செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

யாளி ட்ரீம் கிரியேஷன்ஸ்_ஒரு அறிமுகம்

 

யாளி ட்ரீம் கிரியேஷன்ஸ் ஒரு சித்திரக்கதை வெளியிடும் அசல் இந்திய நிறுவனமாகும், இது காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களைப் பயன்படுத்தி உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்க அசல் கதைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. யாளி ட்ரீம் கிரியேஷன்ஸ் அசல் மற்றும் கற்பனை கதைகளை திகில் மற்றும் கற்பனையின் கலவையுடன் கொண்டுவருகிறது; மனதை வளைக்கும் அறிவியல் புனைகதை மற்றும் புராணம். அடுத்த தலைமுறையினரை எங்கள் கவரும் கதைகள் மற்றும் கண்கவர் கலை வேலைகள் மூலம் காமிக் புத்தக காட்சியில் குதிக்க நாங்கள் வளர்த்து அறிவூட்டுகிறோம். எங்கள் குழு, மிகவும் படைப்பாற்றல் கலைஞர்கள் முதல் விதிவிலக்கான திறமையான எழுத்தாளர்கள் வரை, ஒரே இலட்சியத்தைக் கொண்டுள்ளது: சிறந்த கதைகளை வெளியிட்டு வரும் இந்த நிறுவனம் தமிழ் நாட்டின் திரு.அஸ்வின் ஸ்ரீவத்சாங்கம் அவர்களால் 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2013 முதல் தங்கள் அட்டகாசமான  படைப்புகளை வெளியிட்டு வருகின்றனர். யாளி என்கிற பெயரே கற்பனையான ஒரு மிருகத்தை குறிப்பிடுவதாகும். இல்லாத ஒரு மிருகத்தை கற்பனை செய்து ஆலயங்களிலும், சிற்பங்களிலும் கொண்டு வந்த அந்த கால சிற்பிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக யாளி ட்ரீம் கிரியேஷன்ஸ் தங்களுக்கு பெயர் சூட்டிக் கொண்டிருப்பதே இதன் இந்திய கலைத்துறைக்கான ஆகச்சிறந்த மதிப்பாகும். 

சமூக ஊடகங்கள் மூலமாகவே தனது தோழர்களான ஷமிக் தாஸ்குப்தா, சூர்யோதய் டே ஆகியோரை தொடர்பு கொண்ட அஸ்வின் ஸ்ரீவத்சாங்கம் தனது இலட்சியத்தைப் பகிர்ந்து கொண்டதும் விரைவிலேயே "கேரவன்" உதயமானது.. 2013 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற  காமிக்-கான் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக கேரவன் அங்கே வெளியிடப்பட்டது. தொடர்ந்ததெல்லாம் சரித்திரம். தற்போது தமிழில் வெளியாகவிருக்கும் திகில் கிராமம் விருது பெற்ற படைப்பாகும். சிறப்பான கதை சொல்லல் பாணியில் பட்டாசை மிஞ்சிய தொடர் வெடியை போட்டாற்போன்று இந்திய காமிக்ஸ் வானில் கொண்டாட்ட நிகழ்வாகிப் போனது திகில் கிராமம் (தி வில்லேஜ்). அற்புதமான ஓவியங்கள், கதை, புத்தக வடிவமைப்பில்   அனைவரையும் அசத்திய இந்த கிராபிக்ஸ் நாவல் தமிழ் நாட்டை கதைக்களமாகக் கொண்டது. இவ்வருடம் தமிழ் பேச வருகிறது என்பது ஹைலைட் செய்தி.. இந்த ஆண்டில் தமிழ் நாட்டில் புதியதாக உருவாகியிருக்கும் லோன் உல்ப் பதிப்பகத்தாரால் ரூனி காமிக்ஸ் உருவாக்கப்பட்டு தங்கள் முதல் பதிப்பாக திகில் கிராமம் வெளியிடப்படுகிறது.. அதற்கான முன்பதிவு சுட்டியை சென்ற பதிவிலேயே கொடுத்திருக்கிறேன்.. தங்கள் அனைவரது முயற்சியால் கண்டிப்பாக இந்த படைப்பு மாபெரும் வெற்றியடையும் என்பதில் பெரு மகிழ்ச்சியுடன்...

என்றும் அதே அன்புடன்..

ஜானி சின்னப்பன்,

மொழிபெயர்ப்பாளர்,

காமிக்ஸ் காதலர் + காவலர்.

Connected Links

https://www.yalidreamcreations.com/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...