ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

விவேகன் யோசேப்பு!!

பிரியமானவர்களே!!!
ஆதாமின் தேவனும், ஆபேலின் தேவனும், ஆபிரஹாமின் தேவனும், ஈசாக்கின் தேவனுமானவர் உங்களை ஆசிர்வதிப்பாராக!!! 
கிறிஸ்தவ நேயர்களின் மிக சிறப்பானதொரு நாள் இன்று குருத்தோலை நாள்! இன்றைய தினத்தில்தான் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக இயேசு கிறிஸ்துவானவர் எருசலேம் நகரில் கழுதைக் குட்டியின்மீது ஏறி அமர்ந்தவண்ணம் உள்ளே நுழைகிறார்! அவரது வரவை அவரால் பலனடைந்தவர்கள், அவரது அற்புதங்களை கேள்விப் பட்டவர்கள் ஆவலுடனும் ஆர்வத்துடனும் காத்திருந்து அவரை வரவேற்று மகிழ்ந்து அவர் வரும் பாதை நெடுகிலும் இலைத் தளிர்களையும் குருத்தோலைகளையும் விரித்து சிவப்புக் கம்பள வரவேற்பு போன்று பச்சைக் கம்பள வரவேற்பு நல்குகிறார்கள்!!! அருமையானதொரு சம்பவத்தின் நினைவாக கிறிஸ்தவ மக்களாகிய எங்கள் தரப்பில் கொண்டாடும் தினமே இன்று!!!!
      இன்று நாம் வாசித்து மகிழவிருக்கும் விறுவிறுப்பான கதை விவேகன் யோசேப்புவின் வாழ்க்கை வரலாறு! எங்கேயோ பிறந்து எங்கேயோ அடிமையாக விற்கப் பட்டு அங்கே அனாதையாக நிற்கும் அவல நிலை வந்த போதிலும் கிஞ்சித்தும் தளராது அவர் வணங்கிய ஏக தேவனில் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டு தன் மீது தீராப் பழி சுமத்தப்பட்டாலும் கலங்காது வருவதினை அப்படியே ஏற்றுக் கொண்டு பொறுமையாக இறைவன் செயல்படுவார்; தன் பொருட்டு யுத்தம் செய்வார் என்று காத்திருந்த அன்பர் நண்பர் "யோசேப்பு" ஆங்கிலத்தில் "ஜோசப்" என்கிற பதத்தில் குறிப்பிடப் படுபவர்!! தன் பொறுமையால் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டு தனது விவேகத்தால் ஒரு தேசத்தின் பஞ்சத்தினையே தீர்த்து வைத்தவர்!! வரலாறு இன்றும் நினைவு கூறும் வண்ணமாக ஒவ்வொரு தேசத்திலும் தானியக் கிடங்குகளை அமைக்கக் காரணமாக இருந்தவர் நம் நண்பர் யோசேப்பு!! இவருடன் சிறிது பயணிப்போமா????



































appuram book fairku varavekiren nanbargale! bye!
   

3 கருத்துகள்:

  1. வழமை போல பிரம்மாதமான ஸ்கான்களுடன் இருக்கும் இந்த பதிவு சூப்பர் ஜானி ஜி!

    பதிலளிநீக்கு
  2. இதனை ஸ்கான் செய்து, பின்னர் போட்டொஷாப்பில் க்ளீன் செய்து, அதன்பின்னர் பொறுமையாக அதனை இங்கே பதிவிடும் உங்களை வாழ்த்த வயதில்லை ஜானி!

    பதிலளிநீக்கு

Feb 2025 issues_பிப்ரவரி மாத காமிக்ஸ் இதழ்கள் விவரம்

 வணக்கங்கள் அன்பு வாசகர்களே..  இந்த பிப்ரவரி மாத வெளியீடுகள்  ரங் லீ காமிக்ஸ்  ஆந்தை இளவரசி  _சித்திரக்கதை மற்றும் வாசிப்புகேற்ப வரிகள் என்ற...