புதன், 25 நவம்பர், 2015

மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்.

வணக்கம் தோழமை உள்ளங்களே,
சென்னையை மொத்தமாக நனைத்தும், தமிழகத்தை ஒட்டுமொத்தமாகக் குளிப்பாட்டியும் கூவ நதி முதல் ஜீவ நதிகளெங்கும் பெருவெள்ளம் காணச் செய்து ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் பெய்த பெரு ஊழி வெள்ளத்தைக் கண் முன்னே கொண்டு வந்து மக்களிடையே மனிதாபிமானத்தைத் திரும்பவும் நிலைநாட்டி, நிலையாமையை நெஞ்சில் பதித்துக் கொள்ள ஒரு வாய்ப்பளித்துப் பேருவகை புரிந்த மழை கற்றுக் கொடுத்த பாடங்கள் என்ன?



நன்றி தின மலர்.

நன்றி தினத் தந்தி.

நன்றி: தின மணி

நன்றி: தினகரன்.
அவர் ஒரு தேநீர் விற்பனையாளர். மிதி வண்டியில் தினமும் தேநீர் கொண்டு சென்று விற்பனை செய்பவர். அவரது பிழைப்பே அதுதான். இரண்டு தினங்களுக்கு முன் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து விட்டார். மிதி வண்டி தனியே விழுந்து விட்டது. அவர் சமயோசிதமாக செயல்பட்டு வட்ட வடிவ இரும்பு விளிம்பினைப் பற்றிக் கொண்டு குரல் கொடுத்ததால் மக்கள் உடனடியாக உதவிக் கரம் நீட்டி அவரைக் காப்பாற்றினர். நெருக்கடியிலும் அவர் உயிரைக் காத்தது அவரது சமயோசிதம். மக்களின் உதவிக் கரங்கள். இதனை ஒரு உதாரணமாகக் கொண்டு அனைத்து நண்பர்களும் நீங்கள் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் சமயோசிதமாக முடிவினை வேகமாக எடுக்கவும், ஆபத்தில் மற்றவர்கள் இருப்பின் உதவிக் கரம் நீட்டவும் மறக்க வேண்டாம் என்று கூறிக் கொண்டு. மழை இல்லா கோடை நாட்களை கொஞ்சம் மனதில் இருத்துங்கள். தேவையான மழை நீர் சேகரிப்பு நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிற கோரிக்கையுடன் விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.


 சிந்தியுங்கள். சிந்திக்கிறேன். சிந்திப்போம்.
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி. 

1 கருத்து:

டெக்ஸ் எண். 786 இரத்தத்தால் எழுதப்பட்டது_Tex Willer_குறிப்பு.

 வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...  ஒரு இளம் கொள்ளைக்காரனா அல்லது பழிவாங்கத் துடிக்கும் மகனா? எந்த வகையான வைல்ட் வெஸ்ட் கதை இம்முறை வரவிருக்கிறத...