வெள்ளி, 22 ஏப்ரல், 2016

கணத்தின் கீற்றில்...

பிதுங்கிய சிந்தனையில்
கசங்கிய மூளையில்
கருவுற்ற பிழையுற்ற
காகிதக் குப்பைகளைக்
கதை, கட்டுரை, கவிதையெனக்
கிறுக்கிக் கசக்கிக்
கிழித்தெறிந்தேன்!
கணத்தின் கீற்றின்
மின்னி மறையும்
வெளிச்சத்தில் கண்டேன்
ஒரு தரிசனம்
நெகிழ்ந்தேன் நான்.
என்னைச் சுற்றிலும்
காகித மலர்கள்!
இறைவா! ஆசீர் அளித்த
உனக்கு நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

13 days to go.. sharnika publications அறிவிப்பு

 🚨 அலர்ட்: வேட்டை முடிய இன்னும் 13 நாட்களே உள்ளன! 🚨 காமிக்ஸ் நெஞ்சங்களே... நமது ஷர்னிகா பப்ளிகேஷன்ஸின் அதிரடி வெளியீடு "மரணத்தின் நிழ...