுள்ள ஒரு சில பிரதிகள் மாத்திரமே நம்மவர்கள் காமிக்ஸ் ஆர்வம் கொண்டு சேமித்து வரும் வாசகர்களால் முறைப்படி பாதுகாக்கப்பட்டு எப்போதாவது ஏலத்திலும் வரும்.. 


நிற்க..

நாம் ஆவணப்படுத்துவதும் நாம் பாதுகாக்க நினைப்பதும் இந்த பதிப்பகம், இப்படி ஒரு  வெளியீட்டை, இந்த தலைப்பில் ஒரு காலத்தில் கொண்டு வந்துள்ளனர் என்பதும் அதனை டிஜிட்டல்மயமாக்கி புத்தகங்களை வாசிக்கும் நம் தலை முறை தாண்டி அகிலமெங்கிலும் கொண்டோ சேர்த்திடும் இணைய உலகுக்கு நன்கொடையாக அளிப்பதுவே.. 

இதற்கு மேலே குறிப்பிட்ட ஒரு தலைப்பை எடுத்துக் கொள்வோம்..

மின்னல் மனிதன் தோன்றும்

"விண்வெளி பயங்கரவாதிகள்" 

என்கிற தலைப்பில் வெளியான 500 புத்தகங்களில் இருந்து ஒரேயொரு புத்தகம் மாத்திரமே போதுமானது.. 

நாம் இப்படி இணையத்தில் வெளியிட்டு விட்டதாலேயே புத்தக மதிப்பு இறங்கி விடும் என்பது தேவையற்ற அச்சம்.. பல ஸ்கேன்லேஷன் புத்தகங்கள் நம்மிடையே பவனி வந்தாலும் அசல் புத்தகத்தின் மதிப்பு என்றும் குறைவதில்லை.. அசல் அசல்தான். அதன் கதையை அனைவரும் அறிந்து கொள்ள மக்கிப்போன புத்தகத்தை அத்தனை பேரும் வாங்கி புரட்டிப் பார்த்தாலே கொட்டிப் போய் விடும்.. ஆனால் ஒரு முறை டிஜிட்டல் வடிவத்துக்காக நம்மில் ஈடுபாடுகொண்ட ஒரு சிலர்  உழைத்து விட்டால்  அது காலாகாலத்துக்கும் நிலை நிற்கும்.. சிந்திக்கிறேன்..சிந்தியுங்கள்.. சிந்திப்போம்..


என்றும் அதே அன்புடன் ஜானி சின்னப்பன்..

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

நிழல் ஓநாய்கள்_அறிமுகம் ஸகுவேரா



நானொரு செவ்விந்திய நவஜோ மிலிட்டரிக்காரனுங்க. அமெரிக்காவுக்காக வியட்நாம் எல்லாம் போய் சண்டை போட்டுட்டு திரும்பி வந்து ரிடையர்மென்ட் வாங்கிக்கிட்டு ஒரு ஓரமா நாம பிறந்த இடத்திலேயே வந்து வாழலாம்னு பார்த்தா இங்கே நிலைமையே சீர் குலைந்து கிடக்கு.. நாங்க மிலிட்டரியில இவனுகளுக்காக உயிரைக் கொடுத்துப் போராடிட்டு வந்தா இங்கே இவங்க அடிக்கிற கூத்துக்கும் பண்ற அராஜகத்துக்கும் ஒரு அளவில்லாம போய்க்கிட்டு இருக்கு.. பணம் சேர்ந்துட்டா போதும் ஒரு பைக்கை எடுத்துக்குன்னு ஊரெல்லாம் சுத்தி வந்து எவனையாவது எவளையாவது வம்பிழுக்க வேண்டியது.. எல்லாம் பணம் பண்ற வேலை.. நான் நிலம் வாங்க சொந்த ஊருக்குப் போனப்போ இது மாதிரி திமிரு புடிச்ச பைக் கேங் ஒண்ணு பொண்ணுகளை தகாத வார்த்தை பேசி மிரட்டிட்டு இருந்தாங்க.. சும்மா விடுவேனா நான்.. 


