செவ்வாய், 10 மே, 2022

தடத்தில்..தாகத்துடன்..#விஜயா மைந்தன்

 


காதலின் வலியை தடமாக விட்டு விட்டுப் போனவளே.. உன் பாதம் பட ஏங்கிடும் தரையின் மணலென தவங்கிடக்கிறேன்.. இன்னொரு ஜென்மம் தாண்டியாவது வா.. இன்னொரு பிரபஞ்சத்தில் இன்னிசை கீதத்துடன்
பறவைகள் சூழ படபடக்கும்
பட்டாம்பூச்சிகளாய் நீல வானின் மேகமண்டலங்களுக்குள் சிறகடித்துப் பறந்திடுவோம்.. புல்வெளிப் பனித்துளிகளை ஒன்றுசேர்த்து நமக்கோர் கூடு சமைப்போம்.. வானவில் பாலமேறிப் பரத்துடன் கைகோர்த்து ஆடிப் பாடிடுவோம்.. ஆங்கே விண்ணதிரும் பறைமுழங்க கோலாகலமாக்கிடுவோம்.. காத்திருப்பேன் கனவுகளுடன்..#கவியதிகாரம்..#விஜயாமைந்தன் #ஜானிசின்னப்பன் #jscjohny #chapterkavithai #jscjohnyfeelings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...