சனி, 17 ஆகஸ்ட், 2019

அத்திவரதரைத் தவிரவும் வேறுண்டு காஞ்சியிலே..

வணக்கம் தோழமை உள்ளங்களே..
அத்திவரதர் பற்றி ஆயிரக்கணக்காக தகவல் வந்து குவிந்திருக்கும் உங்கள் இன்பாக்ஸில்.. காஞ்சிபுரம் கோவில் நகரம்..இங்கே பல்வேறு மன்னர்களில் பாதம்பட்டிருக்கிறது.. எத்தனையோ சம்வங்களைதத் தாங்கி நிற்கும் நகரம். இந்த நகரத்தின் இன்னொரு முகத்தைக் காட்டும் பதிவுதான் இது.
ஒற்றை சிலையை தண்ணீரில் வைத்து நாற்பதாண்டுகள் பாதுகாத்து தரிசனத்துக்கு வைக்கும் பாங்குள்ள மனிதர்கள் நிறைந்திருக்கும் காஞ்சியிலே இதுபோன்று அனாதரவாய் விடப்பட்டுள்ள வரலாறு பேசும் கல்வெட்டுகளை மீட்டெடுத்து அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைத்து அல்லது இங்கேயே ஒரு அருங்காட்சியகம் அமைத்தால் எத்தனை நன்றாக இருக்கும்?!? சம்பந்தப்பட்ட மாநகருக்கான வருமானத்தையும் அது சம்பாதித்து தருமென்பதில் சந்தேகமேது?!
அந்த வருவாயை இழத்தல் தகுமோ?!?

கல்வெட்டு ஆய்வாளர்கள் எவரேனும் தங்கள் நண்பராக இருப்பின் தயவு செய்து இந்த கல்வெட்டின் அர்த்தத்தை கேட்டு சொல்லுங்கள்..



காஞ்சி புரம், மடம்தெருவில் உள்ள இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத்தானிருக்க வேண்டும். இத்தகைய அபூர்வங்களை நகர நாகரிகத்துக்கு பலியாக புதைபட விடுதல் தகுமா?! ஆய்வாளர்கள் தயவுசெய்து மீட்டெடுங்கள். ஒரு தமிழனாக எனது இந்தப் பதிவை செய்துள்ளேன். நீங்களும் இதனை உரியவர்கள், தகுந்தவர்கள் கண்ணில் தென்படும்வரை ஷேர் செய்யுங்கள்...
நன்றி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...