வெள்ளி, 18 செப்டம்பர், 2020

தெய்வம் நின்று கொல்லும்-ஸ்டீவ் ரோஜர்ஸ்

 


தெய்வம் நின்று கொல்லும்-மனித உருக்கொண்ட ஏழு மிருகங்களின் கதை-படக்கதை
அற்புதமான சித்திரங்கள். கதையும் அருமை.
தமிழில் :ஸ்டீவ் ரோஜர்ஸ்
முதன் முதல் கன்னி முயற்சி👍
புதியவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

https://www.mediafire.com/download/lg56l87ey7zvke0

விமர்சனம்-1:

"தெய்வம் நின்று கொல்லும்" 

மிக அருமையான, சுவையான கதைக்களம்.

முடிவு முன்னமே யூகிக்க முடிந்த ஒன்று என்ற போதும், தொய்வில்லாமல் நகர்கிறது.

கதையின் போக்கொடு இடைச்சொருகலாய் மனிதர்களாய் இருந்தவர்கள் எப்படி படிப்படியாக காமம், ஆதிக்க வெறி, இன வெறி, என முன்னேறி (பின்னிறங்கி) மனிதர்களை வேட்டையாடி உண்ணும் (தின்னும்) விலங்குகள் நிலைக்கு சென்றனர் என நினைவூட்டி கதை கூறிய போக்கு ரசிப்பதாய் இருந்தது....

சித்திரங்கள் அருமை.

Thanks a lot 👏🏻👏🏻👏🏻

விமர்சனம்-2

*தெய்வம் நின்று _கொல்லும்_* ...



சும்மா பராக்கு பார்த்துக் கொண்டே, பிடிஎஃப் டவுன்லோடி வைக்கலாம் என்று தான் நினைத்தேன். பிடிஎஃப் லேப்டாப்பில் டவுன்லோடியதும், தானாகவே ஓபன் ஆகிவிடும். சரி ஒன்று இரண்டு பக்கங்களை பார்ப்போம் என பக்கங்களை நகர்த்தினேன்... இருபதே நிமிடங்கள்... நான்ஸ்டாப் ஆக்ஷன் ரணகளம், ரத்தக்களறியை படித்து முடித்து விட்டேன்...


பஞ்சமா பாதகங்கள் எதற்கும் அஞ்சாத ஏழு மனித மிருகங்கள்... ஆண்டுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு இடத்தில் ஒன்று கூடி விருந்து படைத்துக் கொள்கிறார்கள். ஏழு பேரும் கல்லூரி பருவத்தில் ஒன்றாக படித்தவர்கள்... வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வருவது போல, மனமொன்றிய கொலைகாரர்கள்... ஏன் கொல்கிறோம், யாரைக் கொல்கிறோம் என்றெல்லாம் விதிகள் இல்லை... எனக்குப் பிடிச்சிருக்கு செய்கிறேன் என்று ரத்தக்களறியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்... 2015 வரை...


2016-ல் வேட்டைக்கு கிளம்பியவன் இரையாக மாறி விட்ட கதை... அவர்கள் வேட்டையாக கிளம்பியதோ கிளேர் விண்டர்மேன் என்ற சாப்ட்வேர் என்ஜினியரை... அம்மணி எவ்வளவு சாஃப்ட்டான என்ஜினியர் என்று வரலாற்றை சரியாக தெரிந்து கொள்ளாத வேட்டைக்காரர்கள் அந்த ஆண்டுக்கான இரையாக கிளேரை தேர்ந்தெடுத்து வரவழைக்கிறார்கள்... அவ்வளவு தான் 35வது பக்கத்தில் தொடங்கும் மனித வேட்டை ஆடுகளம், இறுதிபக்கம் வரையிலும் ஆக்ஷன் மற்றும் அதிரடி ரத்தக்களறியுடன் ஜெட் வேகத்தில் செல்கிறது....


மனித வேட்டையில் வென்றவர் யார் ஏழு ஆண்களா? ஒரு பெண்ணா? அவளுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? யார் அவள் ? என்று தெரிந்து கொள்ள ஒரு பக்கம் விடாமல் படியுங்கள் நண்பர்களே...


இதில் குறிப்பிடத்தகுந்த பாராட்டுக்குரியவர்கள், தடையில்லாத, பிழைகளற்ற மொழிபெயர்பை செய்தவரும், கண்களுக்கு வருத்தமில்லாத எழுத்துருவை வடிவமைத்தவருமே...🥰🥰🥰🤝


ஆனாலும், நமக்கு இந்த கதையை பரிசளித்த ஆசான் @⁨Cm Suresh Chand⁩ அவர்களுக்கும் கரம் கூப்பிய நன்றிகள்ள்ள்ள்ள்....🥴🙏🙏🙏

பூபதி ராசிபுரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...