செவ்வாய், 14 ஏப்ரல், 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சித்திரையில் நித்திரை தொலைத்து புத்தம் புதியதோர் ஆண்டினில் முத்திரை பதிக்கக் காத்திருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நித்தமும், அலுப்பும், சலிப்புமென விடைபெறும் நாட்களுள் புத்தம் புது ஆண்டானது மலர்கையில் ஆங்கே நம்பிக்கை எனும் கீற்று அடிவானின் சூரியனாக சுடர்விட்டு எழும்பிடும் நமது நெஞ்சங்களில். புது ஆண்டு புது திட்டங்களுக்கான வாயிலாக நின்று உங்கள் குறிக்கோள்களை அடைவதற்கான சக்தியை நல்கிட இறைவனை வேண்டுகின்றேன்.
அம்பேத்கார் அவர்களது நினைவாக ஆங்காங்கே பாடல்களும் பரபரப்புகளும், கட்சிக் கொடிகளும், புத்தர் வணக்கங்களும் என நிறைவானதொரு அனுபவமாக மலர்கிறது இன்று....
வாழ்ந்தது போதுமா சித்திரக்கதையின் பதினேழாம் அத்தியாயத்தின் வாயிலாக நம் தமிழை வாழ வைக்கும் இலங்கை சந்ரா அவர்களின் நினைவாகவும் தமிழுக்கு அவர் ஆற்றிய பங்கினை நினைவு கூறும் வாயிலாகவும் அவரது இந்தக் கதையின் பாகத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
    என்றும் அதே தமிழ் மீதான தீராக் காதலுடன்_உங்கள் இனிய நண்பன் ஜானி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...