ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

ஜென்மஜென்மமாய்..._ஜானி சின்னப்பன்

 


ஏன் இப்படி?

என்கிறாய்..

எப்போதுமே 

இப்படித்தான் 

இவன் 

என்பதை 

எத்தனை 

எளிதாக 

மறந்து போனாய்..

உனை சந்தித்த

அந்நொடி

அதிர்வை 

அகத்தில்

உணர்ந்தேன்..


நீ என்னவள்

என..


இன்றல்ல 

நேற்றல்ல 

ஜென்ம

ஜென்மமாய் 

தொட்டுத்

தொடர்ந்து 

வரும் நம் பந்தம்..

அடி

பேதைப் 

பெண்ணே..

உன்னுள் 

உன்னைக் 

கேட்டுப்பார்.. 

உற்றுக் கேள்.. 

அதே 

அலை அங்கும்..

அறிவாய்.. 


ஆழ்கடல்

நிச்சலனமாய்

அமைதியோடு

காத்திருப்பேன்..

கைசேர்வாயா

காரிகையே..


_ஜானி சின்னப்பன்..


#கவியதிகாரம் #ஜானி #jscjohny #chapterpoet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...