செவ்வாய், 17 டிசம்பர், 2013

நான் கட்டிட்டேன்.....அப்ப நீங்க?

இனிய வணக்கங்கள் நண்பர்களே! நம்ம லயன் காமிக்ஸ் குழும சந்தா படிவம்! வருடம் ஒரு முறை சந்தா செலுத்துவதுடன் நம்ம பணி முடிந்தது! புத்தகத்தை சிறந்த முறையில் தயாரிப்பதில் இருந்து வீட்டு வாசல் வரை புத்தகங்களை கொண்டு வந்து சேர்ப்பிப்பது வரை அனைத்துப் பொறுப்புகளுக்கும் லயன் காமிக்ஸ் குடும்பம் காட்டும் அக்கறை அளவுகோல் தாண்டியது! ஆகவே உங்களது அருமையான கனவுப்பட்டறை காமிக்ஸ்களால் அலங்கரிக்கப்பட மறவாமல் செலுத்துவீர் சந்தா! புத்தம் புது புத்தகங்கள் உங்களைத் துரத்திடும் உருண்டோடும் பந்தா! லயன் ஆசிரியரிடம் இல்லாதது பந்தா! கட்டிட்டு அவ்வப்போது கொடுப்பீர் லந்தா... ஹீ ஹீ ஹீ!
அப்புறம் சில அட்டைகளின் ஸ்கான் பக்கங்கள் நம்ம தேவைக்கும் பதிப்புகளுக்கும் ஏற்றதாக வித்தியாசமான நிறங்களிலும் வண்ணங்களிலும் சின்னச் சின்ன மாறுதல்களுடன் வந்த காலமும் ஒன்று உண்டு! அதில் என் கண்ணில் பட்டதொரு வித்தியாசமான அட்டை!!!

அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம்! இந்த லயன் விடுமுறை மலர் குறித்து உங்கள் எண்ணங்களை எழுதுங்களேன்!
அட்டையை அலங்கரிப்பது பாட்டில் பூதம்தான் என்றபோதிலும் கதை பெருச்சாளிப் பட்டாளத்தினருடையது!  ஆகாயக் கோட்டை என்பதோ ஒரு கட்டுரை! விச்சு கிச்சு இருந்தாலும் நம் அன்பு ஆசிரியரின் ஹாட் லைன் இல்லை! இதில் இன்னொரு கொடுமை என்னன்னா லயன் வெளியீடு என்பதற்கு கதையின் முடிவில் வெளிவரும் வெளியீட்டு எண் பக்கமும் இல்லை! விவரம் அறிந்த பெருமக்கள் விடை தந்து உதவலாமே????
கதை என்னன்னா......






அப்புறம் இன்றுதான் ஒரு காவலராக பிரேத பரிசோதனை சென்று அனைத்துப் பணிகளையும் செய்து கற்று வந்தேன்! வாழ வேண்டிய வயதில் ஒரு சகோதரி தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்!அவரதுஆன்மாு ்ுசாந்தி ்ொஅடைய ்எல்லாம் ்வல்ல ்இறைவனை மன்றாடுகிறேன்்!
!! 
தற்கொலை என்கிற ஒரு விஷயம் மகா கொடுமையானது தோழர்களே! மனிதரை இறைவன் சிந்தித்து, உணர்ந்து, அன்பு செலுத்தி, பாசம் காட்டி வாழும் பெரிய பரிசுடனேயே இந்த பூமிக்கு அனுப்பி வைக்கிறார்! நம் அன்பினை இப் புவியில் விதைக்கையில் ஆங்கே வெறுப்பும், வஞ்சனையும், பொய்யும், புரட்டும், அழிக்கும் எண்ணங்களும் தோன்றவே தோன்றாது! சக மனிதர்களை நேசியுங்கள்! ஒரே வினாடியில் எடுக்கும் தற்கொலை முடிவானது எத்தனைக்கெத்தனை உற்றாருக்கும் உறவினர்களுக்கும் மகா வருத்தத்தையும் சங்கடத்தையும் கொடுக்கிறது என்பதை நேரில் கண்டேன்! தற்கொலை எண்ணம் வருவது ஒரு விநாடிக் கீற்றினிடையே மட்டுமே தோழமைகளே! அந்த ஒரு நொடியை தீரத்துடனும் கடவுள் நம்மைக் கைவிடார் என்கிற நம்பிக்கையுடனும் கடந்து வாருங்கள்! உலகம் உங்களை இழந்தால் உலகுக்கே மகா நட்டம்! நீங்கள் இந்த பூமியின் விதைகள்! உங்களில் ஒளிந்திருக்கும் சக்தி மகத்தானது! உங்கள் ஆன்மா இந்த உலகை புதுப்பிக்கும்! மலர செய்யும்! மணம் வீசச் செய்யும்! உலகுக்கு நீங்க முக்கியங்க! அன்பினால் அரசாள்வீர்! இறை நம்பிக்கை கொள்வீர்! வாழ்க வளமுடன்!  என்றும் அதே அன்புடன்_உங்கள் அன்பு நண்பர் ஜானி! 

3 கருத்துகள்:

  1. சந்தா ஏற்கனவே கட்டியாச்சு. காவலரின் வேலை கஷ்டம்தான். வாழவேண்டிய நல்ல நேரங்களை நினைக்காமல் ஒரு நொடியில் முடிவெடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த சகோதரியின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

    பதிலளிநீக்கு
  2. valthukkal nanbare! antha sagothariyin post mortem arugil irunthu parthathil manase sariyillaamal piththup pidiththu alainthu kondu irukiren!!!

    பதிலளிநீக்கு
  3. இனிய நண்பருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், மற்ற அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

Super Tex 56. I Demoni Del Lago -june issue

  வணக்கங்கள் வாசக வாசகியரே.  வரவிருக்கும் இத்தாலியன் வெர்ஷன் சூப்பர்  டெக்ஸ்: ஏரியின் பேய்கள்  விடுவிக்க ஒரு கைதி, கடக்க ஒரு சாபமிட்ட ஏரி: ட...