சனி, 27 செப்டம்பர், 2025

வினோத கொலையாளி_இன்ஸ்பெக்டர் கருடா_தொடர்..002

வணக்கங்கள் வாசக உள்ளங்களே.. 


ராணிகாமிக்ஸில் வேதாளர் தோன்றும் விசித்திரப் பறவைகள் டிசம்பர் மாதம் 16-31, 1990 இதழாக மலர்ந்த 156வது இதழ்தான் விசித்திரப்பறவைகள்.. பறவைகளை வைத்து கடத்தலில் ஈடுபடும் ஒரு விசித்திர மனிதன் மற்றும் அவனது நோக்கம்தான் கதை.. அதனைக் கண்டுபிடிக்க மாயாவியாரே பறவைகளால் கடத்தப்படுவதை விரும்பி மஞ்சள் கோட் அணிந்து செல்கிறார்.. கடத்தல் காரனின் நோக்கத்தையும் கண்டுபிடிக்கிறார். அந்த கதையை இங்கே குறிப்பிடக் காரணம் உள்ளது.. இன்ஸ்பெக்டர் கருடாவிடம் என்னை ஒரு காக்கை உளவு பார்க்கிறது என்று ஒருவர் புகாருடன் சந்திக்கிறார்.. வெகு எளிதாக தட்டிக் கழித்து விடும் சமாச்சாரமாக தோன்றினாலும் அந்த புகாருக்கு மதிப்பளித்து கருடா விசாரணையைத் துவக்குகிறார்.. அதுதான் இந்த வினோத கொலையாளி.. தொடர்கிறது.. 


முதல் பேனலில் காண வருமுன் என்று திருத்தி வாசிக்கவும்..
வீட்டில் மனைவி லீலாவைக் காணோம் என்று மருத்துவர் திகைக்கையில் ஒரு மகிழுந்து அவர்கள் கவனத்தை ஈர்த்தவாறே அங்கிருந்து வேகமாக புறப்பட்டு செல்கிறது. 
மூக்கை சுற்றிக் கூறினாலும் நண்பன்தான் டாக்டர்.. 
இதில் வேறு லிமிட்டுக்குள் காவல் ஆய்வாளர் சென்று கொண்டிருக்கிறார்.. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்... தொடர்வோமா... 
என்றென்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி.. 


 

4 கருத்துகள்:

சித்திரக்கதை உருவாக்கத்தில் ஈடுபட்டோர் _ குறிப்புகள்...

ஜோசெட் பௌஜோட் 1922-2009 ஹெர்ஜ் ஸ்டுடியோக்களில் பல ஆண்டுகளாக தலைமை வண்ணக்கலைஞராகப் பணியாற்றிய இவர், ஜோ-எல் அசாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜோசப்...