நாம்பாட்டுக்கு தெரிஞ்ச செவ்விந்திய  தாத்தாகிட்டே நிலத்தை வாங்கி பயிர் பச்சையை வாழ வைக்கலாம்னு பார்த்தா தாத்தாவை தீர்த்துக்கட்டி என்னோட வெறியை கிளப்பிட்டீங்க..


அருமையான கதை. சட்டத்தினை வளைக்கும் நபர்களை நாயகன் எப்படி சமாளிக்கிறார் என்பதை சித்திரங்களை வைத்து நமக்கு பொழுது போக்காகவும் சவாலாகவும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் என்னா ப்ரூனோ  மற்றும் வால்டம்ப்ரினி பேபியோ. (Enna Bruno and Valdambrini Fabio)

கதாசிரியர் என்னா ப்ரூனோ 

தேசியம்:  இத்தாலியன்

பிறந்த தேதி: 1969 இவரது அடையாளம்  திரைக்கதை எழுத்தாளர்

வேலைகள்

முதல் கதை அங்கிள்  ஸ்க்ரூஜ் மற்றும் ஒப்பந்த நோய்க்குறி  மே 13, 1997

உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் டொனால்ட் டக் மற்றும் காவியத்தில் வரும் பிற கதாபாத்திரங்கள்  எக்ஸ்-மிக்கி சாகாவில் வரும் பிப்வுல்ஃப் மற்றும் பிற கதாபாத்திரங்கள்  டிராகுலாபைத்தியக்கார டக்டர் முக்கிய படைப்புகள் ஸ்டார் டாப் - மூன்றாம் தலைமுறை பேப்பரினிக் புதிய சாகசங்கள் எக்ஸ்-மிக்கி மிக்கி மவுஸ் மர்ம இதழ் பிராம் டாப்கரின் டிராகுலா டாக்டர் ராட்கில் மற்றும் மிஸ்டர் ஹைடின் விசித்திரமான வழக்கு டொனால்ட் டக் மற்றும் காலத்தால் அழியாத ராணி ஹூய் டெவி லூயி... மூன்று வாத்துகள் விளையாடுகின்றன ஆவியாகிறது கூடுதல் டிஸ்னி வேலைகள் புருனோ என்னா செர்ஜியோ போனெல்லி எடிட்டருடன் இணைந்து பணியாற்றுகிறார் 

அவரது ஒரு பேட்டியில் இருந்து.. 

கடந்த வருடம் நீங்கள் சகுவாரோ படத்திற்காக சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான மைக்கேலுஸி விருதை வென்றீர்கள். நீங்க அதை ஒரு மரணத்திற்குப் பிந்தைய விருதுன்னு சொன்னீங்க. தோர்ன் திரும்பி வருவாரா?

மூன்று வருடங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு படைப்புப் பயணத்தின் முடிவில் அது வந்ததால் நான் அதை மரணத்திற்குப் பிந்தையது என்று அழைத்தேன், ஆனால் நான் அதைப் பாராட்டவில்லை என்று அர்த்தமல்ல. உண்மையில், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது! துரதிர்ஷ்டவசமாக, தோர்ன் தனது சாகசத்தை இதழ் #35 உடன் முடித்தார், எனக்குள், அவரது கதைகளும் அவரது கதாபாத்திரங்களும் தொடர்ந்து எதிரொலித்தாலும் கூட. நான் என்னுடன் நிறைய அனுபவங்களை (கலாச்சார, வேலை தொடர்பான, மனித) சுமந்து செல்கிறேன், அதை இப்போதும் பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த வகையில், 2017 ஆம் ஆண்டில், லூய்கி சினிஸ்கால்ச்சிக்காக நான் எழுதிய ஒரு போனெல்லி கிராஃபிக் நாவல் செய்தித்தாள்களில் இடம் பெற வேண்டும்: இது சகுவாரோவின் கிராஃபிக் "தூண்களில்" ஒன்றாகும். இது 70களின் முற்பகுதியில் தொடங்கும் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும். இதன் கருப்பொருள் “சாகரெஸ்க்” பாணியில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும், ஆனால் படைப்புக் குழு ஒன்றாக இருக்கும். நீங்கள் அதைப் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.

