புதன், 21 ஜனவரி, 2015

தொடரும் ஒரு தேடல் காவியம்.....

இனிய வணக்கங்கள் தோழமை நெஞ்சங்களே!
புதுப்புது அர்த்தங்களும் புதுப்புது தருணங்களும் உங்கள் வாழ்க்கையை அலங்கரிக்கும் இந்த நிமிடங்கள் வாழ்வில் மிக அருமையானவை! அனுபவியுங்கள்! ஓஷோ சொல்வது போல அந்தந்த நிமிடங்களில் மகிழ்ச்சி பொங்கிட உலாவுங்கள்! என் நிமிடங்கள் சித்திரக்கதைகளுடன் மிகுந்த நட்பு வட்டத்துடன் நெகிழ்வாக மலர்ந்து கொண்டே இருக்கின்றன.
நிற்க, என்னிடம் ஒரு இலங்கை-தமிழ் மண்ணில் உதித்த ஒரு அரிதான சித்திரக்கதை உள்ளது. அதனை வெளியிட்ட பத்திரிகை - நாளிதழ் - தினசரி - "வீர கேசரி"
அது இந்த லிங்க்கில் உள்ள தினசரிதானா என்று சம்மந்தப்பட்ட தினசரிக்கு மெயில் அனுப்பி கேட்டுள்ளேன். http://www.virakesari.lk/
தவிர இந்த தொடர் கதையை எழுதிய எழுத்தாளர் "திரு.சந்ரா" குறித்து விக்கிபீடியாவில் விக்கி விக்கி தேடியதில் http://en.wikipedia.org/wiki/Category:Sri_Lankan_writers சுட்டி அந்தப் பெயரில் எவரையும் சுட்டவில்லை. 
நண்பர் பிரதீப் சுந்தரேஸ்வரன் அவர்களையும் அபிஷேக் ஞான சேகரன் அவர்களையும் முகநூலில் விளித்து வினவியுள்ளேன்.
நிற்க.
இலங்கைத் தமிழ் மண்ணில் உதித்த அபூர்வமான சித்திரக்கதை நமது அன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய திரு.அலெக்சாண்டர்  வாஸ் அவர்களிடம் உள்ளது. அதன் மேலதிக விவரங்களை சேகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
தங்களுக்கு இலங்கை மண்ணில் பிறந்த அபூர்வத்திலும் அபூர்வமான சித்திரக்கதை எனது வலைப்பூவில் மலர முயற்சிகள் மேற்கொள்ள மிகுந்த உதவியாக இருந்த திரு.அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், திரு.சொக்கலிங்கம் அவர்களுக்கும் எனது இதயப் பூர்வமான நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். தாங்க்ஸ் தலைவர்களே!

இது பின்புலம் மட்டுமே! உங்கள் பங்களிப்பாக இது போன்று இலங்கைத் தமிழ் சித்திரக்கதை உலகின் மற்ற விவரங்களை அடுக்குங்களேன்?
படைப்புக்கும், படைப்பாளிக்கும் மதிப்பும் மரியாதையும் அமையும்விதத்தில்
இந்தக் கதை வெளியான 1972-1973 வருடங்களைப் போன்றே தினசரி ஒரு அத்தியாயம் என்கிற விகிதத்தில் கொண்டு வர விரும்புகிறேன்! காலமும் - இறைவனும் - நீங்களும் -உங்கள் ஒத்துழைப்பை நல்கும் பட்சத்தில் இது சாத்தியமே! எனவே இந்த தொடர் விரைவில் தொடங்கும் என்கிற அறிவிப்போடு இன்று முடித்துக் கொள்கிறேன். ஆமா புத்தகம் பெயர் என்ன என்றுதானே கேட்கிறீர்கள்????
ஹீ ஹீ ஹீ ஆயா வில் ரிட்டர்ன்!
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி!

1 கருத்து:

  1. இலங்கை வீரகேசரியில் ஆர்.எஸ்.மணி என்பவர் பணி புரிகிறார். அவருடைய கதையும் கூட மேற்கண்ட பத்திரிக்கையில் சித்திரக் கதையாக வந்தது. அவரை தொடர்பு கொண்டால் விபரம் தெரியும் நிச்சயமாக.

    பதிலளிநீக்கு

ஆவியின் சாபம்_சாக்ரடீஸ்

 hi all,  wish you all got gas and life going smoothly. here is another ghost story. this time Mr.sakrates translates this haunting story fo...