ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

050_ஆண்டவராகிய இயேசுவே வாரும்_விவிலிய சித்திரக்கதை வரிசை

இனிய வணக்கங்கள் இனியவர்களே.. இறைவன் இயேசுவின் நல்லாசிகள் உங்களையும் உங்கள் குடும்பம், சுற்றம் அனைவருக்கும் பனி போல் இறங்கி குளிரவிக்க வேண்டிக் கொள்கிறேன்.. 

இந்த விவிலிய சித்திரக்கதை வரிசையின் ஐம்பது புத்தகங்களும் ஐம்பது நிஜ வாழ்வின் சம்பவங்களாக விவிலியம் எடுத்துரைத்திருப்பதை சித்திர வடிவில் பேசுகிறது. விவிலியம், கிறிஸ்துவின் வாழ்வையும் அவரது பாடுகளையும் இறைமகன் எப்படி மனு உருக் கொண்டு பூமி மாந்தருக்காக மனமிரங்கி புவியில் அவர்களுடைய பாடுகளை அவர் தம் மீது ஏற்றுக் கொண்டு சிலுவையில் அறையுண்டு மரித்தார் என்பதையும் மீண்டும் சர்வ வல்லவரின் அன்பு மைந்தனாம் அவர் உயிர்த்தெழுந்து விண்ணக வாழ்வின் சிறப்புகளை உலகுக்கு அறிவித்து இன்றளவும் தான் அன்பு கூர்ந்த மக்களுக்குப் பணிவிடை செய்து வருகிறார் என்பதனையும் இந்த விவிலிய சித்திரக்கதைகள் வழியே தெரிந்து கொள்ள முடியும். இந்த டிஜிட்டல் வடிவிற்கான முயற்சியில் என் உறுதுணையாக செயல்பட்ட திரு. சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களையும்


 கிடைப்பதற்கு அரிய புத்தகங்களை தேனியில் இருந்து தேனீயாகத் திரிந்து நமக்காக இந்த ஐம்பது முத்துக்களைக் கொண்ட சரத்தினைத் தொடுத்த என்ஜினீயர் திரு. அலெக்சாண்டர் வாஸ்   அவர்களையும் இந்த மகிழ்வான பொழுதில் நன்றியுடன் நினைக்கிறேன்.. 


அவர்கள் எல்லா வளமும் பெற்று நீடு வாழ இறையருள் உதவட்டும்.. இந்த தொடர் முயற்சியினைப் பாராட்டும் விதமாக தங்கள் பின்னூட்டப் பதிவுகளினாலும், பகிர்வுகளாலும் ஒரு அழகான பாதை அமைத்துத் தந்த அருமை வாசக வாசகிகளான உங்களையும் இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன்.. 












பிடிஎப் தரவிறக்க: 
இவை இணையம் எட்டுவது இதுவே முதன்முறை.. தொடர்ந்து எங்கேயும், எப்போதும் கிடைக்கும் விதத்தில் தங்கள் வாட்ஸ் அப், டெலிகிராம் எங்கும் பதியலாம். நன்றி.  
இதன் தற்போதைய வண்ணப் பதிப்பு விரைவில் பதிவிட முயற்சி செய்கிறேன்.. 

என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி.. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...