ஆக சகுவேரா ஒரு திரைப்படமாகவும் வந்து மக்களை ஈர்த்திருக்கிறது.. 

வால்டம்ப்ரினி பேபியோ.. (Fabio Valdambrini)

ஃபேபியோ வால்டம்ப்ரினி தனது வாழ்க்கையை ஆக்மி, கிரெனட்டா பிரஸ் மற்றும் யுனிவர்சோ ஆகிய பதிப்பகங்களில் பணிபுரிந்தார். 1993 ஆம் ஆண்டு போனெல்லி பதிப்பகங்களில் சேர்ந்தார், அங்கு அவர் 'மிஸ்டர் நோ'வில் ஒரு  கலைஞராக பணியாற்றினார். அவருடைய ஓவியத்தில் ஒன்று 
இவரது லேட்டஸ்ட் டெக்ஸ் ஓவியம் இதோ.. 
முகநூலில் இவரைத் தொடர:  


இம்மாத வெளியீடுக்கு வருவோம் சூப்பரான நடையிலான மொழிபெயர்ப்பு. அறிமுக நாயகரை முதல் கதையிலேயே சிக்ஸர் அடித்தாற்போன்று களத்தில் இறங்கி விட்டார்.. போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு சூழ்நிலையின் காரணமாக மோத நேர்கிறது. உள்ளூர் போலீஸ் வழக்கம்போல பாதி மனிதன் பாதி மிருகமாக கலந்து கட்டி நிற்கிறார்கள். வேறு வழியில்லாமல் கிடைத்த சிறு தகவலையும் சிறுவன், அவனது வளர்ப்புத் தாயையும் சேர்த்தே காக்க வேண்டிய கட்டாயத்தில் நாயகர். இதில் நிலம் வாங்கிய பெரியவர் கொல்லப்படுவதைக் கண்ட சாட்சியை வேறு பாதுகாத்தாக வேண்டிய நிலைமை. இல்லையேல் அழகாக கொலைக்குற்றம் ஸகுவேராவை இறுகப் பிடித்த முதலையென கவ்விக் கொண்டு விடும்.. கடும் பாறைக் களம் போர்க்களமாக நாயகன் கொலைப் பழியிலிருந்து தப்பினாரா? சிறுவனும் அவன் பாட்டியும் கொலைக்கும்பலிடமிருந்து தப்பினார்களா? பரபரக்கும் பக்கங்களை நிழல் ஓநாய்களில் நாயகனின் பைக், கார், கால்நடைப் பயணங்களோடு நாமும் கடந்திடத் தோன்றும் விதமாக உருவாக்கியிருக்கிறார்கள் என்னா மற்றும் வால் டம்பிரினி. போன்னெலி வெளியீடு என்பதிலேயே தரமான கதை முத்திரை கிடைத்து விடுகிறது. தமிழில் எடிட்டர் விஜயனுடன் சேர்ந்து நண்பர் ரவி கண்ணன் கலக்கியுள்ளார். வி காமிக்ஸூக்கு இன்னும் ஒரு அதிரடி நாயகர் என்பது சிறப்பு. 90 ரூபாயில் கருப்பு வெள்ளையில் 100 ரூபாய் விலையில் மே மாதத்தினை சிறப்பிக்க வந்திருக்கும் நிழல் ஓநாய்களைத் தவற விடாதீர்கள்..

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

அம்புலி மாமா 1972 நவம்பர்_ஆவண மீட்டெடுப்பு_தோழர் திருமலை.

