செவ்வாய், 15 ஜூன், 2021

**ஆவலுடன்...**_ஜானி சின்னப்பன்



நீ இல்லாத 

என் சாலைகள் 

எப்போதும் வெறிச்சோடியே கிடக்கின்றன..


உன் சுவாசம் படிந்த

உற்சாகக் காற்று கிடைக்காமல்

ஒவ்வொரு மரமும் உணர்கிறது 

என் தவிப்பை..


உன் கலகலப்பான

சிரிப்போசை கேட்காத குருவிகள் தம் பாட்டுக்கு மெட்டமைக்க முடியாமல்

மௌனமாகின்றன..


ஈரப்பதம் மிக்க உன் கண்களின் தயவின்றி

இலைகளின் நீராவித் துளைகளில்

பாலைவனக் காய்ச்சல்..


நிலைமை இன்னும் மோசமாவதற்குள் ஒரு முறை இவ்வழியே கடந்து

போய் விடேன்..


உன் வரவுக்காய் ஆவலுடன்..


_ஜானி சின்னப்பன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

"ஜானி இன் டெல்லி" -துப்பறியும் கதை

 சென்னை புறநகரின் ஒரு சாதாரண இரவு. மழை தூறல், மஞ்சள் நிற தெருவிளக்குகள், மூடிய கடைகள். அந்த அமைதிக்குள் மட்டும் பொருந்தாத ஒரு மனிதன் நடந்து ...