புதன், 11 பிப்ரவரி, 2015

வாழ்ந்தது போதுமா? _014_1972_veera kesari Magazine from Sri Lanka

இதுவரை_கடத்தல் தொழிலுக்கு சிறையில் உள்ள கைதியாகத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தப்ப வைத்து பயன்படுத்தும் கும்பலின் பிடியில் சிக்கும் சிங்காரம் சிங்காரமாக மாறி கடத்தல் தொழிலைத் தொடர்கிறான். அவனுக்கு உத்தரவிடும் அம்மணி ஜெயஸ்ரீ. உடன் கடத்தல் தோழன் தாஸ் எனப் பயணம் தொடர்கிறது. தாஸ் கொஞ்சம் அதிகமாக ஜெயஸ்ரீயை நெருங்கிட எண்ணுகிறான். பின்னர்....  
அப்புறம்,
வாட்ஸ் அப்பிலும், வலைப்பூவிலும், பத்திரிகைத் துறையிலும் என அனைத்து ஊடகங்களிலும் குறுக்கும், நெடுக்குமாக தனது காமிக்ஸ் சிந்தனைத்துளிகளை விஸ்வநாதன் எ கிங் விஸ்வா அள்ளித் தெளித்து வருகிறார். அவரது சமீபத்திய பதிவு க்விஸ் பாணியில் நன்றாக அமைந்திருந்தது.
தமிழ் நாடு காவல்துறைக்கு சேவை செய்திட விரும்பும் உள்ளங்கள் http://tnusrbexams.net/ சென்று பதிந்து பணியில் நுழைந்திட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! உங்கள் சேவை நாட்டுக்கும், மாநிலத்துக்கும் கண்டிப்பாக தேவை! உங்கள் பணி + சேவை மக்களுக்குத் தேவை! சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! மாதிரி வினாத்தாள் மற்றும் அனைத்து விவரங்களும் அங்கே உள்ளன! பயன்படுத்திக் கொள்ளுங்களேன்!
என்றும் அன்புடன்!
உங்கள் இனிய நண்பன்_ஜான் சைமன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...