 

நமது அன்புக்கும் பாசத்துக்கும் வெள்ளை இளவரசி மீதான தனியொரு காதலுக்கும் சொந்தக்காரர் ஆசிரியர் திரு.சரவணன் அவர்களது இனிய பிறந்ததினத்திற்கான அன்பளிப்பாகவும் நம்மவர் திரு.கணேஷ்குமார் அவர்களது பயிற்சி முடிந்து சிறப்பான தருணத்தின் மகிழ்ச்சியைப் பகிரவும் அபூர்வங்களை அகழ்ந்தாய்வு செய்து நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ள தோழர் திருமலை அவர்களின்  அம்புலிமாமா  1972 நவம்பர் மாத இதழின் புதுப்பிக்கப்பட்ட பிரதியினை வாசக தெய்வங்களாகிய உங்களுடன் பகிர்ந்து  கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்..



தோழர் திருமலை.. 










தரவிறக்க சுட்டி.. 


லயன் காமிக்ஸ் மே மாத இதழ்கள் இன்று முதலே ஆன்லைன் விற்பனைக்கு வந்து விட்டன.. மூன்று இதழ்கள்..
மைனாவோடு மஞ்சு விரட்டு, நிழல் ஓநாய்கள், ஜன்னலோரமாய் மரணம் ஆகிய மூன்று இதழ்கள்.. டெக்ஸ் இம்முறை இடம்பெறவில்லை.. 
மைனாவோடு மஞ்சு விரட்டு.. 
நினைவுகளைத் தொலைத்து விட்டுத் தேடும் மனிதன் XIIIன் கதையில் வரும் கிளைக்கதை இது. பெலிசிட்டி பிரவுன்.. நமது நாயகனின் சித்தி. 
நினைவுகள் மீண்டு தன் குடும்பத்தாரோடு இணைந்து கொள்ள சந்தோஷமாக வந்த xiii ஐ கொலைக்குற்றத்தில் சிக்க வைத்து விட்டு அவரது சொத்தை மொத்தமாக ஆட்டையைப் போட்டவள்.. இது ஏன் அவள் இவ்வளவு கல்நெஞ்சக்காரியாக வாழ்க்கையை நடத்தினாள் என்பதே இந்த கிளைக்கதையில் ஆராயப்படுகிறது.. இது அவளது தொடர்ந்த நிகழ்வுகளை நமக்கு தெரிவிக்கும் முகமாக உருவான கதை. கொலைப்பழி சுமந்த xiii ஐ ஒரு கட்டத்தில் வேறு இடத்தில் சந்திக்க நேர்கிறது. மிகவும் அருமையானதொரு கதை.. 


அடுத்து ஸகுவாரோ ஒரு நவ நாகரிகமான காலக்கட்டத்தில் வாழும் செவ்விந்திய நாயகன் சந்திக்கும் பிரச்சினைகளை கூறும் அதிரடிக்கதை.. நிழல் ஓநாய்கள்..  நமக்குப் பிடித்தமான நவஜோ செவ்விந்திய இளைஞன். டெக்ஸ் நவஜோ இனத்தவரின் தலைவர் என்பதால் உடனே இவரை மனதுக்குள் வா நட்பே என்று வரவேற்கத் தூண்டுகிறது. 
நமது நாயகன் செவ்விந்திய வழியில் செயல்பட்டு பல சாதனைகளைப் படைக்கவிருக்கிறார். அவரை வரவேற்க தயாராவோம்.. 
ரூபின்.. கேரட் தலை போலீஸ்.. 
அதிரடிகள் நிறைந்த கதை வரிசை.. ஆகவே மூன்றும் சிறப்பான கதைகளாக மே மாதத்தை கொண்டாடும் விதமாக வெளியாகி இருப்பதால் வாசகர்கள் மகிழ்வார்கள்.. ஹேப்பி ரீடிங் நட்பூஸ்.. 

திங்கள், 14 ஏப்ரல், 2025

பான்சி பாட்டர்.. அறிமுகம்.

 தமிழ் வாழ்க.. தமிழ்ப் புத்தாண்டு மலர்க.. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 

மகா கவி பாரதியார் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்எனக் கவிபுனைந்தார்சமற்கிருதம்வங்காளம்இந்திபிரான்சியம்ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர்அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். இதோ சித்திரக்கதைகள் உலகின் வெவ்வேறு இடங்களிலும் வெவ்வேறு விதமாகக் கொண்டாடப் படுகின்றன.. நமது வலைப் பூ இதுவரையிலும் சிறு சிறு கதாபாத்திரங்களையும் அடையாளப்படுத்தியிருப்பதுடன் அதன் ஒரு சிறு பகுதி தமிழாக்கமும் செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதோ பான்ஸி பாட்டர் உங்களுடைய பார்வைக்கு.. 

