சனி, 3 ஆகஸ்ட், 2019

ஆசிரியர் என்பார்யார்?!?


நானெல்லாம் இன்றைக்கு ஒரு நிலைக்கு வந்து வாழ்க்கையை சிறப்புற வாழ்கிறேனென்றால் என் ஆசிரியப் பெருந்தகைகளே அதற்கு முழுமையான காரணம்.. ஹாஸ்டல் வார்டன்களாக அண்ணனாக செயல்பட்டும் பள்ளி ஆசானாக வாய்ப்புகளை தந்தும் என்னை இயக்கிய உயர வைத்த அந்த நல்ல உள்ளங்களை எப்போதும் நன்றியோடு நினைத்து பார்ப்பேன்.. திரு மற்றும் திருமதி சிம்சோன் தம்பதியினர் திரு.தேவாசீர்வாதம்,  திரு.சவரிமுத்து, திரு.அந்தோணிசாமி, திரு.ஏகாம்பரம், திரு.சம்பத், திரு.ஏழுமலை, திரு.தங்கவேலு இன்னும் எக்கச்சக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் அன்பும் மட்டுமல்ல கண்டிப்பும் பிரம்படியும், காது திருகலும் அதிலும் ஒரு சார் தோள்பட்டை கை ஜாயிண்ட் தசையை பிடித்து இழுப்பார் தவளை போல ஒரு நரம்பு எழுந்து அடங்கும்... முட்டி போடுதல், சேர் இல்லாமலேயே அப்படியே அமரும் நிலையிலிருத்தல், ஏகப்பட்ட கொட்டுக்கள்... அவையெல்லாம்தான் இன்றைக்கு நான் வாழும் கவலையற்ற வாழ்வின் அடிப்படையை உறுதியாக கட்டமைத்தவை.. அன்பார்ந்த மாணவமணிகளே..ஆசிரியரை அவமதித்தென்ன லாபம்.. அவரது அறிவுரையே உங்களுக்கான நல்வேதம்..அலட்சியப்படுத்தாதீர்..ப்ளீஸ்..ஜானி சின்னப்பன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...