வெள்ளி, 7 ஜனவரி, 2022

ப்ரியமானவனே..ஜானி சின்னப்பன்

ஞமலியெனினும் 
தோழனெனினும் 
துணைவன் நீயே.. 
கைப்பிள்ளையாய் 
மடியில் வைத்துக் 
கொஞ்சிய மழலை நீ.. 
காடுமேடெங்கும் 
காவலாய் உடன் வந்த 
நெடுங்கால நண்பன் நீ.. 
கயவரை அணுகவிடாமல் என் 
குடிசையைப் பாதுகாப்பதில் 
நல்லதொரு காவலனும் நீ..
கடைசிவரை வாலாட்டி 
உன் குரலால் தாலாட்டி 
கூடவே துணை நிற்பாய் 
தோழனே.. 
உனக்கீடாய் உறுதுணையேதும் 
உண்டோ உலகிலே.. 
ஜானி சின்னப்பன்


 

2 கருத்துகள்:

சித்தார்த்த சிங்காரம்_மாரீசன்,மணி மற்றும் ஜானி

  வணக்கம் நண்பர்களே.. திரு.மாரீசன் எழுதிய கதைக்கு சித்திர வடிவம் மணி அவர்கள் கொடுக்க எழுத்துருக்களை நான் பயன்படுத்த இந்த கதை உருவாகி உள்ளது....