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்"
என்னும் உயரிய நோக்குடைய கவிஞன் அவர். இது அதற்கொரு மாதிரி மாத்திரமே.. 
தமிழினை கொண்டாடும் நாம் அவரது நினைவையும் இன்று நெஞ்சில் சுமப்போமே.. 
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன். 

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

The Road Graphic Novel_intro அறிமுகம் மற்றும் கதைச்சுருக்கம்..

 வணக்கம் நண்பர்களே.. 

இது குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பு எருசலேம் மாநகரில் கோவேறு கழுதையின் மீது வந்து இறங்கும் தினமாக உலகத்தவர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில் பொதுமக்கள் தென்னங்குருத்து ஓலைகளை கொண்டு வந்து வாழ்த்தி அவரை வரவேற்றனராம்.. 

தி ரோட் விரைவில் லயனில் வர வாய்ப்புள்ள கிராபிக் நாவல்.. 

வாசகர்கள் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.. 


பூமியின் இயற்கை வளங்கள் குறைந்துவிட்ட ஒரு போஸ்ட் அபோகாலிப்டிக் பாழான நிலத்தில், பெயரிடப்படாத ஒரு தந்தை மற்றும் மகன் தங்கள் மனிதநேயத்துடன் உயிர்வாழ முயற்சிக்கும் கதை, மேலும் சில உயிர் பிழைத்தவர்கள் இறைச்சிக்காக மற்றவர்களை வளர்க்க விடப்படுகிறார்கள், இது கோர்மக் மெக்கார்த்தியின் இருண்ட மற்றும் மிகவும் தொலைநோக்கு நாவல்களில் ஒன்றாகும்.

கோர்மக் மெக்கார்த்தி 
இவர் அமெரிக்க எழுத்தாளர். 
கோர்மக் மெக்கார்த்தி (பிறப்பு சார்லஸ் ஜோசப் மெக்கார்த்தி ஜூனியர்; ஜூலை 20, 1933 - ஜூன் 13, 2023) ஒரு அமெரிக்க எழுத்தாளர் ஆவார், அவர் பன்னிரண்டு நாவல்கள், இரண்டு நாடகங்கள், ஐந்து திரைக்கதைகள் மற்றும் மூன்று சிறுகதைகளை மேற்கத்திய, போஸ்ட்-அபோகாலிப்டிக் மற்றும் தெற்கு கோதிக் வகைகளில் எழுதினார். அவரது படைப்புகளில் பெரும்பாலும் வன்முறையின் கிராஃபிக் சித்தரிப்புகள் அடங்கும், மேலும் அவரது எழுத்து நடை நிறுத்தற்குறிகள் மற்றும் பண்புக்கூறுகளின் அரிதான பயன்பாட்டால் வகைப்படுத்தப்படுகிறது. அவர் சிறந்த அமெரிக்க நாவலாசிரியர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.
மெக்கார்த்தி ரோட் தீவின் பிராவிடன்ஸில் பிறந்தார், இருப்பினும் அவர் முதன்மையாக டென்னசியில் வளர்ந்தார். 1951 இல், அவர் டென்னசி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், ஆனால் அமெரிக்க விமானப்படையில் சேர அதை விட்டுவிட்டார். அவரது முதல் நாவலான தி ஆர்ச்சர்ட் கீப்பர் 1965 இல் வெளியிடப்பட்டது. இலக்கிய மானியங்களைப் பெற்ற மெக்கார்த்தி தெற்கு ஐரோப்பாவிற்குச் செல்ல முடிந்தது, அங்கு அவர் தனது இரண்டாவது நாவலான அவுட்டர் டார்க் (1968) எழுதினார். சட்ரீ (1979), அவரது மற்ற ஆரம்பகால நாவல்களைப் போலவே, பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஒரு மெக்ஆர்தர் பெல்லோஷிப் அவரை அமெரிக்க தென்மேற்குப் பயணம் செய்ய உதவியது, அங்கு அவர் தனது ஐந்தாவது நாவலான ப்ளட் மெரிடியன் (1985) ஐ ஆராய்ச்சி செய்து எழுதினார். ஆரம்பத்தில் இது ஒரு மந்தமான விமர்சன மற்றும் வணிக ரீதியான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அது அவரது மகத்தான படைப்பாகக் கருதப்படுகிறது, சிலர் இதை சிறந்த அமெரிக்க நாவல் என்று முத்திரை குத்தினர்.
 இவரது தி ரோட் ஒரு புலிட்சர் பரிசு வென்ற 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட கிராபிக் நாவலாகும்.
ஜேம்ஸ் டைட் ப்ளாக் மெமோரியல் பரிசையும் தட்டித் தூக்கியதாகும். 

திரைப்படமாக 2009ல் வெளியாகி கலக்கிய ஒன்றாகும். 
யூடியூபில் ட்ரெய்லர் காணுங்கள்.. 
கதைச் சுருக்கம்: 

குறிப்பிடப்படாத ஒரு பேரழிவின் விளைவாக ஏற்பட்ட அழிவு நிகழ்விற்குப் பிறகு, ஒரு ஆணும் அவனது இளம் மகனும் உயிர்வாழப் போராடுகிறார்கள், இது அனைத்து தாவர உயிரினங்களும் கிட்டத்தட்ட அனைத்து விலங்குகளும் இறந்து போகின்றன.[5] பாதுகாப்பான புகலிடத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில், தங்கள் பயணத்தில் பொருட்களைத் தேடி, துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய நரமாமிசக் கும்பல்களைத் தவிர்த்து, அந்த ஆணும் சிறுவனும் கடற்கரைக்கு ஒரு சாலையில் பயணிக்கிறார்கள்.


பல ஆண்டுகளுக்கு முன்பு, பேரழிவுக்குப் பிறகு, அந்த மனிதனின் மனைவி ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள், அவள் படிப்படியாக நம்பிக்கையை இழக்கிறாள். அந்த மனிதன் கடைசி முயற்சியாக தங்கள் குடும்பத்திற்காக சேமித்து வைத்திருந்த மூன்று தோட்டாக்களில் ஒன்றைப் பயன்படுத்தி ஒரு ஊடுருவும் நபரைச் சுட்டபோது, ​​அவள் தன் தற்கொலையைத் தடுக்க வேண்டுமென்றே தோட்டாவை வீணடித்ததாக அவன் மீது குற்றம் சாட்டுகிறாள். உறைபனியில் தனது கோட் மற்றும் தொப்பியைக் கழற்றி, அவள் காட்டுக்குள் நடக்கிறாள், மீண்டும் ஒருபோதும் காணப்படவில்லை.


தற்போது, ​​நரமாமிசக் கும்பலின் ஒரு உறுப்பினரைச் சுட்டுக் கொன்ற பிறகு, அந்த மனிதனுக்கு ஒரே ஒரு தோட்டா மட்டுமே மிச்சம். ஒரு மாளிகையை ஆராய்ந்து, அவரும் சிறுவனும் அடித்தளத்தில் அடைக்கப்பட்ட மக்களைக் கண்டுபிடித்து, சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு உணவாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நரமாமிசக் கும்பல்கள் திரும்பி வந்ததும், அந்த மனிதனும் அவனது மகனும் ஒளிந்து கொள்கிறார்கள். கண்டுபிடிப்பு உடனடியாக நிகழும் நிலையில், அந்த மனிதன் தனது மகனைச் சுடத் தயாராகிறான், ஆனால் தப்பியோடிய கைதிகளால் நரமாமிசம் உண்பவர்கள் திசைதிருப்பப்படும்போது அவர்கள் தப்பி ஓடுகிறார்கள்.


சாலையில் மேலும் கீழே செல்லும்போது, ​​அந்த மனிதனும் சிறுவனும் பதிவு செய்யப்பட்ட உணவு மற்றும் பொருட்களால் நிறைந்த ஒரு நிலத்தடி தங்குமிடத்தைக் காண்கிறார்கள். அவர்கள் விருந்துண்டு குளிக்கிறார்கள். ஒரு நாய் உட்பட மேலே சத்தங்களைக் கேட்கும்போது, ​​அந்த மனிதன் தங்குவது மிகவும் ஆபத்தானது என்று முடிவு செய்து முன்னேறுகிறான். அவர்கள் கிட்டத்தட்ட பார்வையற்ற ஒரு முதியவரைச் சந்திக்கிறார்கள், மகன் தந்தையை தன்னுடன் உணவைப் பகிர்ந்து கொள்ள வற்புறுத்துகிறான். பின்னர், இருவரும் பைக்குகளில் குழந்தைகளின் மண்டை ஓடுகளுடன் ஒரு முகாமை சந்திக்கிறார்கள். ஒரு புல்வெளியில் ஒரு தாயையும் மகனையும் ஒரு கும்பல் தாக்குவதைக் கண்டபோது, ​​அவர்கள் இந்த முகாமை விட்டு அவசரமாக நகர்கிறார்கள். அவர்கள் ஓடிவிடுகிறார்கள்.


கடற்கரையில், கடற்கரையில் ஒரு கப்பலைத் துரத்த நீந்தும்போது, ​​அந்த மனிதன் சிறுவனை தங்கள் உடைமைகளைப் பாதுகாக்க விட்டுவிடுகிறான். சிறுவன் தூங்கிவிடுகிறான், அவற்றின் பொருட்கள் திருடப்படுகின்றன. அந்த மனிதன் திருடனைத் துரத்திச் சென்று அவனிடமிருந்து எல்லாவற்றையும், அவனது ஆடைகளையும் எடுத்துக்கொள்கிறான். இது சிறுவனை மிகவும் வருத்தப்படுத்துகிறது, அந்த மனிதன் திரும்பிச் சென்று திருடனுக்காக துணிகளையும் ஒரு கேனையும் விட்டுவிடுகிறான்.


அவர்கள் ஒரு பாழடைந்த நகரத்தின் வழியாகச் செல்லும்போது, ​​அந்த மனிதன் ஒரு அம்பினால் காலில் சுடப்படுகிறான். கப்பலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு துப்பாக்கியால் அவன் தனது பதுங்கியிருப்பவரைக் கொன்று, வில்லாளியின் பெண் தோழியை அதே அறையில் காண்கிறான். வில்லாளனும் பெண்ணும் தங்களைப் பின்தொடர்ந்ததாக அந்த மனிதன் நினைக்கிறான், ஆனால் அது நேர்மாறானது என்று அவள் கூறுகிறாள். அவன் அவளை உடலைப் பார்த்து அழ விட்டுவிடுகிறான்.


பலவீனமடைந்த ஆணும் பையனும் தங்கள் வண்டியையும் பெரும்பாலான உடைமைகளையும் விட்டுவிடுகிறார்கள். அந்த ஆணின் நிலை மோசமடைந்து இறுதியில் அவன் இறந்துவிடுகிறான். ஒரு மனிதன் தன் மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் நாயுடன் சிறுவனை அணுகுகிறான். அவர்கள் சிறிது காலமாக சிறுவனையும் அவனது தந்தையையும் பின்தொடர்ந்து வருவதாகவும், அவனைப் பற்றி கவலைப்பட்டதாகவும் மனைவி விளக்குகிறாள். தந்தை சிறுவனை "நல்ல மனிதர்களில்" ஒருவர் என்று சமாதானப்படுத்தி, அவனைத் தன் பாதுகாப்பில் எடுத்துக்கொள்கிறார்.


மற்றவை.. திரையில் காணலாம். அல்லது மிக எளிதாக கிராபிக் நாவலாக லயன் காமிக்ஸில் வலம் வருகையில் வாங்கி வாசித்து மகிழலாம்.. 


நன்றிகள்: ஸ்ரீராம் இலட்சுமணன் உடனடி கவனத்துக்குக் கொண்டு வந்தமைக்கு.. 

என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன்.

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

ஓநாய் தீவு புதையல் _ பொன்னி காமிக்ஸ்

 வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 

சில அரிய சித்திரக்கதை புத்தகங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற கனவும், எளிமையான வாசகர் வரை கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற அக்கறையும் நண்பர்கள் பலரை தேடலில் ஈடுபட வைக்கிறது. திரைகடலோடியும் திரவியம் தேடும் நமது நண்பர்களில் திருமலை முக்கியமானவர். அவரது நெடுங்காலத் தேடலில் இதோ 1977ஆம் வருடம் மே மாதம் வெளியாகிய பொன்னி காமிக்ஸின் ஓநாய் தீவு புதையல் சித்திரக்கதை நம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன் வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார். 

      இதன் விடுபட்ட பக்கங்கள் அட்டை அனைத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் திரு.பூபதி, ராசிபுரம் அவர்களுக்கும் அபூர்வமான புத்தகத்தை நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் திருமலை அவர்களுக்கும் நன்றியுடன்... வாசக நட்ப்பூஸ் உங்களுடனும்  எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். 

இந்த 2025 தமிழ் புத்தாண்டில் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மண்ணில் பதிப்பிக்கப்பட்டு நிறைய வாசகர்களை சென்றடைந்து கால வெள்ளத்தில் காணாமல் போய் விட்ட ஓநாய் தீவு புதையல் இதோ உங்கள் பார்வைக்கு..  


தாய் தந்தையை இழந்த நாயகிக்கு பொக்கிஷம் ஒன்றின் வரைபடத்துடன் வந்த அத்தை ஆனந்த அதிர்ச்சி கொடுக்கிறாள். அவளுடன் நாயகரை அழைத்துக் கொண்டு பொக்கிஷம் ஒளித்து வைத்திருக்கும் தீவினை சென்றடைகிறாள் நாயகி.. இவர்களுடன் அத்தையின் ஆட்கள் சிலர் வந்து சேர்ந்து கொள்கின்றனர். தீவினை அடைந்தவர்களுக்கு பொக்கிஷம் மீதும் அதன் சொந்தக்காரியான நாயகி மீதும் ஆவல். யார் பொக்கிஷம் கண்டடைகிறார்களோ அவர்களுக்கே அவள் சொந்தம் என்று உயில் இருப்பதாக அத்தை கூற  நாயகரும் போட்டியில் கலந்து கொள்கிறார். தீவை ஆளுக்கொரு பகுதியாக பிரித்துக் கொண்டு தேடலில் இறங்குகிறார்கள். அவர்கள் கண்டடைந்ததோ ஓர் அரக்கன்.. அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் என்ன? இறுதியில் பொக்கிஷம் கண்டெடுக்கப்பட்டதா? வாராது வந்த மாமணியான அத்தையின் திடுக்கிடும் இன்னொரு பக்கம் என்ன?  என்பதனை பரபரப்புடன் பகிர்கிறது இந்த பொன்னி காமிக்ஸ். பொன்னியில் வெளியான மற்ற கதைகளைத் தேடிப் படிக்க ஏதுவாக ஸ்டாக் லிஸ்ட் பின் அட்டையில் வெளியிடப்பட்டிருக்கிறது. 


தரவிறக்க:  
https://www.mediafire.com/file/74eunvrkl5pzzvn/Onay+Theevu+Puthaiyal_ponni+1974+May.pdf/file


சித்திரக் கதைகள் குறித்த பேருரை_King viswa

 தமிழ் காமிக்ஸ்: நிகழ்காலமும் எதிர்காலமும் என்னும் தலைப்பில் பிரபல வலைப்பதிவர் மற்றும் காமிக்ஸ் படைப்பாளர் & எழுத்தாளர் கிங் விஸ்வா நாள்...