சனி, 30 ஏப்ரல், 2016

தபால் தலை மர்மம் முத்து மினி வெளியீடு எண்- 006


வணக்கம் தோழமை உள்ளங்களே!
        காமிக்ஸ் சேகரிப்பிற்காக காதை அறுத்துக் கொள்ளக் கூடத் தயங்காத நம் நண்பர்கள் கொண்டிருப்பது ஒரு வகையான பொழுதுபோக்கு. அதே போன்றதொரு தீவிரமான ஈர்ப்புடைய பொழுதுபோக்குகளுள் ஒன்றுதான் தபால்தலை சேகரிப்பு என்பதும்.
     
        நம் குட்டிப் பையன் ராஜூவுக்கும் அது ஒரு பொழுதுபோக்காக அமையவே தனக்கு எப்போதும் உதவும் புத்தகங்களின் காதலன்-ப்ரியன் பிரபுவுடன் புத்தக சேகரிப்புக்காக ராம்ஜியின் கடைக்கு சென்றபோது கிடைத்த புத்தகத்தினுள் இருந்த விக்டோரியா மகாராணியின் உருவம் கொண்ட தபால் தலை திவாரி என்பவனால் திருடப்படுகிறது.
     தபால் தலையைப் பறிகொடுத்த ராஜூவின் மன வருத்தத்தைப் போக்க தபால் தலைகள் குறித்த ஆராய்ச்சியாளரும் தனது நண்பருமான சதீஷிடம் அவனைப் பிரபு அழைத்துப் போகிறான். அங்கு ராஜூ இழந்த தபால் தலையின் மதிப்பு 1,50,000 என்று தெரிந்து அதிர்ச்சியடைகிறார்கள்.
     அதிர்ஷ்டவசமாக தபால்தலையின் உண்மையான மதிப்பினைத் தெரிந்து கொள்வதற்காக திருடிய திவாரியும் சதீஷின் அலுவலகத்துக்கே வருகிறான்.
     கதை இதற்கு மேல் இருவரது தனிப்பட்ட பார்வையில் விரிகிறது. உதாரணமாக விருமாண்டி திரைப்படத்தில் கமல்ஹாசனும், பசுபதியும் தத்தம் பார்வையில் சம்பவங்களை விவரிப்பது போன்று காட்சிகள் அணிவகுக்கின்றன. இறுதியில் திவாரி பிடிபட புத்தகப்பிரியன் பிரபு வெல்கிறான்.
சதீஷ் மூலமாக அயல் நாட்டுக்கு தகவல் அளித்து தபால் தலையை விற்பதற்கான முயற்சிகள் துவங்குகிறது.
ஸ்டாம்பை வாங்க வரும் நபர்கள் போலி என்பதைப் பிரபு கண்டறிகிறான்.
அவர்களைக் கைது செய்கிறது காவல் துறை. உண்மையான நபர் தபால் தலையைப் பெற்றுக் கொண்டு 1,50,000 ரூபாய் கொடுக்கிறார்.
     1847 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த மொரீஷியஸ் தேசத்தில் பென்னி நாணயங்கள், தபால் தலைகள் வெளியிட அப்போதைய அரசாங்கம் முடிவெடுக்கிறது. தபால் தலை வடிவமைக்கும் நபர் அவசரத்தில் போஸ்ட் பெய்ட் என்பதற்கு பதிலாக போஸ்ட் ஆபீஸ் என்று அமைத்து விடுகிறார். 17 ஆண்டுகளுக்குப் பின்னரே அந்தப் பிழை கண்டறியப்பட்டு சரி செய்யப்படுகிறது.
     அது போன்ற பிழையுடன் வரும் தபால் தலைகள், ரூபாய்  நோட்டுகள், நாணயங்கள், காமிக்ஸ்கள், இன்ன பிற பொருட்கள் அனைத்துக்கும் சேகரிப்பாளர்கள் மத்தியில் எப்போதுமே பெருமதிப்பு உண்டு. அவை அதன் பழமையைப் பறை சாற்றுவதுதான் காரணம். முத்து மினி காமிக்ஸ் மொத்தமும் 35,000 ரூபாய்க்கு விலை வைத்து விற்கப்பட்டதும் அதனால்தான்.

     அப்படிப்பட்ட தபால் தலை ஒன்று வியாபாரி ஒருவரிடம் கிடைக்கிறது. அவர் தொழில் நலிந்து குடும்பத்துடன் இந்தியா திரும்புகிறார். மகன் காலத்தில் சொத்துக்கள் கரைந்த நிலையில் புற்று நோய் பீடித்து அவரது மனைவி அவருக்கு சிகிச்சையளிக்கத் திண்டாடி வருகிறாள். வறுமை வாட்டுகிறது என்பதால் தன் மாமனாருடைய புத்தகங்களை நமது நாயகன் புத்தகப் பிரியன் பிரபு வழக்கமாக சென்று வரும் ராம்ஜி புத்தகக் கடையில் விற்று விடுகிறாள். அதன் தொடர்ச்சியே மேற்குறிப்பிட்ட சம்பவங்கள். அந்தப் பெண்மணியைத் தேடிப் பிடிக்கின்றனர் பிரபு குழுவினர். அந்த அம்மணி தனது வறுமை நிலையிலும் உபசரிப்பை மறந்தாளில்லை. சங்கு சுட்டாலும் வெண்மை தரும், கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே  என்பதற்கிணங்க விருந்தினர் உபசரிப்பில் தனது நலிந்த நிலையிலும் குறை வைக்காது வாழ்ந்து வரும் அந்தக் குடும்பத்தாருக்கு சிகிச்சைக்கும், புத்தகக் கடை ராம்ஜி தனது புத்தகக் கடையைப் புதுப்பிக்கவும் தபால் தலை விற்று வந்த பணத்தில் உதவி செய்கிறார்கள் பிரபு குழுவினர் என்று நிறைகிறது இந்தத் தபால் தலை மர்மம்.

இன்று 
22.03.2017
   
புதிதாக வெளியிடப்பட்டுள்ள அதன் மறுபதிப்பில் இருந்து சில பக்கங்கள் உங்களுக்காக ..விலையும் இருபதே ரூபாய்தான்.. பக்கங்கள் சிறிது சாம்பல் வடிவில் இருக்கும்.. கதையின் வேகத்தில் குறைகள் ஏதும் தெரியவே தெரியாது.. கட்டாயம் உங்கள் பிரதியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.. 














1 கருத்து